புகழ் பெற்ற IT நிறுவனங்களின் பெயர்களின் இரகசியம்!!

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி
வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும்
நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள்
எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ
இப்போது பார்ப்போமா!


1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு
நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார்.
இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

2. ஆப்பிள் (APPLE): ஆப்பிள்
நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an
Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால்
இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே
இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக,
ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள்
கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன்
சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து
வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான
பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள்
கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும்
வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த
மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே
பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த
வரலாறு.

3. கூகுள் (GOOGLE): சர்ச் இஞ்சின்
கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1
போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற
எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர்
லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த
சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற
பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட
வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும்
லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத்
தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம்
கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த
செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப்
பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான
ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப்
போக்கினையே மாற்றிவிட்டனர்.

4.ஹாட் மெயில் (HOTMAIL): இந்த
நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும்
வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும்
இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு
வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப்
பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட்
மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல
பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL)
என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற
பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப்
பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text
Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே
இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல்
இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும்
குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது.
பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

5. இன்டெல் (INTEL): இந்த
நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and
Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore
Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில்
இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது.
அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச்
சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே
என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர்
தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM
Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated
Electronics என்ற பெயரைச் சுருக்கி INTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே
அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

6. மைக்ரோசாப்ட் (MICROSOFT): பில்
கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச்
சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும்
இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால்
ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில்
MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும்
சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு
செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு
MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின்
வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.

7. யாஹூ (YAHOO): தொடக் கத்தில்
இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web"
என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட்
என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another
Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO
என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம்
மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய
ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட
இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு
இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.

 பெண்களை எளிதாக கவரும் ஆண்களின் குணங்கள்!

ஒரு பெண்ணை அடைவது என்பது மிகவும் சுலபமான விடயம் அல்ல என்று கூறுபவர்களும் உண்டு. அதே சமயத்தில், ஒரு பெண்ணை நான் விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன் என்று முரண்பாடாக கூறுபவர்களும் உண்டு.
தான் விரும்பிய பெண்களை அடையும் ஆண்களுக்கு என்று சில விஷேசக் குணங்கள்இருப்பதாக காம சூத்திரம் தொகுத்துக் கூறுகிறது.
அதாவாது,
பெண்களிடம் மிக இயல்பாக நடந்து கொள்பவன்.
பெண்களை சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்பவன்.
விருந்து, விஷேசங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்பவன்.
அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்.
உல்லாசமாக இருப்பதில் அதிக அக்கறை காட்டுகிறவன்.
அதிக துணிச்சல் உடையவன்.
இளம் பருவத்தில் தோழனாக உள்ளவன்.
அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்.
காம சாஸ்திரம் நன்கு கற்றவன்.
தாராள மனப்பான்மை உடையவன்.
அடிக்கடி பெண்கள் பார்வையில்தெரியும்படி இருப்பவன், நடந்து கொள்பவன்.
ஏராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்.
ரகசியத்தை அறிந்தவன்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள், பெண்களின் மனதில் வெகுவாக இடம் பிடிக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மையாகும்.

மருதா‌ணி‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம்

சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.
மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம்.
‌சில பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக, மருதா‌ணி இலையை அரை‌த்து நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து இருவேளை ‌வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம் ‌கிடை‌‌க்கு‌ம்.
ஆனா‌ல், இ‌தனை உ‌ண்ணு‌ம் போது உண‌வி‌ல் பு‌ளியை ‌சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

உ‌ள்ள‌ங்கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது வச‌ம்பு, ம‌ஞ்ச‌ள் க‌ற்பூர‌ம் சே‌ர்‌த்து அரை‌‌த்து, ஆ‌ணி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து க‌ட்டி வர ஒரு வார‌த்‌தி‌ல் குணமாகு‌ம்.
இதே‌ப்போல கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் அ‌ந்த இட‌த்‌தி‌ல் நசு‌க்‌கிய பூ‌ண்டை வை‌த்து‌க் க‌ட்டி வ‌ந்தாலு‌ம் குண‌ம் ‌கிடை‌க்கு‌ம்.

காவலன்

நான்கைந்து படங்கள் தோல்வியடைந்தால்தான் தாங்கள் செய்கின்ற தவறுகள் என்னென்ன என்பதை அந்தந்த ஹீரோக்கள் நினைத்துப் பார்ப்பார்கள் போலிருக்கிறது..

