XP இல் Error செய்தி வராமல் இருப்பதற்கு


விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள் அனைவருமே ஏதாவது எர்ரர் செய்தியினை, நாள்தோறும் சந்தித்திருப் பார்கள். விண்டோஸ் இயக்கத்தில் எங்கு பிரச்னை உள்ளது என்று இந்த செய்திகள் நமக்குக் காட்டுகின்றன.

சற்று விபரம் புரிந்தவர்கள் அதனைப் படித்து புரிந்து அதற்கேற்ற வகையில் ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொள் கிறார்கள். பலர் இங்கே எர்ரர் இருக்கின்றது தெரிந்து என்ன செய்ய?

இது போல செய்திகள் வராமல் இருந்தாலே நல்லது என்று நினைக் கிறார்கள். அவர்களுக்கான தகவல் இது. இது போன்ற செய்திகள் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு களைப் பார்க்கலாம்.

1. ஸ்டார்ட் மெனுவில் My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.

2.அடுத்து மெனுவில் System Properties விண்டோ திறப்பதற்காக Properties பிரிவில் கிளிக் செய்திடவும்.

3. கிடைக்கும் விண்டோவில் Advanced டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இந்த அட்வான்ஸ்டு டேப்பில் கிடைக்கும் விண்டோவில் Error Reporting என ஒரு பட்டன் கிடைக்கும்.

5.இப்போது எர்ரர் ரிபோர்ட்டிங் விண்டோ கிடைக்கும். பின் இதில் Disable Error Reporting என்று இருப்பதனை செலக்ட் செய்திடவும். இதனைக் கிளிக் செய்தால் அனைத்து எர்ரர் செய்திகளும் காட்டப்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

ஒரு சில முக்கியமான பிரச்சினைகள் உள்ள எர்ரர் செய்திகள் காட்டப்படும். எதுவும் வேண்டாமப்பா! ஆளை விடுங்க!! என்று எண்ணுபவரா நீங்கள். அப்படி என்றால் But notify me when critical errors occur என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள்.

6. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி எர்ரர் செய்திகள் நீங்கள் செட் செய்தபடி மட்டுமே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் இருக்கும்.

12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள்.பிரபல ஜோதிடரின் விகடன் கட்டுரை

1.மேஷம்: தைரியசாலிகளே! உங்களின் தனாதிபதியான சுக்கிரன், லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 8.5.11 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால்... புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. 9.5.11 முதல் ஜென்ம குருவாக உங்கள் ராசிக்குள் வந்தமர்வதால் கவலை, உடல் உபாதை வரக்கூடும். 16.5.11 முதல், இந்த வருடம் முடியும் வரை ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். 20.12.2011 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால்... புது வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் அமையும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். ஆனால்... வைகாசி, தை மாதங்களில் லாபகரமாக அமையும். உத்யோகத்தில் ஆனி, மாசி மாதங்கள் நிம்மதி தரும்.

 இந்தப் புத்தாண்டு, உங்கள் பலம், பலவீனத்தை உணர வைப்பதுடன், ஓரளவு நன்மையையும் தரும். 


 பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியை வணங்குங்கள். 

 ------------------------------------------

 2.ரிஷபம்: கடின உழைப்பாளிகளே! இந்தப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதனான சுக்கிரன், 10-ம் வீட்டில் பலமாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குருபகவான் 8.5.11 வரை 11-ம் வீட்டில் நிற்பதால், பணம் வரும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

 ஆனால், 9.5.11-ம் தேதி முதல் 12-ம் வீட்டுக்குள் நுழைவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வருடம் பிறக்கும்போது ராகு 8-ம் வீட்டிலும், கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால், வருங்காலம் பற்றிய பயம், களைப்பு வந்து செல்லும். 16.5.11 முதல் கேது ராசிக்குள் நுழைவதால்... ஏமாற்றம், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். ராகு 7-ல் நுழைவதால்... கணவருடன் வாக்குவாதம் வரக்கூடும்.

 ஆனி, ஆவணி மாதங்களில் மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு வேலை அமையும். 21.12.11 முதல் சனி பகவான் 6-ம் வீட்டுக்குள் நுழைவதால், அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ஆனி, ஆடி மாதங்களில் வரவு உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும்.

 இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை துவள வைத்தாலும், இறுதியில் வெற்றியைத் தரும். 

 பரிகாரம்: அம்மன் ஆலயத்துக்கு சென்று குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். 

 ----------------------------

 3.மிதுனம்: நடுநிலையாளர்களே! உங்கள் ராசிநாதனான புதன், நீசபங்க ராஜயோகம் அடைந்திருக்கும் நேரத்தில் இந்த கர ஆண்டு பிறப்பதால், புதிய திட்டங்கள்  நிறைவேறும். புது வீடு, மனை வாங்குவீர்கள். 10-ல் நின்று கொண்டு பிரச்னைகளைத் தந்து கொண்டிருக்கும் குருபகவான், 9.5.11 முதல் 11-ம் வீட்டுக்குள் நுழைவதால்... எதிர்பாராத பணவரவு உண்டு.

 15.5.11 வரை ராசிக்குள் கேது நிற்பதால் கவலை, வீண் விரயம் வந்து செல்லும். வருடம் பிறக்கும்போது ராகு 7-ல் நிற்பதால், கணவருடன் சச்சரவு வந்து விலகும். 16.5.11 முதல் கேது ராசியை விட்டு விலகுவதால், உடல்நலக் கோளாறு நீங்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். 20.12.11 வரை 4-ல் சனி பகவான் நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். 21.12.11 முதல் 5-ல் சனி நுழைவதால், பிள்ளைகள் கோபப்படுவார்கள்.

 24.7.11 முதல் உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நீடிப்பதால்... வீண் டென்ஷன் ஏற்படலாம். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.

 இந்தப் புத்தாண்டு சில சறுக்கல்களை தந்தாலும், குருவின் அனுக்கிரகத்தால் வாழ்க்கைத் தரம் உயரும்.

 பரிகாரம்: அருகிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குரு பகவானையும் குலதெய்வத்தையும் வணங்குங்கள்.  

 --------------------------------
 4.கடகம்: கடமை தவறாதவர்களே! உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இந்த கர ஆண்டு பிறப்பதால், அனுபவ அறிவாலும், கனிவான பேச்சாலும் காரியம் சாதிப்பீர்கள். குரு 8.5.11 வரை 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும்.

 பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். ஆனால், 9.5.11 முதல் குரு 10-ம் வீட்டுக்குள் நுழைவதால்... வீண் விமர்சனம் வரக்கூடும். வருடம் பிறக்கும்போது கேதுபகவான் 12-ம் வீட்டில் நிற்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகும். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால், அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

 16.5.11 முதல் கேது லாப வீட்டுக்குள் வருவதால் பணம் வரும். 16.5.11 முதல் ராகு 5-ம் வீட்டுக்குள் வருவதால், பிள்ளைகள் சில சமயங்களில் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். 20.12.11 வரை சனி பகவான் 3-ம் வீட்டில் பலமாக இருப்பதால், முயற்சிகள் வெற்றியடையும்.   வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில்... அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.


 இந்தப் புத்தாண்டு... வெகுளியாக இருந்த உங்களை சில நேரங்களில் சந்தர்ப்பவாதியாக மாற்றும்.

 பரிகாரம்: பிரதோஷ தினத்தன்று வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்

 --------------------------

 5.சிம்மம்: சிந்தனைவாதிகளே! சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால், வருமானம் உயரும். அதேசமயம், உங்கள் யோகாதிபதிகளான செவ்வாயும், குருவும் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால்... வீண் விரயம், டென்ஷன் வந்து நீங்கும். கேது 11-ம் வீட்டில் நிற்பதால், பழைய பிரச்னைகள் தீரும்.

 15.5.11 வரை 5-ல் நிற்கும் ராகுவால் பிள்ளைகளுடன் மனவருத்தம் வரும். 9.5.11 முதல் குரு 9-ல் நுழைவதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். 16.5.11 முதல் 4-ல் ராகு நுழைவதால் கடினமாக உழைக்க வேண்டி வரும். சொத்து விஷயத்தில் அவசரம் வேண்டாம்.

 20.12.11 வரை ஏழரைச்சனி தொடர்வதால், உடல் உபாதை வந்து விலகும். 21.12.11 முதல் 3-ம் வீட்டுக்குள் சனி நுழைவதால், நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் வெளியாகிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுப்பீர்கள். உத்யோகத்தில், பதவி உயர்வு உண்டு.

