சீடன் – திரைவிமர்சனம்

நடிப்பு: கிருஷ்ணா, தனுஷ், அனன்யா, ஷீலா
இசை: தினா
இயக்கம்: சுப்பிரமணியம் சிவா
தயாரிப்பு: அமித் மோகன்

எப்போதோ வந்திருக்க வேண்டிய ஒரு கதை, மிகக் காலம் கடந்து இப்போது வந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளியான நந்தனம் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த சீடன். கதையை மட்டும் மலையாளத்திலிருந்து எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டு சூழலுக்கேற்ப திரைக்கதை அமைத்திருந்தால் ஒரு வேளை பார்க்கும்படி இருந்திருக்குமோ என்னவோ….

பழனியில் பெரிய அரண்மனை வீட்டில் ஒரேயொரு பாட்டி. அவருக்கு வேலைக்காரியாக இருக்கிறார் அனன்யா. பக்கா முருக பக்தை. ஆனால் பழனி முருகனைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு வீட்டில் வேலை அவரை அழுத்துகிறது.
அப்போது அந்த வீட்டுக்கு வருகிறான், பாட்டியின் பேரன் கிருஷ்ணா. வழக்கம்போல வேலைக்காரிக்கும் பேரனுக்கும் காதல். இந்தக் காதல் தெரிந்ததும், கிருஷ்ணாவின் அம்மா அவனை தன் தோழியின் மகனுக்கு கட்டி வைக்க திட்டம் போடுகிறார்.
அனன்யாவின் வாழ்க்கை சோகமாக, ‘முருகா காப்பாத்து’ என அவர் உருகுகிறார். சரியாக அந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைகிறார் சமையல்காரர் சரவணன் ( தனுஷ்). அதன் பிறகு எல்லாமே மாறுகிறது. இதில் அனன்யா – கிருஷ்ணா காதல் என்னாகிறது… தனுஷால் அந்தக் காதல் கைகூடுகிறதா என்பது மீதிக் கதை.

படம் முழுக்க மலையாள வாடை. வசனங்களில் கூட அப்படியே. காட்சிகள் ஒவ்வொன்றும் சவசவவென வந்து போகின்றன. “அடுத்த காட்சி இதுதான்… இந்த இடத்தில் காதலைச் சொல்லப் போகிறார்கள். இதோ இப்போது காதல் பிரியப் போகிறது… அடுத்த சீனில் தனுஷ் வருவார் பார்…” என மகா சுலபத்தில் ஊகிக்க முடிகிற திரைக்கதை, பொறுமையைச் சோதிக்கிறது. இத்தனைக்கும் இரண்டு மணி நேரமே ஓடும் படம் இது!
வசனங்களாவது கொஞ்சம் ஷார்ப்பாக உள்ளதா என்றால், ம்ஹூம்… மெகா சீரியல் தோற்றது போங்கள்!
எதற்காக தனுஷுக்கு இத்தனை மகா ஆர்ப்பாட்டமான விளம்பரம் என்று தெரியவில்லை. அவர் வருவது கொஞ்ச நேரம்தான். அதிலும் சமையல் பற்றி படு சுமாரான ஒரு பாட்டைப் பாடிவிட்டு, எப்போது சீனிலிருந்து போனார் என்பதே தெரியாமல் போகிறார்.
ஹீரோவாக கிருஷ்ணா என்பவர் நடித்திருக்கிறார். இப்படி ஒரு பாத்திரத்தில் வந்து போகிறார் என்பதைத் தவிர பெரிதாக சொல்ல ஏதுமில்லை.

அனன்யா பரவாயில்லை… முகமும் நடிப்பும் பார்க்கும்படி உள்ளது. விவேக்கின் போலிச்சாமியார் கெட்டப்பும், தினாவின் இசையும் சகிக்கலை!
சுகாசினி, ஷீலா, இன்னொரு பாட்டி என படம் முழுக்க ‘கிழவிகள்’ மயம். கடுப்பாக உள்ளது. இன்னொன்று, அவ்வப்போது வரும் குட்நைட் காயில் விளம்பரங்கள். விளம்பரப் படத்துக்கு நடுநடுவே படத்தை ஓட்டுகிறார்களோ என்ற பிரமையைத் தவிர்க்க முடியவில்லை. என்னதான் தயாரிப்பாளர் குட்நைட் கம்பெனி உரிமையாளர் என்றாலும் இத்தனை.. இத்தனை விளம்பரம் ஆகாது!
திருடா திருடி என்ற ஒரேயொரு ‘விசிட்டிங் கார்டு’ திரையுலக வாழ்க்கை முழுவதற்கும் கூட வராது என்பதை இயக்குநர் சுப்பிரமணிய சிவா புரிந்துகொண்டால் சரி

கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malware bytes Startup Lite




MalwareBytes StartupLiteநாம் கணினியை இயக்கும் போது இயங்குதளம் ஆரம்பித்தவுடன் கூடவே சில மென்பொருள்களும் தானாக தனது செயல்பாட்டைத் துவங்கும். உதாரணமாக நமது கணினியில் அன்ரிவைரஸ் மென்பொருள் இருந்தால் விண்டோஸ் ஆரம்பித்ததும் இதன் செயல்பாடும் தொடங்கும். இது போல புளுடூத் சேவை, Google talk இன்னும் சில மென்பொருள்களும் தானாகவே செயல்பாடுகளைத் தொடங்கிவிடும். இந்த மாதிரி மென்பொருள்களை Startup Programs என்று சொல்வார்கள்.

இயங்குதளமே மெதுவாக ஆரம்பிக்கும் வேளையில் இவைகளின் செயல்பாடுகளும் சேர்ந்து கணினியின் வேகத்தை சுமாராக குறைத்து விடுகின்றன. சில மென்பொருள்கள் நிறுவும் போது நம்மிடம் Startup இல் வரவேண்டுமா எனக்கேட்கும். சில மென்பொருள்களை நிறுவும் போது அவை தானாகவே Startup இல் தோன்றுமாறு அமைப்புகளை செய்து விடுகின்றன.

இப்படி நமக்குத் தெரியாமலே Startup இல் அமைந்துள்ள மென்பொருள்களின்
பட்டியலை எப்படிப்பார்ப்பது? Start - > Run சென்று msconfig என்று தட்டச்சிடவும். வரும் விண்டோவில் Startup என்ற பகுதியில் இவற்றைப் பார்க்கலாம். இவற்றில் சில கணினிக்கு அவசியமான மென்பொருள்களும் இருக்கலாம். நமக்கு நிச்சயமாய் தேவையில்லாத மென்பொருள் என்று தெரிந்தால் நீக்கலாம். இல்லாவிட்டால் சிக்கல் தான். இந்த விசயங்களை எளிதாக கையாள Malwarebytes நிறுவனத்தின் StartUpLite என்ற இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

MalwareBytes StartupLite
இந்த மென்பொருளின் மூலம் எளிமையான வழியில் தேவையில்லாத இயக்கங்களை முடக்கலாம் (Disable). வேண்டுமென்றால் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம் (Remove startup programs). இதன் மூலம் கணிணியின் வேகத்தை பாதுகாப்பான வழியில் அதிகரிக்கலாம் என்பது நிச்சயம்.

