கேதார கௌரி விரதம்


உலகெல்லாம் பரந்து வாழ்கின்ற இந்து சம யத்தவர்கள் அனுஷ்டிக்கி ன்ற விரதங்களுள் ‘கேதார கெளரி விரதம்’ உன்னதமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. சித்திகள் பலவற்றைத் தருகின்ற சக்திமிக்க கேதார கெளரி விரதத்தை இஸ்டகாமிய சித்திகளைப் பெறுவதற்காக ஆண்களும் பெண் களும் அனுஷ்டிக்கின்றனர்.
பொதுவாக இவ்விரதம் 21 நாட்கள் அனுஷ் டிக்கப்படுகிறது. புரட்டாதி மாதம் வளர்பிறை நவமி அல்லது அதற்கு முந்திய, பிந்திய திதிகளில் அவி ட்டம்/தசமி) ஆரம்பித்து ஐப்பசி மாதம் தீபாவளியை அண்மிய அபரபக்க அமாவாசைத் திதியில் முடிவுறும் வகையில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வருடம் அக்டோபர் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி நவம்பர் மாதம் 05ம் திகதி வெள் ளிக்கிழமை முடிவுறுவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பிட்டுள்ளது.
கேதார கெளரி விரதம் பற்றிய சுவாரசியமான புராணக்கதை ஒன்றுள்ளது. முன்னொரு காலத்தில் திருக்கைலாயத்திலே பார்வதி சமேதரராக பரமேஸ்வரன் வீற்றிருந்தார். வேழமுகனும் வேல் முருகனும் அருகிருந்தனர். முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் கூடியிருந்தனர். நாரதர் இசை மீட்ட நந்தி மத்தளம் கொட்ட ஊர்வசி, மேனகை, திலோத் தமை ஆகியோரின் நடனம் நடைபெற்றது.
அங்கிருந்தோர் சிவனையும் உமையையும் சுற்றிவந்து வணங்கினர். அவ்வேளையில் அங்கு வந்த பிருங்கி முனிவர் ஆனந்தமயமான விகடக் கூத்தொன்றை ஆடி அனைவரையும் மகிழ் வித்த பின்னர் பார்வதிதேவியை விலக்கிவிட்டு, பரமேஸ்வரனை மட்டும் சுற்றி வந்து வணங்கினார். இதனைக் கண்ட உமாதேவி அவமானமும் ஆத்திரமும் அடைந்தார்.
சக்தி கொடுப்பவள் நான், சக்தியாக இருப்பவள் நான். முக்தி கொடுப்பவள் நான்; முறையோ எனை விலக்கல்; தாயி ன்றிப் பிறந்தவரோ தவமுனிவர் பிருங்கி ரிஷி; தாயாக எனை நினைத்தால் தப்பேதும் வந்திடுமோ? பெண்ணை இழிவு செய்தல் பெரியோர்க்கு அழகாமோ? என்று உமாதேவி கேட்டார். முக்தி விரும் புகிறேன்; முதல்வனையே நான் தொழுவேன் என்றார் பிருங்கி ரிஷி.
சக்தி எனக்கு சத்தியமாய் தேவையில்லை என்று இவ்விடத்தில் சொல்லாமல் உம்மை ஏகவிடேன் என்றார் உமாதேவி. சக்தி எனக்கு சத்தியமாய் தேவையில்லை என்று பிருங்கி ரிஷி கூறியதும், அவரது உடலிலிருந்த சக்தி முழுவதையும் உமை பெற்றுக்கொள்ள, சபை நடுவே பிருங்கி ரிஷி சோர்வுற்று விழும்போது, சிவபெருமான் ஊன்றி நடவுமென ஒரு தடியை முனிவரின் கையில் கொடுத்தார். அவை நடுவே என்னை அவமதித்தீர், என்னவிதமே னும் இது தடுப்பேன் என்று சிவபிரானோடு கோபித்துக்கொண்டு உமாதேவி புறப்பட்டார்.
