குடும்பத்தில் ஏற்படுகின்ற தேவையில்லாத பிரச்சினைகளை சமாளி்ப்பதற்கு


பிரச்சனை இல்லாமல் மனிதனும் இல்லை பிரச்சனை இல்லாதவன் மனிதனே இல்லை` என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எவ்விடத்திலும் பிரச்சினை தான். வெளிப்பிரச்சனைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.

அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சனைக்குரிய நபரையோ பிரச்சனையையோ தவிர்த்து விடலாம். ஆனால் பிரச்சனை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி காதலித்துத் திருமணம் முடித்தவர்களாகட்டும் பெற்றோர்களால் நிச்சயித்து திருமணம் முடித்தவர்களாகட்டும் பிரச்சனை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது கின்னஸ்ஸில் பதிய வேண்டிய சாதனை தான்.

"இல்லவே இல்லை நாங்கள் இதுநாள்வரைக்கும் எந்த சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம்` எனக் கூறும் சில தம்பதியினரும் உள்ளனர்.  மறுப்பதற்கில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள். ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருப்பதனாலேயே குடும்பச் சமனிலை பேணப்படுகிறது.

இதற்குப் புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும். "ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்கு நுனிவரை` எனக் கூறுவார்கள். தனிநபரின் சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பங்கம் வரும்போது கோபமும் கூட வருகின்றது. இருபாலாருக்கும் கோபம் ஏற்பட்டாலும் ஒப்பீட்டளவில் ஆண்கள் அதிகம் கோபப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இதுவே நமது சமூகத்தில் குடும்பத்தில் நிகழும் போது கணவன் அதிகம் கோபப்படும் சந்தர்ப்பத்தில் மனைவி அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கின்றாள்.

இவ்விடயத்தில் பெண்ணியத்தைப் பற்றியும் பெண் அடிமைத்தனத்தை பற்றியும் பேசிக்கொண்டு இருப்பார்களேயானால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நடுவீதியில் தான் நிற்க வேண்டும். எனவே நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய வகையில் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்பச் சச்சரவுகளை வீதிவரை கொண்டு வராது வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளலாம். கணவனின் தேவையற்ற கோபத்தைத் தவிர்ப்பதற்கான சில வழிகளைக் கூறுகின்றேன் கவனமாகக் கேளுங்கள். அந்தக் காலத்தில் கணவன் வேலைமுடிந்து வரும்போது இன்முகத்துடன் வரவேற்று உபசரியுங்கள் என்று கூறினார்கள். இந்தக் காலத்தில் கணவனெல்லவா உபசரிக்க வேண்டியுள்ளது. எனவே பழைய புராணத்தை இப்பொழுதும் பாடிக்கொண்டிருக்க முடியாது. கணவன் மனைவி இருவமே வேலைக்குச் செல்பவர்களாக தற்போது காணப்படுகின்றனர்.


அவ்வாறு இல்லாவிடினும் தற்போதைய நிலைமைகளில் குடும்பத்தை கொண்டு நடாத்துவது மிகக்கடினம். இவ்வாறு இருவருமே தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கூடியவரை மனைவி கணவனுக்கு முன் வேலை முடிந்த வந்துவிடுவது நல்லது. காரணம் கணவன் வேலையால் வரும்போது உங்களைக் காணும் பட்சத்தில் மிகுந்து மனமகிழ்ச்சி அடைவார். அதுவும் நீங்கள் அவர்களது மனதுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகளை கதைத்துக் கொண்டே அவரது சேட், ஷக்களை கழற்றிவிடும் போது சொல்லவும் வேண்டுமா அவர்களது சந்தோசத்தை அதேபோல் கணவன் தனது வேலைப்பளுவைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடும் போது அவர்களது சுமைகளைப்பகிர்ந்து கொள்ளாமல் நீங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக நீங்களும் வேலை பார்க்கிறீர்கள் என்கின்ற தலைக்கனத்தில் "எனக்கும் வேலை தான்“ நான் அதையெல்லாம் முடித்து வந்த வீட்டு வேலைகளைப் பார்க்கவில்லையா?` என்று கூறாதீர் கள். இது அவர்களின் சினத்தை இன்னும் அதிகப்படுத்தம்.