இதன் மூலம் ஒரே கிளிக்கில் உங்கள் கணினியின் வேகத்தைக் கூட்டலாம். இது விண்டொசின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக் கூடியது.
தரவிறக்கச்சுட்டி : Download StartUpLite

இலவச மென்பொருட்கள் தரவிறக்கத்தளம்

Browsers and Plugins

Firefox 4.0 Beta 11
Flash Player 10.2.152.26 (IE)
Google Chrome 11.0.672.2 Beta
Internet Explorer 8.0 XP
Java Runtime Environment 1.6.0.24 (32-bit)
Opera 11.01
Safari 5.0.3


File Sharing

eMule 0.50a
FrostWire 4.21.3
LimeWire Basic 5.5.16
uTorrent 2.2.0 Build 24683
Vuze 4.6.0.2



Messaging and Chat

AIM 7.5.8.2
Google Talk 1.0.0.104 Beta
Pidgin 2.7.10
Skype 5.2.0.102 Beta
Thunderbird 3.1.7
Trillian Astra 4.2.0.25
Windows Live Messenger 2011 (15.4.3508)
Yahoo! Messenger 11.0.0.1751 Beta



File Transfer

CuteFTP 8.3.4 Home
FileZilla 3.4.0 Beta 1
FlashGet 3.7.0.1156
GMail Drive 1.0.17



Office and News

Adobe Reader 10.0.1
Foxit Reader 4.3.1.0118
OpenOffice.org 3.3.0


Developer Tools

Notepad++ 5.8.7
VMware Player 3.1.3


Anti-Malware

Ad-Aware 9.0.0.0
AntiVir Personal 10.0.0.611
Avast! Free Antivirus 5.1.889
AVG Free Edition 10.0.1204 (32-bit)
CWShredder 2.19
HijackThis 2.0.4
Rootkit Revealer 1.71
Security Essentials 2.0.657 Vista
Spybot Search & Destroy 1.6.2
SpywareBlaster 4.4
Windows Defender 1.1.1593


Firewalls and Security

Comodo Internet Security 5.3.176757
Sunbelt Personal Firewall 4.6.1861
Sygate Personal Firewall 5.6.2808
ZoneAlarm Free 9.2.102.000



System Tuning

3DMark Vantage 1.0.2
Autoruns 10.06
CCleaner 3.03.1366
CPU-Z 1.57
Defraggler 2.02.253
Process Explorer 14.01
Sandra Lite 2011 SP1 (17.36)
Speccy 1.08.218



Compression and Backup

7-Zip 9.20 (32-bit)
Recuva 1.39.509
SyncBack 3.2.26
WinRAR 4.00 Beta 7 (32-bit)
WinZip 15.0.9334


Networking and Admin

Hamachi 2.0.3.89
RealVNC 4.1.3



Audio and Video

iTunes 10.1.2 (32-bit)
K-Lite Codec Pack 6.90 (Full)
MediaMonkey 3.2.4.1304
QuickTime Lite 4.1.0
QuickTime Player 7.69.80.9
Real Alternative 2.02
RealPlayer 14.0.2.633
Songbird 1.9.3
VLC Media Player 1.1.7
Winamp 5.601 Full
Windows Media Player 11



CD and DVD Tools

DAEMON Tools Lite 4.40.2
DeepBurner 1.9.0.228
DVD Shrink 3.2.0.15
ImgBurn 2.5.5.0
Nero Multimedia Suite 10.0.13100



Desktop

Google Desktop 5.9.1005.12335
ObjectDock 2.0
RocketDock 1.3.5
Samurize 1.64.3
WindowBlinds 7.2
Yahoo! Widget Engine 4.5.2



Photos and Images

FastStone Image Viewer 4.3
IrfanView 4.28
Paint.NET 3.5.7
Picasa 3.8 Build 117.29



Drivers

.NET Framework Version 4.0
ATI Catalyst Drivers 11.2 XP
DirectX 9.0c (Jun 10)
IntelliPoint 8.0
IntelliType Pro 8.0
NVIDIA Forceware 266.58 WHQL XP

மேலும் பல மென்பொருட்களை இங்கு இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். ....

http://www.filehippo.com/

ஆண், பெண் இருபாலருக்கும் சில மருத்துவ குறிப்புகள்

கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.


* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.


* தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.


* வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.


* கோடை வெயிலில் நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும். இதற்கு பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் மினரல் வாட்டரை அடிக்கடி சாப்பிடவும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு தோல் பளபளப்பாகவும் மாறும். கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.


* கோடை காலத்தில் பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும். இதற்கு வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிப்படியாக மறையும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.


* உடம்பில் இருந்து அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். அதிக அளவு சோப்புகளையும் கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.


* கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.


* வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகம் குடிக்கலாம்.


* வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.


* ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.


* வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அதனால் அடிக்கடி உடம்பை கழுவவும்.


* கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்கவேண்டும்.

நடுநிசி நாய்கள்

கௌதம் வாசுதேவ் மேனன். இந்த மூன்று வார்த்தை மந்திரம் ரசிகர்களைக் கணிசமாகவே ஈர்த்திருக்கிறது. பெரிய ஸ்டார்கள் இல்லை. இசை இல்லை (சவுன்ட் எஃபெக்ட்ஸ் மட்டும்தான்). பாட்டு இல்லை. வெளிநாட்டு லொக்கேஷன்கள் இல்லை. ஆனாலும் நடுநிசி நாய்களுக்கு நல்ல ஓப்பனிங் இருந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இயக்குநர் மட்டுமே! டைட்டில் கார்டு போடும்போது எழுத்து இயக்கம் என்ற பெயருக்கு கிடைக்கும் கைதட்டல் மாஸ் ஹீரோவுக்குக் கிடைப்பதை விட அதிகமாக இருக்கிறது. கௌதம் மேனன் நன்றாகத்தான் படமெடுப்பார் என்ற நம்பிக்கையில் மக்களைத் தியேட்டருக்கு வரவழைத்த இந்த மந்திரம் அவர்களை திருப்தியோடு திருப்பி அனுப்புகிறதா என்பதே கேள்வி.

இது ஒரு சைக்கோ பற்றிய கதை. சிறு வயதில் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் ஒருவன் நிகழ்த்தும் குற்றங்களும் அவன் சிக்கிக் கொள்ளும் விதமும்தான் கதை. ஆனால், கொஞ்சம் குழப்பமான காட்சியமைப்புகளும் அந்த இளைஞன் மீது நமக்கு பரிதாபம் ஏற்படுத்தத் தவறும் கதையோட்டமும் நெகட்டிவாகப் போய் முடிந்துவிடுகிறது.

கதையின் மையப் பாத்திரமான சமர் என்கிற வீரா (வீரா) சைக்கோ கொலைகாரனாக மாறுவதற்குக் காரணம் சிறு வயதில் அவன் அப்பாவிடம் அவன் பெற்ற கசப்பான அனுபவம் என்பதுதான் இயக்குனர் சொல்ல வரும் விஷயம். தன் மகனிடமே தவறாக நடந்துகொள்லும் வக்கிரம் ஒரு தந்தைக்கு இருக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் படத்தில் அந்தத் தந்தை நடந்துகொள்ளும் விதம் யதார்த்தமாக இல்லை. ஏதோ ஃபேஷன் ஷோவில் கலந்துகொள்வதுபோல முகமூடி போட்டுக்கொண்டு அவர் பெண்களுடன் சல்லாபம் செய்வதும் படு சாதாரணமாகத் தன் மகனைப் பாலியல் தொழிலாளிபோல நடத்தும் விதமுமாக நம்பகத்தன்மை அற்ற காட்சிகளால் கதையின் பிரதானமான பகுதி பலவீனமாக நிற்கிறது. கதையின் அடிப்படைக் காரணமே ஆட்டங்கண்டு விடுவதால் அதன் பிறகு கவுதம் தன் கேமிரா கோணங்களாலும் காட்சிகளாலும் புதுப் புது உத்திகளாலும் கதையைச் சொல்லும்போது அது வழுக்குத் தரையில் ஆடும் நடனம்போலத் தள்ளாடுகிறது.

சிறுவன் சமருக்கு உதவி செய்யும் பக்கத்து வீட்டுப் பெண் மீனாட்சியின் கதியைப் பதைபதைக்கும் விதத்தில் காட்சிப்படுத்துகிறார். கவுதம். தன்னைக் காப்பாற்றிய பெண்ணிடம் அந்தப் பையன் அத்து மீறும் தருணமும் அவள் எதிர்வினை ஆற்றும் விதமும் ஓரளவு சரியாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அவள் திருமணத்துக்குப் பிறகு நடக்கும் கொலை சமருடைய மனநிலையின் வெளிப்பாடு என்பதைச் சரியாகச் சொல்லவில்லை. அதேபோல, தனக்கு இவ்வளவு பெரிய தீங்கு இழைத்த அந்தப் பையனுக்கு அந்தப் பெண் தரும் சலுகைகளும் வாரி வழங்கும் உதவிகளும் நம்பும்படி இல்லை.

சென்னைக்கு வந்த பிறகு அந்தப் பெண்ணை வைத்து கவுதம் உருவாக்கும் திருப்பம் எதிர்பாராததாக உள்ளது. ஆனால் அடுத்தடுத்துப் பாலியல் குற்றங்களைச் செய்துகொண்டே போகும் வீராவின் செயல்களில் சாகசம் அதிகமாக இருப்பதால் யதார்த்தம் தொலைந்துவிடுகிறது. வழக்கமான தமிழ் சினிமாக் கதாநாயகன் போல டொப் டொப்பென்று சுடும் துப்பாக்கி முதல் கொன்றவர்களைப் போட்டு வைக்கும் மரணக் கிணறுவரை எல்லா விஷயங்களையும் ஒற்றை ஆளாகவே செய்துமுடிக்கிறான்.

