You Tube பெற்ற புதிய தள முகம்


இணையத்தில் மிக அதிக அளவில் வீடியோ சேவையினை வழங்கி வரும் தள நிறுவனப் பிரிவுகளில் யு-ட்யூப் இணைய தளம், எப்போதும் முதல் இடத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே.
இரண்டு கோடிக்கும் மேலான வீடியோக்களை தினந் தோறும் மக்களுக்குக் காட்டி வருகிறது. ஆனால் அதன் இணைய தளத்தின் முகப்புத் தோற்றம், எந்தவிதக் கூடுதல் அலங்காரமின்றி மிகச் சாதாரணமாகவே இருந்து வருகிறது.
ஆனால் சென்ற வாரத்தில் இருந்து, யு-ட்யூப் இணைய தளம், பல புதிய சிறப்புகளைத் தன் முகப்பு பக்கத்தில் ஏற்றி சோதனை செய்து வருகிறது. இந்த புதிய அம்சங்களை இங்கு காணலாம்.
1.இணைந்த பட்டியல் (Combined List): உங்களுடைய பதிவு, நண்பர்கள் செயல்பாடு, இவை சார்ந்த குறிப்புகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த பட்டியலாகத் தரப்படுகிறது.
2. எதனையும் மிஸ் செய்திடாமல்: சேனல் ஒன்று நான்கு வீடியோக்களை ஒரு நாளில் அப்லோட் செய்தால், இறுதியாக அப்லோட் செய்தது மட்டும் காட்டப்படாமல், அன்று அப்லோட் செய்யப்பட்டதை மட்டும் காட்டாமல், அனைத்தையும் காட்டிடும்.
3. எளிதான நீக்கம்: நீங்கள் விரும்பாத வீடியோ எதன் மீதாவது, கர்சரைக் கொண்டு சென்று, உடன் எக்ஸ் அழுத்தினால், அது உடனடியாக நீக்கப்படும்.
4. பார்த்தவற்றில் குறியீடு: ஏற்கனவே பார்த்த வீடியோக்கள் தலைப்பு, கிரே வண்ணத்தில் காட்டப்படும். இதன் மூலம் பார்த்த வீடியோக்களை நீக்க நீங்கள் தேட வேண்டியதில்லை.
5. மீண்டும் காண உதவி: நீங்கள் அண்மையில் பார்த்து ரசித்த வீடியோக்க<ள் மற்றும் நீங்கள் பிரியமானவை எனக் குறித்து வைத்த வீடியோக்களின் பட்டியல் இணைக்கப்படுகிறது. இதிலிருந்து நீங்கள் அடிக்கடிக் காண விரும்பும் வீடியோக்களை எளிதில் பிக் அப் செய்திடலாம்.
6. இன்பாக்ஸ் எளிது: உங்கள் இன்பாக்ஸுக்கான தொடர்புகள் (Links) முன்னாலும் நடுவிலும் வைக்கப்பட்டுள்ளன.
7. பழையன மீண்டும் கொண்டு வர: நீங்கள் வெகு காலம் முன்பு பார்த்த வீடியோக்களை முகப்பு தளத்திலிருந்தவாறே பெற்று ரசிக்க அனைத்து வசதிகளும் புதியதாகத் தரப்பட்டுள்ளன.
எப்படிச் செல்வது? இந்த புதிய கோலம் கொண்டுள்ள முகப்பு பக்கத்திற்கு எப்படிச் செல்வது? இந்த புதிய முகப்பு பக்கம் உங்கள் தனிப்பட்ட அனுபவத்திற்குச் செறிவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தளத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புதிய முகப்பு பக்கம் கிடைக்கும். அல்லது இப்போது பதிந்து செல்ல வேண்டும். யு-ட்யூப் தளம் சென்றவுடன் “Try a different homepage” என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
இது உங்களை இன்னொரு இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கு உங்கள் பதிவினைக் காட்டினால், புதிய முகப்பு பக்கம் தரப்பட்டு, நீங்கள் பயன்படுத்தக் கிடைக்கும்.
நீங்கள் லாக் இன் செய்திடாமல் இதனைக் காண வேண்டும் எனில் http://www.youtube.com/homepage_experiment என்ற முகவரிக்குச் செல்லவும். ஆனால் புதிய முகப்பு பக்கத்தின் அனைத்து அம்சங்களையும் காண முடியாது.


Yahoo Mail இல் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைத் தடை செய்வது எப்படி?

விளம்பரங்கள் மற்றும் குப்பை மின்னஞ்சல்கள் மற்றும் தொந்தரவு செய்யும் நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களால் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறதா? இவற்றை நிறுத்துவதற்கு சிலர் பாடுபடுவர். ஆனால் நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையிலேயே இத்தகைய வசதிகள் உள்ளன. ஜிமெயிலைப் போலவே யாகூ மெயில் (Yahoo mail) பயன்படுத்துபவர்களும் வேண்டாத / குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்யலாம்.


யாகூ
மெயிலில் 500 மின்னஞ்சல் முகவரிகள் வரை சேர்க்கலாம். ஒரு முறை சேர்த்துவிட்டால் போதும், அவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் நீங்கள் படிப்பதற்கு முன்பாக எல்லாம் தானாகவே அழிந்து விடும்.

Blocked senders எனப்படும் வரிசையில் தேவையில்லாத மின்னஞ்சல் முக்வரிகளை சேர்த்து விடலாம். விருப்பமில்லாத மின்னஞ்சல்களைப் பெற்று பின்னர் ஒவ்வொன்றாக அழிப்பதற்கு யாகூ மெயிலே அழித்துவிடும்.எப்படி என்று பார்ப்போம்.

