குழந்தைகள் வண்ணம் பூச இலவசமாக படம் கொடுக்கும் புதிய தளம்.

குழந்தைகள் படம் வரைந்து கலர் கொடுப்பதைவிட ஏற்கனவே
வரைந்த படங்களுக்கு கலர் கொடுப்பதையே விரும்புகின்றனர். இதற்காக
நாம் தமிழ் வாரப்பத்திரிகை வாங்க வேண்டாம். இணையம் மூலம்
இலவசமாக வண்ணம் பூச படங்களை கொடுக்கின்றனர் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
Tamil News Paper , Tamil Magzine போன்றவற்றில் வாரம் ஒரு
நாள் ஒரு வரைபடம் நம் குழந்தைகளுக்கு கிடைக்கும் அதில்
குழந்தைகள் தங்களின் கைவண்ணத்தை காட்டுவர் அதுபோல்
ஒவ்வொருவாரமும் படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டாம்
ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை
இலவசமாக கொடுக்கிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.thecolor.com
படம் 2
இந்ததளத்திற்கு சென்று நாம் எந்தத் துறை சார்ந்த படம் வேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும் அடுத்து நாம் Paint ஐ
திறந்து விரும்பிய வண்ணத்தை கொடுத்து மகிழலாம். இதில் என்ன
வேடிக்கை என்றால் புத்தகத்தில் வரும் படங்களுக்கு நாம் ஒரு முறை
மட்டும் தான் வண்ணம் பூச முடியும் ஆனால் கணினி மூலம் paint
செய்வதால் படத்தை காப்பி செய்து வைத்துக்கொண்டு ஒரே
படத்திற்கு வித்தியாசமாக பல தடவை வண்ணம் பூசி பழகலாம்.
இனி தமிழ் செய்தித்தாளில் வாரம் ஒரு முறை வரும் படத்திற்காக
நம் குட்டீஸ் காத்திருக்க வேண்டாம் நினைத்த நேரத்தில் சென்று
படத்திற்கு வண்ணம் கொடுக்கலாம் கூடவே எந்த மைச்செலவும்
ஆகப்போவதில்லை.

டேப்ளட் பிசி – கவனிக்க வேண்டிய அம்சங்கள்

அடுத்த சில மாதங்களில், குறிப்பாக புத்தாண்டான 2011ல், டேப்ளட் பிசிக்கள் பல மக்கள் வாங்கும் விலையில் வர இருக்கின்றன. மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது.   ஒரு டேப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து வாங்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
1. டேப்ளட் பிசியின் அளவு:
டேப்ளட் பிசி வாங்கும் ஒவ்வொருவரும், அது தடிமன் குறைந்ததாகவும், குறைந்த எடை கொண்டதாகவும், எடுத்துச் சென்று பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதே நேரத்தில், அதன் திரை என்ன அகலத்தில் இருக்க வேண்டும் என்பதில், பல வகையான அபிப்ராயங்கள் உள்ளன. ஐ–பேட் அதன் திரை 10 அங்குலம் (சரியாகச் சொன்னால் 9.56) என வரையறை செய்தது. அதன் எடை 750 கிராம் முதல் 900 கிராம் வரை என்ற ரீதியில் இருந்தது. சிலர் 12 அங்குல திரையை எதிர்பார்த்தனர். ஆனால், பொதுவாக ஐ–பேட் சற்று கூடுதல் தடிமனுடன் இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.
தற்போது மார்க்கட்டில் வந்துள்ள டேப்ளட் பிசிக்கள், ஐ–பாட் பாணியைப் பின்பற்றாமல், மக்கள் விருப்பம் எனத் தாங்கள் கணித்தபடி,  அவற்றைத் தந்துள்ளனர். சாம்சங் காலக்ஸி டேப் முதல் வெரிஸான் வரை 7 அங்குல திரை கொண்டுள்ளன. எடை 600 கிராமிற்கும் குறைவாகவே உள்ளது. எனவே நாள் முழுவதும் தூக்கிக் கொண்டு செயல்படுபவருக்கு, இது உகந்ததாகவே உள்ளது. அஸூஸ் நிறுவனம் 8 அல்லது 12 அங்குல அகலத்திரையுடன் டேப்ளட் பிசி தர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  எனவே, ஒருவருக்கு சிறியதாக இருப்பது, இன்னொருவருக்கு பெரியதாக இருக்கலாம். அளவு என்பது அவரவர் விருப்பத்தினைப் பொறுத்ததே.
2. ஸ்டோரேஜ் அளவு:
ஐ–பாட் 16, 32 மற்றும் 64 ஜிபி உள் நினைவகத் துடன் வந்தது. இதில் கூடுதல் நினைவகத்தை ஏற்படுத்த முடியாது. கூடுதலாக நினைவகம் வேண்டும் எனில், புதியதாகத்தான் வாங்க வேண்டும். விரிவு படுத்த வேண்டும் எனில், இவற்றில் வெளியிலிருந்து இணைத்துப் பயன்படுத்தக் கூடிய நினைவகத்தைத் தான் நாட வேண்டும். அப்படி யானால், அதற்கான எஸ்.டி. அல்லது மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்ட டேப்ளட் பிசி வேண்டும். அதிர்ஷ்டவசமாக, ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் 7 இயக்கம் கொண்ட டேப்ளட் பிசிக்களில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி 16 மற்றும் 32 ஜிபி நினைவகத்துடனும், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்டுடனும் கிடைக்கிறது. பிமோடோ (bModo) என்னும் விண்டோஸ் டேப்ளட் பிசி, சற்று எடை கூடுதலாக இருந்தாலும், இரண்டு யு.எஸ்.பி. போர்ட் கொண்டு இருப்பதால், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ்களை இணைக்க வழி தருகிறது.
விண்டோஸ் 7 அடிப்படையில் இயங்கும் சி.டி.எல். (CTL)  டேப்ளட்  250 ஜிபி ஹார்ட் ட்ரைவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
3.பேட்டரி திறன்:
டேப்ளட் பிசிக்களில் அடுத்து கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் அதில் தரப்பட்டிருக்கும் பேட்டரி களாகும். ஐ–பேட் இந்த வகையில் 10 முதல் 12 மணி நேரம் வரை தொடர்ந்து மின் சக்தி தருவதாக அமைக்கப்பட்டு, பெயர் பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸியில், 7 மணி நேரம் ஹை டெபனிஷன் வீடியோ பார்க்கலாம் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. சாதாரண பணிகள் எனில், 10 மணி நேரம் பயன்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், விண்டோஸ் 7 இயக்கம் கொண்டுள்ள டேப்ளட் பிசிக்கள், இந்த விஷயத்தில் ஏமாற்றம் தருகின்றன. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள டேப்ளட் பிசிக்கள் நிறைவைத் தருகின்றன.
4. 3ஜி அல்லது வை–பி மட்டுமா?
சில டேப்ளட் பிசிக்கள் 3ஜி அல்லது வை–பி நெட்வொர்க் இணைப்பு என ஏதேனும் ஒன்றையே தருகின்றன. இந்தியாவில் அறிமுகமாகும்போது, இதில் ஒரு தெளிவு ஏற்பட்டு, இரண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
5. சிஸ்டம்:
ஆண்ட்ராய்ட் போல ஓப்பன் சிஸ்டம் அல்லது விண்டோஸ் 7 போல குளோஸ்டு சிஸ்டம் எனத் தற்போது சாய்ஸ் உள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டம் எனில், அது கொண்டுள்ள டேப்ளட் பிசியில் சில வரையறைகள் உள்ளன. விண்டோஸ் சிஸ்டம் கொண்டுள்ள டேப்ளட் பிசியில், இந்த வரையறைகள் இல்லை. எனவே, தேவைகளின் அடிப்படையில்தான் இவற்றைத் தேர்ந்தெடுக்க முடியும்.
6.உள்ளீடு வழிகள்:
ஐ–பேட் சாதனம் கொண்டுள்ள, ஆன்ஸ்கிரீன் கீ போர்ட், பெரிய அளவில் டாகுமெண்ட்களை உருவாக்க ஒரு தடையாகவே கருதப்படுகிறது. எனவே வயர்டு கீ போர்ட் அல்லது இணைப்பின்றி செயல்படும் புளுடூத் கீ போர்டு பயன்படுத்தியாக வேண்டும். ஆனால் ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் இயக்க டேப்ளட் பிசிக்களில், யு.எஸ்.பி. போர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், அதன் இணைப்பில் கீ போர்டுகளைக் கொண்டு, விரைவாகச் செயல்படலாம்.
7. விலை:
மிக முக்கியமான ஒரு விஷயம் விலையே. இந்திய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர்  விலையின் அடிப்படையிலேயே எந்த சாதனத்தினையும் வாங்கிப் பயன்படுத்த முன்வருவார்கள் என்பது ஏற்கனவே மொபைல் போன் மற்றும் சில சாதனங்களில் நிரூபணம் ஆகி உள்ளது. எனவே, இந்தியாவில் டேப்ளட் பிசிக்கள் விற்பனைக்கு நேரடியாக அறிமுகம் ஆகும்போது இந்த அம்சமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கலாம்.
8. சிரிங்க, கேமரா முன்னால இருக்கு:
ஐ–பேட் சாதனம் குறித்துக் கருத்து தெரிவிக்கையில், அதில் கேமரா இல்லாதது பலமாகப் பேசப்பட்டது. பொதுவான போட்டோ எடுக்கும் வகையிலான கேமரா அந்த சாதனத்திற்குள் இல்லை. எனவே போட்டோ எடுக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்சிங் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனில், ஆப்பிள் ஐ–பேட் உகந்தது அல்ல என்ற கருத்தினை அனைவரும் மேற்கொண்டுள்ளனர். மற்ற பெரும் பாலான நிறுவனங்களின் படைப்புகள் கேமராவினைக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
9. கூடுதல் அப்ளிகேஷன் புரோகிராம்கள்:
ஸ்மார்ட் போன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கையில், அதில் எத்தனை அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பதிந்து இயக்கலாம் எனவே அனைவரும் எதிர்பார்க் கின்றனர். ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர், ஐ–பேட் மற்றும் ஐ–போனுக்கென ஆயிரக் கணக்கில் அப்ளிகேஷன் புரோகிராம்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஐ–பேட் சாதனத்திற்கான புரோகிராம்கள் என எடுத்துக் கொண்டால், அவை சற்றுக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.  விண்டோஸ் அடிப்படையில் இயங்கும் டேப்ளட் பிசிக்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் பல வர இருப்பதாக தகவல்கள் இதனாலேயே வெளிவந்த வண்ணம் உள்ளன.  இதனைக் கருத்தில் கொண்டே, எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்களை வாங்குவது என்றும் முடிவு செய்திடலாம்.
10.ஒத்திசைந்த செயல்பாடு:
ஒரு டேப்ளட் பிசி தனியே மட்டும் இயங்காது. உங்களுக்கு 3ஜி டேப்ளட் பிசி வேண்டும் என்றால், அது உங்களுக்கு அந்த சேவையைத் தரும் நிறுவனத்தின் செயல்பாட்டுடன் இணைந்து செல்ல வேண்டும். கேலக்ஸி டேப் போன்ற டேப்ளட் பிசிக்கள், ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ வகை இணைப்புகளுடன் இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவையாக உள்ளன. எனவே டேப்ளட் பிசியைத் தேர்ந்தெடுக்கையில் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலையில், நமக்கு எந்த மாதிரி டேப்ளட் பிசி வேண்டும் என ஒரு பரவலான முடிவினை எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்தியச் சந்தையில், அதிக எண்ணிக்கையில் நிறுவனங்கள், டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வருகையில், முடிவினை எடுக்க இது உதவியாக இருக்கும்.

உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா?

  பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சனைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்கள்

 * காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை முடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

 * நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத ‘குஷன்’ நாற்காலிகளை பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

 * முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

 * பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைச் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.

 * கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை முடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். ‘ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்’ -ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.

 * உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.

 * இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை.

  நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்!

 மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!

 இணையத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல்


  1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.

          10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

 2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

 எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

 3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர்கள். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் அசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

 4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

 5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

 6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் .

 ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டொக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.

 நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

 7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்

உண்மையிலேயே நீங்கள் காதலர்களா?

ஒன்றாக இருக்கும்போது பட்டாம்பூச்சி பறப்பதும், நீண்ட நேர சலிக்காத உரையாடல்களும், ஒருவரை ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பது மட்டுமே காதலா? காதலைச் சொல்லியிருந்தாலும் சரி சொல்லாதக் காதலாக இருந்தாலும் சரி காதலர்களுக்கான சில நடவடிக்கைகள் உங்களுக்குள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

 இதெல்லாம் இல்லையென்றால் உடனே நீங்கள் காதலர்கள் இல்லை என்றோ, காதலர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்றோ அர்த்தமல்ல.


 நீங்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றி மற்றொருவருக்கு தெரியும், அவருடைய உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதுதான் உங்களுக்குள் இருக்கும் அந்த அன்பு நேசமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.

  காதலன் செய்ய வேண்டியது
 

 உங்களுக்கு முதல் முன்னுரிமை அளித்திருப்பது.
 உங்களை அவரது குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பது.
 எதிர்காலத் திட்டங்களை வகுத்து வைத்திருப்பது.
 எந்த ஒரு காரியத்தையும் உங்களை வைத்துக் கொண்டு செய்வது.
 அவரது ரகசியங்களையும், எதிர்கால கனவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது.
 உங்களது தோழிகளை கவருவதில் ஆர்வம் காட்டுதல்.
 உங்களை பணி அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க முயற்சி எடுப்பது
 எதிர்பாராத விதமாக பரிசுகளை அனுப்புதல், உங்களது ஒவ்வொரு செயலுக்கும் பாராட்டு மழை பொழிவதும்.

 காதலி செய்ய வேண்டியது

 தான் செலவிட்ட மறக்கமுடியாத நாட்களையும், நிகழ்ச்சிகளையும் உங்களிடம் பரிமாறிக் கொள்வது.
 ஒரு நாள் முழுவதும் நடந்த சிறு சிறு விஷயங்களை ஒன்று விடாமல் உங்களிடம் ஒப்பிப்பது.
 உங்களுடனான வாழ்க்கை, குழந்தை, திருமணம், முதுமை, பயணம் போன்றவற்றைப் பற்றி அடிக்கடி பேசுதல்.
 உங்களை அடிக்கடி கோபப்படுத்துதல்
 உங்கள் அம்மாவிடம் தொலைபேசியில் அதிக நேரம் பேசுதல்.
 உங்களது செயல்களைப் பற்றிய கடுமையான விமர்சனம் தெரிவிப்பது.
 உங்களுடன் வெளியே செல்ல ஏதாவது ஒரு காரணம் தேடுவது.
 உங்களது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களைப் பற்றியை கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவது
 உங்களை அடிக்கடி அதிர்ச்சிக்குள்ளாக்குதல் போன்றவை.
 இதெல்லாம் ஒரு வரைமுறைதான். இதையெல்லாம் தாண்டியும் பல காதல்கள் வாழ்ந்து சரித்திரம் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
 அதில் ஒன்றாகவும் உங்கள் காதல் இருக்கலாம்.
 காதலிக்கும் முன் பல முறை யோசியுங்கள். ஆனால் காதலித்த பின்பு வேறு எதையும் யோசிக்காதீர்கள் நேசிப்பதைத் தவிர.
 

மருத்துவச் சிறப்புள்ள மாதுளம்பழம்

மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.
ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம்.
மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து 78 விழுக்காடு உள்ளது. புரதச்சத்து 1.6 விழுக்காடும், நார்ச்சத்து 5 விழுக்காடும், கார்போ ஹைட்ரேட் 14.5 விழுக்காடும், தாதுக்கள் 0.7 விழுக்காடும், சுண்ணாம்புச் சத்து 10 விழுக்காடும், மக்னீஷியம் 12 விழுக்காடும் அடங்கியுள்ளன.
இதுதவிர, சிலிக் திராவகம் 14 மில்லி கராம், கந்தகம் 12 விழுக்காடு, குளோரின் 20 விழுக்காடு, தயாமின் 0.46 விழுக்காடு, பாஸ்பரம் 1.33 விழுக்காடு, செம்பு 0.2 விழுக்காடு, நிக்கோடினிக் அமிலம் 0.30 விழுக்காடும் உள்ளன.
மேலும், வைட்டமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்துமே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.
மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாமாயம் செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பல பிணிகளும் அகலும்.
மாதுளம் பழ ரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும். இதுதவிர, காதடைப்பு, வெப்பக் காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழ ரசம் விலக்கும்.
மாதுளம் பழ ரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகுபதத்தில் காய்ச்சி வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.
அன்றாடம் பாதி மாதுளம் பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கி, நன்றாக மலம் இளகி இறங்கும்.
மாதுளம் பழச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமரும் குணமாகும்.
மாதுளம் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும்.
இதுதவிர, மேலே குறிப்பிட்டதுபோல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

Old Version சொப்ட்வேர் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து தறவிரக்கலாம்.

புதிய மென்பொருட்கள் மட்டுமல்ல சில Old Version
மென்பொருட்களுக்கு இன்னும் முக்கியத்துவம் இருந்து கொண்டு
தான் இருக்கிறது. அந்த வகையில் Old version
Software எங்கு தேடினாலும் சில சமயங்களில் கிடைப்பதில்லை.
இந்த Old Version மென்பொருட்களை எப்படி தரவிறக்கலாம்
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

தினமும் புதிது புதிதாக அப்டேசனுடன் வெளிவந்து கொண்டிருக்கும்
மென்பொருட்களுக்கு மத்தியில் சில சமயங்களில் நமக்கு பழைய
வெர்சன் மென்பொருள்கள் சிறப்பாக இருக்கும் இப்படி நாம் விரும்பும்
Old Version மென்பொருளை தரவிரக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.oldversion.com
இந்ததளத்திற்கு சென்று அடிக்கடி நாம் பயன்படுத்தும்
மென்பொருட்களின் old version -ஐ தரவிறக்கலாம். தனித்தனியாக
ஒவ்வொரு துறை வாரியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. Communication,
Graphics, Multimedia, Internet ,  File Sharing, Utilities , Security,
Enterprise ,FTP உதாரணமாக Winamp மென்பொருளின் முதல்
வெர்சனான winamp 0.2 version முதல் Winamp 5.24 version வரை
அத்தனையும் இங்கே கிடைக்கிறது இதில் எந்த வெர்சன் வேண்டுமோ
அதை சொடுக்கி எளிதாக தரவிரக்கிக் கொள்ளலாம். புதிய வேர்சன்
(Latest version software) மென்பொருள் சில சமயம் பயன்படுத்துவது
சற்று கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் நபர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இதயத்தைக் கவர இனிய வழி!

"இதயம்"...நான்கு எழுத்துகள் கொண்ட அழகான ஓர் ஒற்றைச் சொல்.
நான்கு அறைகளைக் கொண்ட, உடம்பின் உன்னதமான உறுப்பு, இதயம். இதன் இயக்கம்தான் ஒவ்வொருவரையும் இயங்க வைக்கிறது. இயங்கிக் கொண்டிருப்பவர்கள்தான் மனிதர்கள்.
வெறும் இயக்கத்தை மட்டுமா இந்த இதயம் செய்கிறது? தவறான செயலைச் செய்து விட்டால், `உன்னிடத்தில் இதயமே இல்லையா? நீங்கள் இப்படிச் செய்யலாமா?' என்று விழிகள் விரிய வினாக்கள் வரிசை வரிசையாக எழுவதையும் கேட்க முடிகின்றது.
இதயம் என்பது மனிதநேயத்தையும் இங்கே வெளிப்படுத்துகின்றது.
மனிதநேயமிக்க இதயத்தில் இடம் பிடிக்கவே ஒவ்வொருவரும் ஆசைப்படுகின்றோம். இதயத்தை வெல்வதற்கு இனிய வழி ஒன்று இருக்கின்றது. அதுதான் நாம் பேசும் வார்த்தைகள்.
பேச்சு என்பது வார்த்தைகளின் குவியல் அல்ல. பூக்களை அடுக்கி அடுக்கிக் கட்டப்பட்ட மாலை போல அது அழகாக இருக்க வேண்டும். அடுக்கிய புத்தகங்களைப் போல் முறையாக இருக்க வேண்டும்.
அழகு, அறிவு, திறமை, பதவி போன்ற நற்பண்புகள் வாழ்க்கைப் பயணத்தில் பலம் சேர்க்கலாம். இப்படிப்பட்ட பலங்கள் இருந்தும்கூட பலர் வெற்றியைத் தவற விட்டுவிடுகிறார்களே, என்ன காரணம்? வேறொன்றுமில்லை. அவர்களுடைய எண்ணங்களைச் சரிவர வெளிப்படுத்த அவர்களுக்குத் தெரியவில்லை.
இனிய இளைஞனே! யாரிடம், எப்படி, என்ன பேச வேண்டும் என்ற உத்திகளைச் சரியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, பிறரிடம் பேசும்போது அவர்களுக்குத் தைரியத்தையும், உற்சாகத்தையும் தரும் வகையில் வார்த்தைகளைப் போட்டுப் பேசுங்கள்.
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். அல்லது அமைதியையும் அதனால் உண்டாக்க முடியும்.
இரண்டு அடிகளால் உலகத்துக்கு உன்னதக் கருத்துக்களை எடுத்துச் சொன்னவர் வள்ளுவப் பெருந்தகை. அவர் எழுதிய திருக்குறளில் `சொல்வன்மை' என்கிற அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களைப் பாங்காய்ப் படைத்துள்ளார்.
சொல்வன்மை, அதாவது சொல்லுகின்ற சொல் திறமைமிக்கதாக இருக்க வேண்டும். மற்றொரு சொல் அதை வெல்ல முடியாதபடி சரியான சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இதைத்தான்-
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து''

என்கிறார் திருவள்ளுவர்.
பேச்சைத் தொடங்குகின்ற சொல் வலிமையானதாக இருக்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டில் துவக்கத்தில் ஆடுகின்ற ஆட்டக்காரர் சிறப்பாக ஆடினால்தான் அந்த அணியின் வெற்றிக்கு அது அடித்தளமாக அமையும். அதுபோல் பேச்சின் தொடக்கமும் பிறரைத் தன் பக்கம் ஈர்க்கக் கூடிய வலிமை கொண்டதாக இருக்க வேண்டும்.
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் ஓர் உன்னதக் காப்பியம். ஒரு சாதாரணக் குடிமகள் கண்ணகி. அரசனுடைய சபையிலே அவள் வாதத்தை எடுத்துரைக்கிறாள். எடுத்த எடுப்பிலேயே...
`தேரா மன்னா, செப்புவது உடையேன்'
என்று நறுக்குத் தெறித்தாற்போல நான்கே சொற்கள். அரசனே, நீ தேர்வாகவே மாட்டாய். அதாவது அழிந்துதான் போவாய் என்கிறாள். காரணம், நீ வழங்கிய தவறான தீர்ப்புதான். அதைத் தொடர்ந்து, தான் யார் என்பதற்கான விளக்கமாய்...
"வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உடுநர் நெஞ்சகத்தான் தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார் என்பதியே''