நிழலான காரியங்கள் நடப்பதாகச் சந்தேகப்படக்கூடிய வீடுகளில் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் சாதாரண மனிதர்கள் எகிறிக் குதிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் நகர்ப்புறங்களில் இப்படி நடக்காது. நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்கூட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடுதான் களம் இறங்குவார்கள்.

சமர், வீரா என்று இரு வித குணாம்சங்களைக் கொண்ட பாத்திரத்தில் நடித்திருக்கும் கவுதமின் அஸிஸ்டென்ட் வீரா அபாரமாகச் செய்திருக்கிறார். மனப் பிறழ்வையும், பெண்கள் மீதான கவர்ச்சிக்கும் அவர்கள் மீதான வன்மத்துக்கும் நடுவில் அலைக்கழிக்கப்படுவதையும் அழுத்தமாகக் காட்டியிருக்கிறார். இதையெல்லாம் தாண்டி அன்புக்கான ஏக்கத்தையும் துல்லியமாக வெளிப்படுத்துகிறார். சமீரா ரெட்டியைக் கடத்துவதும் அதை ஒட்டிய பரபரப்பான நிகழ்வுகளும் புலனாய்வின் போக்கும் நன்றாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளில் வீராவின் அபாரமான நிதானம் பெரும் பலமாக இருக்கிறது.

வன்முறைக்கு ஆளாகும் பெண்ணின் போராட்டத்தையும் வலியையும் சமீரா ரெட்டி கச்சிதமாகச் சித்தரிக்கிறார். காதலனுடன் தொலைபேசியில் பேசும்போது காதலில் உருகும் சமீரா, வீராவுடன் காருக்குள் சண்டை போடும்போது ஆவேசமாகச் சீறுகிறார்.

இன்ஸ்பெக்டராக வருபவர் ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார். பக்கத்து வீட்டு ஆன்ரியாக நடித்திருக்கும் மீனாட்சி அசத்தியிருக்கிறார். குறிப்பாக விபத்துக்குப் பிந்தைய காட்சிகளில்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மனோ‌ஜ் பரமஹம்சாதான் இதற்கும் ஒளிப்பதிவு. பெரும்பாலான காட்சிகள் இரவில் நடக்கின்றன. மனோஜின் கேமரா இரவுக் காட்சிகளை யதார்த்தமாகப் படம்பிடித்துத் தருகிறது. பயமுறுத்த வேண்டிய இடங்களில் பயன்படுத்தப்படும் டாப் ஆங்கிள் ஷாட்கள் எரிச்சலூட்டும் க்ளீஷேக்களாக உள்ளன. கவுதம் மேனனின் மேக்கிங் வழக்கம்போலவே நேர்த்தியாகவும் வலுவான விஷுவல் சென்ஸ் கொண்டதாகவும் உள்ளது.

படத்தின் மிகப்பெரிய பலவீனமாக இருப்பது பெரும்பாலான பாத்திரங்களின் பின்னணி என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியாமல் போவதுதான்! சமீர் கதாபாத்திரத்துக்குக் கிடைக்க வேண்டிய பரிதாபம் கிடைக்காமல் போக அதுவே காரணம். அதேபோல அவனுக்கு உதவும் அந்தப் பெண் யார் என்பதைச் சொல்ல இயக்குநர் மெனக்கெடவில்லை. மும்பையில் அவ்வளவு வசதியுடன் வாழும் அவளது பின்னணி என்ன? அவள் வீட்டில் வேறு யாரையுமே ஏன் காணவில்லை? அவளுக்குச் சென்னையில் பெரிய பண்ணை வீடு எப்படி வந்தது? - எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை என்பது மட்டுமல்ல. இப்படிப்பட்ட கேள்விகளை கவுதம் கணக்கில் எடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை.

குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய கவுதமின் கவலை படம் முடியும் சமயத்தில் பேசும் சைக்யாட்ரிஸ்டின் குரலில் எதிரொலிக்கிறது. முடிந்த பிறகு திரையில் போடப்படும் டைட்டில்களில் பிரதிபலிக்கிறது. ஆனால் படத்தில் அந்த அக்கறை மிகவும் பலவீனமாகவே வெளிப்படுகிறது.

காட்சிகளின் வலிமை, ஒளிப்பதிவு, வலுவான நடிப்பு, பாடல்களோ பின்னணி இசையோ தேவையில்லை என்ற துணிச்சல் ஆகியவற்றுக்காக நடுநிசி நாய்களைப் பாராட்டலாம். ஆனால் உளவியல் சார்ந்த க்ரைம் படங்களில் ஏன், எப்படி என்பது மிகவும் முக்கியம். இந்த இரண்டு அம்சங்களிலும் படம் பலவீனமாகவே இருக்கிறது. சிகப்பு ரோஜாக்கள், மூடுபனி, நூறாவது நாள் போன்ற படங்களில் இந்த அம்சங்கள் வலுவாக அமைந்திருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

நடுநிசி நாய்கள் - பாய்ச்சலில் வேகம் குறைவு.

Google Chrome: PDF Reader இல்லாத கணினிகளுக்கான மாற்று வழி

நாம் ஒரு சில சமயங்களில், நண்பர்களுடைய கணினி அல்லது அலுவலக கணினியை அவசரத்திற்கு பயன்படுத்தும் பொழுது, அவற்றில் PDF Reader நிறுவப்படாமல் இருக்கலாம். (கூகிள் குரோம் உலாவி நிறுவப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம்)  உங்களிடம் உள்ள PDF கோப்பை உடனடியாக திறந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எனில் இந்த வகை கோப்புகளை திறப்பதற்கான மாற்று வழியை கூகிள் குரோம் உலாவி நமக்கு அளிக்கிறது. 



தேவையான PDF கோப்பை வலது க்ளிக் செய்து திறக்கும்  context menu வில்  Open with ஐ க்ளிக் செய்யுங்கள். ஒருவேளை Open with வசதி வரவில்லையெனில் shift மற்றும் மெளசின் வலது பொத்தானை க்ளிக் செய்யலாம். 


  இந்த Open with பகுதியில் Google Chrome பட்டியலிடப்படவில்லை எனில், Choose program ஐ க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Open with  உரையாடல் பெட்டியில் , Browse பொத்தானை அழுத்தி, Google Chrome உலாவி உங்கள் கணினியில் எங்கு நிறுவப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் அந்த பகுதியை browse செய்து கொடுக்கலாம்.      


ஆனால் Google Chrome உலாவி Program Files கோப்புறைக்குள் நிறுவப்படுவதில்லை. எனவே இது நிறுவப்பட்ட பகுதியை தேர்வு செய்ய, Google Chrome உலாவியின் shortcut ஐ வலது க்ளிக் செய்து, properties க்ளிக் செய்து, திறக்கும் உரையாடல் பெட்டியில், அதில் Target பகுதிக்கு நேராக உள்ள லொகேஷனை Copy செய்து, பேஸ்ட் செய்தால் போதுமானது. 

  
இனி உங்களுக்கு தேவையான PDF கோப்பு உங்கள் அபிமான குரோம் உலாவியில் திறக்கும். 

 

விண்டோஸ் தொடங்கும் நேரத்தைக் கணக்கிட

நம்முடைய கணினி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கணினி தொடங்கும் நேரத்தை கொண்டே அளவிட முடியும். நம்முடைய கணினியில் அளவுக்கதிமான புரோகிராம்கள் நிறுவப்பட்டாலும், அல்லது கணினி வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருந்தாலும் கணினி மெதுவாக செயல்பட தொடங்கும் இதனை நாம் கணினி தொடங்கும் நேரத்தை கொண்டே கணக்கிட்டு கொள்ள முடியும். நம்முடைய கணினியிலும் நம் நண்பருடைய கணினியிலும் ஒரே ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் தான் நிறுவியிருப்போம். ஆனால் நம்முடைய கணினி தொடங்கும் நேரத்தை விட நண்பருடைய கணினி மிக விரைவாக தொடங்கும். நமக்கு ஆச்சர்யமாக இருக்கும் இதற்கு என்ன காரணம் நம்முடைய கணினியில் உள்ள வன்பொருள்களைவிட, நண்பருடைய கணினியில் இருக்கும் வன்பொருள்கள் அதிக மதிப்புடையதாக இருக்கும். ஆனால் இதற்கு இதுமட்டும் காரணமில்லை நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்கள், கணிப்பொறியில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும்  ஹார்ட்டிஸ்க் முறைப்படுத்தபடாமல் இருத்தல் போன்றவை ஆகும். சரி நம்முடைய கணினியை விட நம் நண்பருடைய கணினி எவ்வளவு வேகமாக தொடங்குகிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், பின் Start என்ற பொத்தானை அழுத்தவும் கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்யுமாறு ஒரு செய்தி வரும், உடனே கணினியை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும். உங்களுடைய கணினி மறுதொடக்கம் ஆனவுடன். எவ்வளவு நேரத்தில் தொடங்கியது என்ற செய்தி தோன்றும். 