1.உங்கள் Yahoo மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் ஒரத்தில் உள்ள Options -> More options… செல்லவும்.

Block emails in yahoomail
2.இடதுபக்கம் வரும் மெனுவில் Spam என்பதை கிளிக் செய்யவும். வலது பக்கமுள்ள Blocked Email addresses பகுதியில் உங்களுக்கு வேண்டிய
மின்னஞ்சல்களை சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் சேர்க்க சேர்க்க அவர்களின் பெயர்கள் கீழே தெரியும்.

Block emails in yahoomail
3.கடைசியாக மேலெ உள்ள Save changes என்பதை கிளிக் செய்தால் உங்களின் விருப்பம் சேமிக்கப்படும்.

Block emails in yahoomail
இனிமேலும் உங்களை தொந்தரவு செய்யும் மின்னஞ்சல்களை நீங்கள்
பார்வையிடப்போவதில்லை.

நன்றாக தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

தூ‌க்க‌ம் எ‌ன்பது இரவானது‌ம் நமது உட‌ல் இளை‌ப்பாற‌க் ‌கிடை‌‌த்த ‌விஷய‌ம் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் எ‌‌ண்‌ணி‌‌க் கொ‌ண்டி‌ரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், தூ‌க்க‌த்‌தி‌ற்கு எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ள் உ‌ள்ளன.
தூ‌க்க‌ம் எ‌ன்பது ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் அமையு‌ம். ஒரு ‌சில‌ர் படு‌த்தது‌ம் தூ‌ங்‌கி ‌விடுவ‌ர். ‌சில‌ர் ம‌ணி 12ஐ தா‌ண்டினா‌ல் தா‌ன் தூ‌ங்கவே செ‌ல்வ‌ர். ‌சில‌ர் புர‌ண்டு புர‌ண்டு படு‌த்து தூ‌க்க‌த்துட‌ன் போராடி கடை‌சியாக தூ‌ங்குவ‌ர். தூ‌ங்குவ‌திலு‌ம் பல வகைக‌ள் உ‌ண்டு. ஆ‌ழ்‌ந்த உற‌க்க‌ம், லேசான உ‌ற‌க்க‌ம் போல பல உ‌ண்டு.
பொதுவாக கனவுக‌ள் இ‌ல்லாத தூ‌க்க‌மே ‌சிற‌ந்த தூ‌க்கமாகு‌ம். கனவுக‌ள் இ‌ல்லாம‌ல் தூ‌ங்‌கி எழு‌ந்தா‌ல்தா‌ன் உ‌ண்மை‌யி‌ல் ஆ‌ழ்‌ந்த தூ‌க்க‌த்தை தூ‌ங்‌கி‌னீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ப்படு‌ம். கனவுக‌ள் இ‌ல்லாத தூ‌க்க‌த்தை‌க் கான சுவாச‌ம் ‌சீராக இரு‌க்க வே‌ண்டு‌ம். ‌சீரான சுவாச‌ம் இரு‌ப்‌பி‌ன் ந‌ல்ல தூ‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம். சுவாச‌த்‌தி‌ல் ‌சிதைவு ஏ‌ற்ப‌ட்டா‌ல் தூ‌க்க‌‌த்‌திலேயே மன‌ம் அ‌திக‌ம் வேலை செ‌ய்ய ஆர‌ம்‌பி‌த்து ‌விடு‌ம். மன‌ம் வேலை செ‌ய்வதுதா‌ன் கனவுக‌ளி‌ன் அடி‌ப்படையே.
ச‌ரி தூ‌க்க‌த்‌தி‌ல் சுவாச‌த் தடை ஏ‌ற்பட‌ எ‌ன்‌ன‌க் காரண‌ம் இரு‌க்கு‌ம். நமது உணவு முறைதா‌ன். தூக்க‌த்தை‌க் கெடு‌க்கு‌ம் பல உணவுக‌ள் உ‌ள்ளன. தூ‌க்க‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் உணவுகளு‌ம் உ‌ள்ளன. அவ‌ற்றை‌த் தே‌ர்வு செ‌ய்து அளவோடு உ‌ண்பதுதா‌ன் தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த் தேவையான ‌சீரான சுவாச‌த்தை அ‌ளி‌க்கு‌ம்.
இர‌வி‌ல் சா‌ப்‌பிடு‌‌ம் உணவானது அளவு குறைவான உணவாகவு‌ம், கார‌மி‌ல்லாத, வாயு சே‌ர்‌க்காத உணவாகவு‌ம் இரு‌ப்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.
உட‌ல் சு‌த்தமு‌ம், ந‌ல்ல கா‌ற்றோ‌ட்டமு‌ம் கூட தூ‌க்க‌த்‌தி‌ற்கு அடி‌ப்படையாகு‌ம். உற‌‌ங்க‌ப் போகு‌ம் மு‌ன் முக‌ம், கை கா‌ல்களை சு‌த்த‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்வது‌ம், நா‌ம் படு‌க்கு‌ம் இட‌ம் சு‌த்தமாகவு‌ம், கா‌ற்றோ‌ட்டமாகவு‌ம் இரு‌க்கு‌ம்படியு‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
சா‌ப்‌பி‌ட்டவுட‌ன் களை‌ப்போடு செ‌ன்று படு‌க்கை‌யி‌ல் ‌விழுவது, சோ‌ம்பலையு‌ம், கெ‌ட்ட கனவுகளையு‌ம் அ‌ளி‌க்கு‌ம். பக‌ல் தூ‌க்க‌ம் ‌நி‌ச்சயமாக இரவு‌த் தூ‌க்க‌த்தை‌க் கெடு‌க்கு‌ம். சா‌ப்‌பி‌ட்டு இர‌ண்டு ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு படு‌க்க‌ச் செ‌ன்றா‌ல் ‌நி‌ச்சயமாக ந‌ல்ல தூ‌க்க‌ம் வரு‌ம்.
தூ‌க்க‌ம் உடலு‌க்கு மட‌்டும‌ல்ல, மன‌த்‌தி‌ற்கு‌ம் ஓ‌ய்வ‌ளி‌க்‌கிறது. அதே போல தூ‌ங்காத ம‌னித‌ர்க‌ளி‌ன் மனமு‌ம் சோ‌ர்வடைவதை காணலா‌ம். ச‌ரியான தூ‌க்க‌ம் இ‌ல்லையே எ‌ன்ற எ‌ண்ணமே, மன‌தி‌ற்கு‌ள் கோபமாகவு‌ம், துக்கமாகவு‌ம் மாற‌க் கூடு‌ம். இதனா‌ல் தேவைய‌ற்ற ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படலா‌ம்.
ந‌ல்ல ‌சீரான தூ‌க்க‌ம் மனதை ஆன‌ந்தமான ‌நில‌ை‌யி‌ல் வை‌த்‌திரு‌க்க உதவு‌ம். மனமே நமது அ‌ன்றாட கா‌ரிய‌ங்களு‌க்கு உறுதுணையாக இரு‌க்கு‌ம். மன‌ம் ஆன‌ந்தமாக இரு‌ந்தா‌ல் நமது வேலையு‌ம் ‌திரு‌ப்‌தியாக இரு‌க்கு‌ம்.
தூ‌க்க‌ம் வராத ‌நிலை‌யி‌ல் ‌புர‌ண்டு புர‌ண்டு படு‌ப்பதை ‌விட, உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்த ஏதேனு‌ம் ஒ‌ன்றை செ‌ய்து பாரு‌ங்க‌ள். ‌‌மன‌ம் உ‌ற்சாக‌ம் அடைவதா‌ல் வராத தூ‌க்கமு‌ம் ‌விரை‌வி‌ல் வ‌ந்து சேரு‌ம். ‌பிடி‌த்த வேலை எ‌ன்றா‌ல் பா‌ட்டு கே‌ட்பது, பு‌த்தக‌ம் படி‌ப்பது போ‌ன்றவை. தொலை‌க்கா‌ட்‌சி பா‌ர்‌ப்பதா‌ல் பலரது தூ‌க்க‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது.
தூ‌க்க‌ம் கெ‌ட்டு எ‌ந்த‌ப் ப‌ணியை செ‌ய்தாலு‌ம் அது வெ‌ற்‌றிகரமாக முடியாது. எனவே, தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த் தேவையான ‌விஷய‌ங்களை நா‌ம் ச‌ரியான முறை‌யி‌ல் ‌பி‌ன்ப‌ற்ற வே‌ண்டு‌ம்.

