அலுவலகத்தில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி?????

தமிழ்ஜோதி
1. உங்கள் மொனிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (கோட்) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

 2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

 3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
 உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

 4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே
 நகத்தையும் கடித்து வையுங்கள்.

 5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

 6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்.
 நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

 7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ
 முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

 8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

 9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
 பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

 10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

 11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

 12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

 13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

 14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

 15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

 16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
 மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

 17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம்
 தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

 18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?

நகங்கள் மீது கவனம் தேவை


பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன்.
ம‌ஞ்ச‌ள் காமாலை‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களது நக‌ங்க‌ள் ம‌ஞ்ச‌ள் ‌நிற‌த்‌தி‌ல் இரு‌ப்பதே இத‌ற்கு முத‌ல் உதாரண‌ம். அதுபோல தொட‌ர்‌‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு, அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பை பழு‌ப்பு ‌நிற நக‌ங்க‌ள் வ‌ெ‌ளி‌ப்படு‌த்து‌கி‌ன்றன.
உட‌ல்‌நிலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில த‌ற்கா‌லிக பா‌தி‌ப்புக‌ளினா‌ல், நக‌ங்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் கூட மா‌ற்ற‌‌ங்களை ஏ‌ற்படு‌த்து‌ம்.
நக‌ங்களை சு‌த்தமாகவு‌ம், ச‌ரியான அள‌வி‌ல் வெ‌ட்டி ‌விடுவது‌ம் ஒ‌வ்வொருவரு‌ம் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்காக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம்.
ஒருவரது உட‌லி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து‌க் குறைவாக இரு‌ப்‌பி‌ன், ந‌க‌ங்க‌ள் உடைவது அ‌ல்லது ப‌ட்டையாக ‌வி‌ரி‌ந்து வள‌ர்வத‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம். ‌சிலரு‌க்கு நக‌ங்க‌ளி‌ல் மேடு ப‌ள்ள‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதுவு‌ம் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க் குறைபா‌ட்டையே கா‌ட்டு‌கிறது.

நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் ந‌ம்‌மி‌‌ல் பலரு‌க்கு இரு‌க்கலா‌ம். எ‌ப்போதாவது மன‌க்கவலை‌ ஏ‌ற்படு‌ம் போது நக‌ம் கடி‌ப்பது ஒரு ‌சில‌ர். ஆனா‌ல் எ‌ப்போது‌ம் நக‌த்தை தேடி‌த் தேடி கடி‌ப்பது ‌சிலரு‌க்கு பழ‌க்கமாகவே இரு‌க்‌கிறது. அ‌வ்வாறு நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் இரு‌ப்பது கூட நர‌ம்பு ‌ச‌ம்ப‌ந்தமான ‌பிர‌ச்‌சினையாக இரு‌க்கலா‌‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.
த‌ன்ன‌ம்‌பி‌க்கை குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் நக‌ம் க‌டி‌க்கு‌ம் பழ‌க்க‌‌ம் உ‌ள்ளவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.
‌வீ‌ட்டி‌ல் வேலை செ‌ய்யு‌ம் பெ‌ண்களு‌க்கு ந‌க‌ம் வள‌ர்வதே ‌இ‌ல்லை எ‌ன்று எ‌ண்ணு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் அது அ‌ப்படி இ‌ல்லை. வேலை செ‌ய்யு‌ம் போது நக‌ம் தே‌ய்‌ந்து அத‌ன் வள‌ர்‌ச்‌சி ந‌ம் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாமலேயே‌ப் போ‌ய்‌விடு‌கிறது.
மருதா‌ணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது. அதனை முடி‌ந்தா‌ல் செ‌ய்து வரலா‌ம்.
‌சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. மாத‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்களாவது நக‌ங்க‌ள் கா‌ற்றோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அத‌ன் உ‌ண்மையான த‌ன்மையை நா‌ம் அ‌றிய முடியு‌ம்.
மேலு‌ம், நக‌ங்க‌ள் கா‌ய்‌ந்து வற‌ண்ட த‌‌ன்மையுட‌ன் இரு‌ந்தா‌ல் அத‌ற்காக ந‌ல்ல மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ‌சிற‌ந்தது.
‌சிலரு‌க்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து வ‌ந்தா‌ல், ‌விரை‌‌வி‌ல் நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம். ‌அழகு ‌நிலைய‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.
கை‌விர‌ல் நக‌ங்க‌ள் லேய‌ர் லேயராக உடைவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இத‌ற்கு ‌வீ‌‌ட்டி‌ல் தூ‌ய்மை‌ப்படு‌த்துவத‌ற்காக பய‌ன்படு‌த்து‌ம் சோ‌ப்பு‌த் த‌ன்மை‌யா‌ல் ‌ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வாமையாக‌க் கூட இரு‌க்கலா‌ம். லேய‌ர்க‌ள் ‌பி‌ரிவ‌தி‌ல் கூட ‌சில ‌வி‌த்‌தியாச‌ங்க‌ள் உ‌ண்டு. ‌சிலவை ‌நீள வா‌க்‌கி‌ல் ‌பி‌ரியு‌ம். ‌சிலரு‌க்கு கு‌று‌க்காக ‌பி‌ரியு‌ம். நக‌த்‌தி‌ல் உ‌ள்ள நக‌த்த‌ட்டுகளு‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌த்த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது‌ம் கூட இத‌ற்கு காரணமாக இரு‌க்கலா‌ம்.
‌நக‌ச்சொ‌த்தை ஏ‌ற்பட, நக‌த்‌தி‌ல் ‌மு‌ன்பு எ‌ப்போதாவது ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் காரணமாக இரு‌க்கலா‌ம். ‌விர‌லி‌ல் அடிபடுவது, இடு‌க்‌கி‌ல் கை‌விர‌ல் ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பா‌ல் நக‌ப்படு‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌க் க‌சிவானது, நக‌த் த‌ட்டு‌க்கு அடி‌யி‌ல் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் நக‌ச் சொ‌‌த்தை ஏ‌ற்படு‌கிறது. ‌இ‌ந்த நக‌ச்சொ‌த்தை தானாக ச‌ரியாகவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது. ஆனா‌ல் நக‌‌ச்சொ‌த்தை ‌தீ‌விரமடை‌ந்து, நக‌ப் பகு‌தி‌யி‌ல் வ‌லி ஏ‌ற்படுமா‌யி‌ன், நக‌த்தை ‌பிடு‌ங்க‌ி‌வி‌ட்டு அ‌ப்பகு‌தியை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமாகு‌ம்.
கை ‌விர‌ல் நக‌ங்க‌ள் இள‌ம் ‌சிவ‌ப்பு ‌நிறத்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். இ‌தி‌ல் வெ‌ள்ளை ‌நிற‌ம் ர‌த்த சோகையையு‌ம், ம‌ஞ்ச‌ள் காமாலையையு‌ம் கு‌றி‌க்கு‌ம். ‌‌விர‌ல் நக‌ங்களு‌க்கு நடு‌வி‌ல் சொ‌த்தை ஏ‌ற்ப‌ட்டா‌ல் உடனடியாக மரு‌த்துவரை அணு‌கி அத‌ற்கான காரண‌த்தை அ‌றிவது ந‌ல்லது.
கை‌ப்‌பு‌ண்‌ணி‌ற்கு க‌ண்ணாடி‌த் தேவையா எ‌ன்பது பழமொ‌ழி. ஆனா‌ல் ந‌ம் கை ‌விர‌ல் நக‌ங்களை‌க் கொ‌ண்டே நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்தை‌க் கா‌‌ட்டு‌ம் வகை‌யி‌ல் ம‌னித உட‌ல் அமை‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளதை எ‌‌ண்‌ணி‌ப்பாரு‌ங்க‌ள்

குதி உயர்ந்த பாதணிகளின் அழகும் ஆபத்துக்களும்

எடுப்பான அழகுடனும் நவநாகரீகத்துடன் விளங்குவதற்காக  பெண்கள் பலர் அதிஉயர் குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின்  அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன.
எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் உயரத்தை அதிகரித்து அவற்றின் வடிவங்களில் பல மாற்றங்களை செய்து சந்தையில் விடுகின்றன நிறுவனங்கள்.

இந்தப் பாதணிகளை எவ்வளவு விலைக்கொடுத்தேனும் வாங்கி அணியக் கூடியவர்களாக நமது பெண்கள் மாறிப்போயுள்ளனர்.
உயரம் குறைந்தவர்களுக்கு இந்த பாதணிகளால் நன்மைதான். குள்ளமானவர்கள் இந்தப் பாதணிகளை அணிவார்களேயானால் அவர்கள் உயரமானவர்களாக தெரிவார்கள். குள்ளமானவர்களின் மனக்குறையை சற்று நீக்கும் ஒன்றாக இந்தப் பாதணிகள் விளங்குகின்றன.
இப்போது பெண்கள் சேலை அணிந்தால் கட்டாயம் குதிகால் பாதணிதான் அணிய வேண்டும், இல்லையென்றால் சேலைக்கு எடுப்பாக இருக்காது என்று கூறும் நிலை வந்துவிட்டது. அது மட்டுமல்ல, குட்டையான பாவாடைகளை அணியும் பெண்களும் இதனைதான் கடைப்பிடிக்கின்றார்கள்.

இதைவிட பெண்களின் அழகை இந்தப் பாதணிகள் மேலும் மெருகூட்டி காட்டுகின்றன.
இவற்றைத்தவிர, இந்த பாதணிகளால் நன்மையிருப்பதாகத் தெரியவில்லை. நாகரீக மாற்றத்திற்கு ஏற்ப தங்களது தோற்றங்களிலும் மாற்றங்களை கொண்டு வரும் பெண்கள் மேலைத் தேய மோகத்தில் அதிகமாகவே ஈர்;க்கப்பட்டுவிட்டனர்.
இவ்வாறான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குபவர்கள் பணத்தை கொடுத்து பொருட்களை மட்டும் வாங்கவில்லை. பொருளுடன் சேர்த்து உடல் நலக்கேடுகளையும் வாங்கிக்கொண்டு வருகின்றார்கள்.
இத்தகைய அதி உயரமான குதிகால் பாதணிகளை அணிவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பாதணிகளை அணிவதால் வளைந்துப்போகிறது. இந்தப் பாதணிகள் இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற உடலியல் நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன.
நோய்களுக்கு அப்பால், இந்த பாதணிகளால் பாதுக்காப்பற்ற நடையையே நடக்க வேண்டியுள்ளது.
அதிக உயரமாக பாதணிகளை அணிந்துக்கொண்டு வீதியில் செல்லும் போது எமது இயல்பான நடையை மறந்து பாதுகாப்பாகவே ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் கீழே விழவேண்டிய நிலைதான் ஏற்படும். எமது உடல் எடையை இந்த பாதணியின் கூரான முனைகளே தாங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால் கொஞ்சம் பிசகினாலும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். அதைவிட வீதியில் விழவேண்டியும் ஏற்படும்.
உயர் குருதியழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இவ்வாறான பாதணிகளை அணிவதை அறவே தவிர்த்துவிடவேண்டும். இந்த பாதணிகள் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தக் கூடியதவைதான். இன்னும் சொல்லப்போனால் இந்தப் பாதணிகளை அணிந்துக்கொண்டு எந்தவித பயமும் இன்றி பளபளப்பான மேடையில் நடனமாடுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
இவ்வாறான பாதணிகளை தொடர்ந்து அணியாமல் குறிப்பிட்ட நிகழ்வுக்காக அணிந்தால் அது பெரிதளவான பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், தினமும் அதனையே அணியவிரும்புபவர்கள் கொஞ்சம் பணத்தை வைப்பிலிட்டு சேமித்துக்கொண்டாரல் எதிர்காலத்தில் வரப்போகும் நோய்களுக்கு செலவிடுவதற்கு இலகுவாக இருக்கும்.