அதாவது கன்றுக்குட்டியைக் கொன்றதற்காக தன் ஒரே மகனை அதே தேர்ச்சக்கரத்தில் இட்டு நீதியை நிலை நாட்டிய சோழநாட்டின் தலைநகரான பூம்புகாரிலிருந்து வருகிறேன் என்று கூறுகிறாள்.
கண்ணகியின் வலிமையான வார்த்தைக்கு இயற்கை ஆமோதிக்கிறது. அரசவை அடக்கமாகிறது. சொல்லில் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க வேண்டும். அது வெற்றியைத் தரும். கண்ணகியின் வாக்கு அதற்கு எடுத்துக்காட்டு.
அன்பான இளைஞர்களே! வாழ்க்கை நடத்துகிற தேர்வுகளில் வெற்றி பெறப் போகின்றவர்களே! வாழ்வின் பல்வேறு சூழல்களில் சுருக்கமாக, அழகாக, புரியும்படி உங்கள் கருத்துகளை முன்மொழியுங்கள்.
எதிரில் இருப்பவர்களின் முகபாவங்களை, எண்ண ஓட்டங் களை, வெளிப்பாடுகளைக் கவனிக்க வேண்டும். கண்களைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். இது உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை உண்டாக்கும்.
நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லுகிறபோது எதிரில் இருப்பவர்களின் முகபாவம், உடல் அசைவுகள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். எதிரிலிருப்பவர் என்ன நினைக்கின்றார் என்பதை உடலசைவுகள் வெளிப்படுத்தும். அதைத்தான் `உடல்மொழி' என்கிறார்கள். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய இளைஞர்களிடம், கவனித்தல் திறன் குறைந்து கொண்டே வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. அடுத்தவர்கள் பேசும்போது அலட்சியமாக இருப்பது, அவர்கள் பேசுவதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தம் கருத்தையே முதன்மைப்படுத்துவது என்றே இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
கவனித்தல் என்பது உங்கள் இதயத்தையும் ஈடுபட வைப்பதுதான். கவனித்தலில் புறக்கவனம், அகக்கவனம் என்ற இரண்டு வகை உண்டு. புறக்கவனம் என்பது கவனிப்பது போல் நடிப்பது. இதில் நேர்மையான கவனம் இல்லை. மனம் வேறு எங்கோ இருக்கும். மனமும், இதயமும் ஒருமித்துக் கவனிப்பதுதான் அகக்கவனம்.
இனிய சொல் இரும்புக் கதவைக் கூடத் திறக்கும் என்கிறது பல்கேரியப் பழமொழி. எனவே எப்போதும் இனிய சொற்களைச் சொல்லுவதில் கவனமாக இருங்கள்.
சொற்கள் காலம் கடந்து நிற்பவை. அதைப் புரிந்து கொண்டு அவற்றைப் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பார் கலில்ஜிப்ரான்.
இனிய இளைஞனே! அடுத்தவர்களின் இதயத்தை நீ வெல்ல வேண்டுமா? அதற்கு ஒரு வழி உண்டு. என்ன தெரியுமா? பேசும் வார்த்தைகள் உதட்டளவில் இல்லாமல் இதயத்திலிருந்து வர வேண்டும். இதுதான் இதயத்தைக் கவரும் இனிய வழி

கண் திருஷ்டிக்குப் பரிகாரம் என்ன?

கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.

ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்

 வீட்டுல் அணியும் உடைகள், பெண்கள் வீட்டில் இருக்கும் போது உடை அணியும் விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டியது இல்லை என சில பெண்கள் நினைக்கிறார்கள். இது தவறான மனோபாவமாகும். வீட்டில் இருப்பவர்கள் நம்மை சார்ந்தவர்களாகவே இருப்பினும் வீட்டுச் சுழ்நிலைக்கு ஏற்ப உடை அணிவது வீட்டில் உள்ள ஆண்களுக்கு நிறைவாக இருக்கும். வீட்டில் இருக்கும் போது பகட்டாக உடை அணிவது தேவையில்லை என்றாலும் வீட்டிற்கு ஏற்ற மாதிரி அழகாக உடை அணிவது அவசியமே.
     அதிக உடையும் குறைந்த உடையும்  பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது. கடைத் தெருவுக்குப் போகும்போது கடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறம் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சுழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும். புடவைக்குப் பொருத்தமான சோளிகள் பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும், கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.  அலுவலகம் செல்லும் பெண்கள் அணியும் ஆடை  அலுவலங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோசமான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என கருதிவிடக்கூடாது. கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சுழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம். ஒல்லியான பெண்களுக்கு உடைகள் மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.  புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும் பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.    
        
 உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமைபார்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயராமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.  கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்றால் கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக கட்டம் போடப்பட்ட மிகவும் அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்திச் சென்றால் அழகாக இருக்கும். 

மூளைக்காய்ச்சல்

வைரஸ் கிருமிகளால் மூளையும், நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போய்விடுகின்றன. இதுதான் மூளைக் காய்ச்சல் எனப்படுகிறது. இதனால், உயிருக்கே ஆபத்து நேரலாம்.நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சரியான சிகிச்சை அளித்தால் பாதிப்பில் இருந்து மீளலாம். இந்த மூளைக்காய்ச்சல் நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் ஏற்படுகிறது. மூளைக்காய்ச்சல் நோயால் கை கால்கள் செயல் இழந்துபோதல், வலிப்பு, கண் பாதிப்பு, காது கேளாமே போன்ற நிரந்தரப் பாதிப்புகள் ஏற்படலாம்.மூளைக் காய்ச்சல் நோய் ஒருவருக்கு உடனடியாகவும் வரலாம். மெதுவாகவும் வரலாம்.


மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள்:
தாவாட்டி அம்மை, மணல்வாரி அம்மை, ரூபெல்லா, சைட்டோ மெகாலோ வைரஸ், எப்ஸ்டீன் வைரஸ், பாக்ஸ் வைரஸ், ஈக்குன் வைரஸ், ரேபிஸ் வைரஸ், டெங்கு வைரஸ் போன்றவை மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள்.நோயின் தீவிரத்தை தீர்மானிப்பவை.நோய்க் கிருமிகளின் வீரியம், நோயாளியின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புத் திறன், மூளையில் உள்ள நீரின் அழுத்தம் ஆகியவைதான் மூளைக்காய்ச்சல் நோயின் தீவிரத்தை தீர்மானிக்கின்றன.
வகைகள்:
மூளைக்காய்ச்சல் மூன்று வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
1. அறிகுறிகள் இல்லாமலும் நோயின் தாக்கம் குறைவாகவும் இருத்தல்.
2. மூளையின் பாதுகாப்பான் ஜவ்வைத் தாக்குவது.
3. மூளையில் பாதுகாப்பான ஜவ்வையும், மூளையையும் மிகத் தீவிரமாகத் தாக்கி நரம்பு மண்டலத்தை செயல் இழக்க வைப்பது.
அறிகுறிகள்:
1. அதிகமான காய்ச்சல்
2. தலைவலி
3. வாந்தி
4. மூளை நிலைகுலைதல்
5. நினைவிழத்தல்
6. வலிப்பு
7. இதயம் மற்றும் சுவாச உறுப்புகள் செயலிழத்தல்
8. அதிக ஆழ்ந்த மூச்சு
9. கண் தசை நார்கள் செயல் இழப்பு
10. கை, கால்கள் முடங்கிப் போதல்
சிகிச்சை:
மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தாலோ, குழந்தை திடீரென்று  நினைவிழந்தாலோ, வலிப்பு வந்தாலோ உடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பாட்டால், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும்.
முக முக்கியமான மூன்று விஷயங்களுக்கான குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டியத மிக மிக அவசியம்.
* குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது.
* குழந்தையின் மூன்று பாதிக்கப்படுவதைத் தடுப்பது.
* நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிப்பது.

செல்போன்கள்… கவனம்!!!