விஜய்யின் கேரியரில் தொடர்ச்சியான 5 படங்களின் தோல்விகளுக்குப் பிறகு வந்துள்ள ஒரு வெற்றிப் படம் இது. வசூலிலும், பெயரிலும் நிச்சயம் இது ஜெயமான படம்தான். இதில் சந்தேகமில்லை. விஜய்க்கு இன்னுமொரு காதலுக்கு மரியாதை..!



உண்மையாகவே ஒரு நிஜமான, அழகான காதல் கதை.. இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதற்கு விஜய்யை நிச்சயமாக பாராட்ட வேண்டும். விட்ட இடத்தை அதே பாணியில் மீண்டு வந்து கைப்பற்றியிருக்கிறார்.

இதன் ஒரிஜினலான பாடிகார்டு மலையாளப் படத்தில் திலீப், நயன்தாரா ஜோடி.. இதில் நயன்தாரா கல்லூரிக்குள் ஆடும் ஒரு நடனக் காட்சி மலையாள சேனல்களில் போன வருடம் முழுவதும் ஒளிபரப்பான பெருமை பெற்றது.. அசத்தல் மூவ்மெண்ட்ஸ் நயன்ஸ்.. முதல் முறையாக அந்தப் பாடல் காட்சியைப் பார்த்த பின்புதான் படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டு காத்திருந்து பார்த்து வைத்தேன்.

உணர்ச்சிகளின் குவியல்களை படத்தின் பிற்பாதியில் கொண்டிருந்த இப்படம் மலையாள மண்ணுக்கே உரித்தான வகையில் இருந்தது. தமிழ்ப்படுத்தும்போது செய்யும் சிற்சில நகாசு வேலைகளுடன் சொற்ப லாஜிக் மீறல்களுடன் வெளிவந்திருக்கிறது.

வெட்டியாக ஊரைச் சுற்றி அடிதடியில் இறங்கியிருக்கும் விஜய்யை  நல்வழிப்படுத்த தனது நண்பரான தேவகோட்டை மிராசுதார் ராஜ்கிரணிடம் அனுப்பி வைக்கிறார் விஜய்யின் தந்தை. ராஜ்கிரண் விஜய்யை முதலில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஒரு குண்டு வெடிப்பில் இருந்து தன்னைக் காப்பாற்றிய பின்புதான் விஜய் மீது பாசம் கொண்டு அவரை வீட்டுக்குள் விடுகிறார்.


ராஜ்கிரணின் மகளான அசின் சென்னையில் தங்கி கல்லூரியில் படிக்கப் போக.. மகளுக்குத் துணையாக விஜய்யையும், அவரது தொண்டர் வடிவேலுவையும் அனுப்பி வைக்கிறார். வந்த இடத்தில் விஜய்யின் பின் தொடர்தலும், அவரது அப்பாவித்தனமும் அசினுக்கு வெறுப்பேற்ற விஜய்யை அல்லல்பட வைக்க வேண்டி அசின் செய்யும் ஒரு சின்ன வேலை.. படிப்படியாக நிறுத்த முடியாத அளவுக்குத் தொடர்கதையாகிப் போய் அவர்களது வாழ்க்கையை எங்கயோ கொண்டு போய் முடிக்கிறது..

தொடர்ச்சியான பல்வேறு முடிச்சுகளுடன் கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர். படத்தின் முற்பாதியில் சிறிதளவு கலகலப்புடனும், எதிர்பார்ப்புடனும் சென்றாலும் பிற்பாதி முழுவதும் காதல் மயம்தான்.. ச்சும்மா கிடந்தவனை உசுப்பிவிட்டக் கதையாக அசின் செய்யும் காதல் கலாட்டா முதலில் காமெடியாக இருந்தாலும் போகப் போக சீரியஸாகிப் போய் நாமும் அதில் ஒன்றிவிட வேண்டியதாகிவிட்டது.

நான் ஏற்கெனவே மலையாளத்தை பார்த்துவிட்டதால் எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், விஜய்யின் கொஞ்சூண்டு நடிப்பு என்னை இருக்கையில் இருக்க வைத்திருந்தது. மனிதர் ஸ்கிரீனில் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறார். வெரி க்யூட்.. குளோஷப் ஷாட்டுகளை இவருக்காக நிறையவே வைக்கலாம்.. இப்போதெல்லாம் கொஞ்சம் பெரிதாகவே வாயைத் திறந்து வசனம் பேச ஆரம்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இதில் வசனங்கள் பரவாயில்லை.. புரிந்தது.. ஆனால் அசினின் டப்பிங் வாய்ஸ் அநியாயத்திற்கு கிசுகிசு பாணியில் போய் உற்றுக் கேட்க வேண்டியதாக இருந்தது.