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க


நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம்.இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை.
ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்கவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.
பயன்கள்:
உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமானது.
இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
நமக்கு தேவையான வீடியோவின் url கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.
வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது.
வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV)
வீடியோவில் உள்ள பாடலை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வசதி.
இப்படி ஏராளமான வசதிகளை பெற்று உள்ள இந்த மென்பொருளின் அளவு 7.19 MB மட்டும் தான்.
பயன் படுத்தும் முறை:
இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்க பட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்து கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும். உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்.
அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி

எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்

“சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்” என்பது நம் முன்னோர்களின் வாக்கு.
நோயில்லா மக்களைக் கொண்ட நாடே வல்லரசாகும்.  ஒரு நாட்டின் ஆரோக்கியமே அந்நாட்டின் வளம்.  அதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்கிறது பழமொழி.  செல்வங்களில் எல்லாம் முதன்மையான செல்வம் நோயற்ற வாழ்வுதான்.
இத்தகைய செல்வத்தைப் பெற நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.  சுற்றுப்புறச் சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.
அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது நம் கைகளை சுத்தப்படுத்துவது.  அதாவது கை கழுவுவது.
கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம்.
ஆம்.  காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.  இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது.
பழங்காலத்தில் வீட்டின் முன்புறத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள்.  வெளி இடங்களுக்குச் சென்று வருபவர்கள், அந்த நீரில், கை கால்களை சுத்தம் செய்து பிறகே வீட்டுற்குள் நுழைவார்கள்.  ஆனால் இந்த பழக்கம் தற்போது மறைந்துபோய்விட்டது.  நாம் முன்னோர்களையும் மறந்தோம், அவர்கள் கற்றுத் தந்த நல்ல பழக்க வழக்கங்களையும் அடியோடு மறந்துவிட்டோம்.
இன்று உலக அரங்கில் சுகாதாரத்தை முன்னிறுத்தி சொல்லப்படும் விஷயங்களில் கை கழுவும் முறைதான் முதன்மையாக உள்ளது.  உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் நாளை  உலக கை கழுவும் நாளாக  அறிவித்துள்ளது.
இந்நாளில்  கை கழுவும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மை பற்றியும் உலகம் முழுவதும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.  கடந்த ஆண்டு அதாவது 2009 அக்டோபர் 15 அன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழக சுகாதாரத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் 5000 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கை கழுவுவதன் பயன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  இதுபோல் தமிழகத்தின் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த கை கழுவும் முறையை சரியாக பின்பற்றாமல்  பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது வளரும் நாடுகள்தான்.  நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டுள்ளது.  இந்தியாவில்,  கைகளை ஒழுங்காக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.  இதே காரணத்திற்காக   உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
இதனால் வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளில்  கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும்,   கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன.  இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே அழிக்க முடியும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே.
ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococus Aureus) என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உணவருந்தும் சமயம் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கிறது.
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்
· காலையில்  படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.  பிறகு தான் பல் துலக்க வேண்டும்.
· மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.
· எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும்.  சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.
· வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது.
· குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும்.  இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.
· கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது.  குறைந்தது  30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
· அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.
· கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.  நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு  கழுவ வேண்டும்.
இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம் 60 விழுக்காடு தடுக்கலாம்.

இல்லற வாழ்க்கை இனித்திட...

tamiljyothi.blogspot.com

திருமண‌ம் எ‌ன்பது ஆ‌யிர‌ங்கால‌த்து‌ப் ப‌யி‌ர், ‌திருமண‌ம் சொ‌ர்‌க்க‌த்‌தி‌ல் ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்படுவது, மனை‌வி அமைவதெ‌ல்லா‌ம் இறைவ‌ன் கொடு‌த்த வர‌ம்.. எ‌ன்பது போ‌ன்ற பழமொ‌ழிக‌ள் ‌திருமண‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் வகை‌யி‌ல் அமை‌ய‌ப்பெ‌‌ற்று‌ள்ளது.
‌திருமண‌ம் எ‌ன்பது பெ‌ற்றோரா‌ல் பா‌ர்‌த்து ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்ப‌ட்டு ‌நட‌த்‌தி வை‌க்க‌ப்படு‌வது. ஆனா‌‌ல் த‌ற்போது காத‌ல் ‌திருமண‌ங்களு‌ம் அ‌திகள‌வி‌ல் நட‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் எ‌ந்த வகையான ‌திருமணமாக இரு‌ந்தாலு‌ம், த‌ம்ப‌திக‌ள் ஒ‌த்து‌ப் போனா‌ல் ம‌ட்டுமே அவ‌ர்களது வா‌ழ்‌க்கை ‌நீடி‌க்கு‌ம்.

 ‌‌சி‌‌ன்ன ‌சி‌ன்ன கரு‌த்து மோத‌ல்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌விவாகர‌த்து கே‌ட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் படிகளை ஏறு‌ம் த‌ம்ப‌திக‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது.
‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ற்கே‌ச் செ‌ல்லாம‌ல், கணவ‌னி‌ன் கொடுமைகளை‌த் தா‌ங்க முடியாம‌ல் அ‌ல்லது கணவ‌னி‌ன் குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஒ‌த்து போகாம‌ல் தா‌ய் ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ன்று வாழு‌ம் பெ‌ண்களு‌ம் அ‌திக‌‌ம். பெரு‌ம்பாலு‌ம் ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு, கணவரது ‌வீ‌ட்டா‌ர் கூறு‌ம் பொ‌‌ய்களே, பல ‌விவாகர‌த்துகளு‌க்கு அடி‌ப்படையாக உ‌ள்ளது.
கணவனோ, மனை‌வியோ எ‌ந்த ‌வித‌த்‌தி‌ல் ‌பிர‌ச்‌சினை வ‌ந்தாலு‌ம், இருவரு‌ம் ஒரு அ‌ணி‌‌யி‌‌ல் ‌நி‌ன்று ‌பிர‌ச்‌சினையை சமா‌ளி‌க்கு‌ம் போது குடு‌ம்ப‌‌ம் வலு‌ப்பெறு‌ம். ஆனா‌ல், அவ‌ர்களு‌க்கு‌ள்ளாகவே ‌பிர‌ச்‌சினையை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு இரு அ‌ணிகளாக ‌நி‌ன்று போராடு‌ம் போது குடு‌ம்ப உறவு‌க்கு‌ள் பல து‌ர்தேவதைக‌ளி‌ன் ஆ‌தி‌க்க‌ம் மேலோ‌ங்கு‌ம். அது பெ‌ண்‌ணி‌ன் தா‌யாகவு‌ம் இரு‌க்கலா‌ம், ஆ‌ணி‌ன் தா‌ய் ம‌ற்று‌ம் தம‌க்கைக‌ளி‌ன் ஆ‌தி‌க்கமாகவு‌ம் இரு‌க்கலா‌ம்.
இதுகு‌றி‌த்து ஒரு நகை‌ச்சுவை ஒ‌ன்று உ‌ள்ளது. அதாவது காத‌லி‌க்கு‌ம் போது காதல‌ன் பேசுவா‌ன், காத‌லி கே‌ட்பா‌ள், ‌திருமண‌த்‌தி‌‌ற்கு‌ப் ‌பிறகு மனை‌வி பேசுவா‌ள், கணவ‌ன் கே‌ட்பா‌ன், குழ‌ந்தை ‌பிற‌ந்த ‌பிறகு இருவருமே பேசுவா‌ர்க‌ள் ஊரே‌க் கே‌ட்கு‌ம் எ‌ன்பது போல குடு‌ம்ப வா‌ழ்‌க்கை ஆ‌கி‌விட‌க் கூடாது.
குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ளி‌ல் பெரு‌ம்பாலு‌ம் கணவனது குடி‌ப்பழ‌க்க‌ம், வேலை‌யி‌ல்லாத கணவ‌ன், குடு‌ம்ப‌த்தை நட‌த்துவத‌ற்கான வருமான‌ம் இ‌ன்‌மை, கணவரது தா‌ய் ம‌ற்று‌ம் தம‌க்கைய‌ரி‌ன் கொடுமை, அ‌ல்லது பா‌லிய‌ல் ‌பிர‌ச்‌சினை‌க‌ள் போ‌ன்றவை ஒரு பெ‌ண்‌ணி‌ற்கு எ‌திராக ‌நி‌ற்‌கி‌ன்றன.
இதே‌ப்போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண், ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம் ‌பிர‌ச்‌சினைகளாகு‌ம்.
எதுவாக இரு‌ந்தாலு‌ம், நமது அ‌ன்பாலு‌ம், பொறுமையாலு‌ம் ஒருவரை அனுச‌ரி‌த்து‌ச் செ‌ன்று அவருடனான வா‌ழ்‌க்கையை இ‌னிதா‌க்‌கி‌க் கொ‌ள்வது எவராலு‌ம் முடியு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். (இ‌‌தி‌ல் முடியாத ‌வி‌தி‌வில‌க்குகளு‌ம் உ‌ள்ளன.)

எனவே, ‌பிர‌ச்‌சினை துவ‌ங்கு‌ம் போதே அதை‌ப் ப‌ற்‌றி இருவரு‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பே‌சி ‌பிர‌ச்‌சினையை ‌தீ‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். எதையு‌ம் அ‌றிவு‌ப்‌பூ‌ர்வமாக ஆராயாம‌ல், மன‌ப்பூ‌ர்வமாக ஆரா‌ய்‌ந்தா‌ல் ந‌ல்ல வ‌ழி ‌கி‌ட்டு‌ம்.
அ‌ப்படியே ‌பிர‌ச்‌சினைக‌ள் துவ‌ங்‌கி அதை கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டு பு‌ண் ‌புரையோடி‌ப் போன சூ‌ழ்‌நிலை‌யி‌ல் த‌ம்ப‌திக‌ள் ஒ‌ன்றாக நாடுவது ‌‌நீ‌திம‌ன்ற‌த்தை‌த்தா‌ன். ‌விவாகர‌த்து எ‌ன்ப‌தி‌லாவது த‌ம்ப‌திகளு‌க்கு ஒ‌த்த கரு‌த்து ஏ‌ற்ப‌ட்டது கு‌றி‌த்து ‌சில இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ச்ச‌ரிய‌ப்பப‌ட்டு‌த்தா‌ன் ஆக வே‌ண்டு‌ம். அ‌ந்த அள‌வி‌ற்கு எ‌லியு‌ம் பூ‌னையுமாக இரு‌க்கு‌ம் த‌ம்ப‌திகளு‌ம் உ‌ண்டு.
‌நீ‌திம‌‌ன்ற‌ங்க‌ளில், விவாகரத்து கேட்டு வரும் தம்பதிகளுக்கு உ‌டனடியாக வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விவாகர‌த்து வழ‌ங்க‌ப்படுவ‌தி‌ல்லை. முதலில் உளவியல் ரீதியாக ஆலோசைன வழ‌ங்க‌ப்படு‌கிறது. தேவைப்பட்டால் பல தடவைகூட ஆலோசனை நடத்துகிறார்கள். முடிந்தவரை தம்பதிகளை சேர்த்து வைக்கவே இ‌ந்த ‌நீ‌திம‌ன்ற‌‌ங்க‌ள் முயற்சி செய்கின்றன. இறு‌தி வரை விவாகரத்து பெற்றே தீருவது என்று இருவரில் ஒருவர் பிடிவாதமாக இருந்தாலோ அல்லது இருவரும் பிடிவாதமாக இருந்தாலோ வழக்கு நடத்தி விவாகரத்து வழங்கப்படுகிறது.
இந்தக் கால இளம் தலைமுறையினருக்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத காரணத்தால்தான் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

விவாகரத்து கேட்டு வரும் ஜோடிகளை சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் இப்போது புதிய முயற்சியாக, இல்லற வாழ்க்கை இனித்திட... என்ற தலைப்பில் 10 அறிவுரைகளை தமிழில் அறிவிப்பாக எழுதி வைத்துள்ளன.
இந்த அறிவிப்பு, முதன்மை குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலும் அனைவரது கண்ணில்படும்படி வைக்கப்பட்டு உள்ளது. .
இதனை அனை‌த்து த‌ம்ப‌திகளு‌ம் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தாலே பெரு‌ம்பாலான குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ள் வராது. அ‌ப்படியே தலைதூ‌க்‌கினாலு‌ம் அவை பெ‌ரிய அள‌வி‌ல் உருவாகாது.
‌நீ‌ங்களு‌ம் ‌திருமணமானவராக இரு‌ப்‌பி‌ன் இவ‌ற்றை படியு‌ங்க‌ள். ‌பி‌ன்ப‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் இ‌ல்லற‌ம் ந‌ல்லறமாகு‌ம்.
* ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.
* வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெ‌யி‌க்க‌வி‌ட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!
* விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.
* கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.
* உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.
* விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.
* ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.
* செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். மேலு‌ம்,
இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள். (இவ‌ற்றை எ‌ப்போது‌ம் மன‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்)
சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்
அனுசரித்துப் போகுதல்
மற்றவர்களை மதித்து நடத்தல்.
.
ந‌ம் வா‌ழ்‌க்கை ந‌ம் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது. 

கல்சியமும் முக்கியத்துவமும்

tamiljyothi.blogspot.com
மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள்வதற்கும், அழகான தோற்றத்தை அளிப்பதற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவற்றிற்கு கல்சியம் தேவை.