 இந்தப் புத்தாண்டு மருத்துவச் செலவுகளை தந்தாலும், மகத்தான காரியங்களையும் செய்ய வைக்கும்.

 பரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

 --------------------------------

 6.கன்னி: கலகலப்பாக பேசுபவர்களே! உங்கள் ராசிநாதனும், குருபகவானும் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 9.5.11 முதல் குரு 8-ல் மறைவதால், மன இறுக்கம் வந்து நீங்கும். ஆனால், குரு உங்களின் 2-ம்  வீட்டை பார்ப்பதால், திடீர் பணவரவு உண்டு.

 வருடம் பிறக்கும்போது 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால், உறவினர்களுடன் உரசல் வரும். 15.5.11 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால், மருத்துவச் செலவுகள் வந்து போகும். கேது 10-ல் நிற்பதால், காரிய தாமதம் ஏற்படலாம். 16.5.11 முதல் ராகு 3-ல் நுழைவதால், புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.

 கேது 9-ம் வீட்டில் நுழைவதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். 20.12.11 வரை ஜென்மச் சனி தொடர்வதால் உடல் உபாதை வந்து நீங்கும். 21.12.11 முதல் சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால், அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில், லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் ஆனி, மாசி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும்.

 இந்தப் புத்தாண்டு, செலவுகளில் உங்களை சிக்க வைத்தாலும், அனுபவ அறிவால் சாதிக்க வைக்கும்.

 பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குங்கள்.
 --------------------------------------

 7.துலாம்: நியாயவாதிகளே! உங்கள் ராசிநாதனான சுக்கிரன் வலுவடைந்திருக்கும் போதும், 3-ம் வீட்டில் ராகு நிற்கும்போதும் இந்த கர வருடம் பிறப்பதால், நேர்மறை எண்ணங்கள் உதிக்கும். உங்கள் லாப ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 8.5.11 வரை குரு 6-ல் நிற்பதால் வீண் சந்தேகம், செலவுகள் வந்து போகும்.

 ஆனால், குரு பகவான் 9.5.11 முதல் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். 15.5.11 வரை ராகு 3-ல் நிற்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கேது 9-ல் நிற்பதால் தந்தைக்கு உடல் நலக் கோளாறு வந்து போகும். 16.5.11 முதல் ராகு 2-ல் நுழைவதால், கோ£பமான பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். கேது 8-ல் நுழைவதால், திடீர் பயணங்கள் ஏற்படலாம்.

 20.12.11 வரை 12-ல் விரயச்சனி தொடர்வதால், மறைமுக அவமானம் வந்து போகும். 21.12.11 முதல் ஜென்மச்சனியாக வருவதால், உணவில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பங்குனி மாதத்தில் சம்பள உயர்வும், பதவி உயர்வும் உண்டு.

 நாலா விதத்திலும் சிரமத்திலிருக்கும் உங்களுக்கு வசதியைத் தருவதாக இந்த ஆண்டு அமையும்.

 பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

 -------------------------------------

 8.விருச்சிகம்: விகடகவிகளே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான், குருவுடன் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்த கர ஆண்டு பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். சுக ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால், வீடு கட்டும் பணி முழுமையடையும். 8.5.11 வரை குரு 5-ம் வீட்டில் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் அமைதி நிலவும்.

 ஆனால், 9.5.11 முதல் குரு 6-ம் வீட்டில் நுழைவதால்... சலசலப்பு, பணத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். கேது 8-ல் நிற்பதால் வீண் அலைச்சல், ஏற்படக்கூடும். 16.5.11 முதல் ராகு ராசிக்குள் வருவதால், உடல் உபாதை வந்து போகும்.

 கேது 7-ல் நுழைவதால், கணவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 20.12.11 வரை லாப வீட்டில் சனிபகவான் தொடர்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு.  21.12.11 முதல் ஏழரைச்சனி தொடங்குவதால், மறைமுக எதிர்ப்பு வரக்கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு.

 இந்தப் புத்தாண்டு நீங்கள் சுய உழைப்பால் முன்னேற்றுவதற்கு வழி வகுக்கும்.

 பரிகாரம்: ஸ்ரீவிநாயகப் பெருமானை அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள்.
  --------------------------------
 9.தனுசு: கூடிவாழும் குணமுடையவர்களே! சனி பகவான் சாதகமான இருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். 3-ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் இந்த கர ஆண்டு பிறப்பதால், பணவரவு அதிகரிக்கும்.

 8.5.11 வரை குரு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வீண் கவலைகள் வரக்கூடும். 9.5.11 முதல் குரு 5-ம் வீட்டில் நுழைவதால்... புது நிலம், வீடு வாங்குவீர்கள். 15.5.11 வரை ராசிக்குள் ராகு நிற்பதால், உடல் நலக் கோளாறு வந்து போகும். கேது 7-ல் நிற்பதால், கணவருடன் ஈகோ பிரச்னை வந்து விலகும்.

 16.5.11 முதல் 12-ல் ராகு நுழைவதால் ஆரோக்கியம் கூடும். சொத்து, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. 20.12.11 வரை 10-ல் சனிபகவான் நிற்பதால், உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஐப்பசி மாத மத்தியப் பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

 இந்தப் புத்தாண்டு உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று, வெற்றியை தருவதாக அமையும்.

 பரிகாரம்: சஷ்டி திதி நடைபெறும் நாளில் ஸ்ரீ முருகப் பெருமான் ஆலயம் சென்று வணங்குங்கள்.

 ----------------------------

 10. மகரம்: மனவலிமை மிக்கவர்களே! யோகாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்கும்போது இந்த வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். 8.5.11 வரை குரு 3-ல் நிற்பதால், இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆனால் 9.5.11 முதல் குரு 4-ல் நுழைவதால் காரிய தாமதம் ஏற்படக்கூடும்.

 15.5.11 வரை ராசிக்கு 12-ல் ராகு நிற்பதால், கோபம், அலைச்சல் வரக்கூடும். 16.5.11 முதல் ராகு லாப வீடான 11-ம் வீட்டுக்கு வருவதால், கௌரவம் பலமடங்கு உயரும். கேது 5-ல் நுழைவதால், பிள்ளைகளால் செலவுகள் வரும். ஐப்பசி மாத மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 8-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்து சிக்கல்கள் ஏற்படக்கூடும். தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

 21.12.11 முதல் உங்கள் ராசிநாதன் சனிபகவான் உச்சமடைந்து 10-ம் வீட்டுக்குள் பலமாக நுழைவதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் கிட்டும்.

 இந்த கர ஆண்டு சுமைகளை அதிகம் சுமக்க வைத்தாலும், அவ்வப்போது தன்   மானத்துடன் தலைநிமிரச் செய்வதாக அமையும்.

 பரிகாரம்: ஷீரடி சத்ய சாய்பாபாவை வணங்குங்கள்.

 ---------------------------------------------------
 11. கும்பம்: சுயநலமில்லாதவர்களே! உங்கள் ராசிக்குள் யோகாதிபதி சுக்கிரன் நிற்கும்போதும், புதன் நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்குபோதும் இந்த ஆண்டு பிறப்பதால், பணவரவு திருப்தி தரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு க¬ளைகட்டும்.

 ஆனால், 9.5.11 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால்...  வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் ராசியைச் சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். 15.5.11 வரை லாப வீட்டில் ராகு நிற்பதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

 16.5.11 முதல் 10-ல் ராகு நுழைவதால், வேலைச் சுமை சோர்வு தரும். காரிய தாமதம் ஏற்படும். ஐப்பசி மாத மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 7-ம் வீட்டிலேயே தொடர்வதால், கணவருக்கு அலைச்சல் ஏற்படக்கூடும். சொத்துப் பிரச்னை வந்து போகும்.

 21.12.11 முதல் ராசிநாதன் சனிபகவான் 9-ல் நுழைவதால். எதிலும் வெற்றி கிட்டும்.  வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில், சித்திரை மாதத்தில் இடமாற்றம் உண்டு.

 இந்தப் புத்தாண்டின் முற்பகுதியில் தடுமாற்றங்களை தந்தாலும், இறுதி பகுதி சாதிக்க வைப்பதாகவும் அமையும்.
 \
 பரிகாரம்: ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை வணங்குங்கள்.