வெகுவிரைவில் டுவிட்டரின் மற்றுமொரு பரிமாணம்.

டுவிட்டர் சமூக வலைப்பின்னல் தளமானது வெகு விரைவில் செய்திச் சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இணையத்தளத்தில் பல லட்சக்கணக்கான குறுந்தகவல்கள் தினமும் பரிமாறப்படுவதால் செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் சிரமமிருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.

டுவிட்டர் இணையத்தள ஸ்தாபகர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“டுவிட்டர் செய்திச் சேவையினூடாக உலகில் எந்தப் பாகத்திலும் நடக்கும் செய்திகளையும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்க முடியும் என எதிர்பார்க்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் இணையத்தளமானது செய்திச் சேவை தொடர்பாகவும் தனது பாவனையாளர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் தற்போது பரீட்சார்த்தமாக ஆராய்ந்துவருகிறது.

சுமார் 190 மில்லியன் எண்ணிக்கையிலான இணையப்பாவனையாளர்கள் டுவிட்டர் கணக்கினை தன்னகத்தே கொண்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி செக்கன் ஒன்றுக்கு சராசரியாக 750 டுவிட்டர் தகவல்கள் தரவேற்றப்படுகின்றன. இவ்வருட ஜூன் மாத புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நாளொன்றில் 65 மில்லியன் டுவிட்டர் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன.

இதனால் முன்னிலையிலுள்ள சமூக வலைப்பின்னல் இணையத்தளங்களில் பேசப்படும் ஒன்றாக டுவிட்டர் மாறிவருகிறது.

இந்நிலையில் டுவிட்டர் இணையத்தளமானது செய்திச்சேவையை ஆரம்பிக்குமானால் ஏனைய தளங்களைவிட மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் பிந்திக் கிடைத்த தகவலின்படி, டுவிட்டர் இணையத்தளத்தின் தொடர்பாடல் பிரிவுத் தலைவர் மாறுபட்ட கருத்தொன்றை தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைப்பின்னல் இணையத்தளத்துக்கு செய்திச்சேவை செய்யவேண்டிய தேவை தற்போது இல்லை என்றும் அது சரியான தீர்வாக அமையாதென்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரினதும் மாறுபட்ட கருத்துக்கள், தலைமையின் போட்டித் தன்மையை வெளிப்படுத்துவதாக இணையப் பாவனையாளர்கள் கூறியுள்ளதுடன் இந்த விடயம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

[ ஹாட் Topic ] Windows Vista & 7 : கணனியின் மொழியை மாற்றுவது எப்படி ?