கல்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொருளினால் அமைந்தவை. ஆகவே கால்சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது உடல்நலத்துக்கு அவசியமானது.
கால்சியம் எலும்புகளையும், பற்களையும் வளர்த்து பலப்படுத்துவதோடு வேறு பல வேலைகளையும் செய்கிறது. இடைவிடாது வேலை செய்து கொண்டிருக்கும் இதயம் நன்றாக வேலை செய்வதற்கும் கல்சியம் உதவி செய்கிறது.
மேலும், நரம்புகளுக்கும், இரத்தத்திற்கும் கல்சியம் தேவைப்படுகிறது. தேவையான அளவு கால்சியம் உடல் இல்லையென்றால் எலும்புகள் உறுதியுடன் இருக்காது. எலும்புத் தேய்மானம் ஏற்பட்டு பல பிரச்சனை உண்டாகும். பற்களும் விரைவில் சொத்தைப் பட்டு அகற்ற வேண்டிய நிலைக்கு வரும்.
வளரும் குழந்தைகளின் உடம்பில் போதுமான கல்சியம் இல்லையென்றால் எலும்புகள் மென்மையடைந்து வளர்ச்சி குன்றிவிடும். இதய நோயும் உண்டாக வாய்ப்புள்ளது.
குறிப்பாக கருத்தரித்த பெண்களும், குழந்தைப் பெற்ற தாய்மார்களும் கல்சியம் உள்ள உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கல்சியம் சத்துள்ள உணவுப் பொருட்கள் வருமாறு:
பால், மோர், முட்டையின் மஞ்சள் கரு, முளைக் கீரை, முருங்கைக் கீரை, பருப்பு வகைகளில் கால்சியம் உள்ளது.
தாம்பூலம் போடுவது நமது நாட்டுப் பழக்கம். தாம்பூலத்துடன் சுண்ணாம்பு சேர்ந்துள்ளது. அதன் சாற்றை விழுங்குவதன் மூலம் உடம்பில் கல்சியம் சேர்கிறது.
கேழ்வரகு (ராகி), சோளம், கோதுமை, தவிடு உள்ள அரிசி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட், காரட், இறைச்சி ஆகியவற்றிலும் ஓரளவிற்கு கல்சியம் இருக்கிறது. 

பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் உங்களை நீக்கியவரின் விவரங்கள் அறிய

இந்த கணினி உலகில் பேஸ்புக் என்பது ஒரு அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. நம்மில் 90% மேல் பேஸ்புக் உபயோகிக்கிறார்கள். நம் மெயிலுக்கு பேஸ்புக்கில் இருந்து ஒரு மெயில் வரும் இத்தனை நண்பர்கள் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர் என்று வரும் ஆனால் யார் யார் நம்மை நண்பர்கள் லிஸ்டில் இருந்து நீக்கி உள்ளனர் என்பதை கண்டறியும் வசதி பேஸ்புக்கில் இல்லை. மற்றும் நாம் நண்பர்கள் கோரிக்கை அனுப்பி இன்னும் எத்தனை கோரிக்கைகள் ஏற்க்கபடாமல் உள்ளது என்றும் எப்படி கண்டறிவது என்று கீழே பார்ப்போம்.
  • இந்த வசதியை பெற நீகள் இந்த லிங்கில் http://www.unfriendfinder.fr சென்று அங்கு உள்ள Download என்ற பட்டனை அழுத்தி ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.
  • இந்த ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்தவுடன் உங்கள் பிரௌசரில் தானகவே இணைந்து கொள்ளும். 
  • இந்த ஸ்கிரிப்ட் பைல் Google Chrome/ Opera / Mozillaa / Safari ஆகிய இயங்கு தளங்களில் இயங்குகிறது. 
  • நீங்கள் Mozilla firefox உபயோகித்து கொண்டிருந்தால் இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவ நீங்க உங்கள் பிரவுசரில் Greese Monkey Add On நிறுவியிருக்க வேண்டும்.  
  • இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவியவுடன் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு புதியதாக ஒரு வசதி Unfriends  என்ற லிங்க் இருக்கும். 
  • இதில் கடந்த ஒரு வாரத்தில் உங்களை பட்டியலில் இருந்து நீக்கியவரின் விவரங்கள் தெரியும். 
  • இதில் உள்ள இன்னுமொரு வசதி ஏற்க்கபடாத கோரிக்கைகள். 
  • நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை ஏற்காமல் இருப்பவர்களின் விவரங்களையும் இதில் பார்த்து கொள்ளலாம். 
  • இதில் நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை நாமே அகற்றி விடலாம்.

அலுவலகங்களுக்கு ஏற்ற ஆடை எது?

  மனிதர்களை அழகுப்படுத்திக் காட்டுவது அவர்கள் அணியும் ஆடைகள்தான். ஆனால், எல்லா ஆடைகளையும் எல்லா இடங்களுக்கும் அணி;ந்து செல்ல முடியாது. இடத்திற்கேற்ப ஆடை அணிவது அவசியம். alt
ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு தருணங்களுக்கு ஏற்ப ஆடை அணிந்து கொள்வதுதான் அவர்களுக்கு சிறப்பைத் தருகின்றது.

அந்தவகையில் தொழில்புரியும் இடங்களுக்கு எந்த ஆடை அணிந்து செல்வது என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கும்.

வேலைத்தள சூழலுக்கு ஏற்பவா அல்லது தமது கலாசாரத்திற்கு ஏற்பவா ஆடைகளை அணிவது என்பது குறித்து தீர்மானிப்பதற்கு பலர் திணறுவர்.

குறிப்பாக, அலுவலகங்களுக்கு ஏற்ற ஆடைகளாக பெண்கள் ஜீன்ஸ்- பிளவ்ஸ், எலிபன்ட் கிட், குட்டைப் பாவாடை, முழு நீளக் கை உடைய பிளவ்ஸ், கோட் சூட் போன்ற ஆடைகளை அணிவது சிறந்தது.

ஆண்களுக்கு அநேகமாக இந்தப் பிரச்சினை இருப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு பொதுவான ஆடையாக ஜீன்ஸும் ஷேர்ட்டும்  இருப்பதால் அவர்கள் ஆடைகள் குறித்து பெரிதும் அலட்டிக்கொள்வது இல்லை. இருந்தாலும் ஒரு சில ஆண்கள் அவர்கள் அணியும் ஆடைகள் அலுவலகங்களுக்கு பொருத்தமானதாக இருக்காது.

அலுவலகங்களில் உயர் பதவிகளை வகிகும் ஆண்கள் இந்த ஆடைகளை அணிந்து கழுத்துப்பட்டி கருப்பு கோட் அணிந்து அதற்கேற்ற பாதணிகள் அணிந்து சென்றால் அழகாக இருக்கும். 

சில ஆண்கள் கழுத்துப் பட்டியை தனது பொக்கெட்டுக்குள் வைத்துவிடுவார்கள். இவர்களுக்கு கழுத்துப்பட்டியென்றாலே அது ஒவ்வொமை தருவதாகதான் அமையும். இந்த கழுத்துப்பட்டி அணியும்போதுதான் கம்பீரமான அழகான தோற்றத்தைத் தரும் என்பதை இவர்கள் உணர்ந்துக்கொள்ள மறுக்கின்றார்கள். அதேவேளை வேலைக்குப் பொருத்தமில்லாத சூழலில் கழுத்துப்பட்டி அணிவதும் வேடிக்கையானதாகவே இருக்கும்.
alt
இதைத் தவிர அலுவலகங்களுக்கு என்று ஒரு சிறப்பு இருக்கின்றது. அதற்கு பங்கமேற்படுத்தும்  வகையில் டெனிம், ரீஷேர்ட் அணிதல், காற்சட்டைக்கு வெளியே ஷேர்ட்டை விட்டுவைத்தல், சாதாரண காலணிகள் போன்றவற்றை அணிதல் ஆகியவற்றை சில அலுவலகங்கள் விரும்புவதில்லை. பொதுவாக வார இறுதி நாட்களில் விதிவிலக்கு அளிக்கப்படும்.

பொருத்தமான ஆடை அணியத் தவறும்போது எமது மதிப்பை நாம் இழக்கின்றோம் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை மெல்லிய உடல்வாகு கொண்ட பெண்கள் ஜீன்ஸ், முழுநீளக்கையுடைய பிளவ்ஸ் போன்ற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் அது அவர்களுக்கு 'ஒபிஸ் லுக்கை' தருவதுடன் அவர்கள் வேலையை சஞ்சலமின்றி இலகுவாக இருந்து செய்து முடிப்பதற்கு உதவுவதாக அமையும்.

அதேபோன்று பருமனான உடல்வாகு கொண்ட பெண்கள் குட்டைப்பாவாடையும் முழுநீளக்கை பிளவ்ஸும், அதற்கு மேலாக கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் கோட் போன்று அணிந்தால் அது அவர்களை எடுப்பாக காட்டும்.

அதேபோல் எலிபன்ட் கிட் அல்லது ஜீன்ஸ் அணிந்து அதற்கேற்ற டொப்ஸ் அணிபவர்கள் ஆடம்பரமல்லாத பாதணிகளை அணிந்து சென்றால் இந்தத் தோற்றம் எம்மில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

altபொதுவாக நாம் அணியும் ஆடைகளே எமது உணர்வை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். ஜீன்ஸ் ரீ ஷேர்ட் போன்ற ஆடைகளை அணியும்போது மனதில் சுறுசுறுப்பான உணர்வு ஏற்படுவதுடன் துணிச்சலும் அதிகமாகிறது. இதன்போது எமது நடையில் கூட மாற்றம் தென்படும்.

இதைவிட இந்த ஆடைகள் மிகவும் சௌகரியமாக எம்மை இயங்கச் செய்கின்றன. பேரூந்தில் பயணம் செய்பவர்களுக்கு இவ்வாறான ஆடைகளே சிறந்தது.

சில தொழில் ஸ்தளங்களில் வேலைத் தளங்களுக்கான ஆடைகளை நிர்வாகிகளே நிர்ணயித்திருப்பர்.

நிறுவனங்கள் விதித்துள்ள ஆடைக்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமக்கு கிடைத்த தொழிலை ஒப்புக்கொள்ளாமல் சென்றவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

சிலர் இந்த ஜீன்ஸ், எலிபன்ட் கிட் போன்ற ஆடைகள் கலாசார சீரழிவான ஆடையாக கருதுகின்றனர். ஆனால் இந்த ஆடைகளே எமது உடலை ஆங்காங்கே தெரியாமல் முழுதாக மறைக்கின்றது. மற்ற ஆடைகளைப்போன்று அங்கு உடல் தெரிகிறதா, இங்கு தெரிகிறதா என்று ஆடை குறித்த நினைப்பிலே இல்லாமல் எந்த பயமும் இன்றி வேலையில் முழுக் கவனத்தையும் செலுத்தவும் இத்தகைய ஆடைகள் உதவும்.

வீட்டு வேலைகளில் கணவர்களும் பங்கேற்பது அவசியம்

  
altஅதிகமான குடும்பங்களில் ஆண்கள் தொழிலுக்குச் சென்றுவிட, பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளை பராமரிப்பவர்களாகவும் வீட்டு வேலைகளை செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

தொழிலுக்குச் சென்ற ஆண்களைவிட அதிகமாக வேலைப் பளு நிறைந்தவர்களாகதான் இந்த பெண்கள் காணப்படுவார்கள்.

வீட்டை சுத்தம் செய்தல்,பாத்திரங்கள் கழுவுதல், உடைகள் துவைத்தல், முற்றத்தை சுத்தம் செய்தல், சமைத்தல், பிள்ளைகளை பராமரித்தல் என வேலைகள் அவர்களுக்கு நீண்டுக்கொண்டே செல்கின்றன.

இந்த வேலைகளில் தங்களது முழுக் கவனத்தையும் செலுத்தும் பெண்கள் சிலர், மாலை தனது கணவர்கள் வீடு திரும்பும் போது அவர்களை முறையாக கவனிக்கத் தவறுகின்றனர்.

களைத்துப்போய் வீடு வரும் கணவர்களுக்கு தேநீர் கொடுப்பது, சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்து உரையாடுவது போன்றவை சில குடும்பங்களில் கிடையாது.  சில வீடுகளில் கணவர்கள் வீட்டிற்கு திரும்பும்போது பெண்கள் குட்டி நித்திரையில் ஆழ்ந்துவிடவும் செய்கின்றார்கள்.

altகணவர் விரும்பிய உணவை சமைத்துக்கொடுக்க முடியாமல் போவது, உறவில் ஈடுபட விருப்பமின்மை போன்றவை அதிகமான வேலைப்பளுவை அவர்கள் தலையில் திணிப்பதனாலும் ஏற்படுகின்றது.