 -----------------------------------------

 12.மீனம்: சிந்தனைச் சிற்பிகளே! உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குருபகவான் 8.5.11 வரை ஜென்ம குருவாக இருப்பதால்... உடல் உபாதை, வீண் அலைச்சல் வந்து போகும். 9.5.11 முதல் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டில் குரு நுழைவதால், பணவரவு அதிகரிக்கும்.

 15.5.11 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால், மனக்குழப்பம் வரக்கூடும். 16.5.11 முதல் 9-ல் ராகு நுழைவதால், எதிர்பாராத பணவரவு உண்டு. 20.12.11 வரை 7-ல் சனி பகவான் நிற்பதால் கணவருடன் வாக்குவாதம் வந்து போகும்.

 21.12.11 முதல் 8-ல் நுழைந்து அஷ்டமத்துச் சனியாக வருவதால் விமர்சனங்கள் வரும். மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரை செவ்வாய் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில், முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.


 இந்தப் புத்தாண்டு ஓரு பக்கம் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தாலும், மறுபக்கம் மனநிறைவைத் தருவதாக அமையும்.

 பரிகாரம்: ஸ்ரீ நடராஜப் பெருமானை திங்கட்கிழமைகளில் சென்று வணங்குங்கள்

வெளியே வாருங்கள்

முதலில் நீங்கள் வெளியே வாருங்கள், வெளியிலிருந்து எதையாவது ஒன்றை செய்யலாம், வெளியில் வந்தால்தான் எதாவது ஒன்றை செய்ய முடியும். எதாவது ஒன்றை செய்தால்தான் ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்க முடியும். வெளி உலகம் நமக்கு பல சலுகைகளை வைத்திருக்கிறது, வெளியே வர மறுப்பவர்களுக்கு அந்த சலுகைகள் எதுவும் கிடைக்காது. அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டு விடும்.

வெளியே வந்து ஒரு செயலை
தொடங்குங்கள், வங்கியில் ஒரு கணக்கை தொடங்குங்கள் அப்போதுதான் அதில் பணம் எப்படி சேர்ப்பது என்ற சிந்தனை வரும். வாகனத்துக்கு ஒரு லைசன்ஸ் எடுங்கள், அப்போதுதான் இதுபோல இனி வேறு என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு தூண்டப்படும். ஒன்றை செய்ய முன்வரும் போதுதான் இன்னொன்றையும் செய்ய வேண்டிய வேகம் வரும். சித்தாளாக போக வேண்டும் என்று முன்வரும் போதுதான் கொத்தனாராக வேண்டும் என்ற வேகம் வரும்.

எனக்கு டிவி பெட்டியே போதும், பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்தால் நீங்களும் சராசரியாகவே வாழ்வீர்கள். ஒரு லேப்டாப் வாங்கிப் பார்ப்போமே அதில் என்னதான் உள்ளது என்று ஆர்வம் காட்டுவீர்களானால், உங்கள் திறமைக்கேற்ற அடுத்த கட்டத்திற்கு அதுவே கொண்டு சென்றுவிடும். கணிப்பொறி என்பது, உங்கள் அறிவை, திறமையை திறக்கும் திறவுகோலாகும் உங்கள் அத்தனை திறமைகளையும் கணிப்பொறியில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.

ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட்டுப் பாருங்கள், அதுவே பிச்சைப் போடுவதற்கான ஆவலைத் தூண்டி விடும். பிச்சை போடுவதில் கூட ஒரு ஆர்வம் வந்துவிடும். எனவே வெளியே வந்து, நமக்கு தேவையான நல்ல செயலை செய்தாலே போதும். அதுவே பல நன்மைகளை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நீங்கள் விதைப்பது ஒரு விதையாக இருந்தாலும், ஒரு தோட்டத்தையே உருவாக்கும் வல்லமை அந்த விதைக்கு உண்டு, அதுபோல் ஒரு செயலை ஆர்வமாய் விதையுங்கள் அதுபல வழிகளைக் காட்டித்தரும்.

கொஞ்ச நேரம் பாடல் கேட்போம், இனி கொஞ்ச நேரம் டிவி பார்ப்போம், கொஞ்ச நேரம் அரட்டை பேசுவோம், சரி இனி வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிடுவோம், இனி கொஞ்ச நேரம் உறங்குவோம், இப்படி ஒவ்வொரு ஆசைகளிலும் நம்மை அடைத்து வைத்துக் கொண்டே இருந்தால், வெளி உலகத்தின் அத்தனை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு விடும். அவர்கள் பன்றிகளைப்போல குட்டைகளை கிளறிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.

நாம் வெளியே வருவதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து, ரோட்டில் நடக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே பல இளைஞர்களின் நோக்கமாக இருக்கிறது. இதுவும் ஆசை என்னும் பெட்டிக்குள் நம்மை அடைத்து வை
முதலில் நீங்கள் வெளியே வாருங்கள், வெளியிலிருந்து எதையாவது ஒன்றை செய்யலாம், வெளியில் வந்தால்தான் எதாவது ஒன்றை செய்ய முடியும். எதாவது ஒன்றை செய்தால்தான் ஒன்றன்பின் ஒன்றாக, ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்க முடியும். வெளி உலகம் நமக்கு பல சலுகைகளை வைத்திருக்கிறது, வெளியே வர மறுப்பவர்களுக்கு அந்த சலுகைகள் எதுவும் கிடைக்காது. அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டு விடும்.

வெளியே வந்து ஒரு செயலை தொடங்குங்கள், வங்கியில் ஒரு கணக்கை
தொடங்குங்கள். அப்போதுதான் அதில் பணம் எப்படி சேர்ப்பது என்ற சிந்தனை வரும். வாகனத்துக்கு ஒரு லைசன்ஸ் எடுங்கள், அப்போதுதான் இதுபோல இனி வேறு என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு தூண்டப்படும். ஒன்றை செய்ய முன்வரும் போதுதான் இன்னொன்றையும் செய்ய வேண்டிய வேகம் வரும். சித்தாளாக போக வேண்டும் என்று முன்வரும் போதுதான் கொத்தனாராக வேண்டும் என்ற வேகம் வரும்.

எனக்கு டிவி பெட்டியே போதும், பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்தால் நீங்களும் சராசரியாகவே வாழ்வீர்கள். ஒரு லேப்டாப் வாங்கிப் பார்ப்போமே அதில் என்னதான் உள்ளது என்று ஆர்வம் காட்டுவீர்களானால், உங்கள் திறமைக்கேற்ற அடுத்த கட்டத்திற்கு அதுவே கொண்டு சென்றுவிடும். கணிப்பொறி என்பது, உங்கள் அறிவை, திறமையை திறக்கும் திறவுகோலாகும் உங்கள் அத்தனை திறமைகளையும் கணிப்பொறியில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.

ஒரு பிச்சைக்காரனுக்கு காசு போட்டுப் பாருங்கள், அதுவே பிச்சைப் போடுவதற்கான ஆவலைத் தூண்டி விடும். பிச்சை போடுவதில் கூட ஒரு ஆர்வம் வந்துவிடும். எனவே வெளியே வந்து, நமக்கு தேவையான நல்ல செயலை செய்தாலே போதும். அதுவே பல நன்மைகளை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நீங்கள் விதைப்பது ஒரு விதையாக இருந்தாலும், ஒரு தோட்டத்தையே உருவாக்கும் வல்லமை அந்த விதைக்கு உண்டு, அதுபோல் ஒரு செயலை ஆர்வமாய் விதையுங்கள் அதுபல வழிகளைக் காட்டித்தரும்.

கொஞ்ச நேரம் பாடல் கேட்போம், இனி கொஞ்ச நேரம் டிவி பார்ப்போம், கொஞ்ச நேரம் அரட்டை பேசுவோம், சரி இனி வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிடுவோம், இனி கொஞ்ச நேரம் உறங்குவோம், இப்படி ஒவ்வொரு ஆசைகளிலும் நம்மை அடைத்து வைத்துக் கொண்டே இருந்தால், வெளி உலகத்தின் அத்தனை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு விடும். அவர்கள் பன்றிகளைப்போல குட்டைகளை கிளறிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.

நாம் வெளியே வருவதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து, ரோட்டில் நடக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே பல இளைஞர்களின் நோக்கமாக இருக்கிறது. இதுவும் ஆசை என்னும் பெட்டிக்குள் நம்மை அடைத்து வைக்கும் முயற்சியாகும். அதுவே எதிர்காலத்தை யோசித்து, தகுதியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டால் அவளின் வார்த்தைகளே அடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும்.