குறைந்தபட்சம் 1நிமிடத்தில் கணினி தொடங்க வேண்டும். இல்லையெனில் கணிப்பொறியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு கணினி தொடங்கும் நேரத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்கள் தொடங்கும் நேரத்தை எளிமையாக கணக்கிட முடியும்.

 டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க

டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க
காலையில் விழித்தெழும்போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், "டென்ஷன்` தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க...
முதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.

அடுத்த நாள் எழும்போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல் துலக்குவது, பால்/ கோப்பி/ டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.
சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் தொடங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, "ரிலாக்ஸ்` செய்து கொள்ள சில யோசனைகள்...

* இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.

நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்னையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.

* செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்ணீர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.

அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.

* கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.

* பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம், துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும்போது, உங்களிடையே உள்ள கலைத் தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.

* ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத் தும்போது வேலையில் கவனம் குறையும்.

அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான். வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும்போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
 

  காய்ச்சலுக்கும், சளிக்கும் மருந்து தேவையில்லை

சளி வந்தால் 7 நாள் இருக்கும். ஒரு சில காய்ச்சல் ஒரு நாள் இருக்கும், ஒரு சில காய்ச்சல் 3 நாள் இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
காய்ச்சல் என்பது என்னவென்றால், ஏதாவது பெரிய வியாதியை ஏற்படுத்தும் கிருமி உடலுக்குள் நுழையும் போது அதனை எதிர்த்து வெள்ளை அணுக்கள் போராடும் நிகழ்வாகும்.
வெள்ளை அணுக்கள் போராடும் போது உடலின் வெப்பநிலை உயர்கிறது. இது இயற்கை. ஆனால் நாம் என்ன செய்கிறோம், காய்ச்சல் அடித்ததும் மருந்து சாப்பிட்டு உடனடியாக குணப்படுத்த முயற்சிக்கிறோம். இதனால் வெள்ளை அணுக்களின் வேலை பாதிக்கும்.
மலேரியா என்பது கொசு கடிப்பதில் இருந்து மலேரியாவைப் பரப்பும் கிருமி உடலின் ரத்தத்தின் மூலமாக கல்லீரலில் போய் சேர்ந்து அங்கிருந்து வெடித்து சிவப்பணுக்களை எல்லாம் பிடித்துக்கொண்டு பிறகு வெள்ளை அணுக்களை பிடிக்கும்.
மலேரியா கிருமிக்கும், வெள்ளை அணுக்களுக்கும் இடையே தாக்குதல் நடக்கும்போதுதான் கடுமையான காய்ச்சல் அடிக்கிறது.
வெள்ளை அணுக்கள் உடல் முழுக்க பரவிதான் மலேரியா கிருமியுடன் போராடுகிறது. அதனால்தான் மலேரியா காய்ச்சல் வந்தால் உடலால் தாங்க முடியாத அளவிற்கு இருக்கிறது.
எனவே ஒவ்வொரு காய்ச்சலுக்கு பல காரணங்கள் உண்டு.
மலேரியா வந்தால் அதனைக் குணப்படுத்தக் கூட ஆசனங்கள் உண்டு. அதாவது வெள்ளை அணுக்கள் அதிகம் உருவாகும் இடம் தொடைப் பகுதிதான். தொடைப் பகுதி பலமாக இருந்தால் வெள்ளை அணுக்கள் அதிகமாக இருக்கும். எனவே தொடைப் பகுதியை பலப்படுத்தும் ஆசனங்கள் மலேரியா பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும்.

தூங்கா நகரம்

மதுரை என்றாலே கத்தி ரத்தம் என்ற முத்திரையை இன்னொருமுறை அழுத்தமாக பதிக்கப் பார்த்திருக்கும் படம் தூங்காநகரம். நாலுநாள் தாடியோடு சுற்றும் நான்கு இளைஞர்கள்... அவர்களுக்கு நடுவிலான உறவு, நேசம், நெருக்கம், துரோகம் எல்லாமும்தான் கதை. ஆனால், இந்தக் கதைக்குள் வருவதற்குள் இயக்குனர் எங்கெங்கோ சுற்றுகிறார்.

மதுரைக்குப் பக்கத்து ஊர்களிலிருந்து பிழைப்பதற்காக மதுரைக்கு வரும் நான்கு இளைஞர்கள் தற்செயலாகச் சந்தித்து, நெருங்கிய நண்பர்களாகிறார்கள். பகலில் ஆளுக்கொரு ஜோலி, இரவில் பாரில் ஜாலி என்று கழிகிறது இவர்கள் வாழ்க்கை. நடுவே, அப்பாவிப் பெண்ணுக்கு லோக்கல் பிரமுகரின் மகனால் நடக்கவிருக்கும் அநீதியைத் தட்டிக் கேட்கப் போக, நால்வருக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

அந்த லோக்கல் பிரமுகரின் கையில் நண்பர்களில் ஒருவர் சிக்க, அவர் மூலமாகவே பழிவாங்கும் முயற்சியில் இறங்குகிறார் லோக்கல் பிரமுகர். அடுத்து நடந்தது என்ன என்பதை இடைவேளைக்குப் பிறகு வரும் படம் சொல்கிறது.

மழை கொட்டும் இரவொன்றில் ஒரு மூட்டையில் வைத்து ஒரு பிணம் எரிக்கப்படுவதைக் காட்டியபடி தொடங்கும் படம் சட்டென்று ஃபிளாஷ்பேக்குள் நுழைந்துவிடுகிறது. நண்பர்கள் நால்வரின் அறிமுகத்தை அடுத்து அவர்கள் நண்பர்களான கதையைச் சொல்லி கலகலப்பாக ஆரம்பிக்கிறார் அறிமுக இயக்குனர் கௌரவ். அந்த சஸ்பென்ஸும் கலகலப்பும் படத்தை சுவாரஸ்யமாகத் தொடங்க முழுமையாகக் கைகொடுக்கிறது. ஆனால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மதுரை புராணங்களைப் பாடுவதாகவே கதை தொடர்ந்து கொண்டிருப்பது கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. பல படங்களில் நாம் பார்த்துச் சலித்த திருவிழாக் காட்சிகள், பார் காட்சிகள் என்று சலிப்போடுதான் கதை நகர்கிறது. இத்தனைக்கும் நான்கு நண்பர்களின் வித்தியாசமான பின்புலம், அவர்களில் ஒருவனின் காதல் கதை என்று சுவாரஸ்யப்படுத்த எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் மிஸ் பண்ணியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு உதவி செய்யச் செல்லும் காட்சியில் இருந்துதான் கதைக்குள் வேகம் கிடைக்கிறது. அதன் பிறகு இரண்டாவது பாதியில் கதையை முழுமையாக தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் இயக்குனர்.

நான்கு நண்பர்களில் நாயகன் அந்தஸ்து விமலுக்கு. ஆனால், வழக்கமான நான்கைந்து முகபாவனைகளை வைத்துக் கொண்டு சமாளித்திருக்கிறார். வித்தியாசப்படுத்த அவருக்கும் தேவையிருக்கவில்லை. இயக்குனரும் ரொம்ப மெனக்கெடவில்லை.

விமல் என்றில்லை... படத்தில் வரும் எல்லோருமே தங்கள் முழுமையான திறமையை வெளிப்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. அந்த நான்கு நண்பர்களில் வாய்பேச முடியாதவராக வரும் நிஷாந்த் தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்.

அஞ்சலி கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். முக்கியமான ரோல் இல்லை. அதே சமயம் டம்மி பீஸ் என்றும் சொல்ல முடியாது. கிடைத்த கேரக்டரில் நடிப்பில் குறைவைக்கவில்லை.