ஹீரோ என்பதால் அவருக்காக வைக்கப்பட்டிருக்கும் முதல் சண்டைக் காட்சியையும், சிற்சில ஹீரோயிஸ ஷாட்டுகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் படம் சித்திக்கின் படம் போலத்தான் இருக்கிறது.

லாஜிக் குறைகளில்லாமல் இல்லை. முதல் காட்சியில் பார்த்த அம்மா யுவஸ்ரீயும், மாமா டெல்லிகணேஷும், அப்பா நிழல்கள் ரவியையும் அந்த ஒரு காட்சிக்குப் பின்பு காணவே இல்லை.. பாடிகார்டு என்றாலும் அப்படியொருவனை வைக்கும் அளவுக்கு ராஜ்கிரண் தேவகோட்டை பகுதியில் என்னென்ன சாதனைகளைப் படைத்திருக்கிறார் என்பதைக் காட்டவில்லை. ஆனால் அவருக்கென்று இருக்கும் ஒரேயொரு வில்லனை மட்டுமே காட்டி அவரால் ராஜ்கிரணுக்கு இருக்கும் பகைமையை உதாரணமாக்கியிருக்கிறார்கள்.

மலையாளத்தில் இந்த வில்லத்தனத்திற்கு சிறிதளவாவது பில்டப் இருந்தது. தமிழில் அது இல்லாததால் இப்படியொரு கேள்வி எழ வேண்டியதாகிவிட்டது..

விஜய்யின் நடிப்பபை பிற்பாதியில்தான் வெகுவாக ரசிக்க முடிந்தது.. அமைதியான நடிப்பை வழங்கும் விஜய்யை எரிச்சலாக்கும் வகையில் தொலைபேசியில் தொல்லை கொடுக்கும் காட்சியும், கிளாஸ் கட் என்று எரிச்சலுடன் கத்தும் விஜய்யின் நடிப்பு அந்த இடத்தில் பிடித்தமானது. நல்ல கோபம்.. யூ டியூப்பில் இப்போது பேமஸாக இருக்கும் விஜய்யின் ஒரிஜினல் கோபக் காட்சியைவிட இது மிகவும் உக்கிரமானது.

அதேபோல் காதலிக்காக அசினிடம் அவர்களது புரோகிராமை கேட்டுவிட்டு தனது புரோகிராமை பிக்ஸ் செய்ய நினைக்கும் சாதா நடிப்பு.. கல்லூரி வகுப்பில் மதன்பாப்பிடம் கேள்விக்குப் பதில் சொல்லும் தெனாவெட்டு.. லேடீஸ் டாய்லெட் வாசலில் பிரின்ஸியிடம் மாட்டிக் கொண்டு தவிப்பது.. கிளைமாக்ஸில் அடிபட்ட நிலையிலும் ராஜ்கிரணிடம் காட்டும் பவ்யத்தை விஜய் இதுவரையில் எத்தனை படங்களில் காட்டியிருக்கிறார் என்று தேடித்தான் சொல்ல வேண்டும்..


இதேபோல் அசினுக்கும் குறிப்பிடத்தக்க தமிழ்ப் படம் இது.. இளமைத் துள்ளலுடன் தசாவாதாரத்தில் பொங்கித் தீர்த்தவருக்கு ஏன் இத்தனை பஞ்சம் என்று தெரியவில்லை..? பாடல் காட்சிகளில்கூட கொஞ்சம்தான் திறமையைக் காட்டியிருக்கிறார். அதே சமயம், இத்தனை கண்ணீர்த் துளிகளை இதுவரையில் வேறெந்த படத்திலும் அசின் சிந்தியிருக்க முடியாது.. விஜய்யை ஏமாற்றுகிறோம் என்று கிண்டலாக ஆரம்பித்து அது போகப் போக சீரியஸாகி தன்னை அறியாமலேயே அவரை நேசிக்கத் துவங்கும் காட்சி படு யதார்த்தம்.. அந்த ஒவ்வொரு காட்சியிலும் அழுகையுடன் அசினை பார்க்கும்போது அவரது ரசிகர்களுக்கும் அழுகை வரும். ஆனால் இதனை விஜய் எதிர்கொள்ளும்விதமே படத்தை ரசிக்க வைத்தது.

வடிவேலுவின் வெடி காமெடிகள் இந்தப் படத்தில் சற்று அடக்கி வாசித்து சிற்சில இடங்களில் புஸ்வாணமாகவாகவும் போய்விட்டது.. காமெடிக்கு இடமில்லாமல் அதையும் விஜய்யே செய்துவிட்டதால் வெடிவேலுவின் வெங்காய வெடிகூட வெடிக்காதது வருத்தமானதுதான். பேருந்து கலாட்டாவும், ஏர்போர்ட் கலாட்டாவும் மட்டும்தான் ரசிக்கும்படி இருந்தது.. வேறொன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் கதையை நகர்த்த வடிவேலுவின் காதலி கேரக்டர் பயன்படுத்தப்பட்டிருப்பதால் ஓகே..