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
எப்போதும்  செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.
வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக மாறியிருக்கிறது செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.
அதனால் உலகில் 500 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 67 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.8 கோடி இணைப்புகள் விற்பனையாகின்றன. நாட்டில் 100க்கு 59 பேரிடம் செல்போன் உள்ளன. செல்போன் சேவை நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 24 ரூபாய் கட்டணம். இப்போது 10 காசுகளுக்கு பேசிக் கொள்ளலாம்.
நாளெல்லாம் இலவசமாக பேசிக் கொள்ளும் சேவைகள் பலவும் அறிமுகமாகியுள்ளன. பலன் தரும் செல்போன்களின் பயன்பாடு, இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது.
செல்போனை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர். வருகின்ற அழைப்புகளில் எதிர்முனையில் எதிர் பாலினமாக இருந்தால் மணிக் கணக்கில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அது முகம் தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பின்னணி என்னவாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை. இப்படி பேசியே காதல் கோட்டை கட்டியவர்களும் இருக்கிறார்கள். கம்பி எண்ணியவர்களும் இருக்கிறார்கள். செல் போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலும் கெடுகிறது. செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் உடல் நலம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய், மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை உடல், உள்ளம், உறவுகளை பாதிக்காமல் பயன்படுத்தும் பக்குவம் அவசியம்.
கோபுரங்களால் கோடி தொல்லை
செல்போன் டவரால் மனிதர் மட்டுமின்றி உயிரினங்களும், தாவரங்கள் கூட பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. செல்போன் கோபுரங்களுக்கு முதலில் பலியானது சிட்டுக்குருவிகள்தான். கோபுரங்களில் வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஓரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பின் வீச்சு அதிகம் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் பள்ளிகள், குழந்தை காப்பகங்கள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை உள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் கோபுரங்கள் அமைக்க கூடாது. குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் எந்த விதிமுறைகளும் கிடையாது.
செல்போனில் பேச்சு; ரகசியம் போச்சு
செல்போனில் பேசினால் யாருக்கும் தெரியாது என்று சகலத்தையும் செல்போனில் கொட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பேசும் அனைத்தும் டேப் செய்யப்படும். ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் இணைப்பு பெறும் வாடிக்கையாளர் விவரங்களையும், எண்ணையும் மத்திய, மாநில உளவு துறைகள் உட்பட 7 நிறுவனங்களுக்கு தனித்தனி குறுந்தகடில் தருவார்கள். அவர்கள் சந்தேகப்படும எண்களை கவனிப்பார்கள்.
கழிவறைகளில்…
யார் கேட்டாலும் சிலர் தங்கள் மொபைல் எண்களை தந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் அசட்டையாக இருக்கின்றனர். ரயில் சினேகிதர்கள் கூட செல்போன் எண்களை பெற்று விடுகின்றனர். பேச்சு வளர்ந்து பெரும்பாலும் திசை மாறி போய் விடுகிறது. தவிர்க்க முயலும்போது கோபமடைபவர்கள், அதே ரயிலின் கழிவறைகளில் அந்த செல்போன் எண்களை எழுதி வைத்து விடுகின்றனர். இதேபோல் காதலிக்க மறுத்த பெண்களின் எண்களை, பகையுள்ள குடும்பத்தின் பெண்களின் எண்களையும் எழுதி விடுகின்றனர். ரயில் கழிவறைகள்
என்றில்லை, பேருந்து நிலையம்,
மருத்துவமனை என பல இடங்களில் பொது கழிவறைகளிலும் பெண்ணின் பெயருடன் எண்ணை எழுதி வைத்து விடுகின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களாக சித்தரித்து விடுகின்றனர். இப்படி கண்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை பார்த்து பெண்கள் மனநோயாளிகள் ஆவதுதான் மிச்சம்.
காவல்துறை சொல்வதென்ன?
செல்போனில் வீடியோ கேமரா, இன்டெர்நெட் வசதி வந்த பிறகு புகார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. Ôமுழு சுகம் வேண்டுமா? தொடர்பு கொள்ளவும்Õ என்று பெண்களின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி விடுவார்கள். இதேபோல் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர், உரிமையாளர் எண்ணை குறிப்பிட்டு, தொடர்பு கொள்ளவும் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விட்டார். உரிமையாளர் Ôவிற்பதற்கில்லைÕ என்று பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார். அப்புறமென்ன இந்த சம்பவங்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மிஸ்டு கால் கொடுப்பதும் குற்றம்தான் என்கிறார் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் டி.தங்கராஜ்.
வெறும் 2 நிமிடங்கள்தான்
சென்னை மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை மருத்துவப் பிரிவு முன்னாள் தலைவர் கே.பாலகுமார், Ô‘செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான். யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான். செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்Õ’ என்றார்.
எச்சரிக்கை அவசியம்
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் கூறுகையில், ‘‘செல்போன் வாங்கும்போது உத்திரவாத அட்டை, ரசீதுடன் வாங்க வேண்டும். Ôஐஈஎம்ஐÕ எண்ணை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. காணாமல் போனால், எண்ணை செயலிழக்கச் செய்வது நல்லது. இல்லாவிட்டால் போனை எடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். தெரியாத நபர்களிடம் செல்போனை கொடுக்கவே கூடாது. செல்போனை பழுது பார்க்க தரும் போது சிம்கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்போன் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 506(1), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. அபராதமும் வசூலிக்கப்படும். பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் 509 பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும்Õ’ என்றார்.
செல்போனில் ‘நீலம்’
செல்போன் வந்து விட்டபிறகு ஸ்டில் கேமரா, வீடியோ கேமரா எல்லாம் கைக்குள் வந்து விட்டன. சிலர் தங்கள் உறவு காட்சிகளை கூட படம் பிடித்துக் கொள்கிறார்கள். Ôத்ரில்Õலுக்காக எடுக்கும் தம்பதிகளை விட திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கள்ளக் காதலர்கள் அதிகம். தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கப்படும் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளவும் செய்கின்றனர். அங்கிருந்து பல நூறு பேர்களுக்கு பரவி, இன்டர்நெட் மூலம் மாநிலம், தேசம் கடந்து விடுகிறது. ஒரு சிலர் இதனை இணையதளங்களுக்கு விற்று காசாக்கி விடுகின்றனர். இந்த விஷயம் வீட்டில் தெரியும் போது பிரச்னையாகி விடுகிறது. இப்படி குடும்பங்கள் சீர்குலைவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமல்ல நீலப்படம் பார்க்க ஊருக்கு ஒதுக்குபுறமான திரையரங்குகளை தேடிச் செல்வார்கள். செல்போனில் பரவும் செக்ஸ் வீடியோக்களால் இந்த பிட் திரையரங்குகள் நலிந்து விட்டன.
ஆண்மைக்கும் ஆபத்தா…
பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.டி.காமராஜ், Ô‘செல்போனை இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமல் போவது குறித்து பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல் மடிக் கணினிகளை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பயன்படுத்துவதும் இதே பிரச்னையை ஏற்படுத்துகிறது. செல்போனை வெறுமனே (பேசாத போதும்) சொருகி வைத்திருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படும். தொடர்ந்து 4 மணி நேரம் செல்போனில் பேசினாலும் பாதிப்புதான். செக்சில் ஆர்வத்தைஏற்படுத்தும் டெஸ்டோடிரான் என்ற ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்மை குறைகிறது. செல்போன்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த ஆய்வு முடிவுகளும் வெளியாகவில்லை’’ என்றார்.
செல்போன் போதை
வீட்டுக்கு தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆளுக்கு ஒரு சிம் கார்டு பயன்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வரிசையாக மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். யார் முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம் கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டு கால் கிடைத்த மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. இப்படி 24 மணி நேரமும் செல்போன் போதையில் வீழ்ந்துக் கிடப்பவர்களுக்கு மனநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் விஜயகுமார்.

டெங்கு காய்ச்சல்


நுளம்புகளால் பரப்பப்படும்  ஒருவித  வைரஸ் நுண்கிருமிகளால்  ஏற்படக்கூடியது   இந்த  டெங்கு காய்ச்சல். நான்கு  வகையான  வைரஸ்  கிருமிகளால் இந்த  நோய்  பரவுகிறது.
நோய் பரவும் வழிகள்:
ஈடீஸ்  எனப்படும் நுளம்புகளால்தான் வைரஸ் கிருமிகள் பரவி டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஈடீஸ் வகை நுளம்புகள், பகல் நேரத்தில்தான் மனிதர்களைக் கடிக்கும். தேங்கிய நீர்நிலைகளில் முட்டையிட்டுப் பெருகக்கூடியவை.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரைக் நுளம்பு கடிக்கும்போது பாதிக்கப்ட்டவரின் உடலில்இருந்து வைரஸ் கிருமிகள் கொசுக்குப் பரவும்.
பிறகு, இந்தக் கொசு இன்னொருவரைக் கடிக்கும்போத அதன் உடலில் இருந்து வைரஸ் கிருமிகள் அவருக்கும் இந்தக் கிருமிகள் பரவி டெங்கு காய்ச்சலை ஏற்படுத்திவிடும்.
மழைக்காலங்களில்தான் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகி நோயைப் பரப்புகின்றன.முதன்முறையாக நுளம்பு கடித்து வைரஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைந்த மூன்று முதல் பதினான்கு நாள்களுக்கும் காய்ச்சல் ஏற்படும்.
ஏழு முதல் பத்து நாள்கள் வரை காய்ச்சல் இருக்கும்.
டெங்கு ரத்தக் கசிவு நோய்:
இரண்டாவது முறை வைரஸ் தாக்கினால் டெங்கு ரத்தக் கசிவு நோய் ஏற்படும்.
ஒருவருக்கு ஏற்கெனவே டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அதற்கான நோய் எதிர்ப்புச் சக்தி உடலுக்குள் உருவாகி இருக்கும் நிலையில், இன்னொரு வகையான வைரஸ் கிருமி தாக்கினால் இந்த நோய் ஏற்படும்.
மூன்று முதல் ஏழு நாள்கள் கழித்து காய்ச்சல் குறையும்போது பல மாற்றங்கள் நிகழும். ரத்தக் குழாய்கள் விரிவடைவதாலும், ரத்தத்தில் உள்ள புரதச் சத்துக்கள் வெளியேறுவதாலும், ரத்தம் கசிவதாலும் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.
ரத்தத்தில் ஏற்படும் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். (நீர் குறைவதால்) நுரையீரலைச் சுற்றி நீர் கோத்துக் கொள்ளும். வயிற்றுப் பகுதிகளிலும் நீர் சேரும். முகத்தில் கண்களைச் சுற்றி வீக்கம் தெரியும்.
பல்வேறு இடங்களில் ரத்தக் கசிவு ஏற்படலாம். தோலில் கொசுக்கடி போன்ற சிவப்புப் புள்ளிகளும்,  வயிற்றுக்குள் ரத்தக்கசிவும் ஏற்படலாம்.
ரத்தம் உறைவதற்குத் தேவையான அணுக்கள் குறைவதால் இத்தகை பாதிப்புகள் ஏற்படும். நோயின் தீவிரம் அதிகரித்தால், இந்தப் பாதிப்புகளுடன் ரத்த அழுத்தமும் குறையும்.
நோயின் அறிகுறிகள்:
காய்ச்சல் மிக அதிகமாக இருக்கும் (103 முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட்), தலைவலி (குறிப்பாக நெற்றி மற்றும் கண்களுக்குப் பின்னால்), உடல் வலி, முக்கியமாக முதுகு வலி அதிகமாக இருக்கும்.
தோலில் தடிப்புகள் அதிகமாக இருக்கும். இவை 24 முதல் 48 மணி நேரத்துக்கு இருக்கும். வாந்தி மற்றும் வயிற்றுவலி இருக்கும். காய்ச்சல் இருக்கும் அளவுக்கு நாடித்துடிப்பு அதிகமாக இருக்காது.
பசியின்மை, உடல்சோர்வு, நெறிகட்டிகளால் வீக்கம், கை, கால்களில் வீக்கம் ஏற்படலாம். சில நாள்களில் காய்ச்சல் குறைந்து, பிறகு மீண்டும் காய்ச்சல் அதிகரிக்கலாம். பல்வேறு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறையலாம்.
பரிசோதனைகள்:
ரத்தப் பரிசோதனைகள் மிகவும் இன்றியமையாதவை. சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அறிவதற்காக, ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு, ரத்தம் உறைவதற்கான நேரம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளைச் செய்யவேண்டும்.
டெங்கு காய்ச்சல்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேறு சில பரிசோதனைகளைச் செய் வேண்டும். எக்ஸ்-ரே, ஸ்கேன் (வயிற்றுப் பகுதி) ஆகியவற்றை எடுக்கவேண்டும். அடிக்கடி ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும்.மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க  வேண்டும்.
சோர்வாக இருத்தல் அல்லது ஆசுவாசப்படுத்த முடியாமல் அழுதல்.
ரத்தக் கசிவு (எவ்வளவு குறைவான அளவாக இருந்தாலும்)கை கால்கள் நீலம் பூத்திருத்தல்.
உடல் சில்லிட்டுப்போதல்.வயிற்று வலி மிக அதிகமாக இருத்தல்.ரத்த அணுக்கள் குறைவாக இருத்தல்.
நுரையீரலைச் சுற்றியோ, வயிற்றிலோ நீர் கோத்துக் கொள்ளுதல்.ரத்த அழுத்தம் குறைவது; நாடித் துடிப்பு சீராக இல்லாத நிலை.உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாத நிலை.
சிகிச்சை:
டெங்கு காயச்சலுக்கென பிரத்யேக மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல் குறைவதற்கு பாரசிடமால் கொடுக்க வேண்டும்.
உணவு சாப்பிட முடியாத குழந்தைகளுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து கொடுக்க வேண்டும்.தேவைப்பட்டால், குழந்தைகளை மருத்துவமனைல் சேர்த்து சிவப்பு அணுக்களோ அல்லது வேறு ரத் அணுக்களோ  ஏற்ற வேண்டும்.
தடுக்கும் முறைகள்:
* நுளம்புக்களை ஒழிக்க வேண்டும்.
* வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* நுளம்பு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
* டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை நுளம்புகள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நகங்களும் நலம் சொல்லும்!

நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. நகங்களை நலமாக வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள்…
* நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங் களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவ தோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.
* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.
* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணையை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.
* சமையல் அறை, கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா போன்ற ரசாயனங் களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.
* தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும் கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது.
* பசை, தண்ணீரில் கலந்து உபயோ கிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.
* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சு களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.
* நகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள்தான். கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே. நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.
* நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்ப மாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மை தான்.
வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்தஓட்டம் கிடைக்க உதவுகிறது.
* நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.
நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் `மானிட்டர்’ போலவும் செயல்படும். உடல் நலம் பாதிக்கப்பட்டால் நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு இவற்றைக் கண்டுபிடிக்கலாம். நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் வருமாறு…
* நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்டு நோய் போன்றவற்றின் அறிகுறி யாகவும் இது கருதப்படுகிறது.
* நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் ரையீரல் நோய்கள் வரலாம்.
* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.
* நகங்கள் வெளிறி இருந்தால் ரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.
* நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.
* கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.
* நீலநிறமாக மாறிவிட்டால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.
* நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.
* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.
விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துக் கொள்வது நலம்.