தத்தனேரி சுடுகாட்டில் பிணம் எரிப்பவன், லோக்கல் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று வெரைட்டியாக கேரக்டர்கள் பிடித்திருக்கும் இயக்குனர் அதில் உள்ள சுவாரஸ்யங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதையெல்லாம் செய்திருந்தாலே முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

கதையின் திருப்பமாக வரும் நிகழ்ச்சி சமீபத்தில் செய்திகளில் அதிகமாக அடிபட்ட ஜவுளிக்கடைகளில் டிரையல் ரூமில் உடைமாற்றும் பெண்களைப் படம்பிடிக்கும் கும்பலைப் பற்றியது. ஆனால், அதை ஏதோ ஹாபி போலச் செய்வதாகக் காட்டி அதன் தீவிரத்தைக் குறைத்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது விஜய் உலகநாத் ஒளிப்பதிவு. மதுரை நகரின் கொண்டாட்டங்களையும் மதுரையின் இரவுகளையும் யதார்த்தமாக் கண் முன் நிறுத்துகிறார். அதேபோல விமல் அஞ்சலி டூயட் பாடல் காட்சியை கிரீட்டிங் கார்ட் போல அழகாகத் தருகிறார். மழைக் காட்சிகளில் அந்த மூடுக்குத் தகுந்தபடி இருக்கிறது ஒளிப்பதிவு.

சிரிக்க வைப்பதற்கு சிங்கம்புலி செய்யும் முயற்சிகளை விட அந்த இரண்டு பாட்டிகளும் செய்யும் அட்டகாசம் ரசிக்கவைக்கிறது. கமலா தியேட்டரின் முதலாளி வி.என். சிதம்பரம் வில்லன் வேடத்தில் ஆச்சரியப்படுத்துகிறார். அந்தக் கூர்மையான விழிகளும் வன்மத்தை வலுவாக வெளிப்படுத்தும் முகபாவங்களும் சபாஷ் போட வைக்கின்றன. வசன உச்சரிப்பு சரியாக வரவில்லை என்றாலும் அதை குறையாகத் தெரியாத வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

சுந்தர் சி. பாபுவின் இசையில் கூரான பார்வைகள், எட்டுக் கண்கள் ஆகிய இரு பாடல்களும் கேட்ட மாத்திரத்தில் கவர்கின்றன. பின்னணி இசை பல இடங்களில் காட்சியோடு இசைந்திருக்கிறது. திருப்பங்கள் வருவதற்குச் சற்று முன், கட்டியம் கூறுவதுபோல ஓசை எழுப்பி பயமுறுத்தியிருக்க வேண்டாம்.

படத்தில் ஊமை என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. படத்தில் வரும் ஒரு பாத்திரம், பேசும் திறன் இழந்தவரை ஊமை என்று சொல்வதை ஆட்சேபிக்க முடியாது. ஏனெனில் அந்த்ச் சொல்லைப் பயன்படுத்துபவர்க்ள் சமூகத்தில் இருக்கிறார்கள் என்னும் யதார்த்தத்தை அது பிரதிபலிக்கிறது. ஆனால் இயக்குநரின் கூற்றாகப் பின்னணிக் குரலில் ஒலிக்கும் வசனங்களில் (குரல் உபயம்: வைகைப் புயல் வடிவேலு) அந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதையும் வாய் பேச முடியாதோரைக் கொச்சைப்படுத்தும் பழமொழியைச் சொல்லியிருப்பதையும் இயக்குநர் கண்டிப்பாகத் தவிர்த்திருக்க வேண்டும்.

இரண்டாம் பாதியின் வேகம், தனிப்பட்ட சில காட்சிகளில் துல்லியம் ஆகியவற்றுக்குக்காக கௌரவைப் பாராட்டலாம். பழக்கப்பட்ட காட்சிகளைத் தவிர்த்து, மதுரைப் புராணத்தைத் தவிர்த்து, புதிதாகக் காட்சிகளை உருவாக்கி, கதைக்குச் சீக்கிரமே வந்து சேர்ந்திருந்தால் தூங்காநகரம் தூள் கிளப்பியிருக்கும்.
          

உங்கள் கணினியில் (Folder) ஒன்றுக்கு (Password) கொடுத்து மற்றவர்கள் அதனைத் திறக்க முடியாமல் பாதுகாக்க

Windows XP தொகுப்பிலேயே கோப்புறை(Folder) ஒன்றைப் கடவுச்சொல்(password) கொடுத்துப் பாதுகாக்க இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. Windows operating System க்கு என சில இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன் படுத்தும் நிரல்களும் உள்ளன.

1. உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன் (user Account) கடவுச்சொல் உள்ளதாக இருந்தால் . அதன் File System என்.டி.எப்.எஸ். (NTFS) ஆக இருக்கும்.

2. இனி எந்த கோப்புறைக்கு கடவுச்சொல் கொடுக்க வேண்டுமோ அதன் மீது Right Click செய்திடவும். பின் "Properties" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Alt அழுத்தியவாறே Double Click செய்திடவும்.

3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள Tab ஐத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.

4. பின் Apply என்பதில் சொடுக்கவும். உங்களுடைய கணக்குக்கு கடவுச்சொல் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். கடவுச்சொல் ஒன்றை தரப்போகிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் கோப்புறையை நீங்கள் Private ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த கடவுச்சொல்லினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கணனியில் உங்கள் கணக்கில் நுழைகையிலும் அதே கடவுச்சொல்லினை கொடுக்க வேண்டியதிருக்கும்.

5. கடவுச்சொல் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்பதை அழுத்தி கடவுச்சொல் விண்டோவினை மூடவும்.

6. பின் Properties எனும் Dialog Box இல் OK என அழுத்தவும்.

7. இனி உங்கள் கடவுச்சொல் இல்லாமல் இந்த போல்டரை யாரும் திறக்க முடியாது. இரண்டாவதாக ஒரு வழி: இந்த கோப்புறை Zip செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக கடவுச்சொல் ஒன்றினைக் கொடுக்க முடியாது. இதற்கு Zip செய்யப்பட்ட கோப்புறை மீது இருமுறை அழுத்திடவும். மேலாக உள்ள பட்டியலில் (menu) File தேர்ந்தெடுத்து, பின் ‘Add a Password’ என்பதில் சொடுக்கவும். கடவுச்சொல் பெட்டியில் கடவுச்சொல் ஒன்றை கொடுக்கவும். மீண்டும் Confirm Password பெட்டியிலும் இதனை கொடுக்கவும். இனி இந்த கோப்புறையை நீங்கள் மட்டுமே கடவுச்சொல் பயன்படுத்திப் பார்க்க முடியும்.

தேவையற்ற கோப்புகளை அழிக்க, கணினியின் வேகத்தை அதிகரிக்க

நம் கணினியின் வன்வட்டு (Hard disk) ல் பல்வேறு பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை (temporary files) தேடிப்பிடித்து அழிப்பதற்கு BleachBit மென்பொருளைப் பயன்படுத்தலாம். லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் (Operating System) இதைப் பயன்படுத்தலாம். உங்களது நெருப்புநரி உலாவி (Firefox browser) யின் வேகத்தை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்க Bleachbit ஐ உபயோகிக்கலாம்..
இணைய உலாவியில் நாம் விட்டுச் சென்ற தடயங்கள் (Traces), வரலாறு, குக்கீஸ் (Cookies) போன்றவற்றை இந்த மென்பொருள் நொடிப்பொழுதில் அழித்துவிடும். பயர்பாக்ஸ் முதல் கூகிள் குரோம் வரை எல்லா உலாவிகளுடன் (Browser) ஒத்திசைவு கொண்டது இது. அடோப் ரீடர், அடோப் பிளாஷ், கூகிள் எர்த், ஜாவா, ஓபன் ஒபிஸ், ஸ்கைப் போன்ற 80 + பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை அடையாளம் கண்டு அழிக்க வல்லது இது.
தரவிறக்கச் சுட்டி  