காடும் மலையும் கனைகடலும் காட்டாறும் நாடும் கடந்து நடந்து களைப்புற்று உமாதேவி ஒரு வில்வ மரத்தடியில் வீற்றிருந்தார். பன்னி ரெண்டாண்டு பருவமழை இல்லாமல் வறண்டு போயிருந்த வனம் உமையவளின் வரவால் திடீரென புதுப் பொலிவு பெற்றது. அவ்வ னத்தில் வசித்த கெளதம முனிவர் காரணத்தைக் கண்டறிய முற்பட்டு உமாதேவியைக் கண்டு தனது ஆசிர மத்திற்கு அழைத்து வந்து, நடந்த சங்கதிகளை அறிந்துகொண்டார்.
அன்பே சிவமானவரை அன்பால் அடைவதன்றி ஆத்திரத்தால் அடையவொண்ணாது என்று கூறி ‘கேதாரேஸ்வரர்’ விரத மகிமையும் அனுஷ்டிக்கும் முறையும் கூறினார். உமாதேவி அவ்வாறே விரதம் அனுஷ்டிக்க சிவபெருமான் பிரசன்னமாகி என்னவரம் பெறுவதற்காய் இவ்விரதம் நோற்கின்றாய் என்று கேட்டார்.
“எம்மிருவர் உடலும் ஓருருவாய் இணைவதற்கும், எம்மிருவர் பெயராலே இவ்விரதம் பெயர் பெறவும், இவ்விரதம் நோற் போரும் இட்டசித்தி பெறுவதற்கும் வரமருள்க என்றார். கேட்ட வரங்களெல்லாம் நீ கேட்டபடி ஈந்தோ மென்று பெண்மைக்கு சரிபாதி உடல் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமான் காட்சியளித்தார்.

வானுலக கந்தரூபன் சித்திரரங்கன் என்பவனால், உஜ்ஜயினி என்ற நாட்டு வச்சிரதேயு என்ற மன்னனும், விண்ணுலக மங்கையர்களும் இவ்விரதம் நோற்று, விரும்பியதை அடைந்தனர். வறுமையில் வாடிய புண்ணியவதி, பாக்கியவதி என்ற சகோதரிகள் விரதம் நோற்று அர சர்களை மணந்து செல்வச் சிறப்போடு வாழ்ந்தனர். பாக்கியவதி விரதத்தை தவறவிட்டமையால் நாடு, நகர் இழந்து காட்டிலே குடிசையில் வாழ்ந்தாள். தனது மகனை புண்ணியவதியிடம் அனுப்பினாள். புண்ணியவதி அப்பிள்ளையிடம் பொன்னும் பொருளும் கொடுத் தனுப்ப, அதனை கருடன் காட்டு வழியில் பறித்தேகியது. மறுமுறை கொடுத்த பொருளை திருடர் பறித்துக் கொண்டனர். காரணத்தை அறிந்த புண்ணியவதி கெளரிக்காப்புக் கொடுத்தனுப்ப கருடனும், திருடனும் கவர்ந்த பொருளை மீண்டும் கொடுத்தனர். பாக்கியவதி விரத மகிமை உணர்ந்து விரதம் அனுஷ்டித்து மீண்டும் நாடு, நகர் பெற்று இன்புற்றிருந்தாள்.
அனுஷ்டிக்கின்ற காலத்தைக் கருதி வார (நாள்) விரதம், திதி விரதம், நட்சத்திர விரதம் என்று பெயர் பெறும் தெய் வங்களைக் கருத்திற் கொண்டு சிவ விரதம், சக்தி விரதம், விநாயகர் விரதம், கந்த விரதம், விஷ்ணு விரதம் என்றும் பெய ரிட்டழைப்பர். உமாதேவி சிவபெருமானை நோக்கி விர தம் நோற்றமையால் இவ்விரதம் சிவ விரதம் என்பர். உமாதேவி ஆவுடையார் பகுதியோடு சேர்ந்த சிவலிங்கத்தை பூசித் தமையாலும் விரத பலனால் அர்த்தநாரீஸ்வர வடிவம் பெற்றமையாலும் சிவன் உமையின் பெயரை இணை த்து ‘கேதார கெளரி விரதம்’ எனப் பெயரிட்டழைப்பதாலும் இதனை சிவசக்தி விரதமெனக் கொள்வது சாலப் பொருத்த மாகும்.