இது பொதுவாக சிலர் எதிர் நோகும் ஒரு பிரச்சினை. வெளிநாட்டில் இருந்து கணணியை வருவித்து கொண்டு வருபவர்கள் இங்கு வந்து கொடுத்து விடு அவர்கள் பாட்டுக்கு போய்விடுவார்கள்.

பார்த்தல் அது French,Duetch போன்ற மொழிகளில் கணணி இருந்தால் பெரிய கஷ்டம்தான். அந்த மொழியை System Optimisation மூலம் மாற்ற முடியாது. உடனேயே OS ஐ boot பண்ணி விடுவார்கள்.

நான் இப்போது உங்களுக்கு Windows Vista & W7 இல் மொழியை எப்படி மாற்றுவது என்று சொல்ல போகிறேன்.

Step : 1 : முதலில் இந்த லிங்க் ஐ க்ளிக் செய்து Vistalizator ஐ டவுன்லோட் செய்யவும்.
http://www.softpedia.com/progDownload/Vistalizator-Download-116502.html

Step : 2 : பின்பு இந்த லிங்க் இற்கு போய் உங்கள் Windows வேர்சின் ( X32 bit or X64 bit ) ஐ தெரிவு செய்து உங்களுக்கு தேவையான Language file ஐ டவுன்லோட் பண்ணவும். உதாரணமாக English வேண்டுமென்றால் அதற்குரிய File ஐ தரவிறக்கவும். ( ஒவொரு Language file ம 200 MB ஐ விட கூடியது. )
http://www.froggie.sk/download.html

Step : 3 : பின்பு Vistalizator ஐ திறக்கவும்.
http://www.froggie.sk/img/2.30/screen01.png

Step : 4 : பின்பு ¨ Add languages ஐ க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான அதுவும் நீங்க தரவிறக்கிய language file ஐ தெரிவு செய்யவும்.
http://www.froggie.sk/img/2.30/screen02.png

Step : 5 : http://www.froggie.sk/img/2.30/screen03.png
http://www.froggie.sk/img/2.30/screen04.png

பின்பு உங்களுக்கு தேவையான மொழியை தெரிவு செய்து அதை OK பண்ணவும் . இந்த வேலை முடிய கொஞ்ச நேரம் பிடிக்கும். அதன் பின் உங்கட PC ஐ restart பண்ணவும்.

அவளவுதான். . . . .        

வாழ்க்கையை சந்தோஷமாக வைத்திருக்க சில வழிகள்

மற்றவர்களை புண் படுத்தாமல் நம் வாழ்க்கையை சந்தோசமாக நடாத்த
1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்
2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.
4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.
5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.
9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.
10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்
11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் – நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.
12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் – பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.
13) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் – இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.
14) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் – எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.
16) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் – சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.
17) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.
18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.
19) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.
20) நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
21) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.
22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.
23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.
24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் – குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.
25) அச்சம் தவிருங்கள்.
26) இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.
27) நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.
28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.
29) வெற்றி என்பது பணத்தினாலோ, பொருட்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.
30) எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்

மருத்துவ குணமுள்ள அன்னாசிப்பழம்

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெரும்.

பிரச்சனைகளைக் கண்டு சோர்வடையாதீர்கள்


பிரச்னைகள் இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்னைகள் கூட ஒரு அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வு இருக்கும்.எனவே, பிரச்னைகளைக் கண்டு பயந்துவிடாமல் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதற் கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக
* நமக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னைக்கு வேறு யாரும் காரணமில்லை. அதை நாம் தான் வரவழைத்துக் கொண்டோம். எனவே, இந்த பிரச்னையை தீர்க்க நம்மால் மட்டும் தான் முடியும் என்று நம்பிக் கையுடனும் மனவலிமையுடனும் அவற்றை எதிர்கொள்ளுங்கள்.
* எந்த பிரச்னையையும் பெரிதுபடுத்திப் பார்க்கும் பூதக்கண்ணாடி மனநிலைமையை கைவிடுங்கள். எதையும் எளிமைப்படுத்திப் பார்க்கப் பழகுங்கள்.உங்களுக்கு நேர்ந்த பிரச்னையை விட, இந்த உலகில் எவ்வளவோ பிரச்னைகள் எப்படியெல்லாமோ தீர்க்கப்படுகிறது; எனவே, அவற்றையெல்லாம் விட நமது பிரச்னை ஒன்றுமே இல்லை என்று எண்ணுங்கள் அப்போது தான் பிரச்னைக்கு உரிய தீர்வை தெளிவாக யோசிக்க முடியும்.
* எல்லா பிரச்னைக்கும் என்னால் தீர்வு காணமுடியும் என்று அசட்டு தைரியத்துடன் செயல்படாதீர்கள். அதேபோல், தேவையில்லாமல் பிறரது பிரச்னைகளையும் உங்கள் சுமையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். தேவைப்படும் போது, அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை பெறுங்கள்.
* ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, முடிந்தவரை அன்றைய பிரச்னையை அன்றே தீர்க்க முயலுங்கள். இல்லாவிடில், நேற்றைய பிரச்னை, நாளைய பிரச்னை என அனைத்தும் சேர்ந்து உங்களை வலுவிழக்கச் செய்யும்.
* ஒரு நாளில் குறிப்பிட்ட பிரச் னைக்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கித் திட்டமிட்டு நிறைவேற் றுங்கள். அதை அந்தந்த நேரத்தில் முடித்துவிட முயற்சியுங்கள்.
* ஒரு நேரத்தில் ஒரு பிரச்னையை மட்டும் சமாளியுங்கள். எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு காண முடியாது என்பதில் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள்.
* ஒவ்வொரு பிரச்னைக்கும், ஒவ் வொரு விதமான அணுகுமுறை மாற்றங்களைக் கண்டுபிடியுங்கள். அதற்கேற்ப தீர்வுகளைக் காணுங்கள். எதை எளிதாக முடிக்க முடியுமோ அதற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய்யுங்கள். இந்த அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தினால், தைரியமாக, மனரீதியாக பிரச்னைகளை கையாள தயாராகிவிட்டால்,பிரச்னைகளைக் கண்டு நீங்கள் பயப்படவில்லையானால், இனிமேல் எந்த பிரச்னையும் உங்கள் மீது பயணிக்காது. அவை உங்களைக் கண்டு ஓடிவிடும். முயன்று பாருங்கள் வெற்றி பெறுவீர்கள்.