நம் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய நடைபாதைகள் அனைத்தும், வெளியில்தான் உள்ளது. அந்த பாதைகளைப்பற்றி யோசியுங்கள், சரியாக யோசித்து திட்டமிட்டு வெளியே வாருங்கள். வெளி உலகத்தை கூர்ந்து கவனியுங்கள் அங்கே மறக்க வேண்டியவைகள் அனைத்தையும் மறந்து விடுங்கள், திறக்க வேண்டிய அனைத்தையும் திறந்து விடுங்கள். அப்போது கிடைக்க வேண்டியவைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைத்து விடும்.
க்கும் முயற்சியாகும். அதுவே எதிர்காலத்தை யோசித்து, தகுதியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்டால் அவளின் வார்த்தைகளே அடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும்.

நம் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய நடைபாதைகள் அனைத்தும், வெளியில்தான் உள்ளது. அந்த பாதைகளைப்பற்றி யோசியுங்கள், சரியாக யோசித்து திட்டமிட்டு வெளியே வாருங்கள். வெளி உலகத்தை கூர்ந்து கவனியுங்கள் அங்கே மறக்க வேண்டியவைகள் அனைத்தையும் மறந்து விடுங்கள், திறக்க வேண்டிய அனைத்தையும் திறந்து விடுங்கள். அப்போது கிடைக்க வேண்டியவைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைத்து விடும்.

திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? அடிக்கடி புலம்புகிறீர்களா?


திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர்களா? கவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு! 


அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது. கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ரொப்ளம் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது `இச்` மழை பொழிய வேண்டுமாம். 


அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்’ இருக்குமாம். இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!


எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். அந்த அளவுக்கு `ஓபனாக’ பதில் கூறிவிட்டனர் அந்த தம்பதியினர். அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன. 


கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். வீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் `போர்’ அடித்து விடுமாம்.


அதனால், வீட்டை விட்டு புறப்படும்போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம். கட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக `விசிட்’ அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் `கிக்` இருக்குமாம். 


ஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்-மனைவியர் ஒன்றாக பொழுதை போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம். மாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்-மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம். 


அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையை கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம். இப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்ற போக வேண்டுமாம். 


அப்போது ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.மேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம். பெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.


- இப்படி தகவல்களை கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள். இவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள். என்ன தம்பதியரே… நீங்களும் இப்படித் தானே வாழப்போறீங்க? அது சரி… கட்டிப்பிடி வைத்தியத்தை மட்டும் மறந்துவிட மாட்டீங்களே
 

மலட்டுத் தன்மையை எதிர்நோக்கும் ஆண்கள்

அரிது அரிது மானிடராதல் அரிது என்பார்கள். மனித பிறவி அத்துணை உயரிய-அரிய பிறவி அப்படிப்பட்ட ஒரு பிறப்பினை எய்தியவர்கள், இவ்வுலக வாழ்க்கையை முறைப்படி வாழும் போது தெய்வத்துக்குச் சமானமானவர்கள் ஆகிறார்கள்.

ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர், தங்கள் மனம்போல வாழ்ந்து, கண்டபடி திரிந்து, வரைமுறையற்றுப் போய் இருக்கிறார்கள்

 அண்மைக் காலமாக ஆண்மைக் குறைவு, ஆண் மலட்டுத் தன்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

 முற்காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை வரைமுறையான வாழ்வுச் சூழல் இரசாயனக் கலப்பற்ற இயற்கை உணவுகள், பெரியவர்களின் வழி நடத்துதல், ஒழுக்கமான வாழ்வு முறை, ஆண்கள் சமூகத்தில் நல்ல சரீர-மன வளத்துடன் வாழ உதவின. ஆண்மைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தலை தூக்கியது இல்லை

 ஆனால் இன்று இதற்கு நேர்மாறான நிலை இருக்கிறது

 நாம் சுவாசிக்கிற காற்றில்கூட கலப்படம், குடிக்கிற தண்ணீர் கூட சுத்தமானதாக, சுகாதாரமானதாக இல்லை மனிதன் எந்திரங்களோடு எந்திரமாகவே மாறிப் போய் வாழ்ந்து வருகிறான்.

 எதிலும் நாரிகம், அவசரம் என்ற பெயரில் பாஸ்ட் புட் அந்த ரசாயனக் கலவைகள் உடலில் பக்க விளைவுகளை சேர்த்துக் கொண்டு இருக்கின்றன. இந்த விளைவுகளால்தான் ஆண் விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் குறைந்து விடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆண் விந்துவில் உயிரணுக்கள் அறவே இல்லாதவர்களும் கூடி வருகிறார்கள். இன்னும் சிலருக்கு விந்துவில் செத்த அணுக்களே பிரதானமாக இருக்கின்றது.

 சுதந்திரத்துக்குப் பிறகு சுதந்திரம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தால் கெட்டுப் போன நிலைதான் இன்றைய ஆண்களின் ஆண்மைக் குறைவு, ஆண் உயிரணு அறவே இல்லாத நிலைமை, பாலியல் நோய்கள், எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகள்

 பெற்றோர்களும் இன்றைய பிள்ளைகளை எப்படி வழி நடத்துவது என்று தெரியாமல், திகைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சிலருக்கோ பிள்ளைகளை வழி நடத்த நேரமும் இல்லை.

 இளம் வயதிலே-குறிப்பாக டீன் ஏஜ் பருவத்திலே ஆண்களை ஒழுக்கமான வாழ்வுக்கு வழி நடத்தாததின் விளைவுதான் சுய இன்பம், பிஞ்சிலே பழுத்து பிற மாதர் உறவு, விலைமகள் தொடர்பு, ஹோமோ செக்ஸ் என்ற ஓரினப் புணர்ச்சி உள்ளிட்ட விபரீதங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

 இத்தகைய செயல்பாடுகள், பின்னாளில் மலட்டுத் தன்மைக்கு வழி நடத்துகின்றன. சிலருக்கோ உயிரையே பறிக்கிற எய்ட்ஸாக மாறுகின்றது. இன்னும் சிலருக்கோ திருமணம் முடிந்து, முறைப்படி அனுபவிக்க வேண்டிய தாம்பத்ய இன்பத்தை மனைவியுடன் அனுபவிக்க இயலாமல் அவதியுறுகிற அவலம்... சொல்லிக் கொண்டே போகலாம்.

 இளைய தலைமுறை பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல அவர்களும் சுதந்திரம் என்ற பெயரில், நினைத்த நேரத்தில், நினைத்தவருடன் சுற்றித்திரிந்து, திருமணத்துக்கு முன்பே தாம்பத்ய சுகத்தை பெற்று விடுகிற அவலமும் நடக்கிறது. இதனால் பிறப்புறுப்பிலே தொற்று, கருப்பையிலே தொற்று உள்ளிட்ட பல பிரச்சினைகளை தாங்களே வரவழைத்துக் கொள்கின்றனர்.

 இவர்களில் பெரும்பாலோர் திருமணமாகி முறைப்படியான தாம்பத்ய உறவு, குழந்தைப் பேறு போன்றவற்றுக்கு வழியற்று, கண்ணீரில் வாழ்க்கையை கரைத்துக் கொண்டிருப்பதை மருத்துவத்தில் பார்க்கிறோம்.

 இப்படிப்பட்ட ஆண்மைக்குறைவு, பெண் மலட்டுத் தன்மை, திருமணத்துக்கு முன்னதாகவே பாலுறவு போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க தகுந்த விழிப்புணர்வு இங்கே உருவாக்கப்பட வேண்டும்.

 ஆரோக்கியமான வாழ்வுக்கு, ஒழுக்கமும், இயற்கை உணவும், பெரியவர்களின் வழிநடத்துதலும், சித்த மருத்துவமும் இணைந்து கை கொடுக்கும் ஏற்கத்தான் இன்றைய தலைமுறை தயாராக வேண்டும்.

ஓடியோ கோப்புகளை பிரித்து பின்னர் ஒன்றிணைக்க..

பெரும்பாலானோர்கள் ஒரு பாடலை விரும்பி கேட்போம். ஆனால் பாடல் முழுவதையும் கேட்க மாட்டோம். ஒரு குறிப்பிட்ட ஒருசில வரிகளை மட்டுமே ரசித்து கேட்போம். அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து கேட்போம். 