அதுமட்டுமல்லாது நீங்கள் சிலசமயங்களில் அவர்களைவிட அதிக சம்பளம் உழைக்கக்கூடும். ஒரு போதும் அந்தத் திமிரில் கதைத்து விடாதீர்கள் உங்கள் வாழ்க்கையே இருண்டு விடும். வேலை முடிந்து வரும் கணவனிடம் உங்கள் குறைகளை அடுக்காதீர்கள். உதாரணத்திற்கு நீங்கள் மதியம் சமையலில் ஈடுபடும் போது உப்பு முடிந்திருப்பதை அவதானிப்பீர்கள். அதைக் கணவன் வீட்டுக்கு வந்ததம் "ஒரு கிழமையா உப்பு முடியப்போகுதெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறன். அதைக் கொஞ்சமாவது காதில் விழுத்தினால் தானே` என்று பொரிந்து தள்ளாதீர்கள்.

உங்களுடன் படித்த அல்லது வேலை பார்க்கும் ஆண் நண்பர்களுடன் பழகும் போது கணவருக்கு தெரியும்படியாக அவருக்குக்கூட அறிமுகப் படுத்திவிட்டு பழகுங்கள். இதைவிடுத்து உங்கள் கணவருக்கு பிற ஆடவருடன் நான் பழகுவது பிடிக்குமோ என நீங்களாகவே நினைத்துப் பயந்து அவர்களுடன் ஒழித்துக் கதைப்பதால் எப்போதாவது கணவருக்கு நீங்கள் பழகுவது தெரிய வந்தால் தேவையில்லாத சந்தேகங்களுக்கு வித்திடும். எனவே வெளிப்படையாக இருங்கள். அதை உங்கள் கணவர் புரிந்து கொள்ளாவிடில் அது அவரது பலவீனம் அல்லது உங்கள் தலைவிதி உங்களுடன் இருக்கும் உங்கள் தாய் தந்தையரைப்பற்றியோ விசேடமாக உங்கள் மாமா மாமியைப் பற்றியோ தேவையில்லாமல் முறையிடாதீர்கள்.

கூடியவரை அவர்களை அனுசரித்துப்போங்கள். அதிகளவான குடும்பங்களில் பிரச்சினை இவர்கள் மூலம் தான் ஆரம்பிக்கின்றது. உங்கள் கணவனிடம் குறைகள் காணுமிடத்து குறிப்பாக அவர் நடத்தையில் சந்தேகம் வரும்போது "அவர் அப்படிச் செய்யக்கூடியவர் தானா?` என்று உங்களுக்குள்ளேயே சுயமதிப்பீடு செய்து முடிவெடுங்கள் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் அவருடன் அதுபற்றி நேரடியாகக் கதையுங்கள். தேவையில்லாமல் உங்கள் நண்பர்களிடமோ உறவினர்களிடமோ இது பற்றி கதைக்காதீர்கள்.

மிக முக்கியமான விடயம் என்னவெனில் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையிலான தாம்பத்திய உறவு தான். அதிகமான குடும்பங்களில் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையில் தேவையற்ற சச்சரவுகள் எழும். அதற்கு மூல காரணம் படுக்கையறையில் ஏற்பட்ட திருப்தியளிக்காமையாகத் தான் இருக்கும்.. பொதுவாக ஆண்களின் செக்ஸ் ஆசைகளைப்பற்றி ஓரளவாவது எழுத்து ஊடகங்கள் மூலம் அறிந்து வைத்திருப்பது நல்லது. அதற்கேற்றால் போல் செயற்படுங்கள். அதிகமாக ஆண்கள் சிறு சிறு செக்ஸ் விளையாட்டுக்களில் தான் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் சமைக்கும் போதோ அல்லது துணிதுவைக்கும் போதோ அல்லது குளிக்கும் போதோ வந்த குழந்தைப்பிள்ளைகளைப் போல் சீண்டுவார்கள். நீங்கள் அருவருக்காதீர்கள். அல்லது அறவே நாட்டம் இல்லாதது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வேறு விடயங்களுக்கு மறுப்பது வேறு இவ்விடயத்தில் மறுப்பது வேறுவிதமாக அமைந்து விடும். இது ஆசையாக உங்களை அணுகும் கணவரை பல மடங்கு தாக்கும். அவர்கள் மனமுடைந்து விடுவார்கள். படுக்கையறைதான் செக்ஸ் இற்குரிய இடமென்ற கருதாதீர்கள். வீட்டின் மற்றய இடங்கள் தான் அதிகளவான இன்பத்தை உண்டு பண்ணும். ஆக மொத்தத்தில் உங்கள் கணவரைப் புரிந்து நடவுங்கள் இல்லறம் சிறக்கும்.

கண்களால் இயங்கும் மடி கணினி !