நீங்க அழகா தெரியனும்னா உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்ப முக்கியம்.

பொதுவாவே  பெண்கள் தான் டிரஸ் செலக்ட் பண்ண ரொம்ப நேரம் எடுத்துக்கறாங்க ... 

ஆண்களுக்கென்ன ஒரு ஜீன்ஸ் பேண்ட்டும் ஒரு டி ஷர்ட்டும் எடுத்தா போதும்னு சொல்லுவாங்க... ஆனா அப்படி இல்லீங்க ஆண்களுக்கும் டிரஸ் செலக்ட் பண்றதில ரொம்ப கஷ்டம் இருக்கு... 
வாங்க அது என்ன கஷ்டம் அத எப்படி சுலபமாக்கலாம்னு பாக்கலாம்...
பொதுவாவே எல்லா கடைகளிலும் ப்ரீ சைசுனு ஒன்னு வெச்சுருப்பாங்க .. ஆனா அதெல்லாம் நம்ம சத்யராஜ் உயரத்துக்கோ அல்லது அவர் மகன் சிபி உயரத்துக்கோ தாங்க இருக்கும்....

அப்ப செந்தில் சார் மாதிரி (உயரத்திலும்  உடம்பிலும் )இருக்கறவங்க எல்லாம் எத போடறது 
கொஞ்சம் குள்ளமா இருக்கற நீங்க ஜீன்ஸ் பேன்ட் போடும் போது அதோட உயரம் உங்க காலணியோட(அதாங்க ஷூ ) நுனி வரைக்கும் இருக்கற மாதிரி போடுங்க அப்பதான் உயரமா தெரிய  முடியும்... 
குள்ளமா இருக்கறவங்க எந்த கலர்ல பேன்ட் போடறீங்களோ அதே கலர்ல ஷூஸ் போடுங்க ... அப்ப கொஞ்சம் உயரமா தெரியலாம்....
உயரமா இருக்கறவுங்க தொள தொளனு இருக்குமே(அதாங்க கார்கோ ) அந்த பேன்ட் போடுங்க அப்பத்தான் உயரம்  குறைவா தெரிவீங்க....

ஷார்ட் ஸ்லீவ்ஸ் போடுங்க அதனால உயரம் கொஞ்சம் குறைவா தெரியும்....

 
நீங்க போடற காலணியும் உங்க டிரஸ்  கலர்லையே போடாதீங்க வேற கலர்ல போடுங்க ,, அப்பத்தான் உயரம் குறைவா தெரியும்....
முதலாவது .....

நீங்க எந்த டிரஸ் போடறதா இருந்தாலும் உங்க உடம்புக்கு தகுந்த மாதிரி போடுங்க... ரொம்ப லூசா , இல்லனா ரொம்ப இறக்கமா போடாதீங்க..
நீங்க போடற டிரஸ் உங்க உடம்ப ஒட்டின மாதிரி அதே நேரம் இறுக்காத மாதிரி போடுங்க ..
இறுக்கமா டிரஸ் போடனும்னா கரக்டான உடலமைப்பு வேணும் (அதாங்க ஸ்ட்ரக்ச்சர்) வேணும்....

அப்பதான் ஒரு சரியான லுக் குடுக்கும் .....


 
இரண்டாவது ....
ரொம்ப சிம்பிளா டிரஸ் போடுங்க.... உங்க டிரஸ்ல மூணு கலருக்கு மேல இருக்காம பாத்துக்கோங்க .. இல்லனா அது உங்கள பேண்டு வாத்தியக்காரன் மாதிரிக்காட்டும் ....

மூன்றாவது..

ரொம்ப சிம்பிளா அதே நேரம் ஸ்டைல்லாவும் தெரியனும்னா  என்னோட சாய்ஸ் ப்ளாக் ஜீன்ஸ் தாங்க .....கோடுகள் போட்ட மாதிரி டாப்ஸ் போட்டீங்கின்னா அழகா தெரியும் ...
நான்காவது...