அபிஷேகங்களும் அதன் பயன்களும்

பதினெட்டு அபிசேகங்கள்

தீர்த்த அபிஷேகம் - மனசுத்தம்

எண்ணெய் - பக்தி

நெல்லிப்பொடி - நோய் நிவாரண்ம்

பால் அபிஷேகம் - சாந்தம்

மஞ்சள் பொடி - மங்கலம்

தயிர் - உடல் நலம்

நெய் - நல்வாழ்வு

பன்னீர் - புகழ்

நாட்டு சர்க்கரை - சோதிடம்

விபூதி - ஞானம்

சந்தனம் - சொர்க்க லோகம்

தேன் - குரல் வளமை, ஆயுள்

பழச்சாறு - ஜனவசீகரம்

பஞ்சாமிர்தம் - நீண்ட ஆயுள்

பஞ்ச கவ்யம் - பாவம் நீக்கல்

இளநீர் - புத்திரப் பேறு

அன்னம் - அரசு உதவி

மாப்பொடி - குபேர சம்பத்து

பஞ்ச கவ்யம் (பசு கொடுக்குற அஞ்சு பொருளுக) - பால், தயிர், நெய், சிறுநீர் (கோமயம்), சாணம். 'பஞ்ச கவ்யம்'னா சரி. 'பஞ்ச கோமயம்' என்றால் அது தப்பு. கோமயம், ஐந்தில் ஒன்று

இலவச "Avast Internet Security" ஒரு வருட License உடன்

இந்த Avast Internet Security மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் Instal செய்துவிடுங்கள். உங்களுக்கு கிழே உள்ள அனைத்து வகை பாதுகாப்பை Avast Internet Security வழங்குகிறது.

•    Continuous protection against viruses and spyware
•    Ensures all mails sent and received are clean
•    Keeps you protected from "chat" infections
•    Stops attacks from hijacked websites
•    Lets you safely browse suspicious websites or run unknown applications
•    Blocks hacker attacks, to protect your identity
•    Keeps your mailbox free from spam
•    Allows safe and uninterrupted gaming
•    Compatible with Windows XP, Vista and 7
•    NEW PRODUCT

பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் இந்த மென்பொருளை நிறுவிய பின்பு,1license.avastlic எனும் ஸ்கிரிப்ட்ய் Run செய்யவும். ( 1license.avastlic இது நீங்கள் பதிவிறக்கம் செய்த Folder -ல் உள்ளது ).  இந்த ஸ்கிரிப்ட்ய் Run செய்தவுடன் உங்கள்  Avast Internet Security ஒரு வருட Original Version ஆக மாறிவிடும். கடைசியில் ஒரு முறை உங்கள் கணினியை "Restart" செய்யவும்.

குறிப்பு: நீங்கள் பதிவிறக்கம் செய்த Folder -ல்  Avast Internet Security மற்றும் Avast Anti Virus இரண்டும் உள்ளது.உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

தரவிறக்க சுட்டி

வீட்டுத்தோட்டம்

வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு எஞ்சும் நேரத்தை பயனுள்ளதாகக் கழிக்கலாம். வீட்டில் வேலை இல்லாமல் தூங்கி தூங்கி உடல் பருமன், வெட்டிக் கதை பேசி ஊர் வம்பு எல்லாம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள்:

தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம். வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம்.லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் எல்லாம் மருதாணி, வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம்.சிறிய தொட்டிகளில் புதினா செடி, கீரை வகைகளை ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கூட வளர்க்கலாம்.

அதிகம் சிரமம் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி நட்டு வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள். தினமும் அது ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் மனம் ஆனந்தத்தில் கூத்தாடும். அந்த பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும். நித்தியமல்லி, மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்.

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்பது நமது கொள்கையாக இருக்கட்டுமே.




தென்மேற்குப் பருவக் காற்று

பண்பாட்டுக் கூறுகளை அழுத்தமாகவும் கூடியவரையில் மிகை இல்லாமலும் சொல்லும் படங்கள் மிகவும் அரிதாகவே வருகின்றன. பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட படங்கள் கதையம்சத்திலோ அல்லது பாத்திரப் படைப்பிலோ சறுக்கிவிடுவதையும் பார்த்துவருகிறோம். இந்தப் பின்னணியில் சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக் காற்று’ முக்கியத்துவம் பெறுகிறது. தேனிக்கு அருகில் உள்ள இரண்டு கிராமங்களையும் அதில் உள்ள மனிதர்களையும் சுற்றிப் பின்னப்பட்டுள்ள இந்தப் படம் பல அம்சங்களில் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

இரண்டு கிராமங்கள். ஒரு கிராமத்தில் ஓரளவு வசதி. இன்னொன்றில் அது இல்லை. இங்கே உழவு, கால்நடைகள் என்று வருமானத்துக்கு வாய்ப்பு அதிகம். அங்கே அது இல்லை. திருடுவதே அங்கு பலருக்குத் தொழில். இந்தக் கிராமத்தில் திருட்டுத் தொழிலில் கைதேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பேச்சி என்ற பெண்ணுக்கும் (வசுந்தரா) அந்தக் கிராமத்தில் ஆடுகளைப் பறிகொடுத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முருகன் என்ற பையனுக்கும் (விஜய சேதுபதி) காதல்.

முருகனின் அம்மா வீராயியோ (சரண்யா) தன் அண்ணன் மகளை மருமகளாக்கிக்கொள்வதாக வாக்குக்கொடுத்துவிட்டார். கடும் உழைப்பும் துணிச்சலும் இயல்பாகிப்போன அம்மா, தகப்பன் இல்லாத பையனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார். இந்தக் கட்டுப்பாட்டையும் திருட்டு, சண்டை ஆகிய தடைகளையும் தாண்டி அவன் அந்தப் பெண்ணைக் கைப்பிடிக்கிறானா இல்லையா என்பதே கதை.

படத்தின் முக்கியமான விஷயம் நடிகர்களும் காட்சிகளும் வசனங்களும் பெருமளவில் இயல்பாக இருப்பதுதான். கிராமத்துச் சண்டை, அதற்கு நடுவே காதல் என்றால் வீச்சரிவாளும் ரத்தச் சேறுமாகக் குலை நடுங்கவைக்கும். படங்களுக்கு நடுவே ஆறுதல் தருகிறது தென்மேற்குப் பருவக் காற்று. இயக்குநர் சீனு ராமசாமியும் வன்முறையைக் காட்டுகிறார். ஆனால் வன்முறையை வைத்தே கதையை நகர்த்தாமல் மனிதர்களின் பல்வேறு விதமான இயல்புகள், போக்குகள், ஆகியவற்றை அதிகம் நம்புகிறார். இரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம், ஆடு திருடும் படலம் காதலுக்கு வித்திடும் திருப்பம், பெண்னைத் தேடிப் போகும் படலம், போலீஸ் விசாரணை, நீதிமன்றம், தண்டனை, பழிவாங்குதல் ஆகியவற்றுக்கு மத்தியில் காதல் வளருவது, அம்மாவின் ஆக்ரோஷம், அவர் மாறும் விதம் என்று படத்தின் முக்கியமான அம்சங்களில் பலவும் இயல்பாகவே நிகழ்த்தப்படுகின்றன.

திருட்டையே தொழிலாகக் கொண்ட குடும்பத்தை சீனு ராமசாமி காட்சிப்படுத்தும் விதம் அபாரம். அவர்கள் ஹோட்டலில் கறி திருடுவது, ஆடு திருடுவது, போலீஸைச் சமாளிப்பது, ஜெயிலுக்குப் போகும் மகனை வீரத் திலகம் இட்டு அம்மா வழியனுப்புவது என்று காட்சிகளில் மண் வாசனையும் யதார்த்தமும் கோலோச்சுகின்றன. குறி சொல்பவராக வருபவரின் கேரக்டர் அட்டகாசம். திருடியவனை மறைத்துவைக்க மொத்தக் குடும்பமும் நாடகம் ஆடும்போது, தன் வீட்டுப் பெண் போலீஸில் மாட்டிக்கொள்ளக்கூடும் என்ற நிலை வந்ததும் திருடன் சட்டென்று வெளிப்பட்டு சரண்டர் ஆவது அழுத்தமான காட்சி. ஆடு திருட வந்த பெண்ணிடம் தன் மனதை இழந்து பேய் அடித்ததுபோல நடமாடும் கதாநாயகனின் உணர்ச்சிகளும் அவளைத் தேடிச் செல்லும் காட்சிகளும் இயல்பாக உள்ளன.

