சமூக தளங்களில்(Social Networks) பகிர கூடாத 10 தகவல்கள்

இணைய உலகில் சமூக வலைத்தளங்கள் இப்பொழுது அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இணையுலகில் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பவர்கள் பற்றி சிறிய புள்ளி விவரம்.இணையம் உபயோகிப்பவர்களில் 35% மேல் குறைந்தது ஒரு தளத்திலாவது உறப்பினர் ஆகி உள்ளனர்.
இதில் 51% மேல் ஒன்றிற்கும் மேற்ப்பட்ட தளத்தில் உறுப்பினர் ஆக உள்ளனர்.
இதில் மூன்றில் ஒரு பங்கு 18 இருந்து 24 வயது உள்ளவர்களே.
89% நண்பர்களை பெறுவதற்காகவே இதில் உறுப்பினர் ஆகி உள்ளனர்.இதன் படி பார்த்தால் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களை உபயோகிக்கிறார்கள். அனைத்து சமூக வலை தளங்களிலும் Private என்ற ஒரு வசதி உள்ளது. ஆனால் நாம் யாரும் அதை உபயோகிப்பதில்லை. ஆகையால் நாம் சமூக வலை தளங்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். இதில் பகிர கூடாத சில விஷயங்களை கீழே கொடுத்துள்ளேன்.

10. சுலபமான கடவுச்சொல்:

சமூக தளங்களில் நாம் உபயோகிக்கும் Password சுலபமாக கண்டுபிடிக்கும் படி வைக்க வேண்டாம். உங்கள் பெயரையோ அல்லது வேறு ஏதேனும் வார்த்தையோ அலது உங்கள் பிறந்த தேதியையோ தரவேண்டாம். இதனை ஹேக்கர்கள் சுலபமாக கண்டு பிடிக்கும் அபாயம் உள்ளது. சிறந்தது உங்கள் கடவு சொல்லுக்கு முன்னும் பின்னும் நம்பர்களை சேர்த்தல் சிறந்தது. (உ-ம்) 12xxxxxxx52

9. முகவரி மற்றும் தொலைபேசி எண்:
சமுக தளங்களில் நீங்கள் உங்களுடைய தொலைபேசி எண்ணையோ அல்லது உங்கள் வீட்டின் முகவரியையோ கொடுக்க வேண்டாம். இது முற்றிலும் தவறான விஷயம். இதை கண்டிப்பாக தவிருங்கள். ஏற்க்கனவே கொடுத்து இருந்தாலும் எடுத்து விடுங்கள்.இதுவும் தவறு நடக்க ஒரு விதத்தில் வாய்ப்பு உள்ளது.




8. உங்கள் குழந்தையின் பெயர்:
அனைவருமே செய்கின்ற விஷயம் நம்முடைய குழந்தையின் புகைப்படத்தை நம் பேஸ்புக்கில் சேர்த்து இருப்போம் அது தவறல்ல, ஆனால் அந்த குழந்தையின் படத்திற்கு குழந்தையின் பெயரை தலைப்பாக போட்டு இருந்தால் அது தவறு தான். அதை மாற்றி விடுங்கள். உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் குழந்தையை ஏமாற்ற வழி உள்ளது. யாருக்கு என்ன தெரியும் எப்பொழுது என்ன நடக்கும் என்று நாம் கவனமாக இருப்பது நல்லது.

7.உங்கள் பிறந்த தேதி:
உங்கள் வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டை (credit card) ஆகியவைகள் அனைத்தும் உங்கள் பிறந்த தேதியை மையமாக வைத்தே இயங்குவதால் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. சமூக வலைதளைங்களில் நீங்கள் கொடுக்கப்படும் அனைத்து தகவல்களையும் உலகத்தின் எந்த நாட்டில் இருந்தும் பார்த்து கொள்ளலாம். அதனால் உங்கள் பிறந்த தேதியை வைத்து தவறு நடக்க வாய்ப்புள்ளது. ஆதலால் நீங்கள் உங்கள் பிறந்த தேதியை முழுமையாக கொடுக்க வேண்டாம். கொடுத்து இருந்தாலும் Edit profile சென்று மாற்றி கொள்ளுங்கள்.

6.சுற்றுலா விசேஷத்திற்கு செல்லுதல்:
நீங்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று கூற வில்லை. ஆனால் நீங்கள் செல்லும் தகவலை சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டாம். (உதாரணாமாக நான் குடும்பத்தோடு இன்று ஊருக்கு செல்கிறேன் இதோடு பத்து நாள் கழித்து தான் வருவோம்.) இப்படி உங்கள் இதனால் பத்து நாளும் வீட்டில் யாரும் இல்லை என்பதை நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள். ஆகவே போய்விட்டு வந்து கூறுவதே நல்லது. நெருங்கிய நண்பர் சொல்லியே தீர வேண்டும் என்றால் மெயிலிலோ அல்லது தொலைபேசியிலோ கூறுவது சிறந்தது.
5. உங்கள் பயனர் கணக்கு:
நீங்கள் சமூக வலைதளங்களில் உறுப்பினர் ஆகும் போது அந்த என புதிய உறுப்பினர் கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். அனைத்து சமூக தளங்களிலும் ஜிமெயில் அல்லது யாகு மெயில் உபயோகித்தால் போதும் அதற்கு லிங்க் கொடுத்தாலே பயனர் கணக்கை ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் இதில் பாதுகாப்பு என்பது குறைவே ஆகையால் தனியாக பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளுதல் சிறந்தது.

4. நண்பரை தேர்ந்தெடுத்தல்:
நீங்கள் சமுக தளங்களில் உங்களுக்கு நண்பர் கோரிக்கைகள் வந்தாலோ அல்லது நீங்கள் யாருக்கேனும் நண்பர் கோரிக்கை அனுப்ப நினைத்தாலோ பொதுவான நண்பர்களை சோதித்து நமக்கு தெரிந்தவர்கள் அதில் இருக்கின்றனரா என்று அறிந்து அவர்களின் கோரிக்கையை உறுதி படுத்தவும்.

3. குழந்தைகளிடம்

குழந்தைகளுக்கு தெரியும் வண்ணம் இந்த சமூக தளங்களின் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவர்களும் அந்த வலைதளங்களில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும்.





2. பெண் உறுப்பினரா:

நீங்கள் பெண் உறுப்பினர் ஆக இருந்தால் உங்கள் புகைப்படத்தை சமூக தளங்களில் பகிர்வதை தவிருங்கள். இதை சில பேர் தவறாக பயன்படுத்த கூடிய வாய்ப்பு நிறைய உள்ளது. அதற்கு பதில் வேறு ஏதேனும் போட்டோவினை பயன் படுத்தலாம். இதை கடைபிடித்தால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.




1. அடிமை

அனைத்து சமூக வலைதளங்களும் உறுப்பினர் ஆவதற்கு குறைந்தது 13+ வயது வரம்பை வைத்துள்ளார்கள். ஆனால் அதை நடைமுறை படுத்த எந்த வழியையும் செய்ய வில்லை. ஆகையால் சிறுவர்கள் கூட இதில் உறுப்பினர் ஆகி விடுகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மணிகணக்கில் இந்த தளங்களில் நேரங்களை செலவிடுகிறார்கள் போக போக இதற்க்கு அடிமையாகவே மாறி விடுகிறார்கள். படிக்கும் நேரங்களில் கூட படிக்காமல் இந்த தளங்களில் நேரங்களை செலவிடுகின்றார்கள். இதை கண்காணிப்பது அனைத்து பெற்றோரின் கடைமையாக உள்ளது. அவர்கள் கணினியில் என்ன செய்கிறாகள் என்பதை கவனித்து அவர்களுக்கு உண்மையை புரிய வைக்கவும்.

ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி?????


01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

காதல் ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்


நீங்கள் மணமாகாத இளம் பெண் என்றால் உங்களை பல இளைஞர்கள் காதலிக்க கூடும். காதல் என்பது திருமணம் என்ற புனிதமான ஒரு நிலையை நோக்கி உங்களை கொண்டு செலுத்தும் ஒரு சக்தி, அதனால் காதல் விஷயத்தில் எச்சரிக்கை மனப்பான்மை வேண்டும். உங்களை காதலிப்பதாகக் கூறும் இளைஞன் உங்கள் அழகை மட்டுமே வர்ணிப்பவனாக இருந்தால் அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் உங்கள் அழகு எந்தச் சமயத்திலும் பின்னாளில் குறையக்கூடும். திருமணமான பிறகு அழகு குறைந்தபோது உங்களிடம் கவர்ச்சியை எதிர்பார்த்த இளைஞன் ஏமாற்றமுற்று தடம் மாறக்கூடும்.அழகாக கவர்ச்சியாக இருக்கிறான் என்பதற்காக எந்த ஓர் இளைஞனையும் பெண்கள் காதலிக்கக் கூடாது. அழகு என்பது இனிப்பு பலகாரங்களுக்கு போடப்படும் வண்ணம் போன்றது. வண்ணம்தான் பண்டத்திற்குக் கவர்ச்சியை கொடுக்கக்கூடும். ஆனால் வண்ணம் இல்லாததினாலேயே தின்பண்டத்தின் சுவை கெட்டுவிடப் போவதில்லை.தின்பண்டத்தில் கலந்துள்ள இனிப்பு போன்றது ஓர் இளைஞனின் குண நலன்கள். இனிப்பு இல்லாவிட்டால் தின்பண்டமே இல்லை என்பது போல, வாழ்க்கைக்கு எழில் சேர்ப்பது கணவராக வருபவரின் குணநலன்தான். ஆகவே தங்கள் காதல் ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்

பற்கள்… பரவசத் தகவல்கள்…


மனிதர்களுக்கு இயற்கையின் அணிகலன், புன்னகை. `பளீர்’ பற்கள்தான் புன்னகைக்கு அழகு. அது மட்டுமல்ல, உணவு பற்களால் நன்கு அரைபடும்போதுதான் செரிமானம் எளிதாகிறது, பற்களின்றி வார்த்தைகளும் கம்பீரம் பெறாது.
ஆக, முகத்தின் `விசிட்டிங் கார்டான’ பற்களை பாதுகாப்பதில் நாம் கவனம் வைக்க வேண்டியது அவசியம்.
பால் பற்களும், நிரந்தர பற்களும்
நீள்வட்ட வடிவ பல் மொட்டுகள், கருவின் 6 முதல் 8 வாரங்களிலேயே உருவாகி விடுகின்றன. நிரந்தர பல் மொட்டுகள் 22-வது வாரத்தில் உருவாகின்றன. பல், கண்ணுக்குத் தெரியுமாறு முளைக்கத் தொடங்குவது வெளிபாடு எனப்படு கிறது. ஆறு மாதம் முதல் 1 வருடத்தில் பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மூன்று வயதில் அவை முழுமையாக வளர்ந்து விடுகின் றன. நிரந்தர பற்கள் சரியான இடங்களில் வளர பால் பற்கள் உதவுகின்றன. ஆறு வயதில் இருந்து அவை விழத் தொடங்கும்போது அவற்றின் வேர்கள் மறைய ஆரம்பிக்கின்றன. முதலாவது கடைவாய் பற்களே முதலில் வளரும் நிரந்தர பற்களாகும்.
பல் சுத்தம்
தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு உணவு வேளைக்கு பின்னும் பல் துலக்கினால் இன்னும் நல்லது. பற்களுக்கு இடையில் உள்ள காரையை `டூத்பிரஷால்’ நீக்க முடியாது. எனவே பற்களுக்கு இடையே கவனமாக சுத்தம் செய்வது முக்கிய மானது. `புளோரைடு மவுத்வாஷ்’ செய்தால் பற்சிதைவு ஏற்படாமல் தடுக்கலாம். பல் மருத்துவரின் உதவியால் அவ்வப்போது பற்காரையை நீக்கலாம்.
அரிசியும், பற்சிதைவும்
மனிதன் நெற்பயிரை விளைவிக்கத் தொடங்கியபின்பு தான் பற்சிதைவு அதிகமாகி யிருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது. கருமபு உற்பத்தி தொடங்கியதும் பற்சிதைவு மேலும் அதிகமாகியிருக்கிறது.உங்களுக்குத் தெரிமா?
* 2000 குழந்தைகளில் ஒன்று, பிறக்கும்போதே ஒன்றிரண்டு பற்களுடன் பிறக்கிறது.
* 35 வயதுக்கு பிறகு பற்சிதைவு வேகம் குறைகிறது.
* பிறக்கும் குழந்தைக்கு ஈறுக்குக் கீழே 52 பல் மொட்டுகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து 20 பால் பற்களும், 32 நிரந்தர பற்களும் தோன்றுகின்றன.
* மரணத்துக்கு பின்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு உதிராமல் இருக்ககூடியது பல்.
* பாலூட்டிகளுக்கு இரண்டு `செட்’ பற்கள் முளைக்கின்றன.
* நவீன பல் மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுபவர் `பியரே பாச்சார்டு’. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு மருத்துவரான இவர், முதல்முறையாக பல் மருத்துவ விஷயங்களை முழுமையாக அளித்தார்.
* உயிரின வகைகளுக்கு ஏற்ப பல் அமைப்பு மாறுபடுகிறது. தாவர உண்ணிகளுக்குக் கடைவாய் பற்கள் அதிகமாகவும், விலங்குண்ணிகளுக்கு கோரை பற்கள் அதிகமாகவும் இருக்கின்றன.
*மனிதர்களுக்குக் குழந்தை பருவத்தில் 20 பால் பற்களும், பெரியவர்களாகும் போது 32 நிரந்தர பற்களும் முளைக்கின்றன.