பெரும்பாலும் இதை ஆண்கள் புரிந்துக்கொள்ள தவறுகின்றனர். சில நேரங்களில் அவர்களுடன் இந்தச் சிறு சிறு விடயங்களுக்காக சண்டைபிடிக்கவும் செய்கின்றனர்.

ஆண்கள் தங்கள் அன்பு நிறைந்த மனைவியர்களுடன் அழகிய இல்வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமானால் முதலில் அவர்களது வேலைப் பளுவை குறைக்க வேண்டும்.

வீட்டு  வேலைகளில் மனைவியுடன் கணவரும் பங்கேற்றுக்கொள்ள வேண்டும். பெண் செய்ய வேண்டியதை பெண்தான் செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கை கணவர்கள் விட்டுவிட வேண்டும்.

கணவர் தங்களால் முடிந்த சிறுசிறு உதவிகளையாவது  செய்துக்கொடுத்தால் மனைவி மிக மகிழ்ச்சியடைவார். உதாரணத்திற்கு  மனைவியர் காலையில் எழும்பும் போது அவர்களுடன் நீங்களும் எழலாம். எழுந்து வீட்டை சுத்தம் செய்து கொடுக்கலாம். காய்கறிகள் நறுக்கிக்கொடுக்கலாம். முற்றத்தை சுத்தம் செய்யலாம்.  பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்று ஆயத்தப்படுத்தலாம். அவர்களுக்கு உணவுகளை பொதியிட்டுக்கொடுக்கலாம். குடும்பத்தினரின் ஆடைகளை துவைக்க மனைவிக்கு உதவலாம்.

இவ்வாறு சிறுசிறு விடயங்களை கணவர்கள் செய்து கொடுக்கும் போது மனைவியர்களது வேலைப்பளுவும் குறையும். கணவர்கள் மீதான அன்பும் அதிகரிக்கும்.

அன்பு அதிகரித்தால் கணவர் வெளியே செல்லும் போதும் வாசல்வரை வந்து வழியனுப்பிவைத்துவிட்டு, கணவர்  சென்றுமறையும் வரை அவர்களையே பார்த்து கைக்காட்டிக்கொண்டிருக்கும்,  மாலையில் அவர்களின் வரவை எதிர்பார்த்து அன்புடன் வாசலில் காத்திருக்கும் மனைவியைப் பெறலாம்.

வீட்டு வேலைகள் பெண்களுக்கு மாத்திரமானவை எனவும் ஆண்கள் அதில் பங்கேற்பது கௌரவத்திற்கு இழுக்கு எனவும் சில ஆண்கள் கருதுகின்றனர். ஆனால் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தொழில்சார் நிபுணர்கள் பலர் தங்கள் வீட்டு வேலைகளில் மனைவிக்கு ஒத்துழைப்பவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது.

எல்லா கணவர்களும் இதை முயன்று பார்க்கலாமே.

யூனிக்கோடு என்றால் என்ன?

 யூனிக்கோடு எந்த இயங்குதளம் ஆயினும், எந்த நிரல் ஆயினும், எந்த மொழி ஆயினும் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண் ஒன்றை வழங்குகிறது.
 
அடிப்படையில் கணினிகள் எண்களுடன்தான் தொழிற்படுகின்றன. அவை எழுத்துக்களையும் பிற வரியுருக்களையும் எண்வடிவிலேயே சேமிக்கின்றன. யூனிக்கோடு கண்டறியப்படு முன்னர் இவ்வாறு எழுத்துக்களுக்கு எண்களை வழங்க நூற்றுக்கணக்கான குறியீட்டு முறைகள் இருந்தன. இவற்றில் எந்தவொரு முறையிலும் போதுமான அளவு எழுத்துக்கள் இருக்கவில்லை: உதாரணமாக, ஐரோப்பிய ஒருங்கியத்திலுள்ள மொழிகளை உள்ளடக்கவே பல்வேறு குறியீட்டு முறைகள் தேவைப்பட்டன. ஆங்கில மொழியில் கூட எந்தவொரு குறியீட்டு முறையினாலும் பொதுவாகப் புழங்கும் எல்லா எழுத்துக்களையும், தரிப்புக் குறிகளையும், மற்றும் தொழிநுட்பக் குறிகளையும் உள்ளடக்க முடியவில்லை.
 
மேலும் இக்குறியீட்டு முறைகள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன. அதாவது, இரு குறியீட்டு முறைகள், இரு வேறு எழுத்துக்களுக்கு ஒரே எண்ணையோ, அல்லது ஒரே எழுத்துக்கு இரு வேறு எண்களையோ புழங்கலாம். இதனால் எந்தவொரு கணினியும் (குறிப்பாகப் பரிமாறிகள்) பல்வேறு குறியீட்டு முறைகளை ஆதரிக்க வேண்டியுள்ளது; இந்நிலையிலும் வெவ்வேறு குறியீட்டு முறைகளுக்கு இடையிலோ அல்லது இயங்குதளங்களுக்கு இடையிலோ தரவுகள் பரிமாறப்படும் போது, அத் தரவுகள் பழுதுபடச் சாத்தியமுள்ளது.

யூனிக்கோடு இவற்றையெல்லாம் மாற்றியமைக்கிறது!

யூனிக்கோடு எந்த ஒரு மொழியிலும், எந்த ஓர் இயங்கு தளத்திலும், எந்த ஒரு நிரலிலும்,  ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண்ணொன்றை வழங்குகிறது. Apple, HP, IBM, JustSystem, Microsoft, Oracle, SAP, Sun, Sybase, Unisys போன்ற பல முன்னணி நிறுவனங்கள் யூனிக்கோடுத் தரத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. XML, Java, ECMASCript (JavaScript), LDAP, CORBA 3.0, WML போன்ற நவீன தராதரங்களுக்கு யூனிக்கோடு அவசியம். அத்துடன் ISO/IEC 10646 தரத்தைச் செயற்படுத்த அதிகாரப்பூர்வமான வழி யூனிக்கோடு ஆகும். பல இயங்கு சிட்டங்களும், அனைத்து வலையுலாவிகளும், மேலும் பல மென்பொருட்களும் யூனிக்கோட்டை ஆதரிக்கின்றன. யூனிக்கோடு தரத்தின் தோற்றமும், அதனை ஆதரிக்கும் கருவிகள் கிடைப்பதும்,  அண்மைய உலகளாவிய மென்பொருட் தொழிநுட்பப் போக்கில் முக்கியமான நிகழ்வுகளாகும்.
 
சார்புச்சேவை அல்லது பல்லடுக்குப் பயன்நிரல்களிலும், வலைத்தளங்களிலும், பழைய குறியீட்டு முறைகளை விடுத்து யூனிக்கோட்டை உள்ளமைப்பதன் மூலம் கணிசமான நிதிச் சிக்கனத்துக்கு வழியுண்டு. யூனிக்கோடு ஒரு தனி மென்பண்டத்தையோ அல்லது ஒரு தனி வலைத்தளத்தையோ, எந்தவிதமான மீளமைப்புமின்றி, பல இயங்குதளங்கள், மொழிகள், நாடுகளை இலக்காகக் கொண்டு தயாரிக்க உதவுகின்றது. யூனிக்கோடு மூலம் பல்வேறு கணினி அமையங்களுக்கு ஊடாகத் தரவுகளைப் பழுதின்றி அனுப்பலாம்.

யூனிக்கோடு ஒன்றியம் பற்றிய தகவல்

யூனிக்கோடு ஒன்றியம், நவீன மென்பொருட்களிலும் தராதரங்களிலும் உரைக் குறியீடுகளை வரையறுக்கும் யூனிக்கோடுத் தரத்தை உருவாக்கி, மேம்படுத்தி, பரப்புவதற்கான இலாப நோக்கற்ற நிறுவனம். கணினி மற்றும்     தகவற் தொழிநுட்பத் துறையைப் பரந்தளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் பல்வேறு கூட்டமைப்புக்களும் நிறுவனங்களும் இவ்வொன்றியத்தில்  அங்கம் வகிக்கின்றனர், உறுப்பினர்கள் செலுத்தும் உறுப்பியத் தொகைகளினால் மட்டுமே   இவ்வொன்றியம் நிதி பெறுகிறது. யூனிக்கோடுத் தரத்தை ஆதரித்து அதன் விரிவாக்கத்திலும் செயற்பாட்டிலும் பங்களிக்க விரும்பும் எந்தத் தனி நபரும் கூட்டுக்கழகமும் யூனிக்கோடு ஒன்றியத்தின் உறுப்பினர் ஆகலாம்.
 
மேலதிக விவரங்களுக்குச், சொற்களஞ்சியம், யூனிக்கோடு ஆதரவுள்ள மென்பொருட்கள் ,   தொழிநுட்ப அறிமுகம் மற்றும் பயனுள்ள வளங்கள் என்பவற்றைப் பார்க்கவும்.     

தேநீர், மாரடைப்பை தடுக்கும் : புதிய ஆய்வில் தகவல்

நீங்கள் தேநீர் விரும்பிகளா? அப்படியாயின் உங்களை மாரடைப்பு தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு. தேநீரானது மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கின்றது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.



எம்மில் அநேகமானவர்கள் தேநீர் பிரியர்கள். சிலருக்கு காலையில் எழுந்தவுடனே தேநீர் வேண்டும், இல்லையென்றால் அன்றைய பொழுதே மந்தமாக உள்ளதாக கூறுவார்கள். சிலருக்கு தேநீர் உற்சாகப் பானமாகவும் உள்ளது. 

சிலர் அலுவலகங்களில் பகல் உணவை வயிறு நிறைய உணடு விட்டு நித்திரையில் கண்ணயர்ந்துப் போவார்கள். அவர்கள் தேநீரின் மணத்தை நுகர்ந்தால் போதும்,  நித்திரை பறந்துவிட, ஓடிச்சென்று  தேநீரை எடுத்து வந்து  அருந்துவார்கள். பின்னர் அவர்களது இயக்கமே மின்னல் வேகமாக இருக்கும்.  

உண்மையில் தேநீர் ஒர் உற்சாகப் பானம்தான். அதைவிட இப்போது தேநீர் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் மருத்துவப் பானமாகவும் உள்ளது என அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

தொடர்ச்சியாக தினமும் 03 கோப்பை கறுப்பு தேநீர் அல்லது பச்சை தேநீர் (கிறீன் ரீ) அருந்தினால் இதயப் பிரச்சினைகள் 11 சதவீதம் குறையும் என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தேநீரிலுள்ள 'flavonoids' எனும் பொருள்,  இரத்தக் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரோல் மூலம் ஏற்படும் ஒருவகைகற்களை தடுக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு கப்  தேநீரில்  150- 200 மில்லிகிராம் flavonoids' உள்ளது. 'அன்ரி ஒக்ஸிடன்ட்ஸ்களை'  பொறுத்தளவில் இரு கோப்பை தேநீர் 5 மரக்கறிகளுக்கு அல்லது இரு அப்பிள்களுக்கு சமமானது என இந்த ஆய்வு கூறுகிறது.

தேயிலை ஆலோசனை சபையைச் சேர்ந்த டாக்டர் கத்தரின்  தேநீரில் பாலை சேர்த்து அருந்தினாலும் மேற்படி நன்மைகள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஞாபகமறதிப் பிரச்சினையா?