அம்மா கேரக்டரில் ரோஜாவும், யுவஸ்ரீயும் அவதரித்துவிட்டார்கள். ஏற்கெனவே தெலுங்கு நாடோடியில் கலக்கல் அரசியல்வியாதியாக துள்ளிக் குதித்திருக்கும் ரோஜாவுக்கு இங்கே ஜஸ்ட் சில சீன்கள்தான்..  ரோஜாவின் பேவரைட் சிரிப்பை காணாததால் பலரையும்போல் எனக்கும் பெரும் ஏமாற்றம்தான். யுவஸ்ரீயை அம்மாவாக்கியதைப் போல் இனி வரும் காலங்களில் சங்கவி, யுவராணி, ரூபஸ்ரீ, கீர்த்தனாவையும் விஜய் படங்களில் அம்மாவாக்கிவிட்டால் ஜென்மசாங்கல்யம் அடைந்துவிடுவேன்..!

அசினின் தோழி கேரக்டரின் ஒவ்வொரு எதிர்ப்பும், ஆக்ஷனும் நம்மையும் சேர்த்து கேள்வி கேட்க வைத்திருக்கிறது. ஆனால் ஆள்தான் எனக்குப் பிடிக்கவில்லை. மலையாளத்திலும் இந்தப் பெண்தான் நடித்திருந்தார் என்று நினைக்கிறேன். தமிழுக்கு இன்னமும் கொஞ்சம் பிடிமானமான ஆளாக போட்டிருக்கலாம்.

கல்லூரியில் நடனக் காட்சி வந்தபோது பாட்டு வரப் போகுதுடோய் என்பதைவிட விஜய்யின் நடனம் காண ஆவல் மேலிட்டது உண்மைதான். அந்த நளினம் இன்னமும் விஜய்யிடம் இருக்கிறது.. யாரோ பாடலிலும் பட்டாம்பூச்சி பாடலிலும் விஜய்க்காகவே ஸ்பெஷல் ஸ்டெப்ஸ் வைத்திருக்கிறார்கள்.. ஆனால் எனக்கு முதல் பாடல்தான் பிடித்தது. வேகம்.. வேகம்.. வேகம்... ம்.. இத்தனையிருந்தும் எனக்கு கில்லி மட்டும் ஏன் பிடிக்காமல் போனது என்றுதான் தெரியவில்லை..

'காதலுக்கு மரியாதை'யில் கே.பி.சி.பி.லலிதா “கூட்டிட்டுப் போங்க..” என்று சொல்லும் ஒற்றை வார்த்தைக்குத் தியேட்டரே அதிர்ந்ததைப் போல இந்தப் படத்திலும் ராஜ்கிரண் அதையே கிளைமாக்ஸில் சொல்கிறார். ஒற்றுமையை நினைத்துப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். எல்லாம் நன்மைக்குத்தான்.

இறுதிக் காட்சியில் இருக்கும் சாந்தசொரூபி விஜய்யும், கண்டு பிடித்துவிட்டானா என்பதைக்கூட அறியாத அசினும், சேர்த்து வைத்துவிட்ட திருப்தியோடு சிறுவனுமாக புகைவண்டி நம்மைக் கடக்கையில் ஒரு பீல் குட் லவ் ஸ்டோரியை பார்த்த திருப்தி..

இதே படம் ஹிந்தியில் 'மை லவ் ஸ்டோரி' என்ற பெயரில் தயாராகிறதாம். சல்மான்கான் ஹீரோ. கரீனா கபூர் ஹீரோயினாம். இயக்கம் சித்திக்தானாம்.. அங்கேயும் ஜெயிக்க வாழ்த்துவோம்..!

நீண்ட வருடங்கள் கழித்து நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறார் விஜய்.. அவசியம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம்.. மிஸ் பண்ணிராதீங்க..

தைப்பூசம்

தைப்பூச நன்னாள் சிவசக்தி ஐக்கியத்தையும் மேம்பாட்டையும் விளக்கும் புனிதமான ஒரு பெருநாளாகும். தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம்.

உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.

சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசநட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடனிணைந்த பௌர்ணமியில் நிகழும்.

உலச்சிருஷ்டி ஆரம்பமானது இத்தினத்திலேதான். ஆண்டவன் முதலில் ஜலத்தையே படைத்தார்.