கைத்தொலைபேசியில் ரிங்டோன் அமைக்க வேண்டுமெனில் அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து அமைத்துக் கொள்வோம். இவ்வாறு ஒரு பாடலில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரித்தெடுக்க வேண்டுமெனில், நாம் ஒரு ஓடியோ கட்டரின் உதவியை நாட வேண்டும். 

அந்த வகையில் உள்ள மென்பொருள் தான் Weeny Free Audio Cutter. இந்த மென்பொருள் மூலமாக எளிமையான முறையில் ஓடியோவினை பிரித்துக் கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் ஓடியோ கோப்புகளை பிரித்த பின் ஒன்றிணைக்கவும் முடியும். 

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் கணணியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் Cut Audio, Merge Audio என்ற தேர்வினை உங்கள் விருப்பபடி தெரிவு செய்து கொள்ளவும்.

பின் ஓடியோ கோப்பை உள்ளிட்டு வேண்டியபடி உருவாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். எந்த அளவுடைய ஓடியோ கோப்புகளையும் ஆதரிக்கும் தன்மை இந்த மென்பொருளுக்கு உண்டு.

நீங்கள் பிரச்னைகளை கண்டு துவண்டு போய் உள்ளவரா?

ஹாய் பிரண்ட்ஸ், பிரச்சனைகள் இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வு இருக்கும். எனவே, பிரச்னைகளைக் கண்டு பயந்துவிடாமல் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். 
அதற் கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக…

 * நமக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கு வேறு யாரும் காரணமில்லை. அதை நாம் தான் வரவழைத்துக் கொண்டோம். எனவே, இந்த பிரச்னையை தீர்க்க நம்மால் மட்டும் தான் முடியும் என்று நம்பிக்கையுடனும் மனவலிமையுடனும் அவற்றை எதிர்கொள்ளுங்கள்.

 * எந்த பிரச்னையையும் பெரிதுபடுத்திப் பார்க்கும் பூதக்கண்ணாடி மனநிலைமையை கைவிடுங்கள். எதையும் எளிமைப்படுத்திப் பார்க்கப் பழகுங்கள்.

 உங்களுக்கு நேர்ந்த பிரச்சனையை விட, இந்த உலகில் எவ்வளவோ பிரச்னைகள் எப்படியெல்லாமோ தீர்க்கப்படுகிறது; எனவே, அவற்றையெல்லாம் விட நமது பிரச்சனை ஒன்றுமே இல்லை என்று எண்ணுங்கள்; அப்போது தான் பிரச்சனைக்கு உரிய தீர்வை தெளிவாக யோசிக்க முடியும்.

 * எல்லா பிரச்னைக்கும் என்னால் தீர்வு காணமுடியும் என்று அசட்டு தைரியத்துடன் செயல்படாதீர்கள். அதேபோல், தேவையில்லாமல் பிறரது பிரச்னைகளையும்  உங்கள் சுமையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். தேவைப்படும் போது, அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை பெறுங்கள்.

 * ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, முடிந்தவரை அன்றைய பிரச்னையை அன்றே தீர்க்க முயலுங்கள். இல்லாவிடில், நேற்றைய பிரச்னை, நாளைய பிரச்னை என அனைத்தும் சேர்ந்து உங்களை வலுவிழக்கச் செய்யும்.

 * ஒரு நாளில் குறிப்பிட்ட பிரச்சனைக்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கித் திட்டமிட்டு நிறைவேற்றுங்கள். அதை அந்தந்த நேரத்தில் முடித்துவிட முயற்சியுங்கள்.

 * ஒரு நேரத்தில் ஒரு பிரச்னையை மட்டும் சமாளியுங்கள். எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு காண முடியாது என்பதில் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள்.

 * ஒவ்வொரு பிரச்னைக்கும், ஒவ் வொரு விதமான அணுகுமுறை மாற்றங்களைக் கண்டுபிடியுங்கள். அதற்கேற்ப தீர்வுகளைக் காணுங்கள். எதை எளிதாக முடிக்க முடியுமோ அதற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய்யுங்கள்.

 இந்த அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த ரெடியாயிட்டீங்களா? தைரியமாக, மனரீதியாக பிரச்னைகளை கையாள தயாராகிட்டீங்களா…

 இப்படி பிரச்சனைகளைக் கண்டு நீங்க பயப்படலேன்னா, இனிமேல் எந்த பிரச்சனையும் உங்கள் மீது பயணிக்காது. அவை உங்களைக் கண்டு ஓடிவிடும். முயன்று பாருங்கள்; வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!

அரிய தகவல்கள் - டொர்ரேண்ட் (Torrent)


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கு நல்ல உதாரணம் இந்த யுடோரண்ட் (utorrent). இது என்ன பதம் அதன் அர்த்தம் என்ன (torrent) என்றால் பாயும் நீரோட்டம் என்று அர்த்தம் இந்த மென்பொருளுக்கு பொருத்தமான பெயர்தான்.
டோரண்ட்(.torrent
extenction) வகையை சேர்ந்த கோப்பை bit torrent, u torrent mtorrent போன்ற
மென்பொருள் வழியாக மட்டுமே தரவிரக்கம் செய்ய முடியும்.
இந்த மென்பொருள் ஓரு மூடிய மூலம்(cloced source) வகையை சேர்ந்த இலவச மென்பொருள் ஆகும்.
டோரண்ட் கோப்பு
டவுண் லோட் செய்ய வேண்டிய கோப்புகள் எங்கு அப்லோடு செய்யபட்டுள்ளது என்ற விபரத்தை தாங்கி இருக்கும் ஒரு சிறிய அளவில் உள்ள கோப்பு.
டோரண்ட் பயன்பாடு
எந்தவகையான கோப்பையும் ஒரு இணைதள வழங்கி (server) மூலம் தரவிறக்கம் செய்யாமல் நமது கணினியை இணையதள வழங்கியாக பயன்படுத்தி தரவிரக்கம் செய்ய முடியும்.
டோரண்ட் பயனாளிகளின் வகைகள்
சீடர்ஸ்(seeders): என்பவர்கள் அவர்கள் டோரண்ட் கோப்பை டவுண்லோட் செய்வார்கள் கோப்புகளை அப்லோட் செய்து மற்றவர் டவண்லோட் செய்ய உதவுவார்கள்.
லிச்சர்ஸ் (Leechers): இவர்கள் டவுண்லோட் செய்வார்கள் ஆனால்அதற்க்கு பின் அந்த டோரண்ட் கோப்பையும் அப்லோட் செய்யமாட்டார்கள் தங்களின் டோரண்ட் கோப்பை நீக்கிவிடுவார்கள்.
பொது டோரண்ட் தளங்களில் நீங்கள் சில கோப்புளை அந்த தளத்தில் அப்லோட் செய்தால் மட்டுமே நீங்கள் டவுண்லோட் செய்ய முடியும்.
அதாவது (1:1) டவுண்லோட்,அப்லோட் செய்யவேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கப்படும்.
ஓரு டோரண்ட் கோப்பை உருவாக்குவது எப்படி?
முதலில் utorrent மென்பொருளை டவுண்லோட் செய்யவும். உங்களது கணினியில் மென்பொருளை நிறுவவும்.அந்த மென்பொருளை திறந்து create new torrent என்பதை கிளிக்கவும் அது உங்களது கணிணியில் உள்ள கோப்புகளை காட்டும் நீங்கள எந்த கோப்பை பகிர வேண்டுமோ அந்த ஒரு கோப்பு அல்லது டிரக்டரியா என்று தேர்வு செய்யவும்
அட்ரஸ் என்ற இடத்தில் கிழ் கண்ட உள்ள முகவரிகளில் ஒன்றை இடவும்
அதன் கீழ் start seeding என்பதை டிக் செய்யவும் நீங்கள் பிரைவேட் டோரண்ட் ஆக வேண்டும் என்றால் dhct என்பதை டிக் செய்யவும் பப்ளிக் என்றால் வேண்டாம்.பின்பு இந்த கோப்பை உங்களது கணினியில் சேமிக்கவும். அதன்பின்பு ஏதாவது ஒரு டோரண்ட் தளத்தில் இதை பகிரவும்.