மாரடைப்புக்கு செயல்முறை மூலம் சிகிச்சை



மாரடைப்புக்கு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதையடுத்து, செயல்முறை மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது இரண்டு வகைப்படும். 1) ஆன்ஜியோ பிளாஸ்டி 2) பைபாஸ் அறுவை சிகிச்சை.
ஆஞ்சியோ பிளாஸ்டி என்பது என்ன?
ஆன்ஜியோகிராம் செய்வது போலவே இருதய ரத்தக்குழாயினுள் பிளாஸ்டிக் டியூபைச் செலுத்தி, அதன் வழியாக எளிதாக அடைப்பை சரிசெய்யும் முறையே ஆன்ஜியோ பிளாஸ்டி. இது அறுவை சிகிச்சை அல்ல. மயக்க மருந்தும் தேவையில்லை.
ஆன்ஜியோ பிளாஸ்டி எவ்வாறு செய்யப்படுகிறது?
ஆன்ஜியோகிராம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாயைவிட சற்று தடித்த, அகலமான, எளிதில் வளையும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் டியூப் (Guide Catheter) தேர்ந்தெடுக்கப்படுகிறது.
வலது கையின் மணிக்கட்டிலோ, தொடைகளின் மேல்பகுதியில் உள்ள ரத்தக்குழாய் வழியாகவோ இந்த டியூப் செலுத்தப்பட்டு, அதன் நுனிப்பகுதி பாதிக்கப்பட்ட அல்லது அடைப்பு உள்ள இதய ரத்தக் குழாயின் ஆரம்ப பகுதியில் நிறுத்தப்படுகிறது. அடுத்து மிக எளிதில் வளைந்து செல்லும் தன்மையை நுனிப்பகுதியாக கொண்ட நீண்ட மெல்லிய இழை (Guide Wire) கைடு டியூபின் வழியாக அடைப்பு உள்ள ரத்தக் குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதற்கு “வழிகாட்டி இழை’ என்று பெயர்.  இந்த வழிகாட்டி இழையின் மூலம் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பின் தன்மைக்கு ஏதுவான சுருக்கப்பட்ட பலூன் எடுத்துச் செல்லப்பட்டு, அடைப்பு உள்ள பகுதியில் நிறுத்தப்படுகிறது. இப்போது அந்த பலூனை விரிவடையச் செய்வதன் மூலம், அடைப்பின் பெரும்பகுதி ரத்தக்குழாயின் தசை சுவர்களுக்குள் அழுத்தப்படுகிறது. ரத்தக்குழாயின் வழி அகலப்படுத்தப்படுகிறது. அதன் பின் பலூன் மீண்டும் சுருக்கப்பட்டு ரத்தக்குழாயில் இருந்து வெளியே எடுத்து வரப்படுகிறது. இச்செய்முறையால் அடைப்பால் பாதிக்கப்பட்ட இருதய தசைக்கு ரத்த ஓட்டம் மீண்டும் சீராக்கப்படுகிறது. அகலப்படுத்தப்பட்ட ரத்தக்குழாய் மீண்டும் சுருங்கி அடைபடாமல் தடுக்க, மெல்லிய, விரியும் தன்மை கொண்ட, பால்பாயின்ட் பேனாவில் உள்ள ஸ்பிரிங் போன்ற “உலோக வலை’ (Stent) அவ்விடத்தில் பொருத்தப்படுகிறது.



இந்த உலோக வலை இரு வகைப்படும். 1. சாதாரண உலோக வலை (Bare Metal Stent), 2. மருந்து தடவப்பட்ட உலோக வலை (Drug Eluting Stent).


மருந்து தடவப்பட்ட உலோகவலை சில காரணங்களால் சாதாரண உலோக வலையைவிட சிறப்பானது. ஆனால் விலை அதிகமானது. எல்லாருக்கும் மருந்து தடவப்பட்ட உலோக வலை தான் பொருத்தப்பட வேண்டும் என்பதில்லை.  இதய ரத்தக்குழாயின் அடைபட்ட பகுதியின் அளவு, சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற சில காரணங்களைக் கருத்தில் கொண்டு எத்தகைய உலோக வலை பொருத்த வேண்டும் என மருத்துவரே தீர்மானிப்பார். மாரடைப்பு வந்து மூன்றில் இருந்து எட்டு மணி நேரத்திற்குள், மருத்துவமனை வருவோருக்கு ரத்தக்கட்டியைக் கரைக்கும் மருந்து தராமலேயே இத்தகைய சிகிச்சை முறை மேற்கொள்வதே மிகச்சிறந்ததாகும். மேலும் சிலவகை மாரடைப்புக்கு ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்து தரமுடியாது. அத்தகைய சூழலில் ஆன்ஜியோ பிளாஸ்டி போன்ற இத்தகைய சிகிச்சை முறை தான் உகந்ததாக இருக்கும்.
இந்த சிகிச்சைக்கு பின் இரண்டாவது நாளில் எழுந்து நடமாடலாம். நான்கு அல்லது ஐந்து நாட்களில் வீடு திரும்பலாம்.

கெமிக்கல் சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்

உணவு பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும், ஆடைகளுக்கு பயன்படுத்தும் கெமிக்கல் வண்ணங்களும் பயன்படுத்துவதால், அதை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு, உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.
சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் பலர், வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக, தாங்கள் தயாரிக்கும்  உணவு பொருட்களில்  பல்வேறு வண்ணங்களை கலக்கின்றனர். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக், சுவீட், குழல் அப்பளம் முதல் ஓட்டல்களில் பெரியவர்கள் சாப்பிடும் சிக்கன்-65, பொறித்த மீன் என அனைத்திலும், வண்ண சாயங்கள் கலக்கப்படுகின்றன.  நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக வண்ணங்கள் சேர்ப்பதால், உணவு பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதற்கு மாறாக, பாதிப்பையே ஏற்படுத்தும்.
இயற்கை மற்றும் செயற்கை வண்ணத்தை பயன்படுத்திய வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் பலர், சமீபகாலமாக விலைமலிவு, பலன் அதிகம் என்பதற்காக, துணிகளுக்கு சாயம் ஏற்ற பயன்படுத்தும் கெமிக்கல் வண்ணங்களை உணவு பண்டங்களில் சேர்க்கின்றனர். இதுபோன்ற கெமிக்கல் வண்ணம் சேர்த்த உணவு பண்டங்களை சாப்பிடுவதால், குழந்தைகள் கடுமையாக பாதிக்கின்றனர்.
நகராட்சி உணவு ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: உணவு பொருட்களில் இயற்கை வண்ணம், செயற்கை வண்ணம் என்ற இருவகை வண்ணங்கள் கலக்கப்படுகின்றன. பீட்டா கரோட்டின், குளோரோபில், ரிபோப்ளேவின், கேராமல், சேப்ரான் உட்பட 11 வகை இயற்கை வண்ணங்களை உணவு பொருட்களில் பயன்படுத்தலாம். சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஆகிய நான்கு செயற்கை வண்ணத்தையும் பயன்படுத்தலாம். செயற்கை வண்ணத்தை பொறுத்தவரை, சிவப்பில் பான்சியோபோராக், கார்மோசிம், எரித்ரோசின், மஞ்சளில் டாட்ராசின், சன்செட் எல்லோ, நீலத்தில் இன்டிகோ கார்மென், பிர்லியண்ட் புளூ, பச்சையில் பாஸ்ட் கிரீன் ஆகிய வண்ணங்களையே உணவு பொருட்களில் சேர்க்க வேண்டும். அதிலும், ஒவ்வொரு பண்டங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் மட்டுமே வண்ணங்களை சேர்க்க வேண்டும். நிர்ணயித்த அளவுக்கு கூடுதலாக இயற்கை, செயற்கை வண்ணம், கெமிக்கல் சாயம் கலந்த உணவு பொருட்களை சாப்பிடும் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும், கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, கேன்சர்,
பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
உணவு கலப்பட தடை சட்டம் 1954ல் கீழ், நிர்ணயிக்கப்பட்ட வண்ணத்தை விட கூடுதலாக சேர்த்திருப்பது உறுதியானால், அதை தயாரித்தவர்கள், விற்பவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஆயுள் தண்டனை வரையும், 1,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். “உணவு பாதுகாப்பு சட்டம் 2006′ இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அந்த சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டால், உணவு பொருளில் கலப்படம் செய்வோருக்கு லட்சக்கணக்கில் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆய்வாளர் கூறினார்.

இதய நோய்க்கான முக்கிய மருந்துகள்


இதய நோயளிகளுக்கு, அவர்களுக்கு ஏற்படடுள்ள நோயைக் குணப்படுத்துவதற்கான பல்வேறு சிகிச்சைகளும், மருந்துகளும் உள்ளன. இதய நோய்களைக் குணப்படுத்த எத்தனைவிதமான கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு சில மருந்துகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட சில மருந்துகளை இங்கே பார்ப்போம்.
இந்த மருத்தின் பெயர், அதில் உள்ள மருந்துப் பொருள்கள் , எந்தெந்த இதய நோய்களுக்கு இம்மருந்து பயன்படுகிறது என்பது உள்ளிட்ட பல தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