லண்டன்: கண் பார்வையால் இயங்கும் மடி கணினியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விஞ்ஞான உலகின் புரட்சியாக இன்று உருவெடுத்துள்ளது கணினிகள். இன்றைய உலகம் கம்ப்யூட்டர் யுகம் என்றே கூறப்படுகிறது. அதிலும் ஒரு படி மேலாக போகுமிடமெல்லாம் கையில் எடுத்துச் சென்று மடியில் கூட பாரமில்லாமல் வைத்துக் கொண்டு இயக்கக்கூடிய லேப்டாப் எனப்படும் மடி கணினியும் இன்று மிக சாதாரணமாகி வருகிறது.

மனிதனின் ஆசைக்கும், தேவைக்கும் எல்லையே இல்லை. அதற்கேற்ப விஞ்ஞானிகளும் புதிது புதிதாக ஏதேனும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

தற்போது மனிதன் தன் கண் பார்வையாலேயே கட்டுப்படுத்தி இயக்கும் மடி கணினி வந்து விட்டது. இந்த புதிய வகை மடி கணினியின் திரை இயக்குவோரின் கண்பார்வைக்கு கட்டுப்படுகிறது. திரையில் ஒரு பகுதியை வாசித்து முடித்தவுடனே , கண் பார்வை இறங்குவதற்கேற்ப அடுத்த பகுதிக்கு தானாகவே Scroll ஆகி செல்லும் வகையில் இந்த லேப்டாப் ( Laptop ) வடிவமைக்கப் பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப் பட்டிருக்கும் ஐ ட்ராக்கர், லேப்டாப் பயன் படுத்துபவர்களின் விழிகளுக்கு இன்ஃப்ரா ரெட் கதிர்களைப் ( Infrared rays ) பாய்ச்சும். இரண்டு துல்லியமான கேமராக்கள் விழிகளின் அசைவுகளைவும் விழித் திரைகளின் ( Retina ) பிம்பங்களையும் பதிந்துக் கொள்ளும். இதன் மூலமே கண்களால் கணினி செயல் படும் விந்தை நடக்கிறது.

விசைபலகை ( Keyboard ) , கணிப்பொறி சுட்டி ( Mouse ) ஆகிவற்றுக்கு இந்த மடி கணினி மாற்றாக அமைவதுடன், கணினியின் செயல்பாடு வேகத்தையும் இந்த நவீன தொழில்நுட்பம் அதிகரிக்கும் என இந்த லேப்டாப்பை வடிவமைத்திருக்கும் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உங்கள் அழகு எண்ணெய் சருமத்தால் பாதிக்கப்படுகிறதா?

எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்...

 எண்ணெய் பசை நீங்க:

 * வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

 * தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

 * பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

 * எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.

 * எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.

 * வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு நாட்கள் வீதம் செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.

 * சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும்.

 * எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

 * எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

 * பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

 முகத்தில் காணப்படும் உரோமங்கள் நீங்க:

 * குப்பைமேனி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தேவையற்ற உரோமங்கள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். அதே போல், வேப்பங்கொழுந்தை அரைத்தும் பூசலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் தேவையற்ற உரோமங்கள் அகன்று விடும்.

 * பச்சை பயறை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சிலருக்கு முகத்தில் காணப்படும் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். தினசரி மஞ்சள் தேய்த்து குளித்து வருவதாலும், முகத்தில் உரோமங்கள் வளராது.

இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும் மொபைல் போன்

மொபைல் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எத்தகைய ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று துருக்கி நாட்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடந்தது. அப்போது இடுப்பில் பெல்ட்டில் செல்போன்களை அணிவதால் எலும்புகள் பாதிக்கப்படும் என்று தெரிய வந்தது.

 மொபைல் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எலும்பு அடர்த்தியை குறைத்து உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்தையும் பலவீனமாக்கி விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 150 பேரிடம் நடந்த சோதனையில் 122 பேர் எலும்புகள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த சோதனை நடந்தது.

திருமண தோஷத்துக்கான பரிகாரங்கள்

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவதுபோல முதலில் நிற்பது ஜாதகம்தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா? ஜாதகம் எப்படி இருக்கு? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா? உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.

ஜாதக தோஷங்கள் என்ன?

பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும்.

செவ்வாய் தோஷம்:

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.

ராகு - கேது தோஷம்:

லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

மாங்கல்ய தோஷம்:

இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.

சூரிய தோஷம்:

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.

களத்திர தோஷம்:

களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.

மேற்சொன்ன அமைப்புள்ள தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.