இப்ப ஆபீஸ் போறவங்களா இருந்தா வாரத்தின் ஐந்து நாட்கள்ல , நான்கு நாட்கள் கேசுவல்ஸ் தான் போடணும்....
கேசுவல்ஸ் போட்டு போட்டு போர் அடிச்சு போயிருக்கும்.. வேற ட்ரெஸ்ஸும் போட முடியாது.. அப்ப நீங்க என்ன பண்ணனும்னா கேசுவல்ஸ்லையே நெறைய வெரைட்டி கடைகள்ள கெடைக்குது.. 
அதாவது காலர்ல மட்டும் டிசைன் பண்ணின மாதிரி கழுத்துகிட்ட மட்டும் டிசைன் பண்ணின மாதிரி கிடைக்கும்.. அத ட்ரை பண்ணுங்க.. 

 
பொதுவா கலர் குறைவா இருக்கறவங்க எப்போதும் டார்க் கலரா போடாதீங்க.. ரொம்ப லைட் கலரும் போடதீங்க... இடைப்பட்ட மாதிரி போட்டீங்கின்னா கலர் குறைவா தெரிய மாட்டீங்க ....
ஐந்தாவது ....

இப்ப இருக்கற யூத்ஸ் அதிகமா காலர் இல்லாத டிரஸ் தான் அதிகமா உபயோகிக்கறாங்க ..

ஆனா காலர் இல்லாத டிரஸ் விட காலர் வெச்ச ஷர்ட் தாங்க உங்கள குண்டா அதாவது கொஞ்சம் அழகா கட்டும்.. சோ ஒல்லியா இருக்கறவங்க காலர் உள்ள டிரஸ் ட்ரை பண்ணுங்க ...
ஆறாவது ...

நீங்க எந்த டிரஸ் போடறதா இருந்தாலும் கண்டிப்பா இன்னர் (அதாங்க பனியன்)போடுங்க ....

இன்னர் போடறதால ரெண்டு பயன் இருக்குங்க ...

ஒண்ணு கரக்டான ஷேப் கொடுக்கும்...ரெண்டாவது  வியர்வை, உடம்பில உண்டாகுற எண்ணெய் இதெல்லாத்தையும் உறிஞ்சிக்கும் .. நீங்க எப்போதும் புத்துணர்ச்சியா இருக்கற பீலிங் குடுக்கும்...
ஏழாவது ....

 
பொதுவா ஜீன்ஸ் போடும் போது வி நெக், யு நெக், ஷர்ட்ஸ் போடாதீங்க  அது அவ்வளவு எடுப்பா இருக்காது...


எட்டாவது....

குண்டா இருக்கறவங்க லூஸ் ஷர்ட்ஸ் போடுங்க.. இல்லன்னா  கருப்பு நிறத்துல டிரஸ் போடுங்க ... இது கொஞ்சம் உங்கள ஒல்லியா காட்டும்...

ஒல்லியா இருக்கறவுங்க ஜீன்ஸ் ஷர்ட்ஸ் உபயோகிங்க அது உங்கள குண்டா காட்டும்...
ஒன்பதாவது...

உங்க டிரஸ்கு ஏத்த ஹேர் ஸ்டைல்லும் முக்கியம்...  நீளமா முடி வளத்தரதுதான் இப்ப பேஷன் ..
ஆனா அது உங்களுக்கு பொருத்தமா இருக்கானு பாக்கணும்... பொருத்தம் இல்லைனா தயவு செஞ்சு அந்த மாதிரி ஹேர் ஸ்டைல் அவாய்ட்  பண்ணிடுங்க.....


எப்போதும் ஒரே மாதிரி வகிடு எடுத்து சீவாதீங்க... தூக்கின மாதிரியும் சீவாதீங்க.....

ஒரே மாதிரி வகிடு எடுத்து சீவினா சீக்கிரம் முடி கொட்டிடும்... அப்பறம் நான் அடுத்த போஸ்ட்ல சீக்ரமா முடி வளர்ப்பது எப்படின்னு போஸ்ட் போட வேண்டியது வரும்... அந்த நெலைமைக்கு என்ன ஆளாக்கிடாதீங்க பாஸு.... 
வகிடு மாத்தி மாத்தி எடுங்க அப்பதான் முடி கொட்டாது.. பொண்ணுகள பாக்கும் போதும் கோதி விட்டு ஸ்டைல் பண்றதுக்கும்  வசதியா இருக்கும்....
பத்தாவது..

இது ரொம்ப முக்கியம்... உடலமைப்பு (ஸ்ட்ரக்ச்சர் ) .... நீங்க எந்த டிரஸ் போடறதா இருந்தாலும் உங்களுக்கு பொருந்தினாதான் அழகே... அப்படி பொருந்துனும்னா கரக்டான உடலமைப்பு வேணும்...

எ‌ந்த ‌கலர் டிரஸ்


பொதுவாக பலரு‌ம் எ‌ந்த ‌நிற ஆடையை வே‌ண்டுமானாலு‌ம் யா‌ர் வே‌ண்டுமானாலு‌ம் அ‌ணி‌ந்து கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று ‌நினை‌க்‌கிறா‌ர்க‌ள்.

அது ‌மிகவு‌ம் தவறு. த‌ங்களது ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற, அழகான பொ‌லிவை‌த் தர‌க் கூடிய ஆடைகளை‌த் தே‌ர்வு செ‌ய்து அ‌ணிய வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.

மாநிறம், வெளிர் சிகப்பு, நல்ல சிகப்பான தோற்றம் கொண்டவர்கள், அட‌ர்‌த்‌தியான ‌நிற‌ப் புடவைகளையோ, சுடிதார், ‌ஸ்கா‌ட் போன்ற ஆடைகளையோ அணிந்தால் தோற்றப்பொலிவு அதிகரித்து மிளிர்வர்.