 
 படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.
ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்…
* இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்.
* மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப்படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடுபடுத்திவிடாதீர்கள். காரணம் அந்த வேலை பற்றிய நினைவுகள் ஏற்கனவே நீங்கள் படித்தவற்றை மறக்கடிக்கும் வாய்ப்புள்ளது.
* கணக்குப் பாடங்களைப் பார்க்கப் போகிறீர்களா? அதற்கு முன் மூளைக்கு அதிக வேலை கொடுக்கின்ற செயலில் ஈடுபடாமல் மனதைக் கொஞ்சம் ஓய்வாக வைத்திருந்துவிட்டு பிறகு படிக்கச் செல்லுங்கள்.
* இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பது என்று இல்லாமல், போதுமான அளவு உறங்குவது ஞாபகசக்தியைப் பாதிக்காமல் இருக்கும்.
* ஒரு சிக்கலான பாடத்தைப் படிக்கிறீர்கள். அது மூளையில் பதியவில்லை. அதே ஞாபகமாகத் தூங்கச் செல்கிறீர்கள். தூங்கும்முன் அந்தப் பாடத்தை மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள். காலையில் அந்தப் பாடம் மனதில் ஏறக்குறைய முக்கால்வாசி பதிந்திருப்பதை உணர முடியும். மீதி கால் பாகத்தை மீண்டும் ஒருமுறை வாசிப்பதன் மூலம் படித்து முடித்துவிடலாம். இது மனோவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை.
* பொதுவாக காலையில் மனம் தூய்மை, புத்துணர்வோடு இருக்கும். கடினமான பாடங்களை அந்த வேளையில் படித்தால் எளிதில் மனதில் பதியும்.
* ஒரு கேள்விக்கான பதிலைப் போல மற்றொரு கேள்வியின் பதில் இருந்தால், அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல அக்கேள்விகளின் விடைகள் நேர் எதிர்மறையாக இருந்தாலும் அந்த இரண்டையும் தொடர்புக்குள்ளாக்கி நம்மால் நினைவுக்குக் கொண்டுவர முடியும். நமக்குப் புரிகிற மாதிரியான தொடர்புமுறையை ஏற்படுத்திக்கொண்டால் போதும்.
* முறையான மறுபார்வை (ரிவிஷன்), நல்ல நினைவாற்றலையும், கற்றலை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும் ஆற்றலையும் நிச்சயம் தரும்.
* நாம் உண்ணும் உணவுக்கும், ஞாபகசக்திக்கும் தொடர்பு உண்டு. புரதம் அதிகம் கிடைக்கும் கீரை, காய், கிழங்கு போன்றவற்றை அதிகம் உண்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வல்லாரைக் கீரை, நினைவாற்றலைக் கூட்டும்.
* படமாகக் கண்ணால் காண்பதை நாம் அதிகம் மறப்பதில்லை. எனவே பாடம் தொடர்பான படங்களை அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டும். வரைந்து பார்க்க வேண்டும்.
* பெரிய பாடப் பகுதிகளுக்கு, அவை தொடர்பான சிறுசிறு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்வதும், அவற்றை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வதும் பலனளிக்கும்.
* எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான விஷயம், ஈடுபாடு. நாம் என்றோ பார்த்த ஒரு சினிமாவில் காட்சி, வசனத்தை அப்படியே மறக்காமல் கூறுகிறோம். ஆனால் நேற்றுப் படித்த பாடத்தை மறந்துவிடுகிறோம். அதற்குக் காரணம், ஆர்வம், ஈடுபாடுதான். படிப்பதை கடமையாக மேற்கொள்ளாமல், பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் மறக்காது.

குளிர்வித்தால்’ காப்பாற்றலாம்!

 
 விபத்தில் காயம் அடைந்தவர்களை அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் முன் `ஜில்’லென்ற தண்ணீரில் குளிர்வித்தால் காப்பாற்றலாம் என்று கண்டு
பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.



இந்தப் புதிய நுட்பம், காயம் அடைந்தவரின் உடம்பை முழுமையாக மூடச் செய்யும். அதன் மூலம், மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய கூடுதல் நேரம் அளிக்கும் என்பது ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு.
விபத்தில் பாதிக்கப்பட்டவரின் இதயத் துடிப்பு நின்றுபோன நிலையில், மூளை சேதம் அடையாமல் இந்த உதவி காக்கும். மயக்க மருந்து, மூச்சு ஆதரவு எந்திரங்களும் தேவையில்லை.
முதல்முறையாக இந்த நுட்பத்தை மனிதர்களுக்கு செய்து பார்க்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதில் மனித உடம்பை கிடுகிடுவென்று குளிர்வித்து ஆய்வு செய்யப்படும்.
இந்தக் குளிர் சிகிச்சை முறையை ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியும், மசா சூசெட்ஸில் உள்ள பொது மருத்துவமனையும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன. இந்தச் சிகிச்சை முறையில், ஒருவரின் உடம்பு 10 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் குளிர்விக்கப்படும். சாதாரணமாக மனித உடம்பின் வெப்பநிலை 37 டிகிரி ஆகும். பொதுவாக மனிதர்களின் வெப்பநிலை 22 டிகிரிக்குக் கீழே இறங்கினால் அவர்கள் உடனே இறந்து விடுவார்கள். எனவே பாதுகாப்பான முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் மேற்கண்ட குளிர் சிகிச்சை ஆய்வுக்குத் தலைமை வகித்தவர் ஹசன் ஆலம். அவர் கூறுகையில், `துப்பாக்கிச் சூடு, கத்திக் குத்து, கார் விபத்து ஆகியவற்றில் காயம் அடைந்தவர்கள் மரணம் அடையும் அபாயம் அதிகம். அவர்களது உடம்பை அதீதமாகக் குளிர்விக்கும்போது, அது அவர்களின் மூளையும், உடல் உறுப்புகளும் பாதிப்படையாமல் காக்கும். விலங்குகளில் இந்த ஆய்வை தொடக்கநிலையாக மேற்கொண்டபோது நல்ல பலனைத் தந்துள்ளது’ என்றார்.

இ‌ப்படியு‌ம் ‌சில‌ர் இரு‌க்‌கிறா‌ர்க‌ள்..

tamiljyoth.com

பெ‌ண் எ‌ன்றாலே பூவாகவு‌ம், தெ‌ன்றலாகவு‌ம் இரு‌ப்பது எ‌ல்லா‌ம் வெறு‌ம் க‌விதை‌க்கு ம‌ட்டு‌ம்தா‌ன் பொரு‌ந்து‌ம். ஆனா‌ல் ‌நிஜ‌த்‌தி‌ல் பெ‌ண்க‌ளி‌ல் பல வகைக‌ள் உ‌ண்டு. அதே‌ப்போல‌த்தா‌ன் ஆ‌ண்க‌ளு‌ம் ‌சில எ‌ல்லை‌க்கு‌ள் இரு‌ப்பா‌ர்க‌ள். இவ‌ர்களை காத‌லி‌ப்பவ‌ர்களு‌க்கு ‌சில ‌சி‌க்க‌ல்க‌ள் ஏ‌ற்படு‌ம்.
நா‌ம் ‌பிர‌ச்‌சினை‌க்கு வருவோ‌ம். ‌சில‌ர் வேலை‌க் காத‌லிக‌ள்/காதல‌ர்க‌ள், எ‌தி‌ர்பா‌ல் ‌விரோ‌திக‌ள், த‌னிய‌ர்க‌ள் என ‌சில வகைக‌ள் உ‌ண்டு.
அதாவது இ‌ந்த வகையானவ‌ர்க‌ள் காத‌லி‌க்க‌ப்படுவது‌ம், காத‌லி‌ப்பது‌ம் ‌மிக‌‌ச்சவாலான ‌விஷயமாக இரு‌‌க்கு‌ம். அதே‌ப்போல இவ‌ர்களை காத‌லி‌ப்பவ‌ர்களு‌ம் பல சவா‌ல்களை எ‌தி‌ர்கொ‌ள்ள நே‌ரிடு‌ம்.
வேலை‌க் காத‌ல‌ர்க‌ள் எ‌ன்பவ‌ர்க‌ள், ‌மிக‌ச் ‌சி‌றிய வய‌திலேயே ந‌ன்கு படி‌த்து பெ‌ரிய‌ப் பத‌வி‌யி‌ல் அம‌ர்‌ந்தவ‌ர்களாக இரு‌ப்பா‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்களது வேலை ‌மீது அ‌திக ஈடுபாடு கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். எ‌ப்போது‌ம் அலுவலக‌த்‌தி‌ல் தவ‌ம்‌கிட‌ப்பா‌ர்க‌ள். வேலை‌க்கு ‌நிகராக இவ‌ர்க‌ள் எதையு‌ம் வை‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்.
ஒரு வேளை இவ‌ர்களது கடமையுண‌ர்‌ச்‌சியை‌ப் ‌பிடி‌த்து ஒருவ‌ர் இவ‌ர்களை காத‌லி‌த்தா‌ல் அவ‌ர்க‌ள் பாடு ‌தி‌ண்டா‌ட்டமா‌கி‌விடு‌ம். அதாவது வேலை‌க்கு மலை அளவு மு‌‌க்‌‌கிய‌த்துவ‌ம் கொடு‌க்கு‌ம் இவ‌ர்க‌ள், காதலு‌க்கு கடுகளவு‌க் கூட ம‌தி‌ப்பு‌க் கொடு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். இதனா‌ல் அவ‌ர்களை காத‌லி‌ப்ப‌வ‌ர்க‌ள்தா‌ன் மனமுடை‌ந்து போக நே‌ரிடு‌ம்.
மேலு‌ம், எ‌தி‌ர்பா‌ல் ‌விரோ‌திக‌ள் எ‌ன்பவ‌ர்க‌ள், த‌ங்களது ‌சி‌றிய வய‌தி‌ல் த‌ங்களது எ‌தி‌ர்பாலரா‌ல் (நெரு‌ங்‌கிய உற‌வின‌ர் அ‌ல்லது ந‌ண்ப‌ர்க‌ள்) ஏ‌மா‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌ப்பா‌ர்க‌ள் அ‌ல்லது பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ப்பா‌ர்க‌ள். இதனா‌ல் அ‌ப்போ‌தி‌ல் இரு‌ந்து அவ‌ர்க‌ள் எ‌தி‌ர்பாலரை எ‌தி‌ரிகளாகவே‌ப் பா‌ர்‌ப்பா‌ர்க‌ள்.
எ‌தி‌ர்பால‌ர் எ‌ன்றாலே ம‌ற்றவ‌ர்களை கொடுமை‌ப் படு‌த்துவது, ஏமா‌ற்றுவது என மன‌தி‌ல் ப‌திய வை‌த்து‌க் கொ‌ள்வா‌‌ர்க‌ள். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களை காத‌‌லி‌ப்பது வே‌ண்டுமானா‌ல் எ‌ளிதாக இரு‌க்கலா‌ம். ஆனா‌ல் காத‌லி‌க்க வை‌ப்பது ‌மிகவு‌ம் ‌சிரமமாக இரு‌க்கு‌ம். அ‌ப்படியே ‌உ‌ங்களை அவ‌ர் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கினாலு‌ம், ம‌ற்ற ‌சில ‌பிர‌ச்‌சினைக‌ள் மூல‌ம் கரு‌த்து வேறுபாடு ஏ‌ற்படுவத‌ற்கு அ‌திக வா‌‌‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு. ஒரு வேளை எ‌ப்போதாவது ‌நீ‌ங்க‌ள் ‌சி‌ன்ன தவறுக‌‌ள் செ‌ய்தா‌ல், அ‌வ்வளவுதா‌ன்.. அவ‌ர் ‌நினை‌த்‌திரு‌ந்தததுதா‌ன் ச‌ரியான முடிவு எ‌ன்று உ‌ங்க‌ள் ‌மீது அனை‌த்து கோப‌த்தையு‌ம் கொ‌ட்டி‌விடுவா‌ர்‌.
த‌னிய‌ர்க‌ள் எ‌ன்பவ‌ர்க‌ள் வேறுயாரும‌ல்‌ல.. ஏதேனு‌ம் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியே‌றியவ‌ர்க‌ள், ‌‌வீ‌ட்டி‌ல் கோ‌பி‌த்து‌‌க் கொ‌ண்டு த‌னியாக வ‌சி‌ப்பவ‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள் இ‌ன்‌றி த‌னிமை‌யி‌ல் வா‌ழ்பவ‌ர்க‌ள்தா‌ன். இவ‌ர்க‌‌ளிட‌ம் எ‌ன்ன ‌பிர‌ச்‌சினை இரு‌க்கு‌ம் எ‌ன்று எ‌ண்ணு‌‌கி‌றீ‌ர்களா?
இவ‌ர்க‌ள் ஒருவ‌ரிட‌ம் எ‌ளி‌தி‌ல் பழகுவா‌ர்க‌ள். எ‌ளி‌தி‌ல் காத‌ல் வய‌ப்படுவா‌ர்க‌ள். அ‌ன்பை‌ப் பொ‌ழிவா‌ர்க‌ள். அ‌ன்‌பி‌ற்காக ஏ‌ங்குவா‌ர்க‌ள். ஆனா‌ல், அவ‌ர்க‌ள் ‌விரு‌ப்ப‌ப்படி எ‌‌ல்லா‌ம் நட‌‌க்கு‌ம் வரைதா‌ன் இ‌ந்த ஒ‌த்‌திகை ச‌ரியாக வரு‌ம். ஒரு வேளை ‌நீ‌ங்க‌ள் முர‌ண்ப‌ட்டு ஏதாவது பே‌சினா‌ல் அ‌வ்வளவுதா‌ன். ‌மிக‌ப்பெ‌ரிய ச‌ண்டை போ‌ட்டு உ‌ங்களை அவ‌ர்களது வ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌ந்து வெ‌ளியே த‌ள்‌ளி‌விடுவா‌ர்க‌ள்.
இவ‌ர்களுட‌ன் காத‌ல் வா‌ழ்‌க்கை வாழலா‌ம். ஆனா‌ல் அதனை‌த் தொடருவதுதா‌ன் ‌சிரம‌ம்.
எனவே இதுபோ‌ன்றவ‌ர்களுடனான காத‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌ச்ச‌ரி‌க்கையாக நட‌‌ந்து கொ‌ள்வது நல‌ம்.