தோஷமும் பரிகாரங்களும்:

செவ்வாய் தோஷம்:

செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். ஆறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.

ராகு-கேது தோஷம்:

திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.

சூரிய தோஷம்:

ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம்.

களத்திர தோஷம்:

சுமங்கலி பெண்களுக்கு புடைவை, தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம்.
ஜாதக அமைப்புகளை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகத்தை சேர்ப்பதன் மூலமாகவும் எளிய பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Facebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?


சில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து நீக்கியதே ஆகும்.

எந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிகக் கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder என்ற இந்த சிறிய Script
ஆகும்.

Unfriend Finder மூலம்Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய Friend Request ஐ Ignoreபண்ணியது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்

முதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து Unfriend Finder என்ற சிறிய Script  Download செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவிக் கொள்ளுங்கள். (இது Firefox, Chrome, Safari, Opera போன்ற உலாவிகளுக்குமட்டும் பொருந்தும்.)

Mozilla Firefox இல் நிறுவுவதற்கு நீங்கள் முதலில் Greasemonkey என்ற Add-ons ஐ நிறுவ வேண்டும். அதன் பின்னே கீழுள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.


பின் உங்கள் Facebook ஐ Login பண்ணவும். அப்போது மேல் உள்ள படத்தில் காட்டியவாறு Unfriends என்ற புதிய Option ஆனது உங்கள் Facebook இல் காணப்படுவதை அவதானிப்பீர்கள்.

இனி யாராவது நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து அகற்றினால் உங்களுக்கு Notifications வரும்.

பவானி

20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘வைஜயந்தி ஐ.பி.எஸ்’ படத்தை சிறிய மாற்றங்களுடன் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஆக்ரோஷ விஜயசாந்திக்கு பதில் புன்னகை இளவரசி சினேகா. நேர்மையான போலீஸ் அதிகாரியான சினேகா, உள்ளூர் அரசியல் தாதா கோட்டா சீனிவாசராவுக்கு பணிந்து போக மறுக்கிறார். அமைச்சர் ஜி.ஆர், இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம், வழக்கறிஞர் ராஜ்கபூர் சகிதம் அவர் அடிக்கும் கொட்டத்துக்கு அளவே இல்லை. மாணவர் போராட்டத்தின் போது சினேகாவை கோட்டாவின் ஆட்கள் அடித்து துவைத்து காயப்போட ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகிறார். போலீஸ் வேலைக்கு அன்பிட் என்று டிபார்ட்மென்ட் கைவிடுகிறது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கோட்டாவை பழிவாங்க, அவர் இருக்கும் கட்சியில் சேர்ந்து அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். பிறகு எப்படி பழிவாங்குகிறார் என்பது கிளைமாக்ஸ்.

விஜயசாந்தி இடத்தை பிடிக்க சினேகா நிறைய போராடியிருக்கிறார். தன் டிரேட்மார்க் புன்னகையை மறைத்து உடம்பில் விறைப்பும், முகத்தில் முறைப்பும் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார். சண்டை காட்சியிலும் பறந்து பறந்து அடிக்கிறார். ஆனாலும் அவரின் நளினமான உடலமைப்பும் குழந்தை முகமும், ஆக்ஷனுக்குள் அடங்க மறுக்கிறது. நடுரோட்டில் அடிவாங்கி சாயும் போது அனுதாபத்தையும், “டேய்...’’ என்று கத்திக் கொண்டு எதிரிகள் மீது பாயும்போது ஆக்ரோஷத்தையும் அள்ளுகிறார். சம்பத் நேர்மையான போராளியாக வருகிறார். அவரின் பிளாஷ்பேக்கும், போராட்டமும், முடிவும் அக்மார்க் டிராமா. கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல கத்தி கத்தியே காதை பஞ்சராக்குகிறார். 

ஏற்கெனவே பார்த்த கதை என்பதால் திருப்பங்களோ, முடிவோ பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ‘திருநெல்வேலி மாநகராட்சி வரவேற்கிறது’ என்ற போர்டை மட்டும் காட்டிவிட்டு படத்தை ஐதராபாத் பிலிம் சிட்டியில் எடுத்து பூ சுற்றுகிறார்கள். சாதாரண இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் உயர் அதிகாரியான பவானியிடம் நடந்து கொள்ளும் முறையும் அவரை எதிர்க்க முடியாமல் சினேகா தவிப்பதும் எரிச்சலை உண்டாக்குகிறது. நேர்மையான போலீஸ் ஏட்டாக வரும் விவேக் காமெடி கலகலப்பூட்டுகிறது. ரோட்டு கடை பஜ்ஜியை பிழிந்து ஆட்டோவுக்கு ஆயில் போடுவது, செல்போன் பேசியபடி வண்டி ஓட்டி விபத்துக்குள்ளாவது என்று அவரது அட்வைஸ் காமெடிகள் ரசிக்க வைக்கிறது. இசையும், ஒளிப்பதிவும், உள்ளேன் அய்யா சொல்கிறது.