பால் ஆடை-சருமத்திற்கு நல்லது


பாலில் நமக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் இருக்கின்றன. கால்சியம், புரோட்டீன் மற்றும் -ஊட்டச் சத்து அதிகமுள்ள பாலைப் பருகுதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.பால் உடலுக்கு எப்படி சக்தியைக் கொடுக்கிறதோ, அப்படியே நம் சரும அழகுக்கும் பால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.பால் சிறத்ந மாய்சரைசராகவும், க்ளென்சராகவும் பயன்படுகிறது. சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் பால் உதவும்.ஆடை எடுக்கப்பட்ட பால் எல்லாவித சரும வகைக்கும் ஏற்றது. முகத்தில் பேக் போடும் பவுடருடன்,பால் கலந்து உபயோகிக்கலாம்.ஏடோடு இருக்கும் பால் உலர் சருமத்திற்கு ஏற்றதாகும்.எண்ணெய் சருமத்திற்கு ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது மோர் உபயோகிக்கலாம்.கண்களின் அடியில் உள்ள கருவளையத்தைப் போகக்க பாலாடை க்ரீம் பூசுவது நல்லது. (இது வெளியில் தனியாகக் கிடைக்கும்)தோலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுபவர்களுக்கும் அதிகமாக பயணம் மேற்கொள்பவர்களுக்கம் பால் நல்லது. காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து, முகத்தில் பூசி சிறிது நேரத்தில் குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பளிச்தான்.மோர்எண்ணெய் வழியும் சருமத்திற்கு மோரில் பஞ்சை நனைத்து முகம், கழுத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும். (பல அழகுக் குறிப்புகளில் மோரின் உபயோகம் கொடுக்கப்பட்டிருக்கிறது).தயிர்தயிரை முகத்தில் அப்படியே தடவினால் அதிலுள்ள கொழுப்புச் சத்து சருமத் துவாரங்களை அடைத்து விடும். குறிப்பாக எண்ணெய் சருமம் உடையவர்கள், தயிரை முகத்திற்கு உபயோகிக்கக்கூடாது.தலை முடிக்கு தயிரை சிறந்த கண்டிஷனராக உபயோகப்படுத்தலாம்.மருதாணிப் பவுடர் + தயிர் அல்லது வெந்தயப் பவுடர் + தயிர் உபயோகப்படுத்தி தலைத் தேய்த்து முடியை அலசலாம்.வெண்ணெய்கடையில் வாங்கும் வெண்ணெயை விட வீட்டிலேயே சேர்த்துத் தயார் செய்யும் வெண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.முகத்திற்கு மசாஜ் செய்ய வெண்ணெய் பயன்படுத்தலாம். ஆனால் முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் வெண்ணெய் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.வெண்ணெயைத் தலையில் தேய்த்து தலைமுடியை அலசலாம்.உதடுகள் கறுப்பாக இருப்பவர்கள் சிறிதளவு வெண்ணெயை உதட்டில் தினமும் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனால் உதட்டிலுள்ள கருமை நிங்க, இயற்கையான ரோஸ் நிறம் கிடைக்கும்.

 செல்போன்-கம்ப்யூட்டரால் கழுத்து வலி பாதிப்பைத் தடுக்க எளிய வழிமுறைகள்


கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும். உடலுக்கும், தலைக்கும் ரத்தம் மற்றும் நரம்புகள் பயணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன.
இதில் 7 எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தை சுற்றி தசைகள், தசைநார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன என்கிறார் பிரபல வலி நீக்கியல் நிபுணர் டாக்டர் ஜி.கே.குமார். அவர் கூறியதாவது:- மேலும் உணவுக் குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும், இருதயத்திற்கும் இடையேயான ரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.
முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்த செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.
குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் சுழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப் பட்டு உட லில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப் பகுதிக்கு வந்து கோர்த்துக் கொள்ளும். பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசைபோல கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானதுபோல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம்.


அறிகுறிகள்:
கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும்.கைகள் மரத்துப் போகும். சுண்டு விரல் செயலிழந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கண் எரிச்சல் உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும் போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும்போதும், நிற்கும்போதும் தலைசுற்றி கண்ணில் மின்னல்போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும். கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள்.
பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்புநீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒருசிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள் பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக் கும் வித்தியாசம் கண்டறிவது கடினம். தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும். அந்த வலியானது தோள் வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.


காரணங்கள்:
மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது என்கிறார் வலி நீக்கியல் நிபுணர் டாக்டர் ஜி.கே.குமார்.


கம்ப்யூட்டர் வேலை:

கழுத்து வலி, பெரும்பாலோருக்கு வரும். அதிலும் கம்ப்யூட்டரே கதி என்று இருக்கும் இளைய வயதினருக்கு அடிக்கடி வரும். அதற்கு ஏற்ப பழக்கத்தை மாற்றினால் கழுத்து வலி போய்விடும். ஆனால் சிலவகை கழுத்து வலிகள் இருக்கின்றன. கீழ்க்கண்ட காரணங்களில் கழுத்துவலி வந்தால் உஷாராகி விடவேண்டும்.
அதிக காய்ச்சல், காரணமே இல்லாமல் எடை குறைவது, தலைசுற்றல்-மயக்கம், கைநடுக்கம் போன்ற நரம்புகள் கோளாறுகள், கழுத்துவலி அதிகமாக இருக்கும்போது, கழுத்து இறுக்கமாக இருக்கும்போது. இப்படிப்பட்ட காரணங்களினால் கழுத்துவலி வந்தால் தைலம் தடவிக் கொண்டிருக்கக் கூடாது. டாக்டரிடம் போய்விட வேண்டும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், டீன்-ஏஜ் வயதினரும் அதிக நேரம் கம்ப்ïட்டர் முன் அமர்ந்திருப்பதால், கழுத்து வலிக்கு ஆளாகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவிலும் அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவிலும் சுமார் ஆயிரத்து 73 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி அதிக நேரம் கம்ப்ïட்டரை பயன்படுத்துவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


தடுக்கும் முறை:

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது.
வாகனங்களை மிதமான வேத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.


உணவு:
பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை குறைத்து எளிதில் ஜீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும். மனதளவில் இறுக்கமின்றி `ரிலாக்ஸாக' இருக்கவும். நேரான கோணத்தில் அமரவும். குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும்போது, கம்ப்யூட்டர் முன் அமரும்போது...
படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும். மேஜையில் அமர்ந்து பணி ஆற்றும் போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும். ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும். படுக்கும்போது கழுத்துக்கு கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகள் அல்லது அதிக உயரமான தலையணை வைப்பதை தவிர்க்கவும். வயிறு தரையில் படும்படி குப்புறப் படுக்காதீர்கள்.
இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும். ஒரு குறிப்பிட்ட உயரத்தை பார்ப்பதில் தொடர்ச்சியாக, நெடுநேரம் ஈடுபடாதீர்கள். அதேபோல் அதிக கனம் தூக்குவதில் அதிக நேரம் ஈடுபடாமல் இருக்கவும். நெடுநேரம் தொடரும் `டிரைவிங்'கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.என்கிறார் சென்னை வடபழனி ஆகாஷ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை சேர்ந்த வலி நீக்கியல் நிபுணர் டாக்டர் ஜி.கே.குமார்.செல்போன்களால்...
எந்நேரமும் செல் போனை பயன் படுத்துபவர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.அதிக நேரம் செல்போனில் பேசுவதால் கழுத்து, கை, காது போன்றவற்றில் வலி ஏற்படுகிறது. சிலர் பேசும் போது காதுக்கும், தோள்பட்டைக்கும் இடையில் செல்போனை வைத்து அழுத்திக்கொண்டு வேறு ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவர்.
இவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் கழுத்தில் வலி ஏற்படுவதுடன் விரைவிலேயே கழுத்தில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு வளைந்து விடும். அதேபோல் தொடர்ந்து கையை ஒரே நிலையில் வைத்திருப்பதால் ரத்த ஓட்டம் தடைபட்டு கையின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.
உடற்பயிற்சிகள்:
நாம் பழக்கத்தின் காரணமாகவே நம் கழுத்துக்களை தவறான முறைகளில் திருப்புகிறோம். இதனால் கழுத்துக்கு இடைïறே நம் தசைகள் உறுதியானவையாக இல்லை என்றாலோ நெகிழ்வுத் தன்மை குறைந்தவை என்றாலோ மேலும் தொந்தரவு வரும். கழுத்து, உடற்பயிற்சி, கழுத் தின் மீது ஏற்படும் அழுத் தம் சமநிலை இன்மையைச் சீராக்கும். இயக்கத்தை அதிகரிக்கும். கழுத்தை பாதுகாக்கிற தசைகளை உறுதி செய்யும். எனினும் கழுத்துப் பயிற்சியில் மிதமிஞ்சி விடக்கூடாது. டாக்டர் ஆலோசனைப்படி நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்யவும்.

பொய் சொல்பவர்களை கண்டுபிடிக்கணுமா?

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இதில் ஏய்த்து பிழைபவர்கள் ஏராளம். நல்லவர்கள் போல் பேசுவார்கள் இறுதியில் காலை வாரிவிடுவார்கள். நம்பிக்கையுடன் சீட்டுக் கட்டி, ஏமாந்தவர்களின் செய்தியை படிக்கிறோம், புன்னகை பூத்த முகத்துடன் அக்கா, அண்ணேன்னு உரிமையோடு பேசுகிறவரிடம் வாங்கிய பொருள் தரமற்றும், உடைசலாகவும் இருப்பதை பார்த்து மனம் புழுங்குகிறோம் இல்லையா?
இன்னும் எத்தனையோ விதங்களில் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அதுபோன்ற போலி மனிதர்களை சந்திக்க நேரலாம். அவர்களை சாதுரியமாக கண்டுபிடித்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இதோ சில வழிகள்…
பொய் பேசுபவரின் பேச்சில் சில மாற்றங்கள் தென்படும். குறிப்பாக அவர்களின் சத்தத்தில் முன்பைவிட மாறுதல் இருக்கும். அவர்கள் பேசும் விஷயத்தில், பொய் வரும் இடத்தில் அழுத்தம் கூடுதலாக இருக்கும் அல்லது அதை திரும்பத் திரும்ப வலிறுத்தி பேசுவார்கள். வியாபாரிகள் என்றால் ஒரே விலையை குறி வைப்பதுபோல மீண்டும் மீண்டும் கூறுவார்கள். வேகமாகவோ அல்லது மெதுவாகவோ பேசுவதன் மூலம் அவர் சொல்ல வரும் விஷயத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஆனால், `அல்லது, தவிர, அப்படியிருக்க’ போன்ற வார்த்தைகளை பொய் பேசுபவர்கள் தவிர்த்து விடுவார்கள். ஏனெனில் இதெல்லாம் அவர்களின் நோக்கத்தை தடுக்கும் வார்த்தைகள் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் `நான், எனக்கு, என்னுடைய’ போன்ற வார்த்தைகளையும் குறைவாக உபயோகிப்பார்கள். அதிகமாக கட்டுக்கதைகளைச் சொல்வார்கள், இணைப்பாக தங்களது சொந்த சங்கேத சொற்களையும் இடைஇடையே உச்சரிப்பார்கள்.
அவர்களிடம் எந்த விஷயத்தை பேசினாலும் நமக்கு சாதகமாக முடித்து தருவதுபோல் பதில் தருவார்கள். முகத்தில் புன்னகையை தவழ விட்டிருப்பார்கள். ஆனால் உங்களைக் கடந்து செல்லும் அடுத்த நிமிடம் `இரு உன்னை கவனிச்சுக்கிறேன்’ என்று மனதிற்குள் எண்ணியபடி நகருவார்கள். அப்படிச் செய்பவர்களை முக பாவனையை வைத்து எளிதில் கண்டு பிடிக்க முடியும். உணர்வுகளை மறைக்கும் தன்மை முகத்திற்கு கிடையாது. எவ்வளவு அடக்கினாலும் முகத்தில் லேசாக பிரதிபலிக்கும். உண்மை சிரிபுக்கும், போலி சிரிப்புக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியும்தானே. அப்படியென்றால் அவர்களின் குட்டு உங்களிடம் எடுபடாது.
பொய்யர்கள் போலியாக சிரிப்பார்கள். அதை நன்றாக கவனித்தால் கண்டுபிடிக்கலாம். அதை நீங்கள் கண்டுபிடிப்பதுபோல் நடந்து கொண்டால் அவர்கள் இடத்தை காலி செய்ய தயாராகி நழுவ முயற்சிபார்கள். போலியாக சிரிப்பதுபோலவே பயப்படுவது, கோபப்படுவது, வெறுபதுபோல் நடிபது என்று எல்லாம் போலியாகவே செய்வார்கள்.
அவர்களின் நடவடிக்கை மற்றவர்கள் முன்பு ஒருவிதமாகவும், யாருமில்லாத இடத்தில் மற்றொருவிதமாகவும் இருக்கும். அவர்களின் மனநிலை முகத்திற்கும்- உடலுக்கும், பேச்சு- சப்தத்திற்கும் ஒட்டாமல் தொடர்பின்றி தொங்கிக் கொண்டிருக்கும்.
ஒரு சாதாரண விஷயத்தைச் சொல்ல வந்தாலும் அதில் சில விஷயங்களை மறைத்துவிடுவார்கள். அதே நேரத்தில் நீங்கள் ஏதாவது விவகாரமான கேள்வி கேட்டால் அதை கூர்ந்து கவனிப்பார்கள். ஆனால் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் முகத்தை திருப்பிக் கொண்டு நிற்பார்கள்.
“இன்று உங்களுக்காக பொய் சொல்பவர்கள், நாளை அவர்களுக்காக உங்களையே ஏமாற்றத் துணிவார்கள்” என்று சொல்வதுண்டு. எனவே பொய் பேசுபவர்களிடம் கவனமாக இருங்கள்!

நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்


கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் நமது இனிய இதயம். மனிதனின் இதயம் நின்று போனால் எல்லோமே நிசப்தமே., இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன் போன்றவற்றால் நமது ரத்த அழுத்தத்தை அதிகரித்து நாமே நமக்கு கெடுதலாக இருக்கலாமா போன்றவற்றை அலசி உலக இதய நாளான இன்று இந்த சிறப்பு கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
விழித்திருந்தாலும் தூங்கினாலும் நம் உடலில் ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்பு இருதயம். இந்தியர்களுக்கே அதிகம்
மாரடைப்பு உண்டாகிறது என்ற புள்ளிவிபரம் நமக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் முதன்மையானது இருதய ஆரோக்கியம். மற்ற வியாதிகளைப் போலின்றி, இருதய வியாதிகளை தடுக்க முடியும் என்பது அசைக்க முடியாத உண்மை. வருமுன் காப்போம் என்பது, எந்த நோய்க்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இருதய நோய்க்கு மிகவும் பொருந்தும். இருதய நோயை தடுக்க மதுரை டாக்டர் சி.விவேக்போஸ் கூறும் சில எளிய வழிமுறைகள்:
ஆரோக்கியமான உணவு: உணவில் காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.
எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்கரையை நன்கு குறைப்பது முக்கியம். அரிசி வகை உணவையும், நொறுக்குத் தீனியையும் தவிர்க்க வேண்டும்.
* சுறுசுறுப்பாக இயங்குதல்: தினமும் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
* பீடி, சிகரெட் புகைப்பது, குட்கா உள்ளிட்ட புகையிலையை சுவைப்பதை முற்றிலும் தவிர்த்தாக வேண்டும்.
ஆரோக்கிய எடை:
உடல் எடையை சரியான அளவில் வைத்திருப்பது முக்கியம். இதற்கு “உயரம் (செ.மீ.,ல்) – 100 = சரியான எடை (கிலோ கிராமில்). அதாவது ஒருவரது உயரம் 175 செ.மீ., இருந்தால், அவரது சரியான எடை (100ஐ கழித்து) 75 கிலோ இருக்க வேண்டும்.எண்ணை தெரிந்து கொள்வது: ஒருவரது ரத்த அழுத்தம் 120 / 80 என்ற அளவில் இருக்க வேண்டும்.கொழுப்பு சத்தை பொறுத்தவரை எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.கி.,க்குள் இருந்தாக வேண்டும்.சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்குள்ளும், சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 140 மி.கி.,க்குள்ளும் இருப்பது அவசியம்.
மன நிம்மதி: மனதை நாம் எப்போதும் நிம்மதியாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக யோகா, தியானம் இதற்கு பெரிதும் உதவுகிறது.இந்த 2010ம் ஆண்டில், “ஙிணிணூடு கடூச்ஞிஞு ஙிஞுடூடூணஞுண்ண்’ என்பதே குறிக்கோள். அதாவது பணியாற்றும் இடம் ஆரோக்கிய சூழலில் இருக்க வேண்டும் என்பதே அது.* நீங்கள் பணியாற்றும் இடத்தில் நீங்களும், உடன் பணியாற்றுவோரும் புகைப்பதோ, புகையிலையை உபயோகிப்பதோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.* வேலை பார்க்கும் இடத்திலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளுதல். அதாவது நடந்தோ, சைக்கிளிலோ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும் வேலை பார்க்கும் இடத்தில் “லிப்டை’ உபயோகிக்காமல், படிகளில் நடந்தே ஏறிச் செல் வது போன்றவை நல்லது.* நீங்கள் மட்டுமின்றி, சகஊழியருக்கும் எது நல்ல ஆரோக்கிய உணவு என சொல்லி கொடுத்து அதை கடைபிடிக்கச் செய்ய வேண்டும்.* பணியாற்றும் இடத்தில் மனஅழுத்தம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.

விண்டோஸ் அப்டேட் சிக்கல்கள்


எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்தும் பல வாசகர்கள், தங்கள் ஹார்ட் டிஸ்க்கினை மீண்டும் பார்மட் செய்துவிட்டதாகவும், விண்டோஸ் எக்ஸ்பியை மீண்டும் இன்ஸ்டால் செய்தபின் எப்படி அதனை அப்டேட் செய்வது என்றும் கேட்டுள்ளனர். விண்டோஸ் வழக்கமாக தானாக அப்டேட் செய்து கொள்கிறது. இத்துடன் நாம் அப்டேட் பைல்களைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு பின் ஒரு நாளில் பயன்படுத்த வசதி உள்ளதா? இல்லை எனில் எப்படி முழுமையாக அப்டேட் செய்வது எனக் கேட்டுள்ளனர். சில மாதங்களாகவே, விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருப்பவர்கள், அடிக்கடி ரீபார்மட் செய்வது நமக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. எனவே இதற்கான தீர்வினைப் பார்க்கலாம்.விண்டோஸ் அப்டேட்ஸ் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மைக் காலத்தில் வெளியிட்ட விண்டோஸ் துணை சாதன வசதிகள், சரி செய்யப்பட்ட முக்கிய பிரச்னைகள் (Hot fixes)பாதுகாப்பு வழிகள் (Security Fixes), மேம்படுத்தப்பட்ட சாப்ட்வேர்கள் (விண்டோஸ் மீடியா பிளேயர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்றவை) ஆகியவற்றை அளிக்கும் சேவை ஆகும். இதில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தீர்வுகள் நம்மை, அவ்வப்போது தாக்கும் புதிய வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் திறனை அளிக்கின்றன.பொதுவாக, அப்டேட்ஸ் எனப்படும் மேம்படுத்தப்படும் செயல்பாட்டினை, இணைய இணைப்பில் இருக்கையில், விண்டோஸ் அப்டேட் சர்வீஸ் (Windows Updates) என்பதன் மூலம், மைக்ரோசாப்ட் தானாகவே மேற்கொள்கிறது. ஆனால், இந்த மேம்படுத்தப்படுத்தலுக்கான கோப்புகளை, கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, பின்னர் நாம் விரும்பும் நாளில், இணைய இணைப்பு இல்லாத போதும் பயன்படுத்திக் கொள்ள நாம் விரும்பலாம். அல்லது இணைய இணைப்பு கிடைக்காத இடங்களில் செயல்படும் கம்ப்யூட்டர்களில் இவற்றைப் பதியலாம். இத்தகைய சூழ்நிலைகள் பல நேரங்களில் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்த பின்னர், இந்த பைல்களை இயக்கி, விண்டோஸ் சிஸ்டத்தினை முழுமையாக நவீனமாக அமைத்துக் கொள்ளலாம். இந்த பைல்களை சிடியில் பதிந்து வைத்துக் கொள்வதற்கான வழிகளை இங்கு காண்போம்.1. முதலில் விண்டோஸ் அப்டேட் டவுண்லோடர்(Security Fixes), என்னும் பைலை http://wud.jcarle.com/ ProgramFiles.aspx து என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளவும். இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும்.2. அடுத்து http://ud.jcarle.%20com/%20UpdateLists.aspxஎன்ற முகவரி யில் உள்ள தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இதற்கான அப்டேட் பட்டியலை டவுண்லோட் செய்திடவும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சரியான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இங்கு தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் அப்டேட்டிங் சரியாக நடைபெறாது.3. அப்டேட்ஸ் பட்டியலை இறக்கி, அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்த பின்னர் நீங்கள் உங்கள் நோக்கத்திற்கான வேலையை மேற்கொள்ள தயாராகிவிட்டீர்கள். அடுத்து விண்டோஸ் அப்டேட்ஸ் டவுண்லோடர் பைலை இயக்கவும்.இதற்கான விண்டோ கிடைத்தவுடன் ஓகே கிளிக் செய்து தொடரவும்.4. இனி அப்டேட்ஸ் பட்டியல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது “Compressed UL file installed என்றபடி ஒரு மெசேஜ் விண்டோ கிடைக்கும். ஓகே கிளிக் செய்து தொடரவும்.இந்த நேரத்தில் சிலருக்கு “Warning, .NET framework component is not installed” என்ற எச்சரிக்கை செய்தி கிடைக்கும். .NET framework என்ற இந்த வசதி கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் என்பதால் இந்த செய்தி தரப்படுகிறது. எனவே தயங்காமல், இடையே இதனையும் இன்ஸ்டால் செய்திடலாம். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.microsoft.com /downloads/details.a spx?FamilyID=0856eacb-4362-4b0d-8edd-aab15c5e04f55. UL பைல் கிளிக் செய்தவுடன், விண்டோஸ் அப்டேட்ஸ் டவுண்லோடர் விண்டோவிற்கு மீண்டும் வருவீர்கள். அங்கு விண்டோஸ் அப்டேட்ஸ் செய்வதற்கான சில அடிப்படை வசதிகள் பட்டியலிட்டிருப்பதனைப் பார்க்கலாம்.6. உங்களுக்கு எந்த வசதிகள் எல்லாம் அப்டேட் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அவை எல்லாவற்றையும் பொறுமையாகத் தேர்ந்தெடுக்கவும். அனைத்தையும் தேர்ந்தெடுப்பது நல்லது. இதில் இதுவரை வந்தமைக்கான சர்வீஸ் பேக், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பல மோசமான பிழைகளைச் சரி செய்திட்ட புரோகிராம்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், டாட் நெட் பிரேம்வொர்க் போன்றவையும் இருக்கும்.7. இனி, Change” பட்டனில் கிளிக் செய்து,இந்த பைல்கள் அனைத்தையும், உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு போல்டரில் சேமித்து வைக்கவும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் உள்ள ட்ரைவில் இவற்றை வைக்க வேண்டாம். வேறு ஒரு ட்ரைவில், போல்டரில் வைத்திடவும்.8. இப்போது எல்லாம் தயாராக உள்ளது. இனி Change” பட்டனில் கிளிக் செய்திடவும். அனைத்து அப்டேட் பைல்களும், நீங்கள் குறிப்பிட்ட போல்டரில் பதியப்படும். பைல்களின் அளவு சற்று அதிகமாகவே இருப்பதால், சற்று கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். அப்ளிகேஷன் விண்டோ வினையோ, இணைய இணைப்பையோ இந்த வேளையில் மூடக் கூடாது.9. டவுண்லோட் முடிந்தவுடன், குறிப்பிட்ட போல்டரைத் திறந்து பார்த்தால், அப்டேட் செய்வதற்கான அனைத்து பைல்களும் இருப்பதனைப் பார்க்கலாம்.10. இதில் உள்ளவற்றை, கம்ப்யூட்டரில் அப்டேட் செய்திட, குறிப்பிட்ட அப்ளிகேஷன் பைலை டபுள் கிளிக் செய்தால் போதும். கம்ப்யூட்டரில் அவை அப்டேட் செய்யப்படும்.11. இந்த பைல்களை ஒரு டிவிடியில் பதிந்து எடுத்துச் சென்று, வேறு எந்த கம்ப்யூட்டரிலும் அப்டேட்டிங் பணியை மேற்கொள்ளலாம்.

சாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்


அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையே நம் சமைலறை தானே. வெறும் ருசியாக சமையல் செய்து சாப்பிட்டால் மட்டும் போதாது. சமைக்க உபயோகப்படுத்தும் காய்கறிகளைக் கொண்டும், சாப்பிடும் பழங்களைக் கொண்டுமே நம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம்.‘‘ப்யூட்டி பார்லர் செல்ல எனக்கு நேரமில்லை, பணம் செலவழக்க என்னால் முடியாது, செயற்கைப் பொருட்களை உபயோகித்தால் என் முக அழகு கெட்டு விடும்’’ என்று எண்ணுபவர்களுக்காக இந்த அத்தியாயம்.இயற்கையான பல பொருட்களை நாங்களும் அழகு நிலையங்களில் உபயோகப்படுத்துகிறோம். அதே பொருட்களை நீங்களும் உபயோகித்து சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கலாம்.அதற்கான டிப்ஸ் இதோ முட்டை கோசை வேக வைத்து, அந்த நீரில் முகம் கழுவினால், பளிச்சென்று இருக்கும். (ஒரு சிலருக்கு பச்சையாக உபயோகப்படுத்துவது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்)கேரட் சாற்றுடன் பால் 2 டீ ஸ்பூன் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது குறிப்பாக உலர் சருமத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.உருளைக் கிழங்கை பச்சையாகத் துருவி, அதன் சாற்றை சருமத்தில் பூசும்பொழுது, சருமத்திற்கு குளிர்ச்சியும் பளபளப்பும் கிடைக்கும்.அகத்திக் கீரையை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசவும், 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பிரகாசமாக இருக்கும். இதை வாரத்தில் ஒரு முறை செய்யலாம்.பர பிரச்சினைக்கும், கண் அடியில் உள்ள கருவளையத்தைப் போக்கவும், உருளைக் கிழங்கு சாற்றில் பஞ்சை நனைத்துத் தேய்த்து வரலாம்.வெள்ளரிக்காய் நிற மேம்பாட்டிற்காகவும், தேன் உங்களது நிறம் கருமையடையாமலும், இளநீர் உஷ்ணத்திலிருந்தும், உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்.முகத்தில் அதிகமாக வேர்க்குரு இருந்தால் உருளைக் கிழங்கு சாறு, தர்பூசணி சாறு, நுங்கு, இளநீர் ஆகியவற்றை அடிக்கடி தடவி வந்தால் வேர்க்குரு மறையும்.
அதி மதுரத்தை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு அதை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசலாம். அல்லது பாலுடன் சேர்த்து முகத்தில் பூசலாம்.நமது சருமத்திற்கு பி.காம்ப்ளக்ஸ் அவசியமானது. பருவினால் கூடிய தழும்பைத் தடுக்க ஈஸ்ட்டும், அதிமதுரப் பவுடரும் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் தழும்பு மறையும்.தக்காளி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. அதிலுள்ள சிலிகான் சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும். தக்காளி ஜூஸ் இரத்த விருத்திக்கு உகந்தது. இதில் வைட்டமின் ‘சி’ உள்ளதால் தோலில் தடவி பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால் பளபளப்பு கிடைக்கும்.(தக்காளி சேர்த்தால் சருமத்தில் அரிப்பு ஏற்படுவதாக உணர்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் தக்காளி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்)வெயில் காலத்தில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய தர்பூசணியில் 90 நீர்ச்சத்து இருக்கிறது. இதை சாப்பிடுவதும் உடலுக்க நல்லது.தர்பூசணி சாற்றுடன் (2 ஸ்பூன்) முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் பூசிக் கழுவினால் குளிர்ச்சியாக இருக்கும்.எண்ணெய் சருமத்தைக் கொண்டர்வகள் ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறை அப்படியே முகத்தில் தடவக் கூடாது. அதனுடன் நீர் கலந்து தேய்க்கலாம்.எலுமிச்சம் பழச்சாற்றுடன், பால் சிறிது கலந்து 5லிருந்து 20 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் கழுவலாம்.வெள்ளரிக்காய், தர்பூசணிச் சாறை சம அளவில் (1 ஸ்பூன்) எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.எலுமிச்சம் பழச் சாறுடன் கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சேர்த்துப் பூசினால் முகம் பளபளப்பாகும். (சாதாரண விரலி மஞ்சள் சிலருக்கு அலர்ஜியாகி தோலில் அரிப்பை ஏற்படுத்தும். இதேபோல் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் சிட்ரஸ் கலந்த பழ வகைகளைப் பூசுவதைத் தவிர்க்கவும். அவர்கள் எந்த விதமான அழகு சம்பந்தப்பட்ட பலமான சிகிச்சையையும் எடுக்கக் கூடாது.கேவோலின் பவுடர் ஒரு டீ ஸ்பூன், ஆரஞ்சுச் சாறு ஒரு டீஸ்பூன், சிறிது நிர் கலந்து பூசினால், எண்ணெய் வழியும் முகம் ஃப்ரெஷ்ஷான தோற்றத்துடன் இருக்கும்.பழ வகைகளை முகத்தில் பூசிக் கழுவலாம். ஆனால் எல்லாப் பழங்களையும் உபயோகப்படுத்த முடியாது.மஞ்சள் வாழைப்பழம் உலர் சருமத்திற்கு நல்லது. வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிது பால் அல்லது பால் பவுடர் முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.ஆப்பிளை வேக வைத்து தோலை நீங்கி, உள்ளிருக்கும் கூழை முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.எண்ணெய்ப் பசை சருமத்திற்கு அன்னாசிப் பழம் சாறுடன் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் போடவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் மகம் கழுவினால் பளிச் சென்றிருக்கும்.பேரீச்சம் பழத்தைப் பால் அல்லது வெந்நீரில் ஊற வைக்கவும். அதை விழுதாக்கி அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தேய்க்கவும். (முடி இருக்கும் இடத்தைத் தவிர்த்து விடவும்.) 15லிருந்து 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவவும். இது சிறந்த ப்ளீச்சாகவும் செயல்படுகிறது.பட்டர் ஃப்ரூட் எனப்படும் அவகோடா பழத்தினுள் இருக்கும் கூழை முகத்தில் தடவினால், முகம் பிரகாசமாக இருக்கும்.பப்பாளி நல்ல நிறத்தைக் கொடுக்கக் கூடியது. ஆனால் உடலில் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் அடிக்கடி இதை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.சரியான வேளையில், சரியான முறையில் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் 25 சதவீதம் அரிசி வகை இருக்க வேண்டும். மீதமுள்ள 75 சதவீதம் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் மற்றும் இதர சத்துக்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் காய்கறி, பழங்கள், கீரை வகைகளில் கிடைக்கின்றன.நார்ச் சாத்துள்ள உணவு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கிழங்கு வகைகள், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், கொழுப்பு, இனிப்பு நிறைந்த பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிருங்கள். பிறகென்ன எப்பொழுதுமே நீங்கள் அழகு ராணிகளாகவும், அழகு ராஜாக்களுமாகத் திகழ்வீர்கள்.

தலைவலி எதனால் வருகிறது??????


பலரு‌க்கு‌ம் கால‌ம் காலமாக தலைவ‌லி‌ப் ‌பிர‌ச்‌சினை இரு‌க்கு‌ம். ஆனா‌ல் அவ‌ர்களோ எ‌ளிதாக வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரை ஒ‌ன்றை வா‌ங்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல் உலக‌த்‌தி‌ல் பலரு‌க்கு‌ம் தலைவ‌லி எ‌ன்ற ஒரு ‌வியா‌தி ‌நி‌ச்சய‌ம் வ‌ந்‌திரு‌க்கு‌ம். ஒ‌வ்வொரு தலைவ‌லி‌க்கு‌ம் ப‌ல்வேறு காரண‌ங்க‌ள் இரு‌க்கலா‌ம். மாணவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் அ‌திகமான தலைவ‌லி வரு‌ம். அத‌ற்கு‌க் அவ‌ர்களது கண் கோளாறு காரணமாக இரு‌க்கு‌ம். க‌ண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம். கண் நீர் அழுத்த நோய் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் தலைவலி வரும். சாதாரணமாக கண் மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தாலோ தலைவலி வரும் நப‌ர்களு‌ம் உ‌ண்டு. ரத்த அழுத்தம் அதிகரித்தல் அ‌ல்லது பல் சொத்தை, சைனஸ் பிரச்சினை ஆகிய காரணங்களாலும் தலைவலி வரும். எ‌ந்த காரண‌த்‌தி‌ற்காக தலைவ‌லி வரு‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து அத‌ற்கு‌ண்டான மரு‌ந்துகளை உ‌ட்கொ‌ள்வதுதா‌ன் ஆரோ‌க்‌கிய வா‌ழ்‌‌வி‌ற்கு வகை செ‌ய்யு‌ம்.