புனிதமான வீட்டில் அல்லது பூசை அறையில், அல்லது வில்வ மரத்தடியில் அல்லது ஆலயங்களில் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம். உமாதேவி ஆல மரத்தடியில் சிவலிங்கம் அமைத்து நாள்தோறும் எள்ளுருண்டை, மஞ்சளுருண்டை, அதிரசம் (அரியதரம்), வாழைப்பழம், தேங்காய், பாக்கு, வெற்றிலை என்பவற்றை வகைக்கு ஒன்றாக நிவேதித்து நிவேதனங்களை ஒருவேளை உணவாக உண்டு. 20 நாள் இப்படியே நோற்றார். ஆலம் விழுது ஒன்றில் ஒவ்வொரு நாளும் ஒரு முடிச்சுப் போட்டு வந்தார். 21ம் நாள் அமாவாசையன்று முழு உபவாசமிருந்து 21 முடிச்சுக்களிட்ட காப்புக் கயிற்சை இடது கையில் அணிந்துகொண்டார். இக்காலத்தில் 21 இழையிலான பட்டு நூலொன்றில் 21 முடிச்சுகளிட்டு சிவலிங்கம் அல்லது கும்பத்தில் அதனை அணிவித்து, 21ம் நாள் ஆண்கள் வல கையிலும் பெண்கள் இடக்கையிலும் அணிந்துகொள்வர். 21 நாளும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள். ஆசாரியரின் ஆலோசனைப்படி 9,7,3 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கலாம். இவ்விரதத்தை 21 வருடங்கள் அனுட்டிக்க வேண்டும் என்பது சாஸ்திர விதி. இயலாதவர்கள் 07 வருடமாவது அனுஷ்டிக்க வேண்டும். முதலாம் வருடம் விரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை வருடங்கள் அனுஷ்டிப்பேனென்று சங்கற்பித்தபடி விரதத்தை அனுஷ்டித்து உரியகாலம் முடிந்ததும் விரதோத்யாபனம் செய்துகொள்ள வேண்டும். புதிய காப்புக்கயிறு எடுக்கும்போது பழைய காப்புக் கயிற்றினையும் மண்ணால் செய்து பூசித்த சிவலிங்கத்தையும் ஓடும் ஆற்று நீரில் இடுவது சம்பிரதாயம். இக்காலத்தில் எத்தனை வருடங்கள் விரதம் அனுஷ்டித் தோமென்பதை கணிப்பதற்காகவும் சக்தி மிக்க புனிதப் பொருள் என் பதற்காகவும் பழைய காப்புக்கயிற் றினை வீசிவிடாமல் சுவாமி படத்தில் சேகரித்தும் வைக்கின்றனர்.
இவ்விரதம் அனுஷ்டிப்பதனால் அருள் சேரும், பொருள் சேரும், அன்படக்கம், அமைதி சேரும். அருள் நிறைந்த அடியவர் கூட்டம் சேரும். சிவன் உமைபோல் மனமிசை ந்த சோடி சேரும். சிவசத்தி குருது ணையால் முத்தி சேரும். காலனையும் எதிர்க்கின்ற சக்தி சேரும். காலமெல்லாம் கற்பதற்கு புத்தி சேரும். பதவி பட்டம் பரிசுகளும் சேரும். செய்கின்ற செயலெதிலும் வெற்றிசேரும். செய்வினையை வெல்வதற்கும் சித்தி சேரும். அழகறிவாய் குழந்தைகளும் அளவாய்ச் சேரும். அழகியதாய் வீடுகளும் ஊர்தி சேரும். வானுலக கற்பகத்தால் வளங்கள் பல சேரும். செல்வாக்குச் சொல்வாக்குச் சிறப்புச் சேரும். எல்லோர்க்கும் எப்போதும் இன்பம் சேரும்.

0 Response to "கேதார கௌரி விரதம்"

Post a Comment