டில்டியாஸெம்:
இது மாத்திரைகளாகவும், ஊசி மருந்தாகவும் தயாரிக்கப்படுகிறது.இந்த மருந்து, செல்களுக்குள் கால்சியம் அயனிகள் கடத்தலைத் தடுக்கிறது. இதயத்திலும் ரத்த நாளங்களிலும் இந்த மருந்து செயல்படும். இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவது, ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, ரத்த  நாளங்களை விரிவடையச் செய்வது, போன்ற பல பணிகளைச் செய்கிறது இந்த மருந்து.மேற்கூறிய பண்புகளால், ரத்த அழுத்தத்தைக் குறைக்கப்ப பயன்டுத்துவடன், மாரடைப்புக்கான முக்கியமான மருந்தாகவும் இது பயன்படுகிறது.
அட்டார்வஸ்டேட்டின்:
இது, ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஒரு முக்கிய மருந்து. இந்த மருந்து, உடலில் ஒரு நொதியின் செயல்பாடு மூலம் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது.இந்த மருந்து ஆஸ்பிரின் மருந்தோடு சேர்ந்தும், பிற ரத்த கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளோடு சேர்ந்தும் தயாரிக்கப்படுகிறது.இது, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பிற காரணங்களால் ஏற்படும் மிகை ரத்த கொலஸ்ட்ராரைக் குறைக்கவும் பயன்படுகிறது.
டிசாக்ஸின்:
இது, இதய செயலிழப்பைத் தடுக்கப் பயன்படும் ஒரு முக்கியமான மருந்தாகும்.இதய ‘டானிக்’ என்று இந்த மருந்து அழைக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் ஏற்படும் இதய செயலிழப்பைத் தடுக்க உதவுகிறது. குறிப்பாக, இதய வால்வு நோய்கள், மாரடைப்பு, இதயத் தசை நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் இதய பாதிப்பையும் அதனால் உண்டாகக்கூடிய இதய செயலிழப்பையும் தடுக்கிறது. மேலும், இதயம் சீரில்லாமல் துடிப்பதையும் இம் மருந்து கட்டுப்படுத்துகிறது.
ஸிம்வாஸ்டேட்டின்:
இந்த மருந்து, உடலில் செயல்படும் ஒரு முக்கிய நொதியின்  செயல்பாட்டைத் தடுக்கிறது. இதன் மூலம் விணிக்ஷிகிலிளிழிமிசி என்ற அமிலம் சுரக்காது. இதன் காரணமாக, ரத்தத்தில் ‘கொலஸ்ட்ரால்’ அதிகமாக ஏற்படுவது தடுக்கப்படும். மேலும், ரத்தத்தில் டிரைகிளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைக்கிறது.மேற்கூறிய பண்புகளால், ரத்ததில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்களுக்கு, கொலஸ்ட்ராரைக் குறைக்கத் தரப்படுகிறது. இது தனியாகவோ, பிற மருந்துகளோடு சேர்த்தோ கொடுக்கப்படுகிறது.
அமைலோடீப்பின்:
இந்த மருந்து, கால்சியம் அயனிகளைத் தடை செய்யக்கூடிய ஒரு முக்கியமான மருந்தாகும். இந்த மருந்தால், இதய நாளங்கள் விரிவடையும். இதயத்தின் பளு குறையும். ரத்த அழுத்தமும் குறையும்.இந்த மருந்தின் செயல்பாட்டல், மிகை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்தாகப் பயன்படுகிறது. இதய ரத்தநாளம் திடீரென சுருங்கி ஏற்படும் இதய பாதிப்புக்கும், நெஞ்சு வலிக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது.
அட்டினாலால்:
இந்த மருந்து, உடலில் உள்ள பீட்டர் ஏற்பிகளில் தடையை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும்.
இந்த மருந்து, அட்ரீனல் சுரப்பி ஹார்மோன் செயல்பாட்டைத் தடுக்கும். இந்த மருந்தின் செயல்பாட்டால் இதயத் துடிப்பு குறையும். இதயத்துக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவு குறையும். இதன் காரணமாக, இதயத் சுமையும் (வேலைப்பளுவும்) குறையும். ரத்த அழுத்தமும் குறையும்.இதய நோயாளிகளுக்கு, குறிப்பாக மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, மிகை இதயத் துடிப்பு உள்ளவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது. மேலும், இதயத்தசை நோய்கள், அட்ரீனல் சுரப்பி நோய்கள், கை, கால் நடுக்கத்துக்கும் சிறந்த மருந்து இது.
ஃபலோடீபைன்:
இது, கால்சியம் அயனிகளை செல்களுக்குள் நுழைய விடாமல் தடுக்கக்கூடிய ஒரு முக்கியமான மருந்தாகும். இந்த மருந்து, இதயத்திலும், ரத்த நாளங்களிலும் செயல்படுகிறது. இதனால், இதயம் சீராகச் செயல்பட முடியும். ரத்த அழுத்தமும் குறையும்.
இதய நோய்களால் ஏற்படும் இதய செயலிழப்புக்கு மருந்தாக பயன்படும் இது, இதய பாதிப்பால் ஏற்படும் நெஞ்சு வலியைக் குறைக்கப் பயன்படுகிறது.
லேபீட்டலால்:
இந்த மருந்து, ஆல்பா மற்றும் பீட்டா ஏற்பிகளில் தடையை ஏற்படுத்தும் மருந்தாகும். இவ்வாறு, இதயத்தில் உள்ள நரம்பிழை ஏற்பிகளில் இந்த மருந்து செயல்படுவதால், இதயத் துடிப்பு குறைகிறது. இது, ரத்த அழுத்தையும் குறைக்கிறது.ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்தாகவும் பயன்படும். இது, குறிப்பாக கர்ப்பிணிகளுக்குப் பயன்படுகிறது.
அம்யோடரோன்:
இந்த மருந்து, இதயத் துடிப்பு தொடர்பான நோய்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இது, இதய மின்னோட்டத்தை ஏற்படுத்தும் நரம்பிழைகளில் செயல்பட்டு, அங்கு மின்னோட்டக் கடத்தலைக் குறைக்கிறது. இதனால், இதய மின்னோட்டத்தில் தாமதம் ஏற்படும். இதன் காரணாக, இதய மின்னோட்டத்தில் தாமதம் ஏற்படும். இதன் காரணமாக, இதயத் துடிப்பு குறைந்து, இதயம் சீரில்லாமல் துடிப்பது கட்டுப்படுத்தப்படும்.
இதய மேல் அறை சீரில்லாமல் துடிக்கும் இதய பாதிப்புக்கும், கீழ் அறை சீரில்லாமல் துடிக்கும் இதய பாதிப்புக்கும் சிறந்த மருந்து இது.
கிளிசரைல் டிரைநைட்ரேட்:
இது, ‘நைட்ரேட்’ வகையைச் சேர்ந்த மருந்தாகும். இது, இதய ரத்த நாளங்களில் செயல்படும். ரத்த நாளங்களின் மெல்லிய தசையை விரிவடையச் செய்யும். இதன் மூலம், ரத்த நாளத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கி, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும், இது ஆவி மருந்தாகவும், தோலில் பூசும் களிம்பு மருந்தாகவும் தயாரிக்கப்படுகிறது. இதய ரத்த நாள அடைப்பால் மாரடைப்பு ஏற்படுகிறவர்களுக்கு, உடனடியாகக் கொடுத்து ரத்த அடைப்பை நீக்குவதற்கு இந்த மருந்து பயன்படுகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.
குயூனீடின்:
இது, நீண்ட காலமாகவே இதய நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, இதய மின்னோட்டத்தைத் தடை செய்கிறது. இதன் மூலம், இதயம் சீரில்லாமல் துடிப்பது தடுக்கப்படுகிறது.இதய மேல் அறை சீரல்லாமல் துடிப்பது, கீழ் அறை சீரில்லாமல் துடிப்பது, தன்னிச்சை இதயத் துடிப்புகள் போன்றவற்றுக்கு இது சிறந்த மருந்து.
டிஸ்ஸோபைரமைட்:
இதுவும் இதய நோயாளிகளுக்கான ஒரு முக்கியமான மருந்து. இது, இதயத்தைப் பாதித்துஅங்கு மின்னோட்டத்தை நீட்டிகிறது. இதன் மூலம், இதயத்தின் மேற்பகுதியில் தொடங்கும் மின்னோட்டம் இதய கீழ்ப்பகுதிக்கு வருவதற்குத் தாமதமாகும். இதனால், இதயம் சீரில்லாமல் துடிப்பது தடுக்கப்படும். இதயம் சீரில்லாமல் துடிக்கும் பாதிப்புக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
ஸ்டிரப்டோகைனேஸ்::
ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரல் படிந்து அதனால் ஏற்படும் அடைப்பைக் கரைக்க உதவும் முக்கியமான மருந்து இது.ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளில் உள்ள ‘பிளாஸ்மினோஜின்’ என்ற பொருளை ‘பிளாஸ்மின்’ என்ற பொருளாக மாற்றுகிறது. இந்த பிளாஸ்மின் தனித்தனியாகப் பிரிந்து பல்வேறு புரதப் பொருளாக மாறிவிடுவதால், அடைப்பு முழுமையாக நீங்கிவிடுகிறது. இதனால் இதயத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்படுகிறது.இந்த, மருந்து, ரத்த நாளங்களில் உறைந்த ரத்தத்தைக் கரைத்த உதவுகிறது. குறிப்பாக, மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, உடனடியாக இதய றாள அடைக்பைக் கரைக்க இது ஊசி மருந்தாகப் போடப்பபடுகிறது. இதய அவசர சிகிச்சைப் பிரிவில் (மி.சி.சிஹி.) சேர்க்கப்படும் நோயாளிக்குப் போடப்பட்டு உயிர்காக்க உதவும் முதல் ஊசி இதுதான். மேலும், நுரையீரல் ரத்த நாள அடைப்பு, கால் பகுதி ரத்த நாள அடைப்பு ஆகியவற்றைக் கரைக்கும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.
விரப்பமில:
இந்த மருந்து, கால்சியம் அயனிகளை செல்லுக்குள் செல்லவிடாமல் தடுக்கக்கூடியது. இது, இதய மின்னோட்ட செல்களிலும் தடையை ஏற்படுத்தும். இதன் மூலம், ரத்த நாளங்களில் ஏற்படும் சுருக்கம் தடுக்கப்படுகிறது. இந்த மருந்து இதயத் துடிப்பைக் குறைப்பதுடன், இதயத்துக்கு ரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்தும்.மாரடைப்பு, இதயம் சீரில்லாமல் துடிப்பது உள்ளிட்ட பல இதயப் பாதிப்புகளுக்கும் மருந்தாகப் பயன்டுகிறது.
நிப்பீடிபைன்:
இது, இதய நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, கால்சியம் அயனிகளின் வினைகளைத் தடுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இதனால், தசைப் பகுதியில் உள்ள செல்களுக்குள் கால்சியம் சத்து நுழைவது தடுத்து நிறுத்தப்படும்.இந்த செயல்பாட்டல், இதயத்தின் ஆக்ஸிஜன் தேவையும் குறைகிறது. மேலும், இதயத்துக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும் ஏற்படுத்தும். தகட்டணுக்களின் சேர்க்கையையும் கட்டுப்படுத்தும்.
மெட்டோபுரலால்:
இந்த மருந்து, பீட்டர்&1 நரம்பிழை ஏற்பிகளில் மின்னோட்டத்தைத் தடை செய்யும் உதவும் மருந்தாகும். இந்த மருந்து ரத்தத்தில் ‘ரெனினின்’ அளவையும் குறைக்கிறது. மேலும், இதயத் துடிப்பையும், இதயத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவையும் குறைக்கிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிற மருந்துகளோடு சேர்த்து இதயப் பாதிப்பைக் குறைக்கப் பயன்படுகிறது.
புரோபுரானாலல்:
இந்த மருந்து, பீட்டா நரம்பிழை ஏற்பிகளில் மின்னோட்டத்தைத் தடை செய்கிறது. இத்துடன், ரத்தத்தில் ‘ரெனினின்’ என்ற பொருளின் அளவையும் குறைக்கிறது. இது தவிர, ரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுகிறது. மேலும், கை, கால், நடுக்கத்தையும் தடுக்க உதவுகிறது.
நிகோரான்டீல்:
இது, இதய நோயளிகளுக்குப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்து. ரத்தக் குழாய்களின் மெல்லிய தசைகளை விரிவடையச் செய்யும் இந்த மருந்து, இதயத்துக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவற்றுக்குச் சிறந்த மருந்து. இதய ரத்த நாளப் பாதிப்பால் ஏற்படும் நெஞ்சு வலிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
புரவாஸ்டாட்டின்:
இந்த மருந்து, ரத்தத்தில் கொழுப்புச் சத்தை குறைக்கப் பயன்படும் ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, ஒரு நொதியின்  செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம், ரத்தத்தில் ‘கொலஸ்ட்ரால்’ அதிகமாவதைத் தடுத்துவிடும்.
குளோபிடோக்ரீல்:
ஆஸ்பிரின் மருந்தைப் போல் செயல்படக்கூடிய மருந்து இது. ரத்தத்தில் உள்ள தகட்டணுக்களின் சேர்க்கையைத் தடுத்து, ரத்த உறைதலைத் தடுத்து நிறுத்துகிறது.இந்த மருந்து தனியாகவோ அல்லது ஆஸ்பிரின் மருந்துடனோ சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்கப்பயன்படும் இது, இதய நோயாளிகளுக்கான சிறந்த மருந்து. இந்த மருந்து ரத்த உறைதலைத் தடுப்பதால், மூளை பாதிப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்டாமல் தடுக்கிறது. இந்த மருந்தையும், ஆஸ்பிரின் மருந்தையும் பயன்படுத்தும் போது, வயிற்றில எரிச்சல் ஏற்படும். ஆகவே, குடற்புண் …. பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மருந்தை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
ஜெம்ஃபைட்ரோஸில்:
இந்த மருந்து, இதயத்தில் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு முக்கிய மருந்தாகும். இது, ரத்தத்தில் எல்.டி.எல் டிரைகிளிசரைடு போன்ற கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது. அதே நேரம் இதயத்துக்கு தன்மை விளைவிக்கும் ஹெச்.டி.எல். கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது.இதன் மூலம், ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு, இதய நோய்கள், ரத்தக் குழாய் நோய்கள் போன்றவை வராமல் தடுக்கப்படுகின்றன.இந்த மருந்தை, தனியாகவோ அல்லது பிற கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளுடனோ சேர்த்துக் கொடுக்கலாம். அத்துடன் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.
ஆஸ்பிரியன்:
நீண்ட காலமாவே, பல்வேறு நோய்களுக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைவலிக்கு அதிகமாகப் பயன்படுத்துவார்கள். சிலர் உடல் வலிக்குப் பயன்படுத்துவார்கள். இது, ரத்தத்தில் உள் தகட்டணுக்களின் சேர்க்கையைத் தடுத்து நிறுத்துகிறது.கெட்ட அணுக்களின் சேர்க்கையைக் குறைப்பதில் சிறந்து விளங்கும் இது. இதய நோய்க்கான மருந்துகளில் மிக முக்கியமானது. மேலும், வாதக் காய்ச்சலால் ஏற்படும் வலியைக் குறைக்கவும் இந்த மருந்து பயன்படுகிறது.
அஸிநோகாவ்மாரோல்:
இதுவும், இதய நோய்க்கான ஒரு முக்கியமான மருந்து. இந்த மருந்து, ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கிறது. மேலும், இதய வால்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், செயற்கை வால்வு பொருத்தியவர்களுக்கு ரத்தம் உறைய வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு முக்கிய மருந்தாக இது கொடுக்கப்படுகிறது. மேலும், நுரையீரல் ரத்த நாள அடைப்பு நோய் ஏற்பட்டவர்களுக்கு அது மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும் இது பயன்படுகிறது.
புதிய மருந்துகள்:
இதய நோய்க்கான பல்வேறு முக்கி மருந்துகளைப் போலவே, மிகச் சமீபமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்ககப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சில புதிய மருந்துகளும் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.
போஸன்டான்:
இது, ரத்தத்தில் உள்ள உள்சுவர் ஏற்புகளில் செயல்பட்டு ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.நுரையீரல் ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி, தொடர்ந்து பல வாரங்கள் சாப்பிட வேண்டி இருக்கும்.இந்த மருந்தை, ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொடுக்கக்கூடாது.பின் விளைவுகள் இந்த மருந்தால், தலைவலி, தொண்டை அழற்சி, தோலில் அதிக ரத்த ஓட்டம், கால் வீக்கம், குறை ரத்த அழுத்தம், வயிற்றுத் தொந்தரவுகள், ரத்த சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
கவனம் இந்த மருந்த படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். உடனே நிறுத்தக்கூடாது. இந்த மருந்தைப் பயன்படுத்தும் போது,  மருந்துகளைத் தவிர்த்து விட வேண்டும்.
டோஃபிடிலைட்:
இது, இதய நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய முக்கிய மருந்து. சீரில்லாமல், முறையில்லாமல் ஏற்படும் இதயத் துடிப்புக்கு இது சிறந்த மருந்து. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக்கூடாது. மேலும், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கம் கொடுக்கக்கூடாது.பின் விளைவுகள் இந்த மருந்தால், சிலருக்குத் தலைவலி, நெஞ்சு வலி, சுவாசக் கோளாறுகள், தலை கிறுகிறுப்பு, குமட்டல், காய்ச்சல், உடல்வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதைப் பயன்படுத்தும்போது,  மருந்துகளைத் தவிர்த்துவிட வேண்டும்.
அஸிபியூட்டலால்:
பீட்டா அட்ரீனல் ஏற்புகளில் தடையை ஏற்படுத்தப் பயன்படும் மருந்து இது. இந்த மருந்தால், ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்த நோயாளிகளுக்கும், இதயம் சீரில்லாமல் துடிக்கும் இதய நோயாளிகளுக்கும் இம்மருந்தைக் கொடுக்கலாம். இந்த மருந்து 24 மணி நேரமும் செயல்படுவதால், இதை ஒருநாளைக்கு ஒரு மாத்திரையாகச் சாப்பிட்டாலே போதும். மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.பின் விளைவுகள் இந்த மருந்தால் சிலருக்கு, ஒவ்வாமை, அசதி, தலைவலி, தலைச்சுற்றல், தூக்கமின்மை, தோல் பாதிப்புகள், உடல் வலி, சுவாசக் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.
இந்த மருந்தை, ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், ஆஸ்துமா, இதய செயலிழப்பு, இதய மின்னோட்டத் தடை உள்ளவர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் இந்த  மருந்தைத் தவிர்க்க வேண்டு. இந்த மருந்தை, கல்லீரல், சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்குக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
அனாகிரீலைட்:
இது, ரத்த தகட்டணுக்களுக்கு  எதிராகப் பயன்படக்கூடிய ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மருந்து, ரத்தத்தில் புதிய தகட்டணுக்கள் அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதனால், ரத்தத்தில் தகட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவை ஒன்றோடு ஒன்று சேர்த்து ரத்தத்தை உறையச் செய்து ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் இதய பாதிப்பு, பக்கவாதம், தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கப்படுகிறது.இந்த மருந்தை, தகட்டணுக்கள் மிகையாக உள்ளவர்களுக்கு, மருத்துவரின் ஆலோசனையை பெற்று இரண்டு நேரமும் கொடுக்க வேண்டும்.
பின் விளைவுகள் இந்த மருந்தால், சிலருக்கு படபடப்பு, வயற்றோட்டம், வயிறுவலி, குமட்டல், தலைவலி, அசதி, உடல்வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
மற்ற மருந்துகளைப் போலவே, இதையும் ஒவ்வாமை உள்ளவர்களுக்குத் தரக்கூடாது. கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும்கூட தரக்கூடாது.
இந்த மருந்தை கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்குக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