தன் கணவனைத் திருட்டுத் தொழிலால் பலிகொடுத்த அம்மா தன் மகனைத் திருடர் குடும்பத்தில் கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் காதலனைக் கைப்பிடிப்பதைவிட அவன் உயிரோடு இருப்பதுதான் எனக்கு முக்கியம் என்று காதலி சொல்வதைக் கேட்டு அம்மாவின் மனம் மாறும் இடம் நம்பகத்தன்மையுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸ் திருப்பமும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. முறைப்பெண் கேரக்டர் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் விதம் மனதைத் தொடுகிறது.

உழைப்பும் உக்கிரமுமாக வாழும் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யாதான் படத்தின் முக்கியப் பாத்திரம். தன் பாத்திரத்தின் தன்மையை ஆழமாக உள்வாங்கி அழுத்தமாக வெளிப்படுத்துகிறார். இரத்ததான முகாம் நடக்கும் இடத்தில் சென்று சத்தம் போடுவதாகட்டும், தன் மகனையே ‘சங்கை அறுத்துடுவேன்’ என்று மிரட்டுவதாகட்டும், ‘இங்கதானடி வாழ வந்த... உள்ள போடி’ என்று தன் கெத்து குறையாமல் மருமகளை ஏற்றுக்கொள்வதாகட்டும், சரண்யா அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

நகரத்துப் பெண்ணாக கிளாமர் காட்டிவந்த வசுந்தரா, அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். படிய வாரிய தலை, பாவாடை தாவணி, மருண்ட விழிகள், வெட்கத்துடன் வெளிப்படும் வசீகரப் புன்னகை, காதலையும் பயத்தையும் துல்லியமாக வெளிப்படுத்தும் முகபாவங்கள் என்று பட்டையைக் கிளப்புகிறார்.

கதாநாயகன் விஜயசேதுபதிக்கு வலுவான வேடம் இல்லை. தன்னைக் கேட்காமலேயே அம்மா கல்யாண விஷயத்தில் வாக்குக் கொடுக்கும்போதும் தன் காதலுக்கு அம்மா குறுக்க வரும்போதும் வாயைப் பொத்திக்கொண்டிருப்பது பொருத்தமாக இல்லை. பல காட்சிகளில் சோக நிழல் படிய வளைய வரும் வேடத்தில் திறமையை வெளிக்காட்ட அதிக வாய்ப்பில்லை என்றாலும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்.

தீப்பெட்டி கணேசனின் கதையோடு இணைந்த காமெடி ரசிக்கவைக்கிறது. வசுந்தராவின் அண்ணனாக வரும் அருள்தாஸ் கவனிக்க வைக்கிறார். முறைப்பெண்ணாக வருபவரின் பளிச்சிடும் புன்னகையும் அகன்ற விழிகளும் மறக்க முடியாதவை. சூப்பர் சுப்பராயனின் சண்டை இயக்கமும் படத்தின் யதார்தத்துக்குப் பக்கபலமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகள் சினிமாத்தனமாக இல்லாமல் கச்சாவாக இருப்பது பொருத்தமாக உள்ளது. என்.ஆர். ரஹ்நந்தன் இசையில் பாடல்கள் கதையின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. கள்ளிக்காட்டில், ஏடி கள்ளச்சி ஆகிய பாடல்கள் மனதில் தங்குகின்றன. செழியனின் ஒளிப்பதிவு கிராமத்துப் புழுதியையும் நிலக்காட்சிகளையும் அற்புதமாகப் படம்பிடித்திருக்கிறது.

பல விஷயங்களையும் கவனமாகச் செய்திருக்கும் சீனு ராமசாமி காதல் உருவாகும் காட்சிகளை அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். அதுபோலவே நாயகனின் கேரக்டரை நன்றாகச் செதுக்கியிருக்கலாம். முதல் பாதியில் படம் கொஞ்சம் வேகமாக நகர்ந்திருக்கலாம். இப்படிச் சில குறைகள் இருந்தாலும் பண்பாட்டுக் கூறுகளை இயல்பாகத் தன்னுள் கொண்டுள்ள கதையை அலுப்பூட்டாமல் சொன்ன சீனு ராமசாமி பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.

 இஞ்சியின் மருத்துவக் குணங்கள்.


இஞ்சி என்பதற்கு மதில் என்று அர்த்தம். நம் உடம்பையும் அனைத்து வகை பிணியில் இருந்து அரணாக கோட்டை மதில் போல் இருந்து காப்பதால் இதற்கு இஞ்சி என பெயர் வந்தது. இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதுவும் பல மருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது.
இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது. தலைவலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. மகளிரின் கருப்பைவலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது. தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.
இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.
இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும். இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம். எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

கூகிள் குரோம் Operating System பற்றி?

கணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்?
நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை
திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை
வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம்.
முடிந்தவுடன் இணைய உலாவியை மூடி விட்டு கணினியை சட்டவுன் செய்து
விடுகிறோம். நமது பெரும்பாலான நேரம் இணைய உலாவியில் தான் செலவாகிறது.
கணினியில் உள்ள மற்ற ப்ரோக்ராம்களை மென்பொருள்களை உபயோகிப்பது என்பது மிக
குறைவே.

இந்த விஷயத்தை தான் கூகிள் தனது குரோம் ஓஎஸ்
இயங்குதளத்திற்கு மூல மந்திரமாக எடுத்து உள்ளது. பெரும்பாலும் மற்ற
மென்பொருள்களை உபயோகிக்காத போது அவற்றை கணினியில் ஏன் அடைத்து வைக்க
வேண்டும்? வைரஸ் பாதுகாப்பு என்று ஏன் பயனரை சிக்கலுக்கு உள்ளாக்க
வேண்டும்?

கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை நீங்கள் உங்கள்
கணினியில் எதையுமே நிறுவ தேவை இல்லை. அனைத்துமே இணைய அப்ளிகேஷன்கள்தான்.
அவை மென்பொருள் நிறுவனங்களில் செர்வரில் பாதுகாப்பாக இருக்கும். கூகிள்
குரோம் ஓஎஸ் கணினியை திறந்தவுடன் அது இணையத்திற்கு சென்று விடும்.

உதாரணத்திற்கு
நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க, எடிட் செய்ய வேண்டும். சாதரணமாக நீங்கள்
மைக்ரோசாப்ட் வோர்ட் உபயோகித்து வந்து இருப்பீர்கள். கூகிள் குரோம் ஓஎஸ்சை
பொறுத்தவரை இணையத்தில் அதற்கான ஒரு அப்ளிகேஷன் வழங்கப்படும் அதனை நீங்கள்
உபயோகித்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கூகிள் டாக்ஸ். http://docs.google.com/ . மற்றும் விண்டோஸ்சில் .EXE கோப்பு போன்று இங்கு எதனையும் இயக்க முடியாது. அதற்கான தேவையும் இங்கு இல்லை.

இது
போன்று உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு (படங்கள் உருவாக்குதல், வீடியோ
உருவாக்குதல் உள்ளிட்ட) இணையத்தில் உள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்படும்.
எதையும் நீங்கள் கணினியில் நிறுவி வைத்து கொள்ள தேவை இல்லை. உபயோகித்த
பின்பு நீங்கள் உருவாக்கும் கோப்புகளை நீங்கள் இணையத்திலே சேமித்து
வைக்கலாம். அல்லது உங்கள் USB, மெமரி கார்டு போன்றவற்றில் சேமித்து
கொள்ளலாம். சுருங்க சொல்ல வேண்டும் எனில், உங்கள் கோப்புகளை கூகிள் ,
மென்பொருள் நிறுவனங்களே இணையத்தில் பாதுகாக்க போகிறது. நீங்கள் உலகின்
எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகி கொள்ளலாம்.


இதன் சாதகங்கள் என்ன என்று கூகிள் சொல்வதை பார்ப்போம்.

1. கூகிள் குரோம் ஓஎஸ்சின் தாரக மந்திரம் வேகம், எளிமை மற்றும் பாதுகாப்பு (Speed, Simplicity, and Security) .
வேகம்
: கூகிள் குரோம் ஓஎஸ் அதி வேகத்தில் திறக்கும் என்கிறார்கள். தற்போது ஏழு
வினாடிகளில் பூட் ஆகிறது.

எளிமை : கூகிள் குரோம் திறந்தவுடன் இணைய
உலாவிதான் எல்லாம். அதிலேயே அனைத்தும் இருக்கும். இணைய உலாவியை உபயோகிக்க
தெரிந்து அனைவரும் எளிமையாக கூகிள் குரோம் உபயோகிக்கலாம்.
.
பாதுகாப்பு
: அனைத்து அப்ளிகேஷன்களும் இணைய மென்பொருள்கள் என்பதால், எந்த
மென்பொருளும் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.
இதனால் வைரஸ், அட்வேர் போன்ற தாக்குதலுக்கு வாய்ப்பில்லை..