கூகுள் தரும் உடனடித் தீர்வு


தேடுதல் சாதனங்களைத் திறம்படத் தருவதில் தனக்கு நிகர் இல்லை என மீண்டும் கூகுள் நிரூபித்துள்ளது. சென்ற வாரம் கூகுள் இண்ஸ்டண்ட்(Goolgel Instant) என்ற தேடுதலுக்கான முடிவுகள் தரும் புதிய தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாம் தேடும் தகவல் குறித்த தளங்கள், நாம் நம்முடைய தேடுதல் தகவலைத் தரும் முன்னரே காட்டப்பட்டு கிடைக்கின்றன. நம் தேடுதல் நேரம் குறைவதுடன், தேடல் தொடர்பான சரியான தளங்களும் நமக்குக் கிடைக்கின்றன. கூகுள் தளத்தில் இதுவரை, தேடப்படும் பொருள் குறித்த சொற்களை டைப் செய்து என்டர் தட்டிய பின்னரே, கூகுள் தேடத் தொடங்கி நமக்கு, தேடல் தொடர்பான தளங்களைப் பட்டியலிடும். மேலாக, இந்த தேடலுக்கான நேரம் குறிக்கப்படுவதுடன், எத்தனை முடிவுகள் கண்டறியப்பட்டன என்றும் காட்டப்படும். இப்போது இது புதிய முறையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.இந்த புதிய முறையில் 15 நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் மையமாக streaming search என்னும் செயல்பாடு பயன்படுத்தப்படுகிறது. தேடுதல் இங்கு எப்போதும் ஓடும் ஓடை போல இயங்குகிறது. நாம் தேடுதலுக்கான சொல்லை டைப் செய்திடுகையில், நாம் அந்த தேடல் ஓடையில் இணைகிறோம். அந்த ஓடை முதல் சில எழுத்துக்களிலேயே அதனை உணர்ந்து, நமக்கு முடிவுகளைத் தருகிறது. நாம் தேடல் சொற்களை டைப் செய்யத் தொடங்கும்போதே, கூகுள் தன் தேடலைத் தொடங்கி, ஓரிரு எழுத்துக்கள் அமைக்கப்படும் போதே, என்னவாக இது முடியும் என்று கணித்து, அதற்கான தளங்களைத் தேடல் கட்டத்தின் கீழாகப் பட்டியல் இடுகிறது. பழைய முறையில் நாம் தேடல் சொற்களை முழுமையாக அமைத்த பின்னர் என்டர் தட்டி, தேடச் சொல்லி கட்டளை கொடுப்போம். பின் காட்டப்படும் முடிவுகள் சரியாக உள்ளனவா என்று பார்ப்போம். நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால், மீண்டும் நம் தேடலைச் சரி செய்து மீண்டும் தேடுவோம். புதிய முறையில், நாம் சொல்லை அமைக்கும்போதே முடிவுகள் காட்டப்பட்டு, தொடர்ந்து சொற்களுக்கேற்ப அவை மாற்றப்படுகின்றது. நாம் டைப் செய்திடும் போதே, சம்பந்தப்பட்ட முதன்மைத் தளம் சாம்பல் நிற எழுத்துக்களில் காட்டப்படுகின்றது. அதுதான் நமக்கு வேண்டியது என்றால் அப்போதே நிறுத்தி தளங்களைக் காணலாம்.இதனால் நாம் முடிக்கும் முன்னரே, நாம் எதிர்பார்த்த தளங்கள் கிடைத்துவிட்டால், தேடல் சொற்கள் தொகுதியை முடிக்காமலேயே நாம் நமக்குத் தேவையான தளங்களைப் பெற்றுச் செல்லலாம்.ஓர் எடுத்துக் காட்டு மூலம் இதனைக் காணலாம். அமெரிக்க டாலருக்கான எக்சேஞ்ச் விகிதம் என்ன என்று காண்பதற்காக, “Exchange rates dollar to INR” என டைப் செய்திட முடிவெடுத்து, Ex என டைப் செய்தவுடனேயே, Expedia என்ற தளம் குறித்து காட்டுகிறது. பின்னர் “Exch” என டைப் செய்தவுடன் கூகுள் அது “Exchange rates” என உணர்ந்து அவை சார்பான தன் கால்குலேட்டர் தளம் மற்றும் யுனிவர்சல் கன்வர்டர் தளம் ஒன்றையும் காட்டுகிறது. பின் தொடர்ந்து “Exchange rates d” எனக் கொடுத்தவுடன், கீழுள்ள தளங்கள் மாறுகின்றன. அப்போதே பல்வேறு நாட்டு நாணய மதிப்பிற்கான மதிப்பு மாறுதல் காட்டும் தளங்கள் காட்டப்படுகின்றன. இங்கேயே நாம் இந்திய பணத்திற்கான தளத்திற்குச் செல்லலாம். அல்லது முழுமையாக டைப் செய்தால், இந்திய பணத்திற்கான மாறுதல் காட்டும் தளம் முதல் தளமாகக் கிடைக்கும். இவ்வாறு நாம் டைப் செய்து அடிக்கும் முன்னரோ, அல்லது அடித்து முடித்த அடுத்த நொடியிலேயே, என்டர் தட்டாமலேயே, நாம் தேடும் தளங்கள் காட்டப்படுகின்றன. எனவே நாம் என்ன வேண்டும் என்று கேட்பதற்கு முன்னரே, நாம் தேடுவதை நமக்குக் கூகுள் தருகிறது. சுருக்கமாக இதன் பயன்களைக் கூறுவதென்றால், அதிவேக தேடல் முடிவுகள், மிகப் பயனுள்ள முடிவுகள்,உடனடித் தீர்வு ஆகியவற்றைக் கூறலாம். வழக்கமான தேடல் முறையில், ஒருவர் ஒரு தேடலை டைப் செய்திட குறைந்தது 10 விநாடிகள் எடுத்துக் கொள்வார். இது பலருக்கு 30முதல் 90 விநாடிகள் வரை நீட்டிக்கும். கூகுள் இண்ஸ்டன்ட் பயன்படுத்தினால், ஒரு தேடலுக்கு குறைந்த பட்சம் 2 முதல் 5 விநாடிகள் வரை நேரம் குறைகிறது. கூகுளின் அனைத்து வாடிக்கை யாளர்களும், புதிய முறையைப் பயன்படுத்தினால், நாளொன்றுக்கு 350 கோடி விநாடிகள் மிச்சமாகும். அதாவது ஒவ்வொரு விநாடியிலும், 11 மணி நேரம் உலக அளவில் மிச்சப்படுத்தப் படுகிறது.இதனைத் தேடல் வழிகளில் பெரிய புரட்சி என்று சொல்ல முடியாது என்றாலும், மிகப் பெரிய முன்னேற்றம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டு கூகுள் நிறுவனத்தைப் பாராட்ட வேண்டும். அடுத்து கூகுள் என்ன செய்திடும் என்று எண்ணிப் பார்த்தபோது, தேடல் கட்டத்தில் நாம் சொற்களை டைப் செய்கையில், நம் தேடல் பொருள் இதுவாக இருக்குமோ என சிலவற்றை அந்த கட்டத்தைக் கீழாக விரித்துத் தரலாம். அப்போது நாம் தேடும் முழுமையான சொற்கள் தொகுதி இருப்பின், அதனைத் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கக் கர்சரை நகர்த்தும்போதே, கூகுள் அதற்கான தளங்களைக் காட்டலாம்.மைக்ரோசாப்ட் தன் பிங் சர்ச் இன்ஜின் மூலம், கூகுள் நிறுவனத்தின் இடத்தைக் கைப்பற்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கூகுள் இந்த தொழில் நுட்பம் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, இந்த வகையில் தன் முதல் இடத்தை வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது என்று நிரூபித்துள்ளது.கூகுள் தரும் இந்த உடனடித் தேடல், ஏற்கனவே இருந்து வரும் தேடல் தளத்திற்குப் பதிலாக, முதல் கட்டமாக சில நாடுகளுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வழக்கமான தேடுதல் தளத்தில் இது தரப்படவில்லை. விரைவில் கிடைக்கலாம். அதுவரை http://http//www.%20google.com%20/webhp?sclient=psy என்ற தளத்தில் இதனைப் பெறலாம். எந்த நாட்டினரும் இந்த தளம் சென்று இந்த தேடல் முறையைப் பயன்படுத்தலாம். நீங்களும் இந்த தளம் சென்று பார்த்து, இப்போதைக்கு இதனை ஒரு புக்மார்க்காக அடையாளம் வைத்துத் தேடும் போது இதனைப் பயன்படுத்தலாம்.வழக்கமான SafeSearch இதிலும் செயல்படுகிறது. பாலியல் மற்றும் வன்முறைத் தளங்களை இதிலும் வடிகட்டிப் பார்க்கலாம்.இந்த தளத்தைப் பயன்படுத்த குரோம், பயர்பாக்ஸ், சபாரி அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் ஒன்றை பிரவுசராகப் பயன்படுத்த வேண்டும். ஆப்பரா பிரவுசரில் இது செயல்படாது. மேலும் பல தளங்களில் கிடைக்கும் கூகுள் சர்ச் கட்டங்கள் வழியாகவும் இது இப்போதைக்கு இல்லை. மொபைல் போனுக்கான இன்ஸ்டண்ட் தேடல் தளம் இன்னும் தயாராகவில்லை. விரைவில் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது.மேலும் தகவல்களுக்கு http://http//www.google.com/instant/ என்ற கூகுளின் தளத்திற்குச் செல்லவும்.

புதிய வைரஸ் எச்சரிக்கை


கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது. “Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் “நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது’ என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல. .scr. என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு.
இது CSRSS.EXE என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு) மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது. தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது.
இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இதிலிருந்து எப்படி தப்பிப்பது?
நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும். இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You” என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும். இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது.
இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

 காதலியை எப்படி சமாதானப் படுத்துவது?


பொண்ணுகளை சமாதானம் பண்றது பெரிய கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....


முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"

ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"

ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"

ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உண்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"

ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப் பட்டா நான் யார்ட போய் சொல்லுவேன், என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"

ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உண்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ எண்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உண்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உண்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."

ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உண்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

விண்டோஸ்-7 தீர்வுகள் கைவசம்

விண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வசதிகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத வகையில் தரப்பட்டுள்ளன. இவை நம்முடைய பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாய் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.பிரச்னைகளைப் பதிவு செய்: (PSRProblems Step Recorder) நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் ஏதேனும் ஒரு பிரச்னையை எதிர் கொள்கிறோம். அது எதனால் ஏற்படுகிறது, அல்லது அந்த பிரச்னை தான் என்ன என்று நம்மால் விளக்க இயலவில்லை. இதற்கான தீர்வு தான் Problems Step Recorder என்னும் வசதி. பிரச்னைகள் ஏற்படுகிறது எனத் தெரிந்தால், அந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்கும் முன், ஸ்டார்ட் கிளிக் செய்து, PSR என டைப் செய்து, என்டர் தட்டவும். அதன் பின்னர் Start Record என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும், செலக்ட் செய்தாலும், கிளிக் செய்தாலும், டைப் செய்தாலும் அவை அனைத்தும் பதியப்படும். ஒவ்வொரு திரை மாற்றத்தினையும் காட்சிகளாக எடுத்துப் பதிந்து கொள்ளும். இவை அனைத்தையும் சுருக்கி ஒரு MHTL பைலாக உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும். இதனை விரித்துப் பார்த்து எங்கு பிரச்னை ஏற்பட்டது எனத் தெரிந்து கொள்ளலாம். அல்லது பிரச்னையைத் தீர்க்க வரும் கம்ப்யூட்டர் டெக்னீஷியனிடம் காட்டி தெரிந்து கொள்ளலாம்.

2.”சிடி’யில் இமேஜ்: மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு வசதியை, இம்முறை மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தந்துள்ளது. அது சிடி மற்றும் டிவிடிக்களில் I.S.O. . இமேஜ்களை பதிவதுதான். கம்ப்யூட்டரில் உள்ள ஐ.எஸ்.ஓ. இமேஜ் மீது டபுள் கிளிக் செய்து, காலியாக உள்ள சிடி வைத்திருக்கும் ட்ரைவைத் தேர்ந்தெடுத்து, Burn என்பதில் கிளிக் செய்தால், டிஸ்க்கில் இமேஜ் எழுதப்படும்.

3. பிரச்னைகளைத் தீர்க்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பிரச்னை ஏற்பட்டால், ஏடாகூடமாக அது செயல்பட்டால், அதன் காரணம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால், Control Panel > Find and fix problems (or ‘Troubleshooting’) எனச் சென்று, பிரச்னைகளைக் கண்டறியும் பல சிறிய தொகுப்புகளைக் காணலாம். இவற்றைக் கிளிக் செய்து பிரச்னைகளைக் கண்டறிந்து, நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் சரி செய்து, சிஸ்டத்தை கிளீன் செய்தால், சிஸ்டத்தின் பிரச்னைக்குரிய செயல்பாடு தானாகவே சரி செய்யப்படும்.

4. ஆபத்துக்கால “சிடி’: நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருந்தால், சிஸ்டத்தில் பிரச்னை ஏற்பட்டு இயங்கா நிலை ஏற்படும் காலங்களில் பயன்படுத்த, சிஸ்டம் பூட் செய்திட சிடி ஒன்றை மிக எளிதாக உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Click Start > Maintenance > Create a System Repair Disc எனச் சென்று, ஆபத்துக்காலத்தில் கம்ப்யூட்டர் பூட் செய்திட சிடி ஒன்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

5. கம்ப்யூட்டரைச் சிறுவர்களிடமிருந்து காப்பாற்ற: நீங்கள் இல்லாத போது, சிறுவர்கள், சில வேளைகளில் பெரியவர்களும் கூட, பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, பிரச்னையை உருவாக்கு கின்றனரா? அல்லது இயக்கிப் பார்க்கக் கூடாத அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறார்களா? இவை உங்கள் நிறுவனம் நீங்கள் பயன்படுத்தத் தந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கான புரோகிராமாக இருக்கலாம். இவற்றைத் தடுக்க, AppLocker என்ற ஒரு புரோகிராம் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ளது GPEDIT.MSC என்ற புரோகிராமினை இயக்கி, Computer Configuration > Windows Settings > Security Settings > Application Control Policies > AppLocker எனச் சென்று எப்படியெல்லாம், அப்ளிகேஷன்களை இயக்குவதை நீங்கள் தடுக்கலாம் மற்றும் அனுமதிக்கலாம் என்று பாருங்கள்.

6. கூடுதலாக கணக்கிடும் வசதி: விண்டோஸ் 7தரும் கால்குலேட்டர் பார்ப்பதற்கு, விஸ்டாவில் இருந்த கால்குலேட்டர் போல இருந்தாலும், இதன் Mode என்பதைக் கிளிக் செய்து பார்த்தால், இந்த கால்குலேட்டர் தரும் கூடுதல் வசதிகளை அறிந்து கொண்டு பயன்படுத்தலாம்.

7. மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரெஸ்டோர்: முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு, நம் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்லும் வசதிதான் சிஸ்டம் ரெஸ்டோர். இதனால், ஏதேனும் வைரஸ் தாக்குதல்கள், அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்கப் பிரச்னைகள் இருந்தால், அவை எதுவும் இல்லாத நாள் ஒன்றுக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயக்கலாம். ஆனால் எந்த அப்ளிகேஷன் மற்றும் ட்ரைவர் பைல்கள் இதனால் பாதிக்கப்படும் என நமக்குக் காட்டப்பட மாட்டாது. இது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டு நவீனப் படுத்தப்பட்டுள்ளது. மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து, பின்னர் Properties > System Protection > System Restore > Next எனச் சென்று நீங்கள் செல்லவிருக்கும் ரெஸ்டோர் பாய்ண்ட், அதாவது எந்த நாளில் இருந்த நிலைக்குச் செல்ல ரெஸ்டோர் பாய்ண்ட் ஏற்படுத்தினீர்களோ, அந்த நிலையில் கிளிக் செய்திடலாம். பின்னர், புதியதாகத் தரப்பட்டிருக்கும் ‘Scan for affected programs’என்பதில் கிளிக் செய்தால், விண்டோஸ் எந்த புரோகிராம்கள் மற்றும் ட்ரைவர்கள் அழிக்கப்படும் அல்லது சரி செய்யப்படும் என்று பட்டியலிட்டுக் காட்டும்.

8.எக்ஸ்பி வகை இயக்கம்: பல லட்சக்கணக் கானவர்களால், பல ஆண்டுகள் மிகப் பிரியமுடன் இயக்கப்பட்டு வந்த சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி. ஏன், இன்னமும் கூட அதுதான் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுகிறது. இதற்குக் காரணம் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், இதில் மட்டுமே இயங்கும்படி அமைக்கப்பட்டிருப்பதுதான். அப்படியானால், விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மாறிவிட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி பலருக்கு எழும். இதற்காகவே விண்டோஸ் 7 இயக்கத்தில், எக்ஸ்பி வகை இயக்கத்திற்கு மாற்றிக் கொள்ள ஒரு வசதி தரப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து (http://www.microsoft.com/windows/virtualpc/download.aspx) எக்ஸ்பி மோட் என்பதின் நகல் ஒன்றை டவுண்லோட் செய்து பதிந்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது இயக்கிப் பயன்படுத்தலாம்.