சிங்கம் புலி

அச்சில் வார்த்ததுபோல ஒன்றுபோல இருக்கும் இரட்டையர்கள். அவர்களில் ஒருவன் நல்லவன், மற்றவன் கெட்டவன். சாமர்த்தியமான இந்தக் கெட்டவனை நல்லவன் எப்படி வெற்றிகொள்கிறான் என்பதே கதை. 

சிவா தார்மீகச் சிங்கம். அஷோக்கோ பசுத்தோல் போர்த்திய புலி (இருவரும் ஜீவா). சிவாவுக்கு வீட்டில் கெட்ட பெயர். வேஷதாரி அஷோக் சொக்கத் தங்கம் என்று பெயர் எடுக்கிறான். சிவா மீன் வியாபாரி. அநியாயங்களைத் தட்டிக் கேட்பான். அஷோக்கின் தொழில் வக்கீல். பொழுதுபோக்கு பெண்களைக் கவர்ந்து அவர்களைத் தன் வலையில் வீழ்த்திப் பிறகு கைவிடுவது. ரவுடிகளின் சகவாசமும் உண்டு என்று இரண்டு கேரக்டர்களுக்கும் ஆறு வித்தியாசங்களைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். 

அஷோக்கின் மன்மத லீலைக்குப் பலர் இரையாகிறார்கள் என்றால் காயத்ரி (சௌந்தர்யா) பலியே ஆகிவிடுகிறாள். அவள் மரணத்துக்குத் தன் தம்பிதான் காரணம் என்பதை அறிந்த சிவா அவன் மீது புகார் கொடுத்துக் கூண்டில் ஏற்றுகிறான். அதிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பும் அஷோக், இப்படியே விட்டால் சிவா தன்னை உள்ளே தள்ளிவிடுவான் என்று நினைத்து அவனைப் போட்டுத்தள்ள ஏற்பாடு செய்கிறான். சிவா தப்பிக்கிறானா, அவன் குடும்பத்தார் அவனைப் புரிந்துகொள்கிறார்களா என்பதே மீதிக் கதை. தங்கையின் கல்யாணம், சிவாவின் காதலில் வரும் சிக்கல் என்ற கிளைக் கதைகளும் இதில் உண்டு. 

இரு துருவங்களாக இருக்கும் இட்டைப் பிறவிகளுக்குள் நடக்கும் மோதல் புது விஷயமல்ல. அந்த மோதலைச் சொல்லும் திரைக்கதையைப் புதிதாக அமைத்திருக்கலாம். அல்லது சில காட்சிகளையாவது புதிதாக அமைத்திருக்கலாம். இதெல்லாம் தேவையில்லை என்று புது இயக்குநர் சாய் ரமணி தீர்மானித்துவிட்டார். ஒரு இளைஞன் பெண்களை எளிதில் கவர்ந்துவிடுவான் என்றால் அதைக் காட்ட ஒரே ஒரு உருப்படியான காட்சியைக்கூட அவரால் உருவாக்க முடியவில்லை. முதலில் முறைக்கும் காயத்ரி பிறகு மசியும் விதம் படு அபத்தம். நல்ல வேளை ஸ்வேதா – சிவா காதல் உருவான கதையை விளக்காமல் அவர்களைக் காதலர்களாகவே அறிமுகப்படுத்திவிட்டார் இயக்குநர். 

அஷோக்கின் லீலைகளை ஏனோதானோவென்று சித்தரித்து போரடிக்கும் இயக்குநர் சிவாவின் சீற்றத்தைச் சிறுபிள்ளைத்தனமாகச் சித்தரித்து எரிச்சல்படுத்துகிறார். தேவையில்லாத பல காட்சிகளைத் திணித்துப் பொறுமையைச் சோதிக்கிறார். தம்பி ஏன் அப்படி உருவானான் என்பதைக் காட்டவில்லை. சிவாவைக் கொல்லத் துரத்தும் தாதாக்களின் முயற்சி படு காமெடி. குறிப்பாக அந்த தொப்பி ஐடியா செம மொக்கை. 