டோரன்ட் தரவிறக்கல் என்றால் என்ன??
இணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை ‘டோரன்ட்’. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கோப்புகளை தரவிறக்கினால் அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர் திகைப்பதுண்டு.
டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது
எப்படி?
டோரன்ட் என்பது உங்களிடம் உள்ள கோப்புகளை உலகெங்கும் மற்றவர்களிடையே பகிர்ந்து கொள்ளும் வசதி. சாதாரணமாக தளங்களில் இருந்து கோப்புகளை தரவிறக்கும் போது அந்த கோப்புகளை ஏற்தாவது ஒரு இணைய வழங்கியில் (Web Server) சேமித்து வைத்து இருப்பார்கள். அங்கிருந்து நீங்கள் அவற்றை பெறுவீர்கள்.
ஆனால் டோரன்ட்களில் உலகெங்கும் நீங்கள் தரவிறக்கும் கோப்புகளை கொண்டுள்ள கணினிகள் இணைய இணைப்பில் இருக்கும் போது இணைக்கப்பட்டிருக்கும். நீங்கள் மற்றவர் கணினியில் இருந்து அந்த கோப்பினை தரவிறக்கி கொண்டிருப்பீர்கள். உங்கள் கணினியில் உள்ள அந்த கோப்பின் பகுதிகள் மற்றவர்கள் தரவிறக்க உங்கள் கணினியில் இருந்து அனுப்பப் பட்டு கொண்டிருக்கும்.
இந்த அருமையான தொழிநுட்பம் மூலம் அதிக செலவு பிடிக்கும் இணைய வழங்கியின் தேவை இன்றி பயனர்களே தங்கள் கணினிகளை கோப்பினை மற்றவருக்கு பகிரும் வழங்கி ஆகவும், தரவிறக்கும் பயனராகவும் பயன்படுத்தி கொள்ள முடிகிறது.
பிரபலமானUTorrent செயலி
பயன்படுத்தி டோரன்ட் மூலம் கோப்புகளை தரவிறக்குவது எப்படி?
டோரன்ட் மூலம் தரவிறக்க பல்வேறு செயலிகள் உதவினாலும் மிகச்
சிறப்பானதாக யுடோரன்ட் செயலி விளங்குகிறது. இதனை யுடோரன்ட் தளத்திற்கு சென்று தரவிறக்கி (http://www.utorrent.com/) உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். நிறுவிய பின் யுடோர்ரன்ட் டாஸ்க் பாரில் வலது மூலையில் வால்யூம் கண்ட்ரோலுக்கு அருகில் அமர்ந்து இருக்கும். இனி டோரன்ட் தளங்களில் நீங்கள் தரவிறக்கும் டோரன்ட் கோப்புகள் (.torrent) யுடோரன்ட் மூலம் திறக்கப்பட்டு தரவிறக்கம் ஆரம்பமாகும். உங்கள் கணியில் ஏற்கனவே தரவிறங்கி உள்ள கோப்புகள் மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு (Upload) கொண்டிருக்கும்.
முக்கியமாக உங்கள் தரவிறக்கம் முடிந்த பின்பும் உங்களிடம் தரவிரங்கிய கோப்புகள் மற்றவர்களுக்கு அனுப்பப் பட்டு கொண்டிருக்கும். உங்களிடம் Unlimitted Bandwidth இணைய இணைப்பு இருந்தால் பரவாயில்லை. Limitted Bandwidth இணைய இணைப்பு உள்ளவர்களாக இருந்தால் உங்களை அறியாமலேயே உங்கள்
இன்டர்நெட் பில் எகிறி விடலாம். எனவே தரவிறக்கம் முடிந்தவுடன் உங்கள் யூடோர்றேன்ட் செயலியை நிறுத்தி விடுவது அல்லது மூடி விடுவது நல்லது.
சிலசாப்ட்வேர்கள்-படங்கள் -யூடோரண்ட் மூலம் பதிவேற்றியிப்பார்கள். அதை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்தால் Download This Torrent என நமக்கு விண்டோ ஒன்று வரும். நம்மிடம் அதேபோல் யூடோரண்ட் இருந்தால்தான் நம்மால் சுலபமாக டவுண்லோடு செய்யமுடியும். அதை பதிவிறக்கி எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம். முதலில் இதை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக்செய்யவும்.(http://www.utorrent.com/downloads)
இதுவும் மிக குறைந்த அளவினை உடையது 215 கே.பி.தான்.
இதை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்யவும்.
இப்போது நீங்கள் பதிவிறக்க வேண்டிய யூடோரண்ட்டில் பதிவேற்றிய படத்தை பதிவிறக்கவும். இதில் நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்து (சி-டிரைவை தவிர வேறு டிரைவில் சேமித்தல் நல்லது)ஓ.கே.கொடுங்கள்.உங்களுக்கு படம் டவுண்லோடாக ஆரம்பிக்கும்.இப்போது உங்கள் டாக்ஸ்பாரில் இதனுடைய Symbol இருக்கும் .
இதில் உள்ள u சிம்போலை நீங்கள் கிளிக் செய்தால் இதில் உள்ள Hide/Show u Torrent கிளிக் செய்தால் யுடோரண்ட் விண்டோவினை காணலாம். அன்லிமிடட் தவிர மற்ற இணைய இணைப்பு உள்ளவர்கள் இலவச பயன்பாட்டு நேரம் தவிர மீதி நேரங்களில் இந்த டவுண்லோடினை நிறுத்திவைக்கலாம். இலவச நேரங்களில் இதை மீண்டும் டவுண்லோடு செய்யலாம். அதேப்போல் அவசரவேலையாக வெளியில் செல்கின்றோம். அப்போதும் இதில் உள்ள Pause all Torrents கிளிக் செய்துவிட்டுசெல்லலாம்.
அதேப்போல் நிறைய பைல்களையும் ஒரே நேரத்தில் இதன் மூலம் நாம் டவுண்லோட் செய்யலாம். இதில் உள்ள டவுண்லோட் முடிந்ததும் நமக்கு ஒர் எச்சரிக்கை செய்திவந்த பைலானது Completed Folder ku சென்றுவிடும்.
நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் சாதாரணநேரங்களில் அந்த பைலானது அப்லோட் ஆகி கொண்டிருக்கும். எனவே அதை நிறுத்திவையுங்கள் அல்லது அதிலிருந்து ரிமூவ் செய்துவிடுங்கள். இப்போது நாம் சேமித்து வைத்தஇடத்தில் டவுண்லோடு செய்த
பைலானது அமர்ந்திருக்கும்.
பயன்படுத்திபாருங்கள்……

அழகுக்குறிப்புக்கள் பெண்களுக்கு

முகம்
நம் உடம்பில் மற்ற எல்லா பாகங்களையும் விட நாம் முக்கியத்துவம் கொடுப்பது நம் முகத்திற்கு மட்டுமே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற பழமொழிகளும், வட்ட நிலா என்று கவிதைகளும் முகத்தினை பிரதானமாக்கிப் புனையப்படுகின்றன. முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடியென இருக்கும் முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம். முகம் என்றதும் பொதுவான ஒரு உறுப்பாக கருதாமல் கண், புருவம், மூக்கு, கன்னம், உதடு, தாடை, நெற்றி, காது என்று ஒவ்வொரு உறுப்பிற்கும் தனி கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் நம் முகத்தின் அழகு வெளிப்படுகிறது. இந்த வாரம் கண்ணைப் பற்றி பார்க்கலாம்.
கண்கள்
Eyes"கண்களின் வார்த்தைகள் புரியாதா" என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.
Eyesபேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.
கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள். அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால் மற்ற நேரங்களில் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.
கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். செயற்கை கண் இமைகளை ஒட்டும்போது அது தரமானதா, அதற்கு உபயோகப்படும் க்ளூ தரமானதா என்று பார்த்து வாங்குங்கள். இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.
கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.