9.சகலமும் ரைட் கிளிக்: இந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் முற்றிலும் புதுமையான முறையாகும். டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். உங்கள் ஸ்கிரீன் ரெசல்யூசனை செட் செய்திட இடம் கிடைக்கும். முன்பு போல டிஸ்பிளே செட்டிங்ஸ் என்றெல்லாம் செல்ல வேண்டியதில்லை. அதே போல டாஸ்க் பாரில் உள்ள எக்ஸ்புளோரர் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தால், Documents, Pictures, the Windows folder போன்ற பல சிஸ்டம் போல்டர்களுக்கு நேரடியாகச் செல்லலாம். உங்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்து வதில் நாட்டம் இல்லையா! அப்படியானால், அந்த ஐகானை டாஸ்க் பாரில் இருந்து நீக்கிவிடலாம். பயர்பாக்ஸ் அல்லது குரோம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

10. மாறும் வால் பேப்பர்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல அழகான வால் பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. எனவே எவற்றை விடுத்து, எதனை நம் வால் பேப்பராக அமைப்பது என்று நம்மால் முடிவு செய்திட முடியாது. இதற்காகவே, அந்த வால் பேப்பர்கள் அனைத்தையும், அல்லது நீங்கள் விரும்பும் சிலவற்றை மட்டும், ஒரு ஸ்லைட் ÷ஷாவாக அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது. டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, Personalise > Desktop Background என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் வால்பேப்பருக்கான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும். பின்னர் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை இந்த படங்கள் மாறிக் காட்சியாகத் தெரிய வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும். இது 10 விநாடிகள் முதல் ஒரு நாள் வரை இருக்கலாம். இவை வரிசையாக இல்லாமல், மாறி மாறி வர வேண்டும் எனில் Shuffle என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

பசித்தவருக்கு உதவுங்கள் !செப்., 24 – மகாளயபட்சம் ஆரம்பம்!

இந்த உலகத்திலுள்ள நோய்களிலேயே கடுமையானது பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். இருப்பவர்கள், இல்லாதவர்களின் பசியைத் தீர்ப்பதற்கென்றே உருவான காலம் தான் மகாளயபட்சம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முன்னதாக உள்ள 14 நாட்களே மகாளயபட்சத்தில் அடங்கும்.
குரு÷க்ஷத்திர யுத்தத்தின் முடிவில், கர்ணனைக் கொல்லும் நேரம் வந்தது. அவன் தர்மங்கள் பல செய்த மாபெரும் வள்ளல் என்றாலும் கூட, அதர்மத்துக்கு துணை போன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால், அவனை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ண பரமாத்மா. அர்ஜுனன், மீது விட்ட சில அம்புகள், அவனைக் காயப்படுத்தி சாய்த்தன. ஆனால், உயிரைப் பிரியவிடாமல் அவன் செய்த தர்மம் காத்து நின்றது. அப்போது, அந்தணராக வேடமணிந்து, அவன் செய்த தர்மத்தை தாரை வார்த்துப் பெற்றார் கிருஷ்ணர். அதற்காக, அவனுக்கு மோட்சம் அளித்தார். சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு, அவன் செய்த பொன், நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன; ஆனால், அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்தபோது, தேவர்கள் அவனிடம், “கர்ணா… நீ பூமியில் இருந்தபோது பொன்னும், மணியுமே தானம் செய்தாய்; அன்னதானம் செய்யவில்லை. எனவே, நீ இப்போது பூமிக்குச் செல். இப்போது மகாளயபட்ச காலம். பிதுர்கள் (மறைந்த முன்னோர்) பூமிக்குச் செல்லும் காலம். அவர்களை அவரவர் உறவினர் வரவேற்று, தர்ப்பணம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானமும் செய்வர். இக்காலத்தில், நீ மறைந்திருந்து அன்னதானம் செய்து வா. பின்பு இங்கு உணவும் கிடைக்கும்!’ என்றனர்.
கர்ணன் அவ்வாறு பூமிக்கு வந்த காலமே மகாளய காலம் ஆனது. உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லாருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். தினமும் காலையில் பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுக்க வேண்டும். காலை, மதியம் உணவிற்கு முன், காகங்களுக்கு சோறிட வேண்டும். 14 நாட்களும் தினமும் ஒரு ஏழைக்காவது உணவு கொடுக்க வேண்டும்.
ஏதாவது ஒருநாள் ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி கடற்கரையிலோ, கங்கை (காசி), தாமிரபரணி (பாபநாசம்), காவிரி (ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்) ஆகிய நதிக்கரைகளிலோ, குற்றாலம் அருவிக்கரையிலோ தர்ப்பணம் செய்து, அங்குள்ள கோவில்களில் வழிபட்டு வர வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம். இவ்வாண்டில், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 7 வரை மகாளய காலமாகும்.

முகங்களிற்கு ஏற்ற பொட்டு

எந்த வடிவமான முகத்திற்கு எந்த வடிவ பொட்டு

சதுர முகம்:

* இவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். இவர்கள் வைத்துக்கொள்ளும் பொட்டுக்கள் நீளமானதாகவும், அகலம் குறைந்ததாகவும் இருக்கக்கூடாது. உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர் களுக்கு பொருத்தமாக இருக்கும்.

வட்ட வடிவ முகம்:

* இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகுதரும்.

* இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.

முக்கோண வடிவ முகம்:

இவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.

இதய வடிவ முகம்:

* இவர்களுக்கு நீண்ட பொட்டுகள் நன்றாக இருக்கும்.
முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான். அதனால் அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும் விதத்தில் பொட்டு வைக்கவேண்டும். கோதுமை நிற சரும பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும்.
வகைகள்: அழகு

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ?

“பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:
1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?
3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.
4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.
5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.
7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.
8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது
9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்
11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்
12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.
13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.
14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.
17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.
18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.
20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.
21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.
22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.
25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.
பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

திருமணத்திற்கு தயாரான பெண்ணுக்கு!

மணப்பெண் அலங்காரம் என்பது நமது தமிழ் குடும்பங்களில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். அக்காலத்தில் வாரம் இரு முறை எண்ணை தேய்த்து குளித்தல், வாரம் ஒரு முறை மஞ்சளுடன் தேங்காய் எண்ணை கலந்து உடல் முழுவதும் பூசுதல் மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு பண்டிகையை யொட்டி மருதாணி இட்டுக் கொள்ளுதல் போன்றவை அவர்களது தலைமுடி, முகம், கைகால்கள் ஆகியவற்றை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
தற்கால பெண்களுக்கு படிப்பு, வேலை மற்றும் பல வேலைகள் இருப்பதால் இவற்றுக்கெல்லாம் நேரம் கிடைப்ப தில்லை. திடீரென திருமணம் நிச்சயமான வுடன் அவர்களுக்கு தங்களை அழகுப் படுத்திக் கொள்ளும் எண்ணம் அதிகமாகி றது. 6 மாதம் முன்னதாகவே திருமணம் நிச்சயமான பெண்களுக்கு அவர்களை தயார் செய்து கொள்ள நிறைய நேரம் கிடைக்கிறது. மேலும் 3 மாதம் ஒரு மாதம் என்று குறைந்த நேரத்திலும் அவர்களை தயார் செய்ய பார்லர்களில் வித விதமான விதிமுறைகளை செயல்படுத்துகின்றனர்.
முதலில் 6 மாதம் முன்னதாக என்றால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம். அவர்களுக்கு முதலில் தலைமுடியை மாதம் ஒரு முறை நன்றாக ஒயில் மசாஜ் செய்து ஹென்னா கண்டிஷனர் போட்டு வரலாம். முகத்துக்கு நல்ல தரமான பிளீச்சிங் மற்றும் பழ பேஷியல் செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் பெடிக்யூர், மெனிக்யூர் மாதம் ஒரு முறை செய்து கொண்டே வந்தால் கல்யாண நேரத்தில் நல்ல பலன் தெரியும். இவர்கள் திருமணத்துக்கு முதல் மாதமும் திருமணத்துக்கு முன்பும் ஒரு கோல்டன் பேஸியல், பிரெஞ் பெடிக்யூர், மெனிக்யூர் ஆகியவற்றை செய்து கொள்வதன் மூலம் அழகிய தோற்றத்தை பெறலாம். இந்த 6 மாதம் எப்பொழுது வெளியில் சென்றுவிட்டு வந்தாலும் சுத்தமான நீரினால் முகத்தை கழுவுதல்இ வெள்ளரிப் பிஞ்சை கண்கள் மேல் வைத்துக் கொள்ளுதல் எலுமிச்சை, தயிர் போன்றவற்றை முகம் மற்றும் கைஇ கால்களில் தடவி வருதல் ஆகியவற்றை செய்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் இது கூடுதல் பலனை அளிக்கும்.
இனி 3 மாதம் முன்னதாகவே தயாராக வேண்டிய மணப்பெண் முதல் மாதம் முதலே பிளீச்சிங் பேஷியல் அல்லது கோல்டன் பேஷியல் ஆகியவற்றை தவறாமல் செய்து கொள்வது நல்லது. இது முகப்பொலிவை உடனடியாக எடுத்துக் காட்டுகிறது. இது போல தலை முடியை பராமரிப்பதற்கும் சூடான எண்ணையில் மசாஜ் செய்வதோடு கூட வைப்ரேட்டர், ஹைபிரிகுவன்சியை உபயோகப்படுத்தி தலை முடியை பேன், பொடுகு, தொல்லை இல்லாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இத்துடன் பெடிக்யூர் மற்றும் மெனிக்யூரையும் அவசியமாக செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் திருமணத்துக்கு முன் எந்தவிதமான தோல் பிரச்சினை, பொடுகுப் பிரச்சினைகளோ, கை, கால், நகங்களின் மூலம் உண்டாகும் பிரச்சினைகளோ வராமல் தவிர்க்கலாம். திருமணத்துக்கு 4 அல்லது 5 நாட்களுக்கு சிறப்பு மணமகள் பேக்கேஜ் என்ற ஒரு வசதியை செய்து கொள்ளலாம். 3 மற்றும் 4 மணி நேரம் செலவிட்டால் மணப் பெண்ணை உச்சி முதல் பாதம் வரை தயார் செய்து விடலாம்.

முதலில் தலை முடிக்கு சிறப்பான சூட்டுப் பருவத்தில் எண்ணையில் மசாஜ் செய்து ஹென்னா கண்டிஷனர் மூலம் முடியை சுத்தமாக்கி பளபளப்பாக வைத்த பின்னர் முகத்துக்கு பிளீச்சிங் செய்தவுடன் கோல்டன் பேஷியல் செய்து முகத்தின் சதைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக் கச் செய்யலாம். கைஇ கால்களில் உள்ள நிறத்தை அதிகரிக்க முதலில் பிளீச்சிங் செய்துஇ பிறகு வேண்டாத முடியை நீக்க வெக்சிங் செய்கிறோம். இதன் மூலம் நிறம் அதிகரிப்பது மட்டு மல்லாமல் தோலும் மிருதுவாக இருக்கும். அதன் பிறகு பெடிக்யூர்இ மெனிக்யூர் ஆகியவற்றை பிரெஞ்ச் முறையில் செய்து பாதங்களையும்இ நகங்களையும் அழகு மிளிரச்செய்யலாம். திருமணத்துக்கு முன் உடல் முழுவதையும் மசாஜ் செய்து கொள்வது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும்இ சுறு சுறுப்பையும் கொடுக்கும். இவை அனைத்தும் மணமகள் அலங்காரத்தில் அடங்கும்.

திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு கை, கால்களில் மெஹந்தி எனப்படும். மருதாணியால் போடும் டிசைன்களை இப்பொழுது பலரும் விரும்பிப் போட்டுக் கொள்கிறார்கள். மணமகள் மருதாணி அலங்காரம் என்பது முழங்கை வரை போடப்படும். ராஜஸ்தானி (இந்திய) மாதிரியாகவோ அல்லது அரேபிய டிசைனாகவோ போட்டுக் கொள்ளலாம். கறுப்பு மெஹந்தி என்று தற்போது போடும் கறுப்பு மெஹந்தி டிசைனையும் மணப்பெண் தவிர மற்றவர்கள் போட்டுக் கொள்கி றார்கள். கால்களுக் கும் கொலுசு டிசைன் முதல் காலை முற்றிலும் மூடும் ராஜஸ்தானி டிசைனையும் போட்டுக் கொள்ளலாம். தங்க கலர், சில்வர் கலர், கிலிட்டர்ஸ் ஆகியவற்றையும் வரவேற்பு நேரத்தில் போட்டுக் கொள்ளலாம்
மணப்பெண் திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன்பிருந்தாவது முறையான அழகுபராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மணப்பெண்ணின் முக அழகானது வீடியோ, போட்டோவில் வசீகரமானதாகத் தெரியும். அரைத்தேக்கரண்டி எலுமிச்சபழ சாறுடன் சிறிது பால் சேர்த்து அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு இதை எடுத்து இரவு படுப்பதற்கு முன்பு முகத்தில் நன்றாகப் பூசிக்கொள் ளுங்கள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் தவறாமல் செய்து வந்தால் உங்களது முகம் அபாரமாக பளிச்சிடும். கனிந்த தக்காளியில் சாறு எடுத்து காலை பகலில் முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் தினமும் தொடர்ந்து செய்துவர முகம் சிறிது சிறிதாக நல்ல நிறத்தை அடைகிறது..
வெள்ளரிக்காயை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து முகம் முழுவதும் தடவி 25 நிமிடங்கள் உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினாலும் முகம் பளபளப்பு பெறும்..
பாதாமை அரைத்து பாலேட்டுடன் சேர்த்து சில துளிகள் பன்னீர் விட்டு முகத்தில் தடவிக்கொண்டு அரைமணி நேரம் உலரவிட்டு கழுவினால் முகம் பளிச் என்று ஆகிவிடும். தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் என்றால் என்னவென்று கேட்பீர்கள். தயிர்கூட மிகச்சிறந்த அழகு சாதனம்தான் முகத்தில் தயிரை தடவி வர உங்கள் முகம் இளமைப் பொலிவுடன் திகழும்.. முகத்திற்கு கிரீம் லோஷன், மொய் ஸரைஸர் என்று மாற்றி மாற்றி கவனத்துடன் ஒப்பனை செய்து கொள்ளும் நாம் கழுத்தை கவனிப்பதில்லை. நன்றாக உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். முகம் பளிச் என்று இருக்கும் கழுத்து சம்மந்தமில்லாததுபோல கறுப்பாக இருக்கும். முகத்திற்கு எடுத்துக் கொள்ளும் கவனத்தை கழுத்திற்கும் எடுத்துக்கொள்வது நல்லது..
சில பெண்கள் வித விதமான உடையணிந்து முகத்தை ஒப்பனை செய்துகொண்டாலும் கைவிரல்களைப் பார்த்தால் தடிமனாகவும், சொர சொரவென்றும் பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும். இதற்கு காரணம் என்ன? அவர்கள் கைவிரல்களை சரியாக பராமரிக்காததுதான். சரிவர பராமரித்து அழகூட்டப்பட்ட விரல்களே உங்கள் அழகிற்கு மேலும் மெருகூட்டக்கூடியவை. வீட்டுவேலைகளின் போது உதாரணமாக பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தலின் போது கைகளில் ரப்பர் உறைகளைப் போட்டுக்கொள்வது அவசியம். உறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் ஏதாவது ஒரு ஹாண்ட் க்ரீம் தடவி கொள்ளுங்கள். . நகங்கள் மிகவும் மென்மையாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் உப்பு சிறிதளவு போட்டு அதில் விரல் நகங்கள் படுமாறு சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வர நகங்கள் உறுதி ஆகும். கைவிரல்கள் உலர்ந்து வெடிப்புகள் வராமலிருக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய்யை கைகளில் பரவலாகத் தடவி தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும்..

உள்ளங்கைகளும், விரல்களும் மிருதுவாக இருக்க தயிரைத் தடவித் தேய்த்துக் கொள்வதாலும் விரல்கள் மென்மைப்படும். எல்லாவித பேஸ் பேக்குகளுமே கைகளுக்கு பயன்படுத்த ஏற்றவை.. கடைகளில் விற்கும் ஹோண்ட் கிரீம்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் வீட்டிலேயே கிரீம் தயாரித்துக் கொள்ளலாம். அரை அவுன்ஸ் கிளிஸரினுடன் அரை அவுன்ஸ் பன்னீர் சேர்த்து ஹேண்ட் கிரீம் தயாரிக்கலாம். அல்லது கிளிஸரினுடன் தேன், எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் ஹேண்ட் கிரீம் தாயாரிக்கலாம்..
நகங்களில் அவ்வப்போது ஒலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மஸாஜ் செய்து கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது க்ரீம் அல்லது ஒலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு கைவிரல்களை உருவி உருவித் தேய்த்து மஸாஜ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும். நகங்கள் உறுதியில்லாமல் அவ்வப்போது உடைந்தாலோ அல்லது தெறித்து விட்டாலோ உடம்பில் போதுமான அளவு இரும்புச்சத்து அல்லது கல்சியம் சத்து இல்லை எனத்தெரிந்து கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு நகங்கள் உறுதியாக இருக்கும்.

அளவான பு‌ன்னகை தா‌ன் ஆயுத‌ம்


த‌ற்போதைய இ‌ய‌ந்‌திர‌த்தனமான உல‌கி‌ல் ம‌னித‌ர்க‌ள் தொலை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌த்தனையோ ந‌ல்ல ‌விஷய‌ங்க‌‌ளி‌ல் பு‌‌ன்னகையு‌ம் ஒ‌ன்று. கால‌ை‌யி‌ல் எழு‌ந்‌திரு‌க்கு‌ம் போது தொ‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌ம் பரபர‌ப்பு, இரவு தூ‌ங்க‌ச் செ‌ல்லு‌ம் வரை தொட‌ர்‌கிறது. நடு‌வி‌ல் ‌‌சி‌ரி‌க்கவோ, பு‌ன்னகை‌க்கவோயாரு‌க்கு‌ம் நேர‌மி‌ல்லை.

இ‌ந்த சமய‌த்‌தி‌ல் பு‌ன்னகையுட‌ன் கூடிய ஒரு முக‌த்தை‌ப் பா‌ர்‌த்தா‌ல் நா‌ம் மய‌ங்‌கி ‌விடுவது இய‌ற்கை‌த்தானே? எ‌தி‌ர்பாலரை‌க் கவர மெ‌ல்‌லிய‌ப் பு‌ன்னகை ஒ‌ன்றே போதும‌ல்லவா?

ஒருவ‌ர் எ‌ன்னதா‌ன் அழகான ஆடைகளு‌ம், அ‌ணிகல‌ன்களு‌ம் அ‌ணி‌ந்‌திரு‌ந்தாலு‌ம், அ‌ந்த அழகு‌க்கெ‌ல்லா‌ம் அழகு சே‌ர்‌ப்பது பு‌ன்னகைதானே. எ‌ப்போது‌ம் ‌சி‌ரி‌த்தபடி, பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ப்பவரை‌த்தா‌ன் எ‌ல்லோருமே ‌விரு‌ம்புவா‌ர்க‌ள். ‌சிடு‌சிடுவென இரு‌க்கு‌ம் ‌சிடுமூ‌ஞ்‌சியை யாரு‌ம் ‌விரு‌ம்புவ‌தி‌ல்லை.

இதேதா‌ன் காதலு‌க்கு‌‌ம் பொரு‌ந்து‌ம். ஒருவரை ‌நீ‌ங்க‌ள் கவர வே‌ண்டு‌ம் எ‌ன்றாலோ, ஒருவ‌ர் ‌மீது உ‌ங்களு‌க்கு ஈ‌ர்‌ப்பு ஏ‌ற்படுவதாக இரு‌ந்தாலோ அத‌ற்கு பு‌ன்னகை பெ‌ரிது‌ம் உதவு‌ம் எ‌ன்பதை மற‌க்கா‌தீ‌ர்க‌ள். கு‌றி‌ப்பாக எ‌ரி‌ந்து ‌விழு‌ம் பெ‌ண்களை ‌விட, பு‌ன்னகையுட‌ன் உ‌ள்ள பெ‌ண்களை‌த்தா‌ன் ஆ‌ண்க‌ள் ‌விரு‌ம்புவா‌ர்க‌ள்.

அத‌ற்காக எ‌ப்போது‌ம் ‌சி‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌‌ங்க‌ள் எ‌ன்று சொ‌ல்ல‌வி‌ல்லை. அ‌ப்படி செ‌ய்தா‌ல் பை‌த்‌திய‌ம் எ‌ன்றோ, அவ‌ள் ஒரு மா‌தி‌ரி எ‌ன்றோ ‌நினை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம் வா‌ய்‌ப்பு‌ண்டு. எ‌ப்போது‌ம் யாரை‌ப் பா‌ர்‌த்தாலு‌ம் மெ‌ல்‌லிய ஒரு பு‌ன்னகையை பரவ ‌விடு‌ங்க‌ள். இ‌ந்த தொ‌ற்று நோ‌ய் தா‌ன் ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ம‌ற்றொருவரு‌க்கு எ‌ளிதாக பரவு‌ம்.

எனவே, மெ‌ல்‌லிய பு‌ன்னகையு‌ம், ‌சி‌ரி‌த்த முகமு‌ம் ‌நி‌ச்சய‌ம் ம‌ற்றவ‌ர்களை ந‌ம்பா‌ல் கவ‌ர்‌ந்‌திழு‌க்கு‌ம். அ‌தி‌ல் எ‌ந்த ச‌ந்தேகமு‌ம் வே‌ண்டா‌ம்.

அளவான பு‌ன்னகையே காதலு‌க்கு ஆயுத‌ம். அதையே ஆ‌ண்க‌ளு‌ம் ச‌ரி, பெ‌ண்களு‌ம் ச‌ரி ‌விரு‌ம்பு‌கிறா‌ர்க‌ள்

கூந்தலின் ஜீவன்!

குழாயில் தண்ணீர் வராதது, டீன் ஏஜ் பையன் சொன்ன பேச்சு கேட்காதது போல முடி கொட்டுவதும் நிரந்தரக் கவலையாகி விட்டது. ‘அந்தக் காலத்துலயெல்லாம் இப்போ இருக்கிற மாதிரி ரெண்டு மடங்கு முடி ஒரு சடைக்கு மட்டும் இருக்கும்‘ என்று வருந்துகிற பலரும் ‘ஏன் இப்படியாச்சு?’ என்று யோசிக்கிறோமா?

‘‘யோசிப்பது மட்டுமல்ல.. கொட்டுவதற் குத் தடை போடுவதும் அவசியம்‘‘ என்கிறார் ரம்யா’ஸ் பியூட்டி பார்லர் வைத்திருக்கிற சந்தியா செல்வி. அவர் தருகிற கூந்தல் டிப்ஸ்களைப் பார்க்கலாமா?

‘பொடுகு, பேன், செம்பட்டை, முடி உதிர்தல், வறண்ட கூந்தல்’ என்று ஒவ்வொன்றுக்குமான ஸ்பெஷலிஸ்ட் கூந்தல் பராமரிப்புப் பொருள்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. மருத்துவர் அல்லது தகுந்த அழகுக் கலை நிபுணரின் அறிவுரையில் இவற்றை உபயோகிக்கலாம்தான். ஆனால், விளம்பரத்தில் மயங்கி மாற்றிக் கொண்டே இருந்தாலோ, உங்கள் கூந்தலுக்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்து விட்டாலோ பிரச்னைதான். எனவே, தரமான ஷாம்புவுக்கு முதலில் மாறுங்கள்.

உணவில் தொடங்குகிறது கூந்தல் ஆரோக்கிய ரகசியம். கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள், புரதச் சத்துள்ள பொருட்கள் இவற்றைக் கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதோடுகூட, வீட்டில் இருக்கிற பொருள்களை வைத்து கூந்தலைப் பராமரிப்பது பற்றிப் பார்க்கலாம்.

சாதாரணமானது, எண்ணெய்ப் பசை கொண்டது, வறண்டது, இரண்டும் கலந்தது என்று தலைமுடி நான்கு வகைப்படும்.

வேர்க்காலில் தொடங்கி அடிமுடிவரை பளபளவென்று ஆரோக்கியமாக இருப்பதுதான் சாதாரண கூந்தல். மற்றவர்கள் பொறாமைப்படும்படியான கூந்தல் கொண்ட நீங்கள் வாரம் ஒருமுறை அதற்கு எண்ணெய் மசாஜ் செய்யவேண்டும். பிறகு, முட்டையின் வெள்ளைக்கருவு டன் ஒரு எலுமிச்சை பிழிந்து வேர்க்கால் தொடங்கி அடி முடி வரை தடவி அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளித்து வந்தாலே விளம்பரக் கூந்தலாய் மின்னும்.

தலைக்குக் குளித்த அன்று புஸ்புஸ்ஸென்று அழகாக இருக்கும். மறுநாளே ஒரு லிட்டர் எண்ணெயைத் தலையில் கவிழ்த்தியதுபோல பிசுக்பிசுக்காகிவிடும். இதுதான் எண்ணெய்ப்பசை கூந்தல்.

சீயக்காய் அரை கிலோ, புங்கங்காய் 100 கிராம், பச்சைப் பயறு 100 கிராம், வெந்தயம் கைப்பிடி அளவு, பச்சரிசி 2 கைப்பிடி அளவு எடுத்து, அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாக உபயோகித்து வந்தால் கூந்தல் அலை மாதிரி அசைந்தாடும்.