இயக்குநர் இரட்டை வேடங்களைவிட இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் நம்பியிருக்கிறார். சந்தானத்துக்குப் போட்டியாக ஜீவாவும் காம நெடி வசனங்களைப் பொழிகிறார்.

படத்தில் பாராட்டத்தக்க அம்சங்களும் இருக்கின்றன. இரட்டை வேடங்களைத் திரையில் கையாண்ட விதம் ஆச்சரியப்படுத்துகிறது. இருவரும் ஒரே ஃபிரேமில் வரும் காட்சிகள் மிக இயல்பாக உள்ளன. சண்டைக் காட்சிகள், குறிப்பாக ஒருவரை ஒருவர் துரத்தும் காட்சிகள் நன்கு படமாக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்தபடியே நகரும் படத்தில் ஹோட்டலில் ஜீவாவை திவ்யா தாக்கும் காட்சி மட்டும் சர்ப்ரைஸ்.

ஜீவா நடிப்பில் குறை வைக்கவில்லை. எப்போதும் ஒரே மாதிரி நடந்துகொள்ளும் சிவா, இரண்டு முகம் காட்டும் அஷோக் ஆகிய வேடங்களைத் திறமையாகக் கையாள்கிறார். சென்னைத் தமிழைக் கச்சிதமாகப் பேசுகிறார். ஆனால், இப்படி மாஸ் ஹீரோ இமேஜுக்காக டிராக் மாறுவது தேவையா என்பதை ஜீவா யோசிக்க வேண்டும். 

சிவாவின் காதலி ஸ்வேதாவாக வரும் திவ்யா ஸ்பந்தனாவின் முகப் பொலிவு மனதில் நிற்கிறது. ஆனால் ரொம்பவே குண்டாக இருக்கிறார். சில காட்சிகளே வரும் சௌந்தர்யா சிக்கென்று இருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். பழைய ஸ்டைல் காஸ்டியூம் மேக்கப்பில் வரும் சந்தானத்தின் காமெடி படத்துக்கு நிச்சயம் பக்க பலம்.


மணி சர்மாவின் இசையில் ஓரிரு பாடல்கள், கேட்கும்போது பரவாயில்லை என்று சொல்ல வைக்கின்றன. ஆனால் எதுவும் மனதில் நிற்கவில்லை.
 

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடும் படத்தில் விறுவிறுப்பும் இல்லை, புதுமையும் இல்லை. சீறாத சிங்கம், பாயாத புலி!

காதலில் தோல்வியும் சுகமான அனுபவமே!


காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடியுமா? 
நீ நேசிப்பவளோ நேசிப்பவனோ உனக்கு கிடைத்து விட்டால் உனக்கு கிடைப்பது எல்லாம் சுகம் என்று யார் சொன்னார்கள்?
 காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடியுமா? 
எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே. 
மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் நிச்சயமாக காணாமற் போய்விடும். 
காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது? 
இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழகான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும். 
சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வீண்  என தன்னைத்தானே அழித்துக்கொள்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள். 
வேறு என்ன சொல்வது? வாழ்வை ரசிக்கத் தெரியாததால் அவர்களால் காதலையும் ரசித்து ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. 
காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள். 
ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள். 
ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம். 
உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி. 
காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாதிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம்.
எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே. 
மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும். 
காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது? 
இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழகான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும். 
சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வீண்  என தன்னைத்தானே அழித்துக்கொள்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள். 
வேறு என்ன சொல்வது? வாழ்வை ரசிக்கத் தெரியாததால் அவர்களால் காதலையும் ரசித்து ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. 
காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள். 
ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள். 
ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம். 
உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி. 
காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாரிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம்.

தலை முடி பராமரிப்பு


கண்ட கண்ட ஒயில், ஷாம்பூ வேணாம்
கலரிங் பெயரில் கெடுக்கவும் வேணாம்
தலைமுடியை சீராக வைப்பது எப்படி என்று பட்டமே கொடுக்கும் அளவுக்கு பல விஷயங்கள் வந்துவிட்டன.
ஏகப்பட்ட ஒயில்கள், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் என்று ஏகப்பட்ட வெளிநாட்டு இறக்குமதி சமாசாரங்கள் வந்துவிட்டன. போதாக்குறைக்கு சிறுவர்