மனைவியின் அன்பை பெற......

என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல.
tamiljyothi.blogspot.com
 இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…

 1. மதியுங்கள்
 வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

 2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல
 இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.


 3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்
 மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக் கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.


 4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்
ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
 

 5. ஆலோசனை கேளுங்கள்
 நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.
 

 6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
 நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்.




 7. பேசுங்கள்
 பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

 8. மனைவியின் குடும்பத்தில் பங்கு கொள்ளுங்கள்’
 வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.
 

 9. அழகில் கவனம் செலுத்துங்கள்
 அழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?
 

 10. அவ்வப்போது `வழக்கம்போல் இருங்கள்
 எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று `பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை.

பழங்களின் நிறமும் குணமும்

tamijyothi.blogspot.com

இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று.  பழங்களை  சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள்.   உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே.  பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது.  தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம்.  நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்.
நம்மில் சிலர் பழங்களை சாறு எடுத்து அருந்துவார்கள்.  சிலர்  சாறு எடுக்கப்பட்டு பாட்டில்களில் ரசாயனம் சேர்த்து பதப்படுத்தப் பட்டிருக்கும் பழச்சாறுகளை விரும்பி அருந்துவார்கள்.    பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.  அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது.  அப்போதுதான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும்.  இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும்.   சீரண சக்தியை அதிகரிக்கும்.  மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும்.
பழங்களில் பல நிறங்கள் உள்ளன.  அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை.  இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.
சிவப்பு நிறப் பழங்கள்
கண்ணைக் கவரும் பழங்கள்தான்  சிவப்பு நிறப் பழங்கள்.  இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை.
ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி,  போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.
· வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள்.  இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
· இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.  சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும்.  தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும்.   நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.
· மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும்.  நினைவாற்றலைத் தூண்டும்.
· கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது.  இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.
மஞ்சள் நிறப் பழங்கள்
எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசிப் பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும்.
· மஞ்சள் நிறப்பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும்.
· பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம்.  இது நரம்புத் தளர்வைப் போக்கும்.  மயக்கமுள்ளவர்களுக்கு உடனே உணர்வை உண்டாக்கும்.  மன அழுத்தத்தைப் போக்கும்.  ஜீரண சக்தியைக் கூட்டும்.  மலச்சிக்கலைப் போக்கும்.  குடல் புண்களை ஆற்றும்.  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.  கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும்.
வாழைப்பழம் - பொதுவாக  கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது.  குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும்.  அஜீரணத்தைக் குறைக்கும்.  கண் பார்வையைத் தெளிவாக்கும்.  ஞாபக சக்தியை அதிகரிக்கும்.  முகப்பொலிவு கொடுக்கும்.  பெண்களுக்கு கழுத்துப்பகுதி, முகம், கை கால் முட்டிகளில் ஏற்படும் கரும்படலத்தைப் போக்கும்.
ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும்.  மலச்சிக்கலைத் தவிர்க்கும்.  உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். இது ஒரு கிருமி நாசினி.
பச்சை நிறப் பழங்கள்
பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய்  போன்றவை அடங்கும் .
இப்பழங்கள் காய்கறிகளை ஒத்து இருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும்  உள்ளன.    உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன.
மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.
ஆரஞ்சு நிறப் பழங்கள்
மாம்பழம், ஆரஞ்சு, ஸ்டார் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும்.
உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன. இவற்றில் வைட்மின் பி3, சி, டி, இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன.  ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது.  இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது.  இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது.  சீரண சக்தியை அதிகரிக்கிறது.  நோய் எதிர்பப் சக்தியைத் தூண்டுகிறது.  கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது.  இதயத்தைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.  புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.
நீல நிறப் பழங்கள்
நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும்.
மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள்  நீல நிறப் பழங்களாகும்.  துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும்.  இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.  மூளையின செல்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது.
தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும்.  தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும்.  நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும்.  இரத்தம் உறைவதை துரிதப் படுத்தும்.
மண் நிற பழங்கள்
சப்போட்டா பழம், விளாம்பழம் இதில் அடங்கும்.
இது உடலுக்கு ஊக்கமளிக்கும்.  கொழுப்புச் சத்தை அதிகரிக்கும்.  சீரண சக்தியைத் தூண்டும்.  மலச்சிக்கலைப் போக்கும்.  குடற்புண்களை ஆற்றும்.  வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும்.  இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

ரகசியத்தைக் காப்பாற்ற


இணையம் வழி அனைத்து நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று நமக்குக் கிடைத்த வசதி சிறப்பான ஒன்று என்றாலும், அதில் உள்ள ஆபத்துக்களுக்கும் பஞ்சமில்லை. நாம் என்ன கீ போர்டில் அழுத்துகிறோம் என்று அறிந்து, அதனை அப்படியே மற்றவர்களுக்கு தெரிவிக்கும் ஸ்பைவேர்கள் ஆபத்து நாளொரு மேனியாக வளர்ந்து வருகிறது. இத்துடன் நம் கம்ப்யூட்டரில் நம்மை வேவு பார்க்கும் ஒரு புரோகிராம் கீ லாக்கர்களாகும். நாம் என்ன கீகளை அழுத்துகிறோம் என்பதனை அப்படியே ஒரு லாக் புக்காக அமைத்து, நம்மை வேவு பார்க்கும் நபர்களுக்கு பைலாக தெரிவிக்கும் கீ லாக்கர்கள் அதிகம் இயங்கி வருகின்றன.  இதிலிருந்து நம்மை பாதுகாக்க, நாம் அழுத்தும் கீகளை, கம்ப்யூட்டர்களில் உள்ள கீ லாக்கர்  புரோகிராம்கள் அறிந்து கொள்ள விடாமல் தடுக்க இணையத்தில் சில இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன.
இவற்றில் சிறந்ததாக  அண்மையில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதன் பெயர் KeyScrambler Personal. இதனை QFX Software  என்னும் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.  இது மிக அருமையாகச் செயல்படுகிறது. நாம் டைப் செய்கையில் கிடைக்கும் கீ ஸ்ட்ரோக்குகளைச் சுருக்கி மாற்றுகிறது. பின்னர், பிரவுசர்களுக்கு அவற்றை எடுத்துச் சென்று, அங்கு ஒரிஜினல் கீகளாக மாற்றித் தருகிறது. இதனால், கீ லாக்கர்கள்   எந்த கீகள் அழுத்தப்பட்டன  என அறிவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த கீ லாக்கர்களுக்கு, சுருக்கப்பட்ட என்கிரிப்டட் சிக்னல்கள் தான் கிடைக்கும். அதனை மற்றவர்கள் அறிய முடியாது. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிளாக் ஆகிய பிரவுசர்களுக்கான  KeyScrambler Personal   தொகுப்பு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. மற்ற பிரவுசர்கள் மற்றும் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களுக்கு வேண்டும் என்றால், கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மேலும் இது விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டுமே இயங்குகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி https://addons. mozilla.org/enUS/firefox/addon/3383/

உங்கள் IP முகவரியினை மற்றவர் கண்டுபிடிக்காமல் இணையத்தினை உபயோகிப்பது எப்படி?

நமக்கு பெயர் உள்ளதைப் போல நாம் உபயோகிக்கும் கணனிகளுக்கும் தனித்தனி பெயர் உண்டு. அதுதான் IP முகவரி. இவ IP Addressக் கொண்டு இவ் இணைய பாவனையாளர் எங்கிருந்து இணையத்தை பயன்படுத்துகின்றார் என மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

நமது முகவரியினை மற்றவர் பார்க்காத, கண்டுபிடிக்காத போல இயங்க வேண்டும் எனில் அதற்கும் வழி உண்டு. நாம் புரக்சி சேவரினை Proxy Server உபயோகித்து இணையத்தை பயன்படுத்துவோமாயின் நாம் எங்கிருக்கின்றோம் என்பதனை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். சரி இனி புரக்சி சேவரினை எவ்வாறு பயன்படுத்துவது எனப் பார்பபோம்.

புரக்சி சேவரினை டவுன்லோட் பண்ணி இன்ஸ்ரோல் பண்ணிக் கொள்ளவும்.

Install பண்ணிய பின் உங்களது IP முகவரி மறைக்கப்பட வேண்டிய தேவை ஏற்படின். புரக்சி சேவரினை கிளிக் செய்து கனக்ட் (Connect) பண்ணவும். கனக் ஆனவுடன் எங்கள் உண்மையான முகவரி மாற்றமடைந்திருக்கும்.

உங்கள் IP முகவரியை பார்க்க இவ் இணையத்தளத்திற்கு சென்று நீங்கள் பாக்கலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறை

நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள கார்போஹைட்ரேட்டை (சுகர்) பிரித்து சக்தியாக்கி உடலிற்குத் தரும் ஒரு செரிமான சுரப்பு நீ்ர் (இன்சுலின்), போதுமான அளவு சுரக்காமல் போனாலோ அல்லது அது சுரப்பு நீர் பயன்படுத்தப்படாத ஒரு நிலை ஏற்பட்டாலோ, கரையாத அந்த கார்ப்போஹைட்ரேட் இரத்தத்தில் கலப்பதால் நமது உடலின் இயக்கத்தை தாக்குகிறது. குறிப்பாக இரத்த நாளங்களையும், நரம்புகளையும் தாக்குகிறது. இதுவே நீரிழிவு (சர்க்கரை) வியாதி ஏற்படக் காரணம் என்று மருத்து அறிவியல் கூறுகிறது.

நீரிழிவு வியாதியை அதன் தாக்கங்களின் அடிப்படையைக் கொண்டு இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். ஒன்று, வாந்தி வருவது போன்ற உணர்வு, வாந்தியெடுத்தல், உடல் எடைக் குறைதல், சக்தியற்றதாக உணர்தல் ஆகியன இதன் அறிகுறிகளாகும். இரண்டாவது, தாகமெடுத்தல், அதிகமாக சிறு நீர் கழித்தல் (பாலியூரியா), அதீத பசி உணர்வு, களைப்பு, தோலில் பாதிப்பு ஏற்படுதல் அல்லது சீறுநீர் போக்கில் பாதிப்பு, காயமேற்பட்டால் ஆற நீண்ட காலமாதல், பார்வை குறைதல் ஆகியன இரண்டாவதன் அறிகுறிகளாகும்.
நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய இந்த இரண்டு நோய்களால் பாதிக்கப்பட்ட எவராயினும், அவர்கள் மிகவும் முறைபடுத்தப்பட்ட ஒரு வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலையில் உடற்பயிற்சி செய்தல். தூய்மையான சூழல் உள்ள இடத்தில் வேகமாக நடைப் பயிற்சி செய்தல், யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி (பிராணயாமா), தியானம் ஆகியவற்றை (முறையான ஆசிரியரின் வழிகாட்டுதலில்) செய்லாம்.

பழங்கள், காய்கறிகள் கொண்ட உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். அதிக சக்தி தரும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். எதற்காகவும் பதற்றமடைதலைத் தவிர்க்க வேண்டும். ஒரு அமைதியுள்ள நிலையில் மனதை வைத்திருக்க வேண்டும்.

இளமையில் இருந்தே நன்கு அறிமுகமாக மருத்துவர் ஒருவரிடமோ அல்லது அவர் ஆலோசனையின் பேரிலோ குறித்த கால இடைவெளிகளில் மருத்துவ சோதனை செய்துக்கொள்ள வேண்டும். உடலின் தன்மையை நன்கு புரிந்துகொண்டு அதற்கு இணங்க பழக்க வழக்கங்களை முறைபடுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தங்களை நோயாளி என்று மட்டும் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது.