ஜீவனே இல்லாமல் வறண்டுபோய் வெடிப்பு வெடிப் பாக இருப்பதுதான் வறண்ட கூந்தல். இயல்பாகவே தலைப்பகுதியில் எண்ணெய்ச் சுரப்பு குறைவாக இருக்கும் உங்களுக்கு. பராமரிக் காமலும் விட்டால் அவ்வளவுதான். நீங்கள் வாரம் ஒருமுறையாவது ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். முந்தின நாள் இரவே வேர்க்கால் முதல் அடிமுடி வரை எண்ணெய் தடவி மசாஜ் செய்யுங் கள். அடிமுடியில் அதிக எண்ணெய் தடவுங்கள். மறுநாள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் முட்டையின் வெள்ளைக் கருவைக் கலந்து மசாஜ் செய்து, பிறகு குளியுங்கள் (முட்டையின் மஞ்சள் கரு உங்கள் கூந்தலுக்கு அற்புதமான மருந்து. கூந்தலை அலசிய பிறகும் முட்டை வாசனை வருவது பற்றிக் கவலை இல்லையெனில், மஞ்சள் கரு உபயோகிக்கலாம்.).

தலைப் பகுதியில் எண்ணெய்ப் பசையுடனும் கீழே செல்லச்செல்ல வறண்டும் இருப்பது இரண்டும் கலந்த கூந்தல். கூந்தலின் அடிப்பகுதிக்கு மட்டும் நிறைய எண்ணெய் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளியுங்கள். தலையை நன்றாக அலசிய பிறகு, கடைசி மக் தண்ணீரில் ஒரு எலுமிச்சை அல்லது கொஞ்சம் வினிகர் சேர்த்து அந்தத் தண்ணீரை அப்படியே தலையில் ஊற்றி விட்டு வெளியே வாருங்கள். தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் இதை மறக்காமல் செய்வதுதான் உங்களுக்கான பராமரிப்பு.

மசாஜ் எப்படிச் செய்வது என்று பார்க்கலாமா?

பஞ்சில் எண்ணெயை நனைத்து, கூந்தலை வகிர்ந்து தடவுங்கள். இதை தலை முழுக்கச் செய்யுங்கள்

விரல் நுனிகளில் எண்ணெய் தொட்டு தலை முழுக்கவும் வட்ட வட்டமாக கடிகாரச் சுற்றிலும், எதிர்த்திசையிலும் லேசாக அழுத்தம் கொடுத்தபடி தடவுங்கள்

கோதுங்கள்.

இரு கைகளாலும், தலை முழுக்க மென்மையாகக் குத்துங்கள்.

தலை முழுக்க எண்ணெய் தேய்த்த பிறகு, முறுக்கிக் கொண்டையாகப் போடுங்கள். மசாஜ் ஓவர்.

அட.. ரொம்ப சுலபமான வேலையாச்சே என்கிறீர்களா?

உங்களுக்கு ஒரு ஆண் துணை தேவைப்பட்டால்…?


அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பெண்கள் இவ்விஷயத்தில் பெரிதும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் சரியான நபரைத் தேர்ந் தெடுப்பது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமில்லை. இவ்விஷயத்தில் இளம் பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்…

1. புதிய மனிதர்களைச் சந்தியுங்கள்

அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய இளம்பெண்களில் 52 சதவீதம் பேர் தமக்கு ஏற்ற துணையை அறிவதற்காகவே உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள், திருமணங்களுக்குச் செல்கி றார்கள். ஆனால் அங்கே சரியான நபரைக் கண்ட பிறகு நேரே போய் பேசிவிடுகிறார்களா என்ன? ஜாடைமாடையாகப் பார்க்கிறார்கள், புன்னகைக் கிறார்கள், கிசுகிசுக்கிறார்கள்… ஆனால் ஓரக்கண்ணால் பார்ப்பதை விட நேரே போய் பார்த்துப் பேசிவிடலாமே? நீங்கள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர் என்றால் உங்கள் தோழியையோ, உறவினரையோ தூது செல்லப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

2. சுற்றி வளைக்காதீர்கள்

இந்தியப் பெண்களில் 23 சதவீதம் பேர் `தங்கள் ஆளுக்கு’ பொறாமை ஏற்பட வேண்டும் என்பதற்காக வேறு சிலருடன் நட்பு வைத்துக்கொள்கிறார்களாம், அல்லது அப்படிக் காட்டிக்கொள்கிறார்களாம். ஆனால் மலரும் ஓர் உறவுக்கு அதுவே எதிரியாகிவிடலாம். நீங்கள் ஏவும் ஏவுகணையைத்தானே நீங்கள் விரும்புபவருமë ஏவுவார்?

3. நேர்மையாக இருங்கள்

இந்திய இளம்பெண்களில் 15 பேர் தாங்கள் ஏற்கனவே ஒரு நட்பில், காதலிலிருந்து பிரிந்து மனம் நொந்திருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு. எல்லாம் தாங்கள் விரும்புவரின் அனுதாபத்தைச் சம்பாதிக்கத்தான். ஆனால் ஒரு புதிய உறவுக்கு முன்னுரை எழுதும்போதே அது முடிவுரை எழுத வைத்துவிடலாம். காரணம் ஆண்கள் சிக்கலான உறவுகளைத் தவிர்க்க விரும்புவதுதான்.

4. எதிர்காலத்தைப் பாருங்கள்

இந்தியப் பாரம்பரியப்படி பெரும்பாலான பெண்கள் (89 சதவீதம் பேர்) முதலில் தோன்றும் ஒரே காதல்தான் உண்மையானது என்று கருதுகிறார் களாம். அதில் தவறில்லை. ஆனால் முதல் காதல் சொதப்பலாகிவிடும்போது அதிலேயே தேங்கி நிற்க வேண்டும் என்பதில்லை. கடினமானது என்ற போதும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தாக வேண் டும்.

5. `முதல் பார்வையிலேயே…’ சரியாகாது

`பார்த்த முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்துப் போனது’ என்பதெல்லாம் சினிமா வுக்குத்தான் பொருந்தும். ஆனால் சினிமாவின் தாக்கத்தாலோ என்னவோ, அதிகமான பெண்கள் (63 சதவீத மானவர்கள்) முதல் பார்வையில் ஏற்படும் காத லுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு காதலில் விழக் கூடாது.

6. அவரது நண்பர்களை அவர் தேர்ந்தெடுக்கட்டும்

தமது `நபர்’, தம் தோழியருடனும், குடும்பத்தினருடனும் நன்றாகப் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பது பெண்களின் இயல்பு. சில ஆண்கள் அதை அதிகமாக விரும்பாதவர்களாக இருக்கலாம். ஆனால் பொதுவான நிகழ்ச்சிகள், குடும்ப விழாக்களில் இயல்பாகப் பேசக் கூடும். எனவே `உங்களவரின்’ நடத்தை, குணத்தை மட்டும் பாருங்கள். உங்களுக்கு நெருங்கியவர்களுடன் எப்படிப் பழகுகிறார் என்ற அளவுகோலை மட்டும் வைத்துக் கொண்டு உங்கள் அன்புக்குரியவரை எடை போடாதீர்கள்.

7. நடைமுறை சார்ந்தவராக இருங்கள்

உங்கள் நபர் `சூப்பர்மேனாக’ இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். எல்லாவகையிலும் திருப்தியான நபரை ஐந்தாண்டுகளாகத் தேடுவதாக 12 சதவீத இந்தியப் பெண்கள் கூறியிருக்கிறார்கள். உங்களவரின் தலையில் எதிர்பார்ப்புச் சுமைகளை ஏற்றாதீர்கள். அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு உறவின் இயல்பை, உண்மைத்தன்மை யைப் பாதிக்கும்.

சூழலை காக்கும் சமையல் அறை


நம் வீட்டின் சமையல் அறைகள் பெருந் தொழிற்சாலைகளின் சிறிய பகுதிகள் போன்றவை. இவை செயல்படும் முறை சூழலுக்கு இணக்கமாகவோ, எதிராகவோ அமையலாம். சமையல் அறைகள் உணவு தயாரிப்பதற்கு மட்டுமானவை என்று நினைத்துவிடக் கூடாது. அவைதான் நமது உடல்நலத்தையும், பூமியின் உடல்நலத்தையும் ஒரு சேரப் பாதுகாக்கக் கூடியவை.

சமையல் அறையில் எரிபொருளையும், தண்ணீரையும் நாம் பெருமளவு சேமிக்க முடியும்.

வீட்டுக்குள்ளே நாம் மிக அதிகமாக எரிபொருள் செலவு செய்யும் விஷயங்களில் ஒன்று கேஸ் ஸ்டவ் அல்லது ஏதாவது ஒரு வகை அடுப்பு. எரிவாயு நன்கு, முழுமையாக எரியும் திறன் கொண்ட எரிபொருள் என்பதால், கேஸ் ஸ்டவ்வை சிம் நிலையில் வைத்தே சமைக்கலாம். எப்பொழுதும் பர்னரை முழுமையாக எரிய விடத் தேவையில்லை. சமைக்க வேண்டிய பொருள் தேவையான கொதி நிலைக்கு வந்த பின், தீயின் அளவைக் குறைப்பதால் 40 சதவீத எரிவாயுவை மிச்சம் பிடிக்கலாம். திரவப் பொருள் என்றால் கொதி நிலை வந்தவுடனும், திடப் பொருட்கள் என்றால் வெந்தவுடனும் தீயை அணைத்து விடவும். குறிப்பாக காய்கறிகளை முழுமையாக வேக வைக்காமல், பாதி வெந்தாலே போதும், முழுமையாக வேக வைக்கும்போது அவற்றிலுள்ள சத்துகள் காணாமல் போய்விடும்.

பாத்திரத்தில் சமைப்பதற்கு பதிலாக பிரஷ்ஷர் குக்கரில் சமைப்பதால் 75 சதவீத எரிபொருளை மிச்சம் பிடிக்கலாம். சமைப்பதற்கு ஆகும் நேரமும் குறையும். பிரஷ்ஷர் குக்கரின் கேஸ்கட் இறுக்கமாக இருக்கிறதா, வெயிட் சரியாக இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளவும். இல்லையென்றாலும் எரிபொருள் வீணாகும்.

அதேபோல் தட்டையான, அடி அகன்ற பாத்திரத்தில் சமைப்பதால் தீ முழுமையாக பயன்படுத்தப்பட்டு வெப்பம் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் எதை சமைக்கும்போதும் பாத்திரத்தை மூடி வைக்கவும். இதனாலும் எரிபொருள் மிச்சமாகும்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கூட்டாகச் சாப்பிடுவதால் அந்நியோன்னியம் கூடும். உணவை பல முறை சூடாக்குவதையும் தவிர்க்கலாம். எப்பொழுதும் தேவையைக் கணக்கிட்டே சமைக்க வேண்டும். சமைத்த உணவை அடிக்கடி பிரிட்ஜில் வைத்து, மீண்டும் சூடாக்குவதால் இரண்டுக்குமே எரிபொருள் செலவாகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

பொருட்கள் வாங்கக் கடைக்குச் செல்லும்போது கட்டாயம் துணிப்பை எடுத்துச் செல்வோம். சாலையோர கடையில் முன்பெல்லாம் இலையில் கட்டி பூவை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இன்று அங்கும்கூட பிளாஸ்டிக் பையே தரப்படுகிறது. பூக்கடை, மளிகைக் கடை, ஜவுளிக் கடை, ஓட்டல் என எதுவென்றாலும் பிளாஸ்டிக் பை தராத பட்சத்தில் நாமே கேட்டு வாங்குகிறோம். ஒரு காலத்தில் வாழை இலை, மந்தாரை இலையில் சுருட்டிக் கொடுத்தது மட்டுமின்றி, அவற்றில் சாப்பிட்ட காலமும் மலையேறி விட்டது.

பிளாஸ்டிக் பையால் ஏற்படும் பிரச்னைகள் நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருந்தாலும் துணிப் பை எடுத்துச் செல்லத் தயங்குகிறோம். இந்தத் தயக்கத்தை ஒழிக்க வேண்டும். கடைகளுக்குச் செல்லும் முன்னரே என்னவெல்லாம் வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொள்ள வேண்டும். இதனால் பல முறை செல்வதைத் தவிர்க்கலாம். அத்துடன் ஒவ்வொரு முறை செல்வதற்கான நேரம், எரிபொருள் இழப்புகளையும் குறைக்கலாம்.

வெவ்வேறு கடைகளுக்குச் செல்ல வேண்டிய பட்சத்தில், முன்கூட்டியே திட்டமிட்டு வரிசையாக ஒவ்வொரு கடைக்கும் சென்று வாங்குவதாலும் மேற்கண்ட இழுப்புகளை குறைக்க முடியும். திட்டமிட்டு செயல்படுவதால் நேரம், எரிபொருள் மிச்சம் அடைவது மட்டுமின்றி நம் அலைச்சலும் குறைகிறது, காசு சேமிக்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.