அதிலிருந்து பிரமாண்டம் உருவானது. இதனை நினைவூட்ட ஆலயங்களில் இத்தினத்தில் தெப்போற்சவம் நடைபெறுவதுண்டு.

சிவசக்தி ஐக்கியமான முருகப்பெருமான் மாட்சிமை பெறும் தினமாகவும் இது அமைகிறது.

முருகன் ஆலயங்களில் அபிஷேகம், திருவிழா முதலியன நிகழ்த்ப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்நாளில் விரதமிருப்பர்.

வாயுபகவானும், வருணதேவனும், அக்கினிதேவனும் ஒரு சமயம் தமது வலிமையைப்பற்றிப் பெருமை பேசித் தம்முள் போட்டி போட்டனர்.

அப்போது, அவர்களருகில் ஒரு சிறு துறும்பு காணப்படவே, வாயுபகவான் அசைக்க முயன்று தோற்றார். அக்னி தேவன் எரிக்கமுயன்று தோற்றார்.

வருணபகவான் அதனை நனைக்க முயன்று தோற்றார். மூவரும் இதுகண்டு திகைத்து அவைவற்று நின்றனர்.

அப்போது நாரதமுனவர் அங்கு தோன்றி எல்லோருக்கும் மேலான பரம்பொருட்சக்தியைப் பற்றி எடுத்துரைத்து அவர்களது கர்வத்தை அடைத்தார்.

தைப்பூச நன்னாளில் அவர்களது அருட்சக்தி அதிகரிக்க அருள்செய்வதாக ஆண்டவன் அருள்புரிந்தார்.

பதஞ்சலி, வியாக்கிரிபாதர் முதலானோர் தரிசிக்கச் சிவபெருமான் ஆனந்ததாண்டவமாடியதும் தைப்பூசநாளிலேதான்.

இப்புனித நாளில் யாவரும் அசௌகரியம் நீங்கி ஆரோக்கியமும் ஆற்றலும் பெறுவர்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கியத்திற்கிணங்கத் தை பிறந்த சிலநாட்களில் இத்தினம் தோன்றிப் புத்துணர்ச்சியூட்டி மணவாழவில் மகிழ்ச்சியையும் சகல மங்கலங்களையும் ஊட்டுகிறது.

பெண்கள் மூக்குக்குத்துதல் மற்றும் நற்காரியங்களை ஆரம்பித்தல், திருமணத்திற்கு பெண் பார்த்தல் முதலியவற்றுக்கு இத்தினத்தை தேர்ந்தெடுப்பர்.

தைப்பூசநாள் விரதக்கட்டுபாடுகள் குறைந்த ஆனால் வழிபாடு, திருவிழா, காவடி இவற்றோடு கூடிய இனிய ஒரு கொண்டாட்டமாக மலர்கிறது