முதல் வயதான பெரியவர்கள் வரை, தங்களை இன்னும் அழகுபடுத்திக்காட்ட வேண்டும் என்று, கலரிங் செய்யும் கொடுமையும் நடந்து வருகிறது.
தண்ணீரை மாற்றினால்!
வெளியூர் போனால், குடிநீர் குடிக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உள்ளூர் தண்ணீரை குடித்துவிட்டு, வெளியூர் தண்ணீர் குடித்தால், ஒத்துக்கொள்ளாது என்பது சிலருக்கு தெரியாது. குடித்த பின்னர் தொல்லை வரும் போதே உணர்வர். சிலர் ஊர் ஊருக்கு மாறுதல் கிடைக்கும் போது, அவர்கள் குளிக்க பயன்படுத்து தண்ணீர் தன்மையும் மாறுகிறது. இதனால், பாதிக்கப்படுவது அவர்களின் தலைமுடி தான்.
கவலைப்பட்டாலும்...
மேற்கண்ட இரண்டைக் காட்டிலும், முக்கியமானது கவலை தான். ஒருவரின் கவலை தான், அவரின் தலைமுடி கொட்டவும் காரணம். குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். ஆறு மணி நேரமாவது தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி ஆரோக்கியத்துக்கும் இது தேவை. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கவலை தானாக வரும். அப்படியிருக்கும் போது, முடிகொட்டத் தான் செய்யும்.
இதுக்கு என்ன செய்யணும்?
தலைமுடி, இந்த இரண்டு வகையில் எந்த "டைப்" என்று தெரிந்து கொண்டால் தான் நாம் அதற்குரிய ஷாம்பூவை தேர்ந்தெடுக்க முடியும். ஆயில் முடியுள்ளவர்கள், அந்த ஆயிலை நீக்கி சீராக்கும் வகையில் உள்ள "டீப் கிளீன்சிங்" ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும். வறண்ட தலைமுடி உள்ளவர்கள், கண்டிஷனர் தரம் அதிகம் உள்ளதும், எஸ்.எல்.இ.எஸ்., என்று அழைக்கப்படும் ரசாயனம் கலந்த ஷம்பூவை பயன்படுத்தினால் நல்லது.
வழுக்கை விழுகிறதே...
ஆண்களில் முடிகொட்டி வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. வானிலை, தண்ணீர், கவலை ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் தான் பலரின் வழுக்கைக்கு பின்னால் உள்ளவை. கோடை வெயில் பிளந்தாலும், அதிக பனி பெய்தாலும் சிலருக்கு "முடி"வில்லா பிரச்னையாக தான் உள்ளது. கோடையில் வியர்த்து எண்ணெய் முடியாகிவிடுவதும், பனிக்காலத்தில், முடிகள் வறண்டுபோவதும் இவர்களுக்கு நேர்வதுண்டு.
முடிவெட்டும் செலவு
சிகையலங்கார கூடத்தில் போய் முடிவெட்டும் போக்கு, இளைஞர்களிடம் அதிகரித்துவிட்டது. பியூட்டி பார்லர் போகாத பள்ளிச்சிறுமிகள் இல்லை. அந்த அளவுக்கு அழகாக்கிக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டனர்.
மாதம் பல ஆயிரம் வரை செலவழிப்பவர்களும் உண்டு. அதனால், சந்தையில் கண்ட கண்ட ஒயில்கள், ஷம்பூக்கள் குவிந்து வருகின்றன. தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாதவர்கள், இந்த தரம் குறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் வரும் ஆபத்து குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.
புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் முடி, ஒயில் முடியா, வறண்ட முடியா என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இதோ எளிய வழி. ஒரு "பிளாட்டிங்" பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். தலைமுடியில் மிதமாக அழுத்தி, ஒரு நிமிடம் வரை வைத்திருங்கள். இப்போது எடுத்துப்பாருங்கள்; பேப்பரில் பிசுபிசுப்புடன் ஆயில் தன்மை இருந்தால், உங்கள் முடியில் ஆயில் தன்மை அதிகம் இருக்கிறது என்று பொருள். அப்படியில்லாமல், பேப்பரில், தலைமுடியின் காய்ந்த பகுதியின் துகள்கள் இருக்குமானால், உங்கள் தலைமுடி, வறண்ட தன்மை கொண்டது.
நீண்ட கூந்தலா?
நீங்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பணியாற்றுகிறீர்கள் என்றால், உங்களால், தலைமுடியை பராமரிக்க போதுமான நேரம் இருக்காது. அதனால், தோளில் பரவும் வகையில் தலைமுடியை குறைத்துக்கொள்ளலாம். முடியை எப்போதும் "ட்ரிம்" செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வறண்டுபோய் விடும். கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பூ, கண்டிஷனரை பயன்படுத்த தெரிய வேண்டும்.
கலரிங் கொடுமை
ஆண், பெண்களில் கலரிங் என்ற பெயரில் பெரும் கொடுமை நடக்கிறது. தரம் குறைவான பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தவே கூடாது. ஆரம்பத்தில், முடியை பார்க்க பேஷனாகத்தான் இருக்கும். போகப்போக, கேவலமாக போய்விடும்.
எந்த சத்து தேவை?
முடிக்கு எந்த சத்துக்கள் தேவை தெரியுமா? ஒன்று; இரும்புச்சத்து. மற்றது; புரோட்டீன். இந்த இரண்டும் மிக முக்கியமானவை. இவற்றில் குறைபாடு இருந்தால், தலைமுடி கொட்டும்; ஆண்களுக்கு வழுக்கை ஏற்படும். சிலர் குண்டாக இருந்தாலும், ரத்தசோகை இருக்கும். அதுபோல, சிலருக்கு புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும். இவர்களுக்கு முடிகொட்டுவதை வைத்தே இதை தெரிந்து கொள்ளலாம். அதுபோல, ரத்தத்தில் "பெர்ரட்டின்" அளவை வைத்தே, ரத்த சோகை அளவை கண்டுபிடிக்கலாம்.