பெரும்பலம் தரும் பீட்ரூட் கீரை


பெரும்பாலான கிழங்கு வகைகளில் நார்சத்துக்கள் அதிகம் காணப்படுவதில்லை. வெறும் கார்போஹைட்ரேட் சத்துகள் மட்டுமே பெருமளவு காணப்படுகின்றன. அதிலும் நாம் சமையலில் பயன்படுத்தும் பெரும்பாலான கிழங்குகள், வெறும் ருசிக்காக மட்டுமே பயன்படுகின்றன. கார்பாஹைட்ரேட் அதிகம் நிறைந்த கிழங்குகளை சிப்ஸ், வறுவல், பொரியல் என எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவதால் அதில் தங்கியுள்ள உயிர்சத்துகள் அழிந்து விடுகின்றன. கிழங்கு மற்றும் விதை வகைகளை உணவாக உட்கொள்ளும் பொழுது அத்துடன் அதன் மேல் பாகங்களான இலை, விதை மற்றும் தண்டுகளையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்தும் காரட், முள் ளங்கி, பீட்ரூட், நூல்கோல், வெந்தயம், சீரகம், ஓமம், வெங்காயம், பூண்டு போன்றவற்றின் கீரைப் பகுதிகளையும் உணவில் சூப் அல்லது அரைத்த விழுதாக சேர்த்து பயன்படுத்தலாம். ஏனெனில் கிழங்குகளில் இல்லாத சில உயிர்சத்துக்களும், கனிமங்களும், அத்தியாவசிய உப்புகளும், நார்சத்துகளும் இந்த கீரைகளில் பெருமளவு உள்ளன. நாம் உண்ணும் கிழங்குகளில் பீட்ரூட்டின் பங்கு இன்றியமையாதது. சமையலில் ருசியையும்,உணவுகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும் தருவதுடன், அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதற்கு பீட்ரூட் பெரும் பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டிலிருந்து சாயம் தயாரிக்கப்பட்டு, பலவிதமான உணவுப் பொருட்களும் நிறமேற்றப்படுகின்றன. பீட்டா வல்காரிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கீனோபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கிழங்குச்செடிகள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன. கிழங்குகளைவிட இதன் இலைகள் ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்டுள்ளன. கிழங்கு மற்றும் இலைகளில் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் சி மற்றும் ஏராளமான வைட்டமின்களும், கனிமங்களும் காணப்படுகின்றன. இதிலுள்ள பீட்டைன் என்னும் ஆல்கலாய்டு இருதயத்தை பாதுகாப்பதுடன், போலிக் அமிலம், ஏ வைட்டமின், பி வைட்டமின்கள் மற்றும் புரொஜஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் செயல்பாட்டிற்கும் பெருமளவு உதவுகின்றன. இலை மற்றும் கிழங்குகள், சிறுநீரை நன்கு பெருக்கி, இதய வீக்கத்தை குறைக்கின்றன. பீட்ரூட்டிற்கு இனிப்பு சுவை இருந்த போதிலும் இதன் இலை மற்றும் கிழங்கு சாறானது ரத்த சர்க்கரையளவை குறைக்கின்றன. கல்லீரலின் கொழுப்பை கரைக்கின்றன. பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடாக மாற்றமடைந்து, மென்மையான சதைப்பகுதிகளை சுருங்கி, விரியச் செய்கின்றன. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறது. பீட்ரூட் கிழங்குகளை உணவில் அதிகமாக உட்கொள்ளும் பொழுது தற்காலிகமாக சிறுநீர் மற்றும் மலம் சிவப்பாக செல்வதுண்டு. உணவில் உள்ள சத்து, உடலால் முழுவதும் கிரகிக்கப்பட்டதும், இந்நிலை மாறி விடுவதுண்டு. செரிமான கோளாறுகளை நீக்கி, உணவுப்பாதையில் தோன்றிய அழுகல் மற்றும் கழிவுகளை நீக்கும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு. பூண்டு உட்கொள்ளும் பொழுது ஏற்படும் வாய் நாற்றத்தை நீக்கவும் பீட்ரூட் துண்டுகளை வாயில் போட்டு மென்று வரலாம். சாலட், பொரியல், ஜாம், ஊறுகாய், சூப் என பலவகைகளில் உட்கொள்ளப்படுகிறது. பீட்ரூட் இலை மற்றும் கிழங்கை வேகவைத்து, சூப் தயார் செய்யலாம். பீட்ரூட் இலை-2 கைப்பிடியளவு, பீட்ரூட் கிழங்கு-200 கிராம், தக்காளி-2, பெரிய வெங்காயம் அரிந்தது-2 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய்-2, சீரகம் மற்றும் சோம்பு அரைத்த கலவை-ஒரு கரண்டி, தேங்காய் துருவல்-2 மேசைக்கரண்டி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட் இலைகளை ஓடும் நீரில் அலசி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பீட்ரூட் கிழங்கையும் தோல் சீவி சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
வெட்டிய வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் சோம்பு, சீரக கலவை ஆகியவற்றை வதக்கி, அத்துடன் பீட்ரூட் இலை மற்றும் கிழங்கு துண்டுகளை கலந்து 500மி.லி., நீரில் போட்டு வேகவைத்து, வெந்ததும், அரைத்த தேங்காய் துருவலை கலந்து, மீண்டும் 250 மி.லி., நீர் ஊற்றி நன்கு கொதிக்கவைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை வாரம் ஒருமுறை குடித்து வர ரத்த ஓட்டம் சீராகும்; சிறுநீர் நன்கு பெருகும்; ரத்த சோகையினால் பெண்களுக்கு தோன்றும் மாதவிலக்கு தடை நீங்கும். கல்லீரல் பித்தப்பையில் தோன்றும் கற்கள் மற்றும் மண்ணீரல் வீக்கம் நீங்கும்.

வீடியோவில் இருந்து ஓடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்.

வீடியோவில் இருந்து ஓடியோவை மட்டும் தனியாக பிரித்தெடுக்க
உதவும் ஒரு இலவச மென்பொருள் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சில வீடியோக்களில் உள்ள ஓடியோ மட்டும் நமக்கு தேவைப்படும்

அப்படி பட்ட நேரத்தில் வீடியோ எடிட்டிங் செய்பவர்களிடம் சென்று
வீடியோவில் இருந்து ஓடியோவை மட்டும் பிரித்தெடுக்க பணமும்
நேரமும் செலவாகும் ஆனால் இனி எளிதாக நம் கணினி மூலமே
வீடியோவில் இருந்து ஓடியோவை மட்டுமல்ல முக்கியமான பிரேம்-ல்
இருக்க்கும் போட்டோவை கூட சேமிக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு மென்பொருள் உள்ளது. இங்கு கொடுத்திருக்கும் சுட்டியை
சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.

தரவிறக்க முகவரி : http://www.softwareclub.ws/download/scvcs1303.exe

இந்த மென்பொருளை தரவிறக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும்
அடுத்து மென்பொருளை திறந்ததும் படம் 1-ல் இருப்பது போல் வரும்
இதில் (Step 1) Input video file என்பதில் நாம் மாற்ற விரும்பும் வீடியோ
கோப்பை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். அடுத்து Play என்ற பட்டினை
அழுத்தி வீடியோவில் உள்ளதில் எதை புகைப்படமாக சேமிக்க
வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து கொண்டு (Step2 ) Save Frame என்பதை
சொடுக்கவும். அடுத்து ( Step 3) -ல் Convert to என்பதில் நாம் மாற்ற
வீடியோ கோப்பை வேறு பார்மட்டுக்கு மாற்ற விரும்பினால் அதை
தேர்ந்தெடுக்கவும். அடுத்து இருக்கும் (step 4) தான் நாம் தேர்ந்தெடுத்த
வீடியோ கோப்பை எந்த ஆடியோ போர்மட்டுக்கு மாற்ற வேண்டுமோ
அதை தேர்ந்த்டுத்துக்கொண்டு ( Step 5) Output video file என்பதில்
நம் கணினியில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதை
தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் எல்லாம் தேர்ந்தெடுத்து முடித்த பின்
( Step 6 ) split என்ற பட்டினை அழுத்தவும். வீடியோவில்
இருந்து ஓடியோவை வேகமாக பிரிக்க விரும்பும் நண்பர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உற்சாகம் தரும் நட்பு


`உன் நண்பன் யார் என்று சொல், உன்னைப்பற்றி சொல்கிறேன்’ என்ற பழமொழி பற்றி அறிந்து இருக்கலாம். அந்த அளவுக்கு நண்பனின் முக்கியத்துவம் இருப்பதை அறியலாம். உங்களைச்சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. டாக்டர் ரிச்சர்டு டன்னி தலைமையில் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது உங்களுக்கு மிகவும் நல்ல பழக்கவழக்கங்கள் உள்ள 10 நண்பர்கள் இருந்தால் போதும், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நல்ல செயல்களுடன் இருப்பீர்கள் என்று தெரியவந்தது. பல்வேறு வயதுள்ள 1760 பேர்களை தேர்ந்து எடுத்து அவர்களிடம் இதுகுறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது நல்ல நண்பர்கள் உள்ளவர்கள் திருப்தியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வது தெரிந்தது.

கூகிள் - சில குறிப்புகள்

இணையத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கூகிளைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி! இந்த மாதத்தில் மிகவும் அதிகம்.

கூகிள் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டுகிறது:

வாடிக்கையாளர்களின் Email, Mobile Number, இன்னும் முக்கியமான தகவல்களைக் கூகிள் திரட்டியிருப்பதாகக் குற்றச்சாட்டு. நடந்தது கனடாவில்! கனடா மக்களின் அந்தரங்கத்தில் கூகிள் தலையிடுவதாக அலறுகிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மக்களின் முக்கியத் தகவல்கள் கூகிள் வசம். கூகிள் என்ன சொல்லப் போகிறது?



சைனாவுடன் விளம்பர ஒப்பந்தம் ரத்து:

வரும் அக்டோபர் 27 முதல் 7 பெரிய விளம்பர நிறுவனங்களுடன் கூகிள் தந்து ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது. கடந்த சில மாதங்களாகவே சைனாவுக்கும், கூகிளுக்கும் உரசல்கள் இருந்து வருகிறது. இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட 40 % விளம்பர வருவாய் கூகிளுக்கு சைனா மூலம் கிடைக்கும் நிலையில் இந்த முடிவு கூகிளுக்குப் பாதகமாக அமையும் என்கிறார்கள் நிபுணர்கள்.

சமூக வலைத்தளத்தை மேம்படுத்துகிறது:

கூகிள் சமூக வலைத்தள மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. Orkut??? இல்லை! ஆர்குட், இந்தியாவிலும், பிரேசிலிலும் மட்டுமே மிகப் பிரபலமாக இருக்கிறது. இதர நாடுகளில் சுமாரான வரவேற்புதான்! கடந்த வருடம் வெளியான Google Wing ம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. தனது முயற்சியில் சற்றும் மனம்தளராத கூகிள், Google ME என்னும் சமூக வலைத்தளத்தை விரைவில் வெளியிடும். Facebook க்குக் கடும் சவாலாக இருக்கும் என்று கணிக்கிறார்கள்.

கூகிள் சுற்றுலா:

உலகின் புகழ்மிக்க இடங்களை அமர்ந்த இடத்திலிருந்து பார்வையிடலாம். Google தனது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பல்வேறு புகைப்ப்டங்களைச் சேர்த்திருக்கிறது. உலகை வலம்வரும் போது படங்களுடன் குறிப்புகளும் கிடைக்கும்!

கூகிள் - கனவு நிறுவனம்:

IT பணியாளர்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில் கூகிள் கனவு நிறுவனமாகத் (Dream Company) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. கூகிளின் மனிதவளக் கொள்கைகளும் (HR Policies), நட்பான பணிச்சூழலும் (Friendly Wok Environment) கூகிள்மீது இந்திய இளைஞர்களைக் காதல் கொள்ளச் செய்கிறது! கூகிள் அலுவலகத்தின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்!!!


பிரி‌‌ந்‌திரு‌ந்தாலு‌ம் அ‌ன்பு கூடு‌ம்

சில‌ர் மா‌ய்‌ந்து மா‌ய்‌ந்து காத‌லி‌த்து ‌திருமண‌ம் செ‌ய்‌திரு‌ப்பா‌ர்க‌ள், ‌சில‌ர் ‌தனது பெ‌ற்றோரா‌ல் பெ‌ண் பா‌ர்‌த்து ‌நி‌ச்சயதா‌ர்‌த்த‌ம் செ‌ய்து கொ‌ண்ட ‌பிறகு காதல‌ர்களாக மா‌றி காத‌ல் வா‌ழ்‌க்கையை ரு‌சி‌த்‌திரு‌ப்பா‌ர்க‌ள். ‌இதே ‌நிலை அடு‌த்தடு‌த்த ஆ‌ண்டுக‌ளிலு‌ம் ‌‌நீடி‌க்‌கிறதா எ‌ன்றா‌ல் அதுதா‌ன் இ‌ல்லை.