மருந்து, மாத்திரை சாப்பிடும் போது…

இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மினி மருந்தகமே உள்ளது. ஆனால் மருந்து, மாத்திரையை எப்படி முறையாகச் சாப்பிடுவது எப்படி என்று படித்தவர்கள் கூட அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறி.
மருந்து, மாத்திரை சாப்பிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்…
1. நீங்கள் மருந்து, மாத்திரை வாங்கும்போது அதன் `காலாவதி தேதி’யைப் பார்த்து வாங்குங்கள். காலாவதி நாள் எட்டப்பட்டிருந்தாலோ, தாண்டியிருந்தாலே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அதேபோல நீங்கள் ஏற்கனவே வாங்கியிருக்கும் மருந்து, மாத்திரை காலாவதி தேதியைக் கடந்துவிட்டால் அதைப் பயன்படுத்தாதீர்கள்- அது எவ்வளவு விலை உயர்ந்ததாய் இருந்தாலும்!
2. ஒரு நாளைக்கு மருந்தை எத்தனை முறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவரிடம் தெளிவாய் கேட்டு அறிந்து அதன்படி சாப்பிடுங்கள். நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை என்றால் ஒருநாளைக்கு ஆறு முறை சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நோய் குறையவில்லை என்பதற்காக ஒரே நாளில் அதிக முறை மருந்து சாப்பிடுவது தவறு.
3. எவ்வளவு மருந்து சாப்பிட வேண்டுமோ, அந்த அளவு மட்டும் சாப்பிடுங்கள். அதிக அளவில் மருந்து சாப்பிடுவது நோயை எந்தவிதத்திலும் விரைவில் குணப்படுத்தாது. மாறாக, கூடுதல் பிரச்சினையை ஏற்படுத்திவிடக் கூடும்.
4. சில மருந்து, மாத்திரைகளில் 50 எம்.ஜி., 100 எம்.ஜி., 200 எம்.ஜி., என்று இருக்கும். மாத்திரையின் பெயரோடு அதையும் சேர்த்து ஞாபகத்தில் வைத்து வாங்க வேண்டும்.
5. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மருத்துவர் காய்ச்சலுக்காக `ஆன்டிபயாட்டிக்’ கொடுத்தால், நோய் குறைந்துவிட்டது என்பதற்காக இரண்டொரு நாட்களிலேயே நிறுத்திவிடக் கூடாது. மீண்டும் அந்த நோய் பலம் பெற்றுவிடக் கூடும்.
6. பழைய மருந்து வீட்டில் இருந்தால், அது காலாவதி தேதியை எட்டியிருக்கவில்லை என்றாலும் பயன்படுத்தும் முன் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். சில மருந்துகள் பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்களிலேயே வீரியத்தை இழந்துவிடும். எனவே மருத்துவரிடம் அதுபற்றிக் கேட்டுக்கொள்வது அவசியம்.
7. மருந்து உட்கொண்டதும் உடல்நிலையில் ஏதோ கஷ்டம் இருப்பதைப் போல உணர்ந்தால் உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் விஷயத்தில் இது மிகவும் முக்கியம். உங்களுக்கு ஏதாவது ஒவ்வாமை இருந்தால் அதை மருத்துவரிடம் முன்பே தெரிவிக்க வேண்டும். பெரியவர்களுக்கு வாங்கிய மருந்தை, அதே போன்ற நோய் என்பதற்காக குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது.
8. மருத்துவரிடம் மருந்தின் பெயர், எத்தனை முறை வழங்க வேண்டும், எத்தனை நாள் கொடுக்க வேண்டும், உணவுக்கு முன் அல்லது பின் எப்போது கொடுக்க வேண்டும், ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா, ஒருமுறை மருந்து சாப்பிட்டு முடித்ததும் அதை நிறுத்திவிடலாமா இல்லை தொடர வேண்டுமா என்பதைப் போன்ற விவரங்களைத் தெளிவாகக் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்? வயதானவர்களைத் தாக்கும் நோய்களுள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன.
* நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். நிற்கும்பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.
* `ஹைஹீல்ஸ்’ காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
* நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அதற்கென உள்ள காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை காலணி களை மாற்ற வேண்டும்.
* எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். அலுப்பு தோன்றாமல் இருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களை, இசையை கேட்டுக்கொண்டே வேலை செய்யலாம்.
* வலியின் தன்மை, வலி கூடும், குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும்போது தெரிவிக்க வேண்டும்.
* நிம்மதியான தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும்போது மூட்டுகளும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உணவுக்குப் பின் 10-20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது மூட்டு வலியை நன்கு குறைக்கும்.
* அசைவ உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். உப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது.
* உடற்பயிற்சி தசைகளை வலிமைப்படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.
* வலியை மறப்பதற்கு மற்ற விஷயங்களில் கவனத்தை திசைதிருப்ப வேண்டும். வலியைப் பற்றியே நினைக்கும்பொழுது நோயின் தீவிரம் அதிகமாகத் தெரியும்.

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது… வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது! நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால் இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க விடி காலையிலேயே விழித்தெழுங்கள்.ஆமாம்…காலையில் துயில் எழும் பழக்கம் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. `அதிகாலையில் எழுவது ஆரோக்கியமும், அறிவும் தரும்’ என்கிறார் பிராங்கிளின்.
***
சீக்கிரம் எழுந்தால் அதிகாலையை போன்ற அமைதி உங்களிடமும் ஒட்டிக் கொள்ளும். வாகன இயக்கம், ரேடியோ, டி.வி. இரைச்சல், பக்கத்து வீடுகளின் கூச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்று எதுவும் உங்களுக்குத் தொந்தரவு செய்யாது.
எங்கும் அமைதி நிலவ நீங்கள் நிம்மதியாக செயல்படலாம். அதிகாலையை போன்ற அருமையான பொழுதை வேறு எப்போதும் அனுபவிக்கவே முடியாது. அந்த வேளைதான் சிந்திக்க, செயல்பட, படிக்க, சுவாசிக்க என பலவற்றுக்கும் ஏற்றது.
***