சற்றே நிறம் கம்மியாக இருப்பவர்கள் அல்லது கருப்பாக இருப்பவர்களானால், பெரும்பாலும் லேசான வண்ணங்களிலான (லைட் கலர்) ஆடைகளைத் தேர்வு செய்தால் அவர்களின் தோற்றம் எடுப்பாகி தனி அழகு பிறக்கும்.

கூடிய வரை கருப்பாக இருப்பவர்கள் வெளிர் நீலம், வெளிர் பச்சை, வெளிர் ரோஸ், வைலட் போன்ற அதிகம் கலர் காம்பினேஷன் இல்லாத வண்ணங்களிலான ஆடைகளைத் தேர்வு செய்து அணிந்தால் அவர்களின் அழகு மேலும் அதிகரித்து மின்னுவார்கள்.


 

ஒபீஸ் 2010 - வேகமாக இயக்க

தற்சமயம் வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்பு, அதன் பதியப்பட்ட நிலையில் தரப்பட்டிருக்கும் சில வடிவமைப்புகளையும், வசதிகளையும், நம் விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வழிகளைத் தந்துள்ளது. இந்த தொகுப்பினைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், தொடக்க நிலையில் உள்ள இதன் வண்ணம், பயன்பாட்டில் உள்ள சில வழிகள் ஆகியவை தங்கள் ரசனைக்கும் பயன்படுத்தும் முறைக்கும் இணைந்து செல்வதில்லை என்றே கருதுகிறார்கள். எனவே இவற்றை மாற்றும் வழிகளையும் இந்த தொகுப்பு தருகிறது. அவற்றை இங்கு காணலாம்.
1.
வண்ணக் கட்டமைப்பை மாற்றுக: இது ஒபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்து வதிலான மாற்றம் அல்ல. அதனைப் பயன்படுத்தும் சூழ்நிலை சம்பந்தப்பட்டது. இந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ள மென்மையான ஊதா வண்ணத்துடன் தரப்பட்டுள்ள அனைத்து வண்ணங்களும், வேலை பார்க்கையில் சற்று எரிச்சலைத் தந்து, வேகத்தைக் கட்டுப்படுத்துவதாகப் பலரும் எண்ணுகின்றனர். குறிப்பாக கருப்பு வண்ணப் பின்னணியில் கிடைக்கும் வெள்ளை வண்ணத்திலான எழுத்துக்களை யாரும் விரும்புவதில்லை. இந்த வண்ணக் கட்டமைப்பினையே மாற்றிவிடலாம். இந்த வழிகள் ஒபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களுக்கும் பொருந்தும். முதலில் பைல் டேப்பினத் தேர்ந்தெடுக்கவும். இதன் இடது பக்கம் உள்ள ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடுக. மீண்டும் கிடைக்கும் பிரிவுகளில், இடது புறம், ஜெனரல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் கலர் ஸ்கீமில் ஒரு கீழ்விரி கட்டம் தரப்படும். இங்கு உங்களுக்குத் தேவையான வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே ஒவ்வொரு வண்ணத்தையும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
2.
ரிப்பனை மாற்றி அமைக்க: ஒபீஸ் 2007 தொகுப்பில், முதல் முதலாக ரிப்பன் இன்டர்பேஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போது பலரும் இதனை விரும்பவில்லை. புதியதாக ஒன்றைத் தந்து பயன்படுத்து என்று சொன்னால், பொதுவாக யாருக்குமே ஒரு வெறுப்பு வரும். ஆனாலும் வேண்டா வெறுப்பாக இதனை அனைவரும் பயன்படுத்தினார்கள். 
இப்போது ஆபீஸ் 2010 தொகுப்பிலும் இது தரப்பட்டுள்ளது. இதனை ஏன் நமக்கேற்றபடி வைத்துக் கொள்ளக் கூடாது? என்ற நம் கேள்விகளுக்கேற்ப, மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த ரிப்பனை வளைக்க சில வழிகளைத் தந்துள்ளது. இந்த வழிகள் மூலம், ஆபீஸ் 2003 தொகுப்பிலிருந்து, புதிய தொகுப்பிற்கு மாறுபவர்களுக்கு ஏற்படும் சில தொல்லைகளைத் தீர்க்கலாம். இதில் ஒருவர் அடிக்கடி பயன்படுத்தாத சில கட்டளைகளை இதிலிருந்து நீக்கலாம். அல்லது அவற்றைத் தனியே பிரித்து, டேப் ஒன்றில், இன்னொரு இடத்தில் வைக்கலாம். கட்டளைகளின் பெயர்களைக் கூட மாற்றலாம். இதில் இன்னொரு சிறப்பான அம்சமும் உள்ளது. இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட ரிப்பனை, சேவ் செய்து இன்னொரு கம்ப்யூட்டரில் உள்ள ஆபீஸ் 2010 தொகுப்பிலும் அமல் படுத்தலாம். உங்கள் வீட்டு டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் ஆபீஸ் தொகுப்பில் மாற்றப்பட்டதனை, அலுவலகக் கம்ப்யூட்டருக்கும், லேப் டாப் கம்ப்யூட்டருக்கும் கொண்டு செல்லலாம். மாற்றும் வழிகள் அனைத்தும் என்ற http://news.officewatch.com/t/n.aspx?a=968முகவரியில் உள்ள தளத்தில் தரப்பட்டுள்ளது. 