மொபைலில் மென்பொருள் டவுன்லோட் செய்வது எப்படி?



இப்போது மொபைலில் புதுமையான மற்றும் வித்யாஷமான சாப்ட்வேர் இன்ஸ்டோல் பண்ண வேண்டுமானால்,கிளிக்செய்யுங்கள்.அதில் தேடல் கருவியில் உங்களுடைய மொபைல் மொடல் எண்ணை கொடுத்து தேடுங்கள்.அனைத்து வகையான மொபைலிற்கும்,சொப்ட்வேர் இதில் உள்ளது.


இப்போது நோக்கியா மொபைலிற்கான சொப்ட்வேர் வேறு இணைப்பிலும் கிடைக்கும்.அதனை பார்க்க வேண்டுமானால்,கிளிக் செய்யுங்கள்.

நோக்கியா மொபைல்களை பார்மட் செய்வது எப்படி?

உங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா?

உங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா?

கவலையை விடுங்கள்..........................

இப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக போர்மட் செய்து விடலாம்..........................

பார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்........................................

முறை 1:

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : மூன்று பொத்தான்களை அழுத்தி பிடிக்க வேண்டும்.(பச்சை நிற பொத்தான், '*' பொத்தான், '3' எண் பொத்தான்)

3 : இந்த மூன்று பொத்தான்களையும் அழுத்திய படியே இப்போது மொபைலை ஓன்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த மூன்று பொத்தான்களையும் விடுவியுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் போர்மட் ஆகிவிடும்........................

மீண்டும் புதிதாக அனைத்து அமைப்புகளையும் அமைத்து கொள்ளுங்கள்.................

இப்போது நீங்கள் வைரஸ் இல்லாத மொபைலை உபயோகிக்கலாம்.........................


முறை : 2

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : *#7370# ஆகிய பொத்தான்களையும் அழுத்தி பிடிக்க வேண்டும்.

3 : இந்த பொத்தான்களை அழுத்திய படியே இப்போது மொபைலை ஓன்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை  விடுவியுங்கள்.

முறை : 3

1 : முதலில் மொபைலை அணையுங்கள்,

2 : *#7780# ஆகிய பொத்தான்களையும் அழுத்தி பிடிக்க வேண்டும்.


3 : இந்த பொத்தான்களை அழுத்திய படியே இப்போது மொபைலை ஓன்(on) பண்ணுங்கள்.

4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்.

மீண்டும் புதிதாக அனைத்து அமைப்புகளையும் அமைத்து கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் வைரஸ் இல்லாத மொபைலை உபயோகிக்கலாம்.
 

கோடை கால சரும பராமரிப்பு

 கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.
* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.
* தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.
* வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
* கோடை வெயிலில் நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும். இதற்கு பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் மினரல் வாட்டரை அடிக்கடி சாப்பிடவும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு தோல் பளபளப்பாகவும் மாறும். கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.
* கோடை காலத்தில் பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும். இதற்கு வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிப்படியாக மறையும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.
* உடம்பில் இருந்து அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். அதிக அளவு சோப்புகளையும் கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.
* கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.
* வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகம் குடிக்கலாம்.
* வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.
* ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.
* வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அதனால் அடிக்கடி உடம்பை கழுவவும்.
* கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்கவேண்டும்.