கவரிங் நகைகள் வாங்கும் போது

நாம் எவ்வளவு தான் தங்க நகை வைத்திருந்தாலும் விதவிதமான கவரிங் நகைக்கு பல நூறுகள் செலவு செய்து வாங்கத்தான் செய்கிறோம்.
ஆடைக்கு ஏற்ற நிறங்களில் கற்கள் வைத்தும், எனாமல் எனப்படும் நிறச் சேர்ப்பு செய்தும் இவை வருவதால் பெண்களிடையே இதுபோன்ற நகைகளுக்கு அதிக மவுசு உண்டு.
அப்படி வாங்கிய கவரிங் நகை சில நாட்களில் கறுக்கத் தொடங்கிவிடும். இதனை வாங்கிய கடையில் கொடுக்கவும் முடியாது, நாம் அணிந்து கொள்ளவும் முடியாது. இப்படி வீணாகிப் போவதைத் தடுக்க ஒரு நல்ல திட்டம் உள்ளது.
புதிதாக கவரிங் நகை வாங்கியவுடன் அதன் மீது நெயில் கலர் நெயில் பாலிஷ் ஒரு கோட்டிங் கொடுக்கவும். அதாவது நிறமில்லாத நெயில்பாலிஷ் வாங்கி அதனை உங்கள் நகை மீது தடவி வைக்கவும்.
இப்படி செய்வதால் நகை தண்ணீரில் பட்டு வெளுத்துப் போவது தவிர்க்கப்படும். எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும். பொதுவாக தங்க நகைகளை விட கவரிங் நகைகளை பத்திரமாக பாதுகாத்தால் அதிக நாட்களுக்கு வைத்திருந்து அணிந்து கொள்ளலாம்.
கவரிங் நகைகளை தங்க நகையுடன் போடாவேக் கூடாது. இது தங்க நகையையும் சேர்த்து பாழாக்கிவிடும். கவரிங் நகையும் கெட்டுப் போகும்.
கவரிங் நகைகளை அணிந்து விட்டு எடுத்து வைக்கும் பொழுது அதனை நன்றாக மெல்லிய காட்டான் துணிவைத்து துடைத்து பாக்ஸில் வைக்கவும்.இப்படி செய்வதால் கவரிங் நகையில் ஊறி இருக்கும் உங்கள் வியர்வை அகற்றப்படும். நகை கறுக்காமல் இருக்கும்.

சளி, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுகடி, ஆஸ்த்மா, எக்ஸிமா போன்ற பலவும் இத்தகைய ஏடொபிக் மனிதர்களுக்கே வருகிறது.


தடிமன், சளி, தொடர்ச்சியான இருமல் என பலர் இந்த மார்கழி, தை மாதத்தில் மருந்திற்கு வந்திருந்தனர். பனிக்குளிர் நேரத்தில் இது வழமையானதுதான்.
ஒவ்வாமை நோய்கள்
ஆஸ்த்மா மாத்திரமின்றி அதனுடன் தொடர்புடைய பிரச்சனையான அலர்ஜி (Allergy) எனப்படும் ஒவ்வாமையும் உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 
நூற்றுக்கு 50 பேர் ஒவ்வாமை ஏற்படுவதற்கு பதமாக இருக்கிறார்கள் எனச் சில ஆய்வுகள் கூகின்றன. இவை காரணமாக பலரும் ஏடொபிக் (Atopic) நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
சளி, தும்மல், மூக்கால் ஓடுதல், கண் கடி, காதுகடி, ஆஸ்த்மா, எக்ஸிமா போன்ற பலவும் இத்தகைய ஏடொபிக் மனிதர்களுக்கே வருகிறது.
அதாவது அவர்கள் அத்தகைய நோய்கள் வருவதற்கு பதமாக இருக்கிறார்கள். இதைத்தான் எமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் ‘கிரந்தி உடம்பு’ என்று குறிப்பிடுகிறார்கள் என எண்ணுகிறேன்.
சுகாதாரமான சூழல் கோட்பாடு
அது சரி, இத்தகைய நோய்கள் இப்பொழுது அதிகரிப்பதற்குக் காரணம் என்ன?
கிருமிகள் அற்ற  சுகாதாரமான சூழல்தான் (hygiene Hypothesis) காரணம் என்ற கோட்பாட்டை பல மருத்துவ ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள்.
முன்னைய காலங்கள் போல இப்பொழுது மனித இனம் தொற்று நோய்களுக்கு ஆளாவதில்லை.
மண்ணிலும் புழுதியிலும், அழுக்கிலும் இன்றைய குழந்தைகள் உழல்வதில்லை.
அவர்களது உணவு, சுற்றாடல் யாவும் சுத்தமாக சுகாதாரமாக இருப்பதால் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன.
இது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா?
இல்லை!
கிருமித் தொற்று ஏற்படும்போது எமது உடல் அதற்கு எதிராகப் போராடுகிறது. அதனால் உடலின் நோயெதிர்புச் சக்தி வளர்கிறது.
ஆனால் தொற்றுநோய்கள் குறைந்த தற்காலச் சூழலில் குறைந்தளவு நோயெதிர்புச் சக்தியே (Reduced Immune Stimulation) அவர்களில் ஏற்படுகிறது.
நோயெதிர்புச் சக்தி குறைந்ததாலேயே ஏடொபிக் (Atopic)  நோய்கள் அதிகமாகிவிட்டது என்கிறார்கள்.
ஆனால் மேற்கூறிய கோட்பாட்டை மட்டுமே அதிகரிக்கும் ஆஸ்த்மாவிற்குக் காரணமாகக் கூறமுடியாது. வேறு விடயங்களும் இருக்க வேண்டும்.
வைரஸ் தொற்று நோய் (Human Immunovirus Infections)
தற்காலத்தில் உலகெங்கும் அதிகமாகத் தொற்றும் கிருமியாக ஹியுமன் ரைனோ வைரசைக் (Human Immunovirus Infections) கூறுகிறார்கள்.
இதுவே தடிமனுக்குக் காரணமான வைரஸ் ஆகும். இதனை அழிக்கும் வைரஸ் கொல்லி மருந்துகள் கிடையாது.
தணிந்திருக்கும் ஆஸ்த்மா நோய் திடீரெனத் தீவிரமடைவதற்கு வைரஸ் தொற்று நோய்கள் காரணம் என்பது தெரிந்த விடயமே.
அத்துடன் சிறுவயதில் ரைனோ வைரஸ் தொற்றினால் மூச்சிழுப்பதில் சிரமம் ஏற்படும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பும் அதிகம் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.
இந்த ரைனோ வைரஸ் தொற்றானது சாதாரணமானவர்களிலும் ஏடொபிக் மனிதர்களிலும் வெவ்வேறு விதங்களில் செயற்படுகிறது.
ஏடொபிக் மனிதர்களில் ரைனோ வைரஸ் தொற்றினால் சுவாசத் தொகுதியின் கலங்கள் அழற்சியடைந்து, சேதமாவதுடன் சுவாசக் குழாய்களும் இறுக்கமடைகின்றன.
இதனால் அவர்களுக்கு வரும் ஆஸ்த்மா சற்று தீவிரமாக இருப்பதுடன் சிகிச்சைகள் பலனளிப்பதும் தாமதமாகிறது.
மார்கழி, தை ஆகியன குளிர் அதிகமான மாதங்கள். அத்துடன் சுற்றுச் சுழல் பாதிப்படைந்து பூமி வெப்பம் அடைவதால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகுவதால் இவ்வருடம் வழமையை விடக் குளிர் அதிகம் என்கிறார்கள்.
ஹியுமன் ரைனோ வைரசையால் தடிமன் தொற்றும் அதிகமாயிருந்தது. இதுதான் இவ்வருடம் சளிசம்பந்தமான நோய்கள் அதிகரித்ததற்கும் பலருக்கும் ஆஸ்த்மா இழுப்பு வந்ததற்கும் காரணமாக இருக்கலாம். அதைத் தடுக்க இன்ஹேலர்களை உபயோகிக்கவும் நேர்ந்திருக்கலாம்.
இத்தகவல்கள் நோயாளிகளான உங்களை நீங்களே பாதுகாக்க எந்தவிதத்தில் உதவும் என்று புரியவில்லை.
ஆயினும் எதிர்கால மருத்துவ ஆய்வுகள் அத்தகைய வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்தவும், அதை மீறித் தொற்றினால் அதைக் குணப்படுத்தவும் புதிய சிகிச்சைகளைக் கொண்டு ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்கவும் ஆவன செய்யும் என நம்பலாம்

ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை

இணையத்தில் அரட்டையில் தெளிவான வொய்ஸ் ஐ பெறுவதற்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும் மிகவும் பிரபலமான ஸ்கைப் எனும் மென்பொருளை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். மேம்படுத்தப்பட்ட ஸ்கைப் மென்பொருளின் வடிவம் அதில் இருக்கின்ற ஏராளாமான வசதிகள் பலருக்கு எரிச்சலைத்தரும். அத்துடன் ஸ்கைப்பை கையாள்வதற்கும் இலகுவாக இருப்பதில்லை. என்றாலும் நிறுவப்படும்போது டிவோல்ட்டாக இருக்கும் ஒப்ஸன்கள் சிலவற்றை மாற்றி அமைப்பதன் மூலம் ஸ்கைப் மென்பொருளை பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் தேவையல்லாத ஆப்ஸன்கள் அற்றதாகவும் மாற்றமுடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
அவற்றில் சில இங்கே
1. View வில் எப்போதும் Contacts என்பதை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
2. Tools – options  சென்று general settings இல் Start Skype when I start Windows  என்பதை Uncheck  செய்யுங்கள்
3. Tools – options  சென்று general settings இல் visual style of the window  இல் Classic  Windows என்பதை தேர்வு செய்யுங்கள்
4. Tools – options  சென்று Sounds  இல் Mute all Sounds என்பதை கிளிக் செய்யுங்கள் இதன் மூலம் ஸ்கைப்பினால் எழுப்பப்படும் சத்தங்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.
5. Tools – options  சென்று Alerts & messages இல் இருக்கும் இரண்டையும் தேர்வில் இருந்து நீக்கிவிடுங்கள் (uncheck)
6. Tools – options  சென்று Advanced settings இல் keep skype in the taskbar while I m signed in என்பதை unchek செய்து விடலாம்.
இந்த 6 ஒப்ஸன்களில் மாற்றம் செய்வதன் மூலம் இடையூறில்லாத ஸ்கைப் அனுபவத்தை நிச்சயம் பெற முடியும்.
இதைவிடவும் வேறு வழிகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அவற்றை இங்கே தெரிவிக்கலாம்

எல்லோரும் உங்களை விரும்ப வேண்டுமா?