விண்டோஸ் 7 ஷட் டவுண் ஷோர்ட் கட்

விண்டோஸ்  7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள், உடனே எதிர்பார்க்கும் ஒரு வசதி, சிஸ்டம் ஷட் டவுண்,  பவர் டவுண் மற்றும் சிஸ்டம் ரீ ஸ்டார்ட் போன்றவற்றிற்கான ஷோர்ட்கட்களை அமைப்பதுதான். இதற்கான வழிமுறைகள், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கான  வழிமுறைகளைப் போன்றே தான் உள்ளன. ஆனால் விண்டோஸ்7 சிஸ்டத்தில், இதனை டாஸ்க் பார் அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பதித்து வைக்க முடியும் என்பது ஒரு கூடுதல் வசதியாகும்.  இந்த ஷோர்ட்கட் வழியை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் எல்லாரும் ஷோர்ட்கட் உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து வைத்துள்ளனர். இருப்பினும் அவற்றை எளிமையாக இங்கு உறுதிப்படுத்திக் கொள்வோம்.
முதலில், டெஸ்க்டாப்பில் எதுவும் இல்லாத ஓர் இடத்தில், ரைட்கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் New | Shortcut என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்தவுடன், சில தகவல்களை உங்களிடம் கேட்டுப் பெறுகின்ற உள்ளீடு செய்திடும் திரை உங்களுக்குக் கிடைக்கும். இங்கு தான் நீங்கள் உருவாக்க விரும்பும் ஷார்ட்கட் வழிக்கான அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
எடுத்துக் காட்டாக, விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றினை ஷட் டவுண் செய்திடுவதற்கான ஷார்ட்கட் உருவாக்குவது குறித்து இங்கு காணலாம். எடுத்துக் காட்டாக, இங்கு ஷட் டவுண் செய்திட கீழ்க்காணும் கட்டளை வரியினை, கட்டத்திற்குள் அமைக்கவும்.
Shutdown.exe -s -t 00
இதன் பின் Next என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோ இந்த ஷார்ட்கட்டிற்கு பெயர் ஒன்றினைத் தருமாறு கேட்கும். எந்த கட்டளைக்கான ஷார்ட்கட் அமைக்கப்படுகிறதோ, அதனை நினைவு படுத்தும் வகையிலான பெயர் ஒன்றை அமைக்கவும். இங்கு, எடுத்துக்காட்டாக Shutdown  என அமைக்கலாம். இதோடு இங்கு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் இதற்கென  ஐகான் ஒன்று அமைத்தால் நன்றாக இருக்கும். இங்கும் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் ஐகான்களை மாற்றுவது போல மாற்றலாம்.  இங்கு சம்பந்தப்பட்ட ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, காண்டெக்ஸ்ட் மெனு பெறவும். பின்னர் அதில் ப்ராப்பர்ட்டீஸ் மெனு செல்லவும். ப்ராப்பர்ட்டீஸ் கண்ட்ரோல் பேனலில், Change Icon பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து வரும் திரையில், ஐகொன்கள் நிறைய காட்டப்படும். இதில் எதனை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, இரண்டு முறை ஓகே பட்டனை இருமுறை கிளிக் செய்து முடிக்கவும்.  இப்போது உங்கள் டெஸ்க் டாப்பில் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்வதற்கான  ஐகொனைக் காணலாம். இதில் கிளிக் செய்தால், சிஸ்டம் ஷட் டவுண் ஆகும்.
இனி இதனை எப்படி ஸ்டார்ட் மெனு அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பின் செய்து வைப்பது என்று பார்க்கலாம். ஷார்ட்கட் மீது ரைட் கிளிக் செய்திடவும். கொண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். பின்னர் டாஸ்க்பாரில் அமைக்க வேண்டும் எனில்  Pin to Taskbar  என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.  இதில் பின் செய்தவுடன், சிஸ்டம் ஷட் டவுண் செய்வதற்கான அவசர திறவுகோலான ஷோர்ட்கட் கீகள் அருகில் கிடைக்கும்.
இதே முறையில் இன்னும் சில ஷார்ட்கட் கீகளுக்கான கட்டளையைப் பார்ப்போமா!
கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட
Shutdown.exe -r -t 00
கம்ப்யூட்டரை ஹைபர்னேட் என்னும் நிலையில் வைத்திட
rundll32.exe PowrProf.dll,SetSuspendState
கம்ப்யூட்டரை ஸ்லீப் மோடில் வைத்திட
rundll32.exePowrProf.dll,SetSuspendState 0,1,0

முருங்கைக்கீரையும் உடல்நலமும்..

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ , முருங்கைக்கீரை இவை இரண்டும் அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள  சத்துக்கள் நிறைய...

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.  

முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். 
முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். 
 
மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். 
பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.
முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்: 

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.  எனவேதான்,  இக்கீரைக்கு  'விந்து கட்டி'   என்ற
பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.


முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம்
முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. 

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. 

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை, குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய் ,கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

விட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.


ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயன்- 7 மி.கி
விட்டமின் சி 220 மி.கி
விட்மின் பி கொம்ப்ளக்ஸ் சிறிய அளவில்...
இத்தனை பயன் உள்ள முருங்கைகீரையை சாப்பிட்டு உடல் நலத்தை பாதுகாக்கவும்... 