3. குயிக் அக்செஸ் டூல்பார்: ரிப்பனை நம் வழிக்குக் கொண்டு வந்தது போல, அடிக்கடி நாம் பயன்படுத்தும் சில கட்டளைகளை, அவை எந்த ரிப்பன் டேப்பில் இருந்தாலும், விரைவாகப் பெற வேண்டும் என விரும்புவோம். இங்கு தான் குயிக் அக்செஸ் டூல் பார் நம் உதவிக்கு வருகிறது. ஒபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துபவர்கள் பலர் இந்த வசதியினை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. இந்த டூல்பாரில் Save, Save As, Undo, Redo, Email, New Comment மற்றும் New Document  போன்ற அனைத்து கட்டளைகளையும் போட்டு வைத்துப் பயன்படுத்தலாம். அதே போல இந்த டூல்பாரையும், ரிப்பனுக்கு மேலாக இல்லாமல், அதன் கீழாக வைப்பது, இவற்றை இயக்குவதற்கு எளிதாக இருக்கும். 
4.
லைவ் பிரிவியூ இயக்கலாமே!: வேர்ட் டொகுமெண்ட்களில் ஏதேனும் ஒன்றை பேஸ்ட் செய்கையில், அது எந்த வடிவமைப்பில்,டொகுமெண்ட்டில் ஒட்டிக் கொள்ளும் என்பது தெரியவராது. ஒட்டிய பின்னரே, இதனை வேறு முறையில் வைத்திருக்கலாமே என்று எண்ணுவோம். இந்த குழப்பத்தினைத் தவிர்க்க, வேர்ட் தொகுப்பில் லைவ் பிரிவியூ என ஒரு வசதி தரப்பட்டுள்ளது. பிரிண்ட் கொடுக்கும் முன், டாகுமெண்ட் எப்படி அச்சில் கிடைக்கும் என்பதனைப் பிரிண்ட் பிரிவியூ மூலம் அறிந்து கொள்வது போல, ஒட்டும் முன் எப்படி ஒட்டப்படும் என்பதனையும் அறிந்து கொள்ளலாம். எந்த பார்மட்டில் ஒட்டப்பட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுத்து, அந்த வகையில் ஒட்டலாம். ஆனால், இந்த வசதி, ஒபீஸ் 2010 தொகுப்பினைப் பதிகையில், இயக்கப்படாமல் உள்ளது. இதனை இயக்க நிலையில் வைத்திட, File | Options சென்று Generalபிரிவில் Enable Live Preview செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
5. ஓ
ட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் சரி செய்க: டொகுமெண்ட் தட்டச்சு செய்கையில் ஏற்படும் பொதுவான பிழைகள் தானாகச் சரி செய்யப் படுவதற்காகத் தரப்பட்டுள்ள ஒரு அருமையான வசதி ஓட்டோ கரெக்ட் ஆகும். இதனால் நமக்கு நேரம் மிச்சமாகும். ஆனால் சில வேளைகளில் நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என சில சொற்களை டைப் செய்தாலும், ஓட்டோ கரெக்ட் வசதி, அதனைத் திருத்தி மாற்றி அமைக்கும். எடுத்துக்காட்டாக, சொல் ஒன்றின் முதல் இரு எழுத்துக்களைப் பெரிய எழுத்துக்களாக அமைத்து எழுத வேண்டிய சூழ்நிலையில், அப்படி அமைத்திடும்போது, ஓட்டோ கரெக்ட் அதனைத் தவறென்று கருதி, மாற்றிவிடும். நாம் என்ன செய்தாலும் இரண்டு எழுத்துக்களைத் தொடர்ந்து பெரிய எழுத்துக்களாக அமைத்து சொல்லை அமைக்க முடியாது. எடுத்துக்காட்டாக, Thomas Rick என்பவர் அமைத்த ஒரு நிறுவனம் TRickஎன்றே எழுதப்படும். இதனை TRick என தட்டச்சு செய்கையில் ஓட்டோ கரெக்ட் TRick  என மாற்றிவிடும். இதற்காக ஓட்டோ கரெக்ட் பட்டியல் சென்று TWo INitial Caps என்ற பதிவையே எடுத்துவிட்டால், பின் மற்ற தவறுகள் திருத்தப்படாமல் அமைக்கப்படும். எனவே சில விதிவிலக்குகளை இங்கு அமைத்திட வேர்டில் வழி தரப்பட்டுள்ளது. இந்த வழியைக் கீழ்க்காணும் முறையில் பெறலாம். 
1. BackStage  
மெனுவில் இடது பக்கம் உள்ள பிரிவில் Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Proofing  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
2.
அடுத்து AutoCorrect  என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. AutoCorrect
  டேப்பில், Exceptions என்னும் பட்டனில் கிளிக் செய்திடுக.
4.
பின்னர் INitial CAps என்ற டேப்பில் கிகிளிக் செய்து, Don’t Correct என்பதின் கீழ் குறிப்பிட்ட சொல்லை நீங்கள் விரும்பும் வகையில் டைப் செய்து, அதன்பின் Add என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே அழுத்தி வெளியேறவும். 
இவ்வாறு விதிவிலக்கான சொற்கள் அனைத்தையும் இதில் இணைத்து வைத்துவிட்டால், ஓட்டோ கரெக்ட் உங்கள் விருப்பத்திற்கு மாறாகத் திருத்தாது.
மேலே தரப்பட்டுள்ள மாற்றங்களைப் போல, வேர்ட் தொகுப்பில் இன்னும் சில மாற்றங்களையும் மேற்கொண்டு, அதனை நம் வசதிக்கேற்ப அமைத்து வேகமாகப் பணியை மேற்கொள்ளலாம்.