காலையில் படுக்கையில் இருந்து துள்ளிக்குதித்து எழுந்திருங்கள். சோம்பேறித்தனமாக எழுந்தால் அன்றைய தினமே சோம்பலாகத்தான் இருக்கும். அவசரம் அவசரமாக வேலைகளை செய்ய வேண்டிவரும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படும். பிறகு அலுவலகத்திற்கு கிளம்ப தாமதம் ஆகும். இப்படி அடுக்கடுக்கான சிரமங்கள் தொடர, நிம்மதியே போய்விடும்.
சீக்கிரமாக எழுந்துவிட்டால் பாதி வேலையை சூரியன் உதிக்கும் முன்பே முடித்துவிட்டு நிதானமாக இருக்கலாம். இதனால் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் நாள் இறுதிவரை இன்பமாகவே தொடரும்.
***
காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் காலை உணவை நிதானமாக சமைத்து ருசித்து சாப்பிடலாம். காலை உணவு, நலமான வாழ்வுக்கு தினமும் சாப்பிடும் உற்சாக டானிக் போன்றது. சுறுசுறுப்புக்கும் உதவும். சோம்பேறித்தனமாக படுத்திருந்து காலை உணவை சாப்பிடும் நேரத்திற்கு எழுந்திருந்தால், பணிக்குச் செல்லும் அவசரத்தில் உணவை தவிர்க்கும் சூழல் கூட வரும். இதனால் எரிச்சலும், சோம்பலும் ஒட்டிக் கொள்ளும்.
காலையில் எழுந்து `ஹாயாக’ அமர்ந்து டீ குடித்துக் கொண்டே பேப்பர் படித்துவிட்டு பரபரப்பில்லாமல் காலை உணவைச் சாப்பிட்டால் கிடைக்கும் சுகமே சுகம்.
***
தேகபயிற்சி செய்ய உகந்ததும் காலை பொழுதுதான். மற்ற நேரங்களைவிட அதிகாலை வேளை தான் உடற்பயிற்சிக்கு ஏற்ற வேளை. நலமாக வாழ்வதற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று உடற்பயிற்சி. அதனால் கிடைக்கும் பலன்களும் பலபல. காலையில் உடற்பயிற்சி செய்வதை எந்தக் காரணத்திற்காகவும் நிறுத்தாதீர்கள்.
காலை வேளையிலேயே எழுதுவது, மெயில் பார்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்து முடித்தால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். அந்த நேரத்தை குடும்பத்தினருடன் ஜாலியாகக் கழிக்கலாம்.
***
உங்கள் லட்சியத் திட்டங்கள் பற்றி அதிகாலையில் சிந்தியுங்கள். அப்போது குழப்பங்களுக்குக் கூட தெளிவான வழி கிடைக்கும். எழுந்தவுடன் அன்று முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். உடனே லட்சிய பயணத்தை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
ஒவ்வொரு வேலையையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டுமானால் அதற்கு காலையில் எழுவது தான் சரியான செயல். ஒரு வேலையில் தாமதமானாலும் அடுத்தடுத்த தாமதங்கள் உங்கள் மதிப்பை குறைப்பதோடு, வேலைகளையும் முடக்கும்.
***
நீங்கள் சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத்தான் முடியவில்லை என்கிறீர்களா? அது ஒன்றும் பெரிய காரியமில்லை. முதலில் சில நாட்கள் அலாரம் வைத்து எழுந்திருக்கலாம். அலாரத்தை படுக்கையில் வைத்தால் மனம் அணைத்துவிட்டு தூங்கத்தான் சொல்லும். எனவே எழுந்து சென்று `ஆப்’ செய்யும் தொலைவில் அலாரத்தை வையுங்கள்.
இரவில் 2 டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு படுத்தால் காலையில் தானாகவே எழுந்திருப்பீர்கள். எழுந்தவுடன் மீண்டும் படுக்காமல் வேலை செய்யத் தொடங்கிவிட்டால் சோம்பல் ஓடியே போகும்

அட்டமத்து சனிக்குப் பரிகாரம் உண்டா?

சனி தசை வந்துவிட்டாலே சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். யார் என்ன சொன்னாலும் நம்பக் கூடாது. உங்க மனைவியை அங்க பார்த்தேன், அவர் அப்படியா? மாமனார், மாமியாரைப் பற்றி எல்லாம் தவறாகச் சொல்வார்கள்.

எதையும் நம்பக் கூடாது. அட்டமத்து சனி, நேரடியாக சண்டையை உருவாக்காமல், நம்மைச் சார்ந்த உறவினர்கள் மூலமாக ஏகப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.

பரிகாரம் என்று சொன்னால், முக்கியமாக சந்தேகப்படுதலை தவிர்க்க வேண்டும். உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். சுவையான உணவுகளைக் குறைத்துக் கொண்டு உப்பு சப்பில்லாமல் சாப்பிடவும், சகிப்புத் தன்மையை அதிகரித்துக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.

எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் நம்மை கேவலாமாக எது சொன்னாலும் தாங்கிக் கொள்ள வேண்டும்.