2. கூகிள் குரோம் ஓஎஸ், தோற்றத்தில் குரோம் இணைய உலாவியை போன்றே
இருக்கும். இடது புறத்தில் இணைய அப்ளிகேசன்களுக்கு என்று தனியே ஒரு
டேப்(Tab) இருக்கும். ஒவ்வொரு இணையதளத்தையும் நீங்கள் தனித்தனி டேப்களில்
திறந்து பார்ப்பது போன்று கூகிள் அப்ளிகேஷன்களை தனித்தனி டேப்களில் திறந்து
வேலை செய்து கொள்ளலாம்.



3. கேமராவில் / மொபைலில் வைத்துள்ள புகைப்படங்கள், கோப்புகள் போன்றவதை
அணுக நீங்கள் அவற்றை கணினியுடன் இணைத்து இணையத்தில் நேரடியாக ஏற்றி வேலைகளை
செய்து கொள்ள முடியும்.

கூகிள் குரோம் ஓஎஸ்சை எப்படி வாங்குவது, கணினியில் எப்படி நிறுவுவது?

கூகிள்
குரோம் ஓஎஸ்சை தனியே DVD யில் வாங்கி கணினியில் நிறுவுவது என்ற வேலை
இல்லை. நேரடியாக கூகிள் குரோம் ஓஎஸ் கணினிகலாகவே வாங்க வேண்டியதுதான்.
உதாரணத்திற்கு நாம் மொபைல் வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின்
இயங்குதளத்துடன் அனைத்தும் நிறுவியே வருமே அது போல. கூகிள் குரோம் கணினிகள்
என்று தனியே விற்பனைக்கு வரும். இதற்கான முயற்சிகளை இன்டெல், அசுஸ், HP
போன்ற நிறுவனங்களுடன் கூகிள் எடுத்து வருகிறது. விண்டோஸ் போல நீங்கள்
கூகிள் குரோம் ஓஎஸ்சை அனைத்து கணினிகளிலும் நிறுவி கொள்ள முடியாது.
கணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்?
நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை
திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை
வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம்.
முடிந்தவுடன் இணைய உலாவியை மூடி விட்டு கணினியை சட்டவுன் செய்து
விடுகிறோம். நமது பெரும்பாலான நேரம் இணைய உலாவியில் தான் செலவாகிறது.
கணினியில் உள்ள மற்ற ப்ரோக்ராம்களை மென்பொருள்களை உபயோகிப்பது என்பது மிக
குறைவே.

இந்த விஷயத்தை தான் கூகிள் தனது குரோம் ஓஎஸ்
இயங்குதளத்திற்கு மூல மந்திரமாக எடுத்து உள்ளது. பெரும்பாலும் மற்ற
மென்பொருள்களை உபயோகிக்காத போது அவற்றை கணினியில் ஏன் அடைத்து வைக்க
வேண்டும்? வைரஸ் பாதுகாப்பு என்று ஏன் பயனரை சிக்கலுக்கு உள்ளாக்க
வேண்டும்?

கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை நீங்கள் உங்கள்
கணினியில் எதையுமே நிறுவ தேவை இல்லை. அனைத்துமே இணைய அப்ளிகேஷன்கள்தான்.
அவை மென்பொருள் நிறுவனங்களில் செர்வரில் பாதுகாப்பாக இருக்கும். கூகிள்
குரோம் ஓஎஸ் கணினியை திறந்தவுடன் அது இணையத்திற்கு சென்று விடும்.

உதாரணத்திற்கு
நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க, எடிட் செய்ய வேண்டும். சாதரணமாக நீங்கள்
மைக்ரோசாப்ட் வோர்ட் உபயோகித்து வந்து இருப்பீர்கள். கூகிள் குரோம் ஓஎஸ்சை
பொறுத்தவரை இணையத்தில் அதற்கான ஒரு அப்ளிகேஷன் வழங்கப்படும் அதனை நீங்கள்
உபயோகித்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கூகிள் டாக்ஸ். http://docs.google.com/ . மற்றும் விண்டோஸ்சில் .EXE கோப்பு போன்று இங்கு எதனையும் இயக்க முடியாது. அதற்கான தேவையும் இங்கு இல்லை.

இது
போன்று உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு (படங்கள் உருவாக்குதல், வீடியோ
உருவாக்குதல் உள்ளிட்ட) இணையத்தில் உள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்படும்.
எதையும் நீங்கள் கணினியில் நிறுவி வைத்து கொள்ள தேவை இல்லை. உபயோகித்த
பின்பு நீங்கள் உருவாக்கும் கோப்புகளை நீங்கள் இணையத்திலே சேமித்து
வைக்கலாம். அல்லது உங்கள் USB, மெமரி கார்டு போன்றவற்றில் சேமித்து
கொள்ளலாம். சுருங்க சொல்ல வேண்டும் எனில், உங்கள் கோப்புகளை கூகிள் ,
மென்பொருள் நிறுவனங்களே இணையத்தில் பாதுகாக்க போகிறது. நீங்கள் உலகின்
எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகி கொள்ளலாம்.


இதன் சாதகங்கள் என்ன என்று கூகிள் சொல்வதை பார்ப்போம்.

1. கூகிள் குரோம் ஓஎஸ்சின் தாரக மந்திரம் வேகம், எளிமை மற்றும் பாதுகாப்பு (Speed, Simplicity, and Security) .
வேகம்
: கூகிள் குரோம் ஓஎஸ் அதி வேகத்தில் திறக்கும் என்கிறார்கள். தற்போது ஏழு
வினாடிகளில் பூட் ஆகிறது.

எளிமை : கூகிள் குரோம் திறந்தவுடன் இணைய
உலாவிதான் எல்லாம். அதிலேயே அனைத்தும் இருக்கும். இணைய உலாவியை உபயோகிக்க
தெரிந்து அனைவரும் எளிமையாக கூகிள் குரோம் உபயோகிக்கலாம்.
.
பாதுகாப்பு
: அனைத்து அப்ளிகேஷன்களும் இணைய மென்பொருள்கள் என்பதால், எந்த
மென்பொருளும் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.
இதனால் வைரஸ், அட்வேர் போன்ற தாக்குதலுக்கு வாய்ப்பில்லை..


2. கூகிள் குரோம் ஓஎஸ், தோற்றத்தில் குரோம் இணைய உலாவியை போன்றே
இருக்கும். இடது புறத்தில் இணைய அப்ளிகேசன்களுக்கு என்று தனியே ஒரு
டேப்(Tab) இருக்கும். ஒவ்வொரு இணையதளத்தையும் நீங்கள் தனித்தனி டேப்களில்
திறந்து பார்ப்பது போன்று கூகிள் அப்ளிகேஷன்களை தனித்தனி டேப்களில் திறந்து
வேலை செய்து கொள்ளலாம்.

3. கேமராவில் / மொபைலில் வைத்துள்ள புகைப்படங்கள், கோப்புகள் போன்றவதை
அணுக நீங்கள் அவற்றை கணினியுடன் இணைத்து இணையத்தில் நேரடியாக ஏற்றி வேலைகளை
செய்து கொள்ள முடியும்.

கூகிள் குரோம் ஓஎஸ்சை எப்படி வாங்குவது, கணினியில் எப்படி நிறுவுவது?

கூகிள்
குரோம் ஓஎஸ்சை தனியே DVD யில் வாங்கி கணினியில் நிறுவுவது என்ற வேலை
இல்லை. நேரடியாக கூகிள் குரோம் ஓஎஸ் கணினிகலாகவே வாங்க வேண்டியதுதான்.
உதாரணத்திற்கு நாம் மொபைல் வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின்
இயங்குதளத்துடன் அனைத்தும் நிறுவியே வருமே அது போல. கூகிள் குரோம் கணினிகள்
என்று தனியே விற்பனைக்கு வரும். இதற்கான முயற்சிகளை இன்டெல், அசுஸ், HP
போன்ற நிறுவனங்களுடன் கூகிள் எடுத்து வருகிறது. விண்டோஸ் போல நீங்கள்
கூகிள் குரோம் ஓஎஸ்சை அனைத்து கணினிகளிலும் நிறுவி கொள்ள முடியாது.