நீங்கள் யாரை அதிகமாக விரும்புவீர்கள்! அழகாக இருப்பவர்களையா? இனிமையாக பேசுகிறவர்களையா? சிரித்த முகம் உள்ளவர்களையா? வெகுளியாக இருப்பவர்களையா? இப்படி கவரக்கூடிய எதாவது ஒரு குணம் இருப்பவர்களைதான் நீங்கள் விரும்புவீர்களா? உங்களிடம் கேட்டால் 'ஆம்' என்றுதான் சொல்வீர்கள், ஆனால் சில வேளைகளில் இந்த குணங்கள் எதுவுமே இல்லாதவர்களையும் நீங்கள் விரும்பியிருப்பீர்கள், அவர்களிடமும் மணிக்கணக்கில் பேசியிருப்பீர்கள், நீங்கள் எதிர்பார்க்கும் குணம் இல்லாத போதும் அவர் உங்களை விரும்ப வைத்திருக்கிறார் அது எப்படி?
சிலர் இயற்கையிலேயே அழகில்லாதவர்களாக இருக்கலாம், அது நீங்களாகவும் இருக்கலாம். சிலருக்கு இனிமையாக பேசுகின்ற வரம் கிடைக்காமலிருக்கலாம், அதுவும் நீங்களாகவும் இருக்கலாம், பரவாயில்லை, அழகு என்பது நம்மில் பிரதிபலிக்க வேண்டிய ஒன்று, அது உடம்பிலிருந்து தான் பிரதிபலிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, நம் செயல்களில் பிரதிபலிக்கலாம், எண்ணங்களில் பிதிபலிக்கலாம், குணநலன்களில் பிரதிபலிக்கலாம்.
உங்கள் உதடுகள் சில்லறைகளைப் போல சிணுங்கிக் கொண்டிருக்க மறுக்கலாம், பரவாயில்லை, பேசுவது இரண்டு வார்த்தைகளாக இருந்தாலும் சில்லறையாக சிந்தாமல் நோட்டுக்களாக அவிழ்த்து விட்டால், உங்கள் பேச்சுக்களே விரும்பப்படும். சிலரைப்போல சிரித்த மாதிரியான முகம் உங்களுக்கு இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம். பரவாயில்லை, சிரிப்பை தேவைக்கு சிந்தினாலே போதும் நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள்.
இப்படிதான் சிலருக்கு முக்கிய தகுதிகள் தோற்றத்திலோ, உதடுகளிலோ, நடை உடை பாவனைகளிலோ, இருப்பதில்லை. அவை மறைந்திருந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களை உங்களுக்கும் விரும்பத் தோன்றும். நண்பனாக்கிக் கொள்ளத் தோன்றும். நீங்களும் உங்களுக்கு பிடித்தமான ஒரு விசயத்தில் உங்களை வெளிப்படுத்திக் கொண்டிருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஒரு அழகை வெளியே பிரதிபலித்துக் காட்டுங்கள், எல்லாராலும் விரும்பப் படுவீர்கள்.
பிறருக்கு பிடித்தமானவராக இருக்க தினம் தினம், புதுப்புதுத் துணிமணிகளை உடுத்த வேண்டிய தேவையில்லை, அணிந்திருக்கும் உடை உங்களுக்கு பிடித்தமானதாகவும், சுத்தமானதாகவும் இருந்தாலே போதும். நாளுக்கு நாள் உங்களை கலர்கலராக மாற்றிக்கொண்டிருந்தால் பார்ப்பவர்களின் மனம் ஆரம்பத்தில் விரும்பினாலும் போகப்போக ஏளனமாக பார்க்க ஆரம்பிக்கும். 
மற்றவர்கள் உங்களை விரும்ப வேண்டுமென்பது, உங்கள் தோற்றத்தை விரும்ப வேண்டும் என்ற முடிவிற்கு வந்து விடாதீர்கள். நீங்கள் ஒரு படைப்பாளியாக இருந்தால், உங்களை விடவும் உங்கள் படைப்பு விரும்பப் படுவதையே விரும்புவீர்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தீர்களானால், உங்களை விடவும் உங்கள் நிறுவனம் விரும்பப் பட வேண்டுமென்றே எதிர்பார்ப்பீர்கள். உங்கள் உள்ளிருக்கும் அழகின் வெளிப்பாடுதான் நீங்கள் ஆரம்பிக்கும் நிறுவனமாகவும், தொழிலாகவும், படைப்பாகவும் வெளிப்படும் போது, அவை விரும்பத்தக்கதாக இருந்தால் நீங்களும் விரும்பத் தக்கவர்களாகவே இருப்பீர்கள்.
சில கல்லூரிகளின் கடைசி நாட்களில், மாணவிகளிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த மாணவன் யார் என்ற பட்டியல் கேட்கப்படும். அப்போது அந்த மாணவிகள் மிகவும் அழகான ஒரு மாணவனையோ அல்லது இடைவிடாமல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மாணவனையோ, யாரையாவது கிண்டலடித்து சிரிப்பை வரவழைக்கின்ற மாணவனையோ மிகவும் பிடிக்கும் என்று சொல்லமாட்டார்கள். அவர்களின் பட்டியலில் ஆத்மார்த்தமான வேறு ஒரு முடிவே வரும். அமைதியாக இருந்தாலும், அழகில்லாமல் இருந்தாலும், தன்னுள் இருக்கும் அழகான குணத்தை செயல்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் மாணவனையே மிகவும் பிடிக்கும் என்ற பட்டியலை தயார் செய்வார்கள்.
ஏனைன்றால் அவன் அமைதியாக இருந்தாலும், பொறுப்புகளை முன் கூட்டியே யோசித்து, செயற்பட்டுக் கொண்டிருப்பவனாக இருப்பான். கல்லூரி பாடங்களில் மட்டுமல்ல, கல்லூரி விழாவிலிருந்து சுற்றுலா வரையிலும் எவற்றையெல்லாம் மற்றவர்கள் எவற்றைச் செய்யாமல் இருக்கிறார்களோ, அவைகளை முன்னதாகவே யோசித்து தன் அழகை வித்தியாசமாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பான். இப்படி தன் விருப்பங்களில், திறமைகளில் இருக்கின்ற அழகினை செயல் வடிவமாக செதுக்கிக் கொண்டிருப்பவர்களையே மற்றவர்கள் விரும்ப ஆரம்பிப்பார்கள்.
தோற்ற அழகு மட்டுமே உள்ளவர்களை மற்றவர்கள் கண்களால் படம் பிடித்து, இதயத்தில் எளிதாக சேமித்து வைப்பார்கள். அழகாக இருப்பவர்கள் மற்றவர்கள் இதயத்தில் எளிதாக இடம்பிடித்து விடுவார்கள். ஆனால் அவர்களின் அழகு அட்டைப்படத்தைப் போல வெளியில்தான் அழகாக இருக்கும், உள்ளே புரட்டிப் பார்க்கும் போது ஒன்றுமிருக்காது. அதுவே அழகற்ற அட்டைப் படமாக இருந்தாலும் புரட்ட புரட்ட இனிக்கும் புத்தகங்களைப் போல இருப்பவர்களே, மற்றவர்களின் இதயத்தில் அழிக்க முடியாத தனி இடத்தைப் பிடித்தவர்களாக இருப்பார்கள்.