திருமணமான பு‌தி‌தி‌ல் ஈரு‌யி‌ர், ஓருடலாக வா‌ழ்வா‌ர்க‌ள். ஆனா‌ல் கால‌ம் செ‌ல்ல செ‌ல்ல அவ‌ர்களு‌க்கு‌ள்ளான நெரு‌க்க‌ம் மா‌றி, ஏரே ஒரே அறை‌யி‌ல் த‌ங்கு‌ம் ந‌ண்ப‌ர்க‌ள் (‌சில ‌வீடுக‌ளி‌ல் எ‌தி‌ரிகளாக‌க் கூட) மா‌றிவ‌ிடு‌கிறா‌ர்க‌ள்.

இத‌ற்கு, அ‌ப்போ‌திரு‌ந்த ஒரு ‌பி‌ரிவு ஏ‌க்‌க‌ம் எ‌ன்பது‌ம் ஒரு காரணமாகு‌ம். அதாவது இருவரு‌ம் ச‌ந்‌தி‌த்து‌க் கொ‌ள்வது ‌சில ம‌ணி நேர‌ங்க‌ள்தா‌ன் எ‌ன்பதா‌ல் ஏ‌ற்ப‌ட்ட ஈ‌ர்‌ப்பாகவோ, ‌எ‌ப்போதாவது ம‌ட்டுமே பா‌ர்‌க்க முடியு‌ம் எ‌ன்ற ‌விரு‌ப்பமாகவோ‌க் கூட இரு‌க்கலா‌ம்.

ஒரே ‌வீ‌ட்டி‌ல் பல ஆ‌ண்டுக‌ள் ‌ஒ‌ன்றாக வா‌ழ்வதா‌ல் ஒருவ‌ர் ‌மீது ஒருவ‌ர் கா‌ட்டு‌ம் ஆ‌ர்வ‌ம் குறை‌ந்து போ‌கிறது. எனவே, த‌ம்ப‌திக‌ள் ஓ‌ரிரு வார‌ங்க‌ள் த‌னி‌த்த‌னியாக ‌பி‌ரி‌ந்‌திரு‌ப்பது ந‌ல்லது எ‌ன்று மனோ‌ரீ‌தியாக‌க் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌பி‌ரி‌ந்‌திரு‌ப்பது எ‌ன்றா‌ல் தா‌ங்களாகவே முடிவெடு‌த்து ஒரு ‌சில நா‌ட்க‌ள் தா‌‌ய் ‌வீ‌ட்டிலோ, உற‌வி‌ன‌ர்க‌ள் ‌வீ‌ட்டி‌ற்கோ செ‌ன்று ‌த‌ங்‌கி‌யிரு‌ப்பது. இ‌ப்படி செ‌ய்வதா‌ல் அ‌ன்பையு‌ம், பாச‌த்தையு‌ம் ம‌ட்டும‌ல்ல ஆசையையு‌ம் கூ‌ட்டு‌ம் எ‌ன்‌கிறது ‌சில ப‌ட்‌சிக‌ள்.


அதாவது மனை‌வியோ அ‌ல்‌லது கணவனோ ஒரு வார‌ம் ‌வீ‌ட்டி‌ல் இ‌ல்லாம‌ல் போகு‌ம் போதுதா‌ன் அவ‌ர்களது ‌பி‌ரி‌வையு‌ம், அவ‌ர்களது அவ‌சிய‌த்தையு‌ம் துணை உணர வா‌ய்‌ப்பு ‌கிடை‌க்கு‌ம். த‌ம்ப‌திக‌ள் ஒ‌ன்று கல‌ந்து பே‌சி இ‌ந்த முடி‌வினை எடு‌க்க வே‌ண்டு‌ம். இது ச‌ற்று ‌சிரமமாக‌க் கூட இரு‌க்கலா‌ம். ஒரு வார‌த்‌தி‌ற்கு ஒருவரது முக‌த்தை ம‌ற்றொருவ‌ர் பா‌ர்‌க்கவே‌க் கூடாது. இ‌‌ப்படி இரு‌ந்தா‌ல் எ‌ப்படி இரு‌க்‌கிறது எ‌ன்று பா‌ர்‌ப்பத‌ற்கு‌ம் ஒரு வா‌ய்‌ப்பாக அமையு‌ம் எ‌ன்பது‌ம் ஒரு காரண‌ம்.

மேலு‌ம், ஒரு வார‌ம் ‌பி‌ரி‌ந்‌திரு‌ந்து பாரு‌ங்க‌ள். இருவரு‌ம்.. பர‌ஸ்பர‌ம் அணை‌ப்பை எ‌தி‌ர்நோ‌க்கு‌ம் ஆ‌ர்வ‌ம் எ‌‌கிறு‌ம் எ‌ன்று மனோ‌வி‌ய‌ல் வ‌ல்லுந‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன‌ர்.

ஆனா‌ல் இதே ‌நிலையை அ‌வ்வ‌ப்போது ‌நீடி‌க்க‌க் கூடாது. அதாவது, மனை‌வி அடி‌க்கடி அ‌ம்மா ‌‌வீ‌ட்டி‌ற்கு‌ச் செ‌ல்வதையு‌ம், கணவ‌ன் வெ‌‌ளியூ‌ரு‌க்கு அடி‌க்கடி செ‌ல்வதையு‌ம் எ‌ந்த‌த் துணையு‌ம் ‌விரு‌ம்‌புவ‌தி‌‌ல்லை. இ‌ந்த நடவடி‌க்கை தனது துணை‌யி‌ன் ‌மீது ஒரு ‌நிர‌ந்தரமான வெறு‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தி ‌விட‌க் கூடு‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

எனவே வருட‌த்‌தி‌ல் ஒரு முறை இ‌ப்படி ‌பி‌ரி‌ந்‌திரு‌ந்தா‌ல் உ‌ங்க‌ள் இளமையான காத‌ல் வா‌ழ்‌க்கை ‌மீ‌ண்டு‌ம் துவ‌ங்கலா‌ம்....

Nokia Secret Codes!!


#7780# – பல செட்டிங்ஸ் அமைப்புகளை மாற்றி நீங்கள் விருப்பப்படும் வகையில் போன் செட்டிங்ஸை மாற்றிவிட்டீர்கள். ஒரு கட்டத்தில் பழைய பேக்டரி செட்டிங்ஸே இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். அப்போது மொபைல் போனின் பேக்டரி அமைப்புகளை மீண்டும் கொண்டு வர இந்த கீகளை அழுத்த வேண்டும்.
#3283# – உங்கள் மொபைல் செட் எப்போது தயாரிக்கப்பட்டது என்று அந்த நாளை அறிய.

#746025625# – சிம் மூலம் ஓடிக் கொண்டிருக்கின்ற கடிகாரத்தினை நிறுத்த.

#67705646# – மொபைல் ஆப்பரேட்டரின் லோகோ திரையில் தோன்றுகிறதா? அதனை நீக்க விரும்புகிறீர்களா? இந்த கோட் எண்களை அமைத்து அழுத்தவும்.

#73# – விளையாடிக் கொண்டிருக்கும் கேம்ஸில் பெற்ற ஸ்கோர்களை புதியதாக செட் செய்திடவும் போன் டைமரை மாற்றவும் இது பயன்படும்
#0000# – அல்லது * #9999# – உங்கள் மொபைல் போனில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பினை அறிய.
#06# – மொபைலின் அடையாள தனி எண்ணை அறிந்து கொள்ள.
#92702689# – மொபைல் போனின் வாரண்டி குறித்த தகவல்களை (சீரியல் எண், வாங்கிய நாள், ரிப்பேர் செய்த நாள், இதுவரை இயங்கிய லைப் டைம் ) அறிய இந்த கீகளை அழுத்தவும்.

#7760# – தயாரிப்பு வரிசை எண்ணை அறிய

#bta0# புளுடூத் மேக் அட்ரஸ் தெரிந்து கொள்ள.

#147# – நீங்கள் நோக்கியா மொபைல் போனில் வோடபோன் சர்வீஸ் பயன்படுத்துபவராக இருந்தால் இறுதியாகப் பயன்படுத்திய போன் எண்ணை அறிந்து கொள்ள.

#2640# – மொபைல் போனின் செக்யூரிட்டி கோட் குறித்து அறிய.

#7328748263373738# – போனில் பதிந்து தரப்பட்டிருக்கும் டிபால்ட் செக்யூரிட்டி கோட் குறித்து அறிந்து கொள்ள.

#43# – கால் வெயிட்டிங் நிலை குறித்து அறிய.

#2820# – புளுடூத் தகவல் தெரிந்து கொள்ள.

#7370# – மொபைல் போன் மெமரியை பார்மட் செய்திட .

#delset# # – ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இமெயில் செட்டிங்ஸ் அமைப்பினை அழித்திட.

#pw+1234567890+1# – மொபைல் செட்டின் லாக் ஸ்டேட்டஸ் குறித்து தெரிந்து கொள்ள.

#pw+1234567890+4# – உங்கள் சிம் கார்டின் லாக் ஸ்டேட்டஸ் குறித்துத் தெரிந்து கொள்ள...

 காதல‌ர்களு‌க்கு ‌‌சில ‌விஷய‌ங்க‌ள்


காதல‌‌ர்க‌‌ளி‌ல் இரு வகை உ‌ண்டு, பெரு‌ம்பாலு‌ம் பே‌சி‌ப் பழ‌கிய‌ப் ‌பி‌ன்னரே காதல‌ர்களாக ஆவது‌ம், பா‌ர்‌த்த மா‌த்‌திர‌த்‌‌திலேயே காத‌ல் உ‌ண்டா‌கி காதலை‌த் தெ‌ரி‌வி‌த்த ‌பி‌ன் காதல‌ர்களானவ‌ர்களு‌ம் உ‌ண்டு.

இ‌தி‌ல் எ‌ந்த வகையாக இரு‌ந்தாலு‌ம், காதல‌ர்க‌ள் ‌சில அடி‌ப்படையான ‌விஷய‌ங்க‌ளி‌ல் அ‌திக கவன‌ம் செலு‌த்த வே‌ண்டு‌ம். அதாவது,

காதல‌‌ர்க‌ள் எ‌ங்கு செ‌ன்றாலு‌ம் இருவரது பாதுகா‌ப்பையு‌ம் க‌ரு‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள். செ‌ல்லு‌ம் இடமு‌ம், போ‌ய் வரு‌ம் நேரமு‌ம் பாதுகா‌ப்பானதாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் அமையு‌ம் படி ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.

காதலரை ம‌ற்றவ‌ர்க‌ள் மு‌ன்பு குறைவாக ம‌தி‌ப்‌பி‌ட்டு‌ப் பேசா‌தீ‌ர்க‌ள். இது உ‌ங்க‌ள் காதல‌ர் மன‌தி‌ல் பெரு‌ம் பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம்.

கரு‌த்து வேறுபாடு ஏ‌ற்படு‌ம்போதெ‌ல்லா‌ம் காதல‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் குறைகளை‌ப் ப‌‌ட்டிய‌லிடா‌தீ‌ர்க‌ள். அத‌‌ற்கு ப‌திலாக அவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌ந‌ற் குண‌ங்களை‌ எடு‌த்து‌க் கூ‌றி இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நீ‌ங்களா இதை‌ச் சொ‌ன்‌னீ‌ர்க‌ள் அ‌ல்லது செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றினா‌ல் ச‌ற்று மேலாக இரு‌க்கு‌ம்.

காதலரை ‌விட ‌‌நீ‌ங்க‌ள் உய‌ர்‌ந்தவ‌ர் எ‌ன்ற அடி‌ப்படை‌யி‌ல் எ‌ந்த பே‌ச்சு‌ம் இரு‌க்க‌க் கூடாது. இருவரு‌ம் ஒரே உ‌யி‌ர் எ‌ன்பது போ‌ன்று‌ம், ஒருவரை ஒருவ‌ர் ந‌ம்‌பி வா‌ழ்வது போ‌ன்று‌ம் உ‌ங்க‌ள் பே‌ச்சு இரு‌க்க‌ட்டு‌ம்.

ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றிய அடி‌க்கடி காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் பே‌சி‌க் கொ‌ண்டு இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கு ச‌‌லிப்பு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.

இவை அனை‌த்தையு‌ம் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு உ‌‌ங்க‌ள் பே‌ச்சு‌ம் செ‌ய்கையு‌‌ம் இரு‌க்க‌ட்டும‌்.