செல்பேசி ஆபத்து.

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மனிதனுக்கு உடை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டது.
சிலர் செல்போன் இல்லையென்றால் தூங்க மாட்டார்கள். எதையோ இழந்தது போல் தவிப்பார்கள்.  முன்பு அவசர தேவைகளுக்கு மட்டும் பேசக் கண்டறிந்த செல்போன் இன்று ஸ்டைலாகவும், அடிமைப்படுத்தும்  அளவிற்கும் மாறிவிட்டது.
உலக மக்கள் தொகையில் 80 சதவிகிதம் பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள்.  இந்த ஆண்டு 5 மில்லியன் மக்கள் அகண்ட அலைவரிசை (Broad band)  யின் மூலம் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் வளர்ச்சி  ஒருபுறம் விரிந்து கொண்டே போவது நல்ல செய்திதான்.  உலகத்தை உள்ளங் கைகளுக்குள்  கொண்டு வந்தது இந்த செல்போன்கள் தான்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு என்ற நியூட்டனின் விதிக்கு ஏற்றார்போல், இங்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் செல்போன், பல தீய செயல்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப, அளவுக்கு அதிகமாக செல்போன் பேசுவதும், அதைப் பயன்படுத்தும் முறைகளாலும் மனித உடலுக்கு பலவகைகளில் பாதிப்பு உண்டாகும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிரியக்கம்  (Electro Magnetic radiation (EMR)) உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அந்த மருத்துவ விஞ்ஞானிகளின் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

2 நிமிடம்….
செல்போன் 2 நிமிடம் பேசினால் அதனால் உண்டான மின் காந்த அதிர்வு மூளைக்குச் சென்று அரைமணி நேரம் வரை தங்கியிருந்து அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.  மேலும் செல்போனால் உண்டாகும் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள பல ஆலோசனைகளையும் தெரிவிக்கின்றனர்.

செல்போன் பேசும்போது…
செல்போனை தலையிலிருந்து 2 முதல் 7 அங்குலம் வரை தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும்.  முடிந்தவரை பெரிய ஒலிப்பானை பயன்படுத்தி (loud speaker)  பேசுவது நல்லது. இதனால் மின்காந்த கதிரியக்கத்தின் பாதிப்பு மூளைக்குச் செல்வதை தடுக்கலாம்.

தூங்கும்போது…
நாம் தூங்கும்போது செல்போனை எங்கு வைக்கிறோம்.  தலையணைக்கு அடியிலா அல்லது தலைமாட்டிலா.. செல்போனில் இருந்து வெளிப்படும் மின்னதிர்வுகளின் தூரம் குறைவதால் நம் மூளையை தாக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனால், தூங்கும்போது, தலைமாட்டில் செல்போனை வைத்து தூங்குவதை தவிருங்கள். அல்லது அணைத்துவிடுங்கள், அல்லது 6 மீட்டர் தூரம் தள்ளி வையுங்கள்.

சட்டைப்பையில்…
//
செல்போனை சட்டைப்பையில் வைக்கும் போது, அது இதயத்தின் மிக அருகில் இருக்கிறது.  நம்முடைய இதய இயக்கம் மின்காந்த அதிர்வுகளால் மாற்றம் அடையக்கூடியது.  எனவே, செல்போன் ஒலிக்கும்போது, அதிலிருந்து வரும் மின்காந்த அதிர்வுகள் நேரடியாக இதயத்தை பாதிக்கிறது.
கீ பேட் வெளிப்பக்கம் இருக்கும்படி வைக்க வேண்டும். அல்லது அணைத்துவிட்டு சட்டைப் பையில் வைக்க வேண்டும். இதயத்துடிப்பு குறைபாடு உள்ளவர்கள் சட்டைப்பையில் வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

கால்சட்டை பையில்…
அதுபோல் கால்சட்டைப் பையில் வைத்தால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவும், பெண்களுக்கு மலட்டுத்தன்மையும் ஏற்படும்.

கருவுற்ற பெண்கள்…
கருவுற்ற பெண்கள் செல்போன் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.  செல்போனிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிரியக்கம் கருவில் உள்ள குழந்தையை பெருமளவில் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால்    காதுகேளாமை, வாய் பேச முடியாமல் போவது, உடல் வளர்ச்சி  மனவளர்ச்சி குன்றுதல் போன்ற  பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பயணங்களின் போது…
விமானம், இரயில், பேருந்து பயணங்கள் மற்றும், பெட்ரோல் பாங்கு இருக்கும் இடங்களில் செல்போன் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.  ஏனெனில் மெட்டல் அதிகம் உள்ள பகுதிகளில் மின்காந்த கதிரியக்க சக்தி அதிகமாகும்.
செல்போனில் பேசுவதற்கு ஹெட்போனை உபயோகிக்கும்போது,  மின்காந்த கதிரியக்கம், நேரடியாக காதுகளையும் மூளையையும் தாக்குகிறது.

குழந்தைகள் மற்றும்சிறுவர்கள்…
15  வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் செல்போன் அதிகம் பயன்படுத்தினால், மூளையில் கட்டி ஏற்படும் அபாயம் உள்ளது. இது மரணத்திலும் கொண்டு போய் விடலாம்.
இளங் குழந்தைகளுக்கு அருகில் செல்போன் பேசுவதோ, வைப்பதோ கூடாது. இதிலிருந்து வெளிப்படும் மின்காந்த கதிரியக்கம் குழந்தைகளின் மென்மையான தசைக்குள் எளிதில் ஊடுருவி உட்சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.  புற்று நோய் ஏற்படும்  வாய்ப்பும் உள்ளது.
மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தவிருங்கள்.
பொழுதுபோக்கிற்காக பேசுவதைத் தவிர்த்து தேவைக்கு மட்டும் பேசுங்கள்.  பாதிப்பும் இல்லை.  பணவிரயமும் இல்லை.

கணினியில் வந்திருக்கும் புது விளையாட்டு என்ன என்பதை வீடியோவுடன் அறியலாம்.

நாளுக்கு நாள் புதிது புதிதாக விளையாட்டுக்கள் வெளிவந்து
கொண்டிருக்கும் நிலையில் அனைத்து புது விளையாட்டுகளையும்
அதைப்பற்றிய விரிவான தகவல்களையும்  வீடியோவுடன் நமக்கு
எடுத்துச்சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

விளையாட்டு குழந்தைகளை மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும்
தற்போது ஈர்த்து வருகிறது. முப்பரிமானம்(3D)-யில் உருவாக்கப்படும்
விளையாட்டுக்கள் பெரும்பாலும் எல்லா தரப்பு மக்களையும்
கவர்கிறது. தினமும் பல புதிய விளையாட்டுக்கள் வெளிவந்து
கொண்டிருக்கும் நிலையில் புதிய விளையாட்டு பற்றிய அனைத்து
தகவல்களையும் கொண்ட ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://gotgame.com
இந்ததளத்திற்கு சென்று நாம் புதிதாக வந்திருக்கும் விளையாட்டைப்
பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். புதிய விளையாட்டின்
டிரைலர் மட்டுமல்ல அந்த விளையாட்டின் சிறப்பு வீடியோவையும்
பார்க்கலாம். இது மட்டுமின்றி எந்த விளையாட்டு நிறுவனம் இப்போது
போட்டி அறிவித்திருக்கிறது என்று தெரிந்து நேரடியாக போட்டியில்
ஆன்லைன் மூலம் பங்கு பெறலாம். மைக்கேல் சாக்சன் விளையாட்டு
முதல் ரோபோ விளையாட்டு வரை அத்தனை புதிய விளையாட்டு
தகவல்களும் இந்த்தளத்தில் இடம் பெற்றுள்ளது. இந்ததளத்திற்கு
சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி விளையாட்டு
பற்றிய பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவ இலைகள்

பழங்காலத்தில் இலைகள் பெரும்பாலும் மருந்தில் மூலக் கூறுகளாக பயன்படுத்தப்பட்டன. நமக்கு எளிதாக கிடைக்கும் சில இலைகளின் அபூர்வ மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்.


* செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்கள் மிகுந்த மருத்துவப் பயன்கள் கொண்டவை. இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் உடையவை. வழுவழுப்பான தன்மை கொண்ட இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது. பூக்கள் குளிர்ச்சி பொருந்தியதால் சருமம் அழகாகும். சிவப்பு பூக்கள்தான் மருத்துவ சிறப்பு வாய்ந்தவை. செம்பருத்திப் பூவில் தங்கச் சத்து உண்டு என்று மருத்துவ சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்கிவிடும்.
* துளசி இலையில் புரதம், கார்போஹைட்ரேட், அமிலச் சத்துகள் மற்றும் உலோகச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. துளசி வேர்ப்பட்டைத் தூள் அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும். நாக்கில் தோன்றும் எல்லாவித குறைபாட்டையும் நீக்கும் குணம் உடையது. சருமத்தை சுத்தம் செய்து மென்மை தரக்கூடியது.
* வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக்களுக்கு தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் மறையும். ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைப்போல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வர, அம்மை வடு மறையும். வேப்பம்பூவை காய்ச்சி, அதனுடன் நெல்லிக்காய் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் சரும நோய்கள் நீங்கும்.    * கறிவேப்பிலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இது சோப்புகளில் வாசனையை நிலைக்கச் செய்யும். தலை முடி நரைப்பதைத் தடுத்து கேசத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். கறிவேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, வேப்பிலையின் கொழுந்து சிறிது சேர்த்து அரைத்து தலையில் பூசி வந்தால் நரை மறையும்.
* புதினா இலைகளின் சாறு குளிர்ச்சி தரக் கூடியது. பருக்கள் மற்றும் வடுக்களுக்கு மருந்தாகவும், தோலின் வனப்பை ஊக்கப்படுத்தும் டானிக்காகவும் பயன்படுகிறது. இதன் எண்ணை சருமத்திற்கு புத்துணர்ச்சியை வழங்குகிறது. குளியல் தைலங்களிலும், இதன் பயன்பாடு அதிகம். பொடுகை அகற்றி கேசத்தின் வேர்க்கால்களில் ஊடுருவி கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
* கொத்தமல்லி இலையின் சாறை சருமத்தின் சொரசொரப்பான பகுதிகளில் காலையில் தேய்த்து, மாலையில் குளித்து வந்தால் தோல் தடிப்பு மாறி வழவழப்பாகும். கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். கொத்தமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டது. வாசனைப் பொருட்களில் அதிகஅளவில் கொத்தமல்லி பயன்படுகிறது.
* தேயிலையில் இருக்கும் `காபின்’ என்ற பொருள் நரம்பு மண்டலத்தின் செயலை ஊக்குவிக்கிறது. கிரீன் டீ என குறிக்கப்படும் தேயிலை தற்போது அழகு சாதனப் பொருட்களில் பங்கு வகிக்கின்றது. தேயிலையில் வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நோயை தடுக்கக் கூடிய `ஆன்டி ஆக்ஸிடென்டுகள்’ உள்ளன. மூளையை ஊக்கப்படுத்துதல், ஞாபக சக்தி, இளமையைத் தக்க வைத்தல், ஆரோக்கியம் ஆகியவை தேயிலைக்கு உரிய குணங்கள். பற்சிதைவு போன்ற பல் தொடர்பான நோய்களைத் தடுக்கும் வைட்டமின் சி, டி, கே மற்றும் ப்ளோரைடுகள் ஆகியவை இதில் அதிகம் உள்ளன.