பொதுவாக சனிக்கிழமைகளில் எள் விளக்கு ஏற்றலாம். அல்லது சனிக்கிழமைகளில் ஊனமுற்றவர்கள் அல்லது மனநலம் குன்றியவர்களுக்கு உதவலாம். பிரதோஷ பூஜைகளில் பங்கேற்கலாம்.

எதை எடுத்தாலும் தாமதமாகும். கோபப்படக் கூடாது. தாங்கிக் கொண்டு பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லலாம்.

பனிக்கால தொந்தரவுகளுக்கு துளசி!

"துளசி, சந்தனம்... இன்னும் பல மூலிகைகள் அடங்கியது" என்று விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்... அழகுப் பொருட்களை உற்பத்தி செய்கிற நிறுவனங்களே சுவீகரித்துக் கொள்ளும் அளவுக்கு பல அழகு பலன்கள் நிரம்பியது துளசி!

முகத்திற்கு துளசி:

பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உண்டு. சம்பா கோதுமையை வறுத்து அரைத்த பவுடர் ஒரு கப், துளசி பவுடர்  கால் கப், சர்க்கரை  கால் கப், பொடித்த பச்சைக் கற்பூரம்  10 கிராம். இவற்றை தினமும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்! இந்த பவுடரால் தினமும் பல் தேய்த்து வர, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்றவை நீங்கி பற்கள் பளபளக்கும்.

பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது. வந்தால் சீக்கிரத்தில் போகாது! இப்படி வரும் பருக்களை விரட்டியடிக்கிறது "துளசி பேக்". சந்தனத்தூள், எலுமிச்சைச் சாறு, துளசிச் சாறு, வெட்டிவேர் பவுடர் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, கலந்து, பருக்கள் மீது தடவி... ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள்! ஒரே வாரத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

பனிக்காலத்தில் "மேக்கப்" போடும்போது, முகத்தில் நீர் கோர்த்துக் கொண்டு பொதபொதவென்று ஆகிவிடும். இதற்கும் தீர்வு இருக்கிறது.

10
துளசி இலையுடன், சுக்குப் பவுடர் 2 சிட்டிகை, லவங்கம்  1. இவை மூன்றையும் நன்றாக அரைத்து, முகத்தில் தடவி கழுவுங்கள். பிறகு மேக்கப் போடுங்கள். இதனால், தோல் இறுக்கமாகும்.

கண்ணுக்குக் கீழே கருவளையம் தோன்றி கருமை படர்கிறதா? கவலையை விடுங்கள். துளசி இலையுடன், பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து, கண்களைச் சுற்றிலும் பூசிக் கழுவுங்கள். தோல் மிருதுவாகி கருமை காணாமல் போய்விடும்.

கூந்தல் வறண்டு போய் வேதனை அளிக்கிறதா?

50
கிராம் துளசி இலை, 10 கிராம் மிளகு இவற்றை கால் கிலோ நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் () பயத்தமாவு போட்டு அலசுங்கள். கூந்தல் மிருதுவாகும். பொடுகும் வராது. புருவம், கண் இமைகளில் முடி இல்லாதவர்கள், இந்த எண்ணெயை அந்த இடங்களில் தடவினால், புசுபுசுவென முடி வளரும்.

பனிக்காலத்தில் ரொம்பவும் முடி கொட்டுமே.... என்ன செய்யலாம் என்கிறீர்களா?

தாமரை இலைச்சாறு, துளசிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டுங்கள். இந்தச் சாற்றுடன் இரண்டு மடங்கு நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். இப்படி தயாரான எண்ணெயை தினமும் லேசாக சூடு செய்து, தலையில் தடவி வர, முடி கொட்டுவது முற்றிலும் நீங்குவதுடன் இளமைப் பிராயத்திலேயே ஏற்படுகிற வழுக்கையும் மறையும்.

தலை முடிக்கு நல்ல கண்டிஷனராகவும் இருக்கிறது துளசி. துளசி, செம்பருத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அதனுடன் சுத்தம் செய்த புங்கங்காய் தோல்  4 கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இந்த விழுதைத் தேய்த்து அலசுங்கள். கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர் இந்த சிகிச்சை.

கரடு முரடான சருமத்தை மிருதுவாக்குகிறது துளசி. பால் பவுடர், துளசி பவுடர் இரண்டும் தலா அரை டீஸ்பூன் எடுத்து இதனுடன் சந்தன பவுடர், கஸ்தூரி மஞ்சள் தலா கால் டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடருடன் பாலை சேர்த்து (வெயில் காலத்தில் தயிரை சேர்க்கவும்) நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தினமும் முகம், கை, கால்களில் தேய்த்துக் குளிக்க... தோல் மிருதுவாகும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பேஸ்ட்