கர வருடப் பிறப்பு (2011)

திருக்கணித பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கர வருஷம் 2011-04-14 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு பிறக்கிறது. இது அறுபது வருடச் சுற்று வட்டத்தில் 25 வருஷமாகும். அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மேட சங்கிரமான புண்ணிய காலமாகும்.


வாக்கிய பஞ்சாங்கம்


வாக்கிய பஞ்சாங்கப்படி கர வருஷம் 2011-04-14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11.39 க்கு பிறக்கிறது. அன்று காலை 7 மணி முதல் பகல் 3 மணி வரையும் விஷ புண்ணிய காலம் என குறிப்பிடப்படுகிறது.


புத்தாடை தரிசனம்


ஸ்ஞானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதல் நன்மை தரும்.


பின்னர் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், இஷ்டகுல தெய்வ படங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும்.


தெய்வ வழிபாடு


வீடுகளில் இஷ்ட குலதெய்வங்களை வழிபட்ட பின், தமது கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்வதுடன் தான, தருமங்களையும் மேற்கொள்ளுதல் சிறப்பினைத் தரும். சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல் சாலச் சிறந்தது.


உணவு கரவருடத்தில் அறுசுவை உணவுடன் பால், தயிர், தேன், வேப்பம் பூ வடகம் போன்றவைகளை கண்டிப்பாக சேர்த்து, சுற்றம் சூழ இருந்து அளவளாவி புதுவருட உணவை உண்ணுதல் மேலானது.


கைவிசேடம்


14-04-2011 வியாழக்கிழமை பகல் 12.03 தொடங்கி 1.14 மணி அல்லது மாலை 06.03 தொடங்கி 07.38 வரையுள்ள சுபவேளையில் பெரியோர்களிடமிருந்து கைவிசேடங்களை பெற்று ஆசி பெறுதல் வேண்டும்.


விருந்துண்ணல்


புதிய கர வருடத்தில் வெளியிடங்களுக்குச் சென்று 15-04-2011 வெள்ளிக்கிழமை இரவு 9.18 தொடங்கி 10.27 வரையுள்ள சுபநேரம் அல்லது 18-04-2011 திங்கட்கிழமை பகல் 11.18 தொடங்கி 12.47 வரையுள்ள சுபநேரத்தில் விருந்துண்டு மகிழ்தல் சிறப்பினை அளிக்கும்.


பெரியோர்களை சந்தித்தல்


புதிய கர வருடத்தில் பெரியோர்களை 15-04-2011 வெள்ளிக்கிழமை இரவு 9.28 தொடக்கம் 10.48 வரையுள்ள சுபநேரம் அல்லது 18-04-2011 திங்கட்கிழமை பகல் 12.08 தொடங்கி 1.27 வரையுள்ள சுபநேரத்தில் சந்தித்து கலந்துரையாடுதல் நன்மை தரும்.


பூமி தரிசனம்


புதிய கர வருடத்தில் பூமி தரிசனம் செய்வதற்கு 14-04-2011 வியாழக்கிழமை பகல் 12.04 தொடக்கம் 1.44 வரையுள்ள சுபநேரம் அல்லது 15-04-2011 வெள்ளிக்கிழமை இரவு 8.15 தொடக்கம் 9.26 வரையுள்ள சுபநேரம் உகந்தது.


புதிய கல்வி


கர வருடத்தில் புதிய கல்வி முயற்சிகளை மேற்கொள்வதற்கு 20-04-2011 புதன்கிழமை காலை 7.33 தொடக்கம் 9-12 வரையுள்ள சுபநேரம் அல்லது 22-04-2011 வெள்ளிக்கிழமை காலை 9.12 தொடக்கம் 10.27 வரையுள்ள சுபநேரம் சிறப்புத்தரக் கூடியதாக அமையும்.


மருத்துநீர்


தாழம்பூ, தாது மாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகு, பால், கோமயம், கோசலம், கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், மஞ்சள், சுக்கு, திப்பிலி ஆகியவற்றை சுத்தமான நீரில் இட்டுக்காச்சிய கஷாயமாகும். பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம்.


இந்த இரு பஞ்சாக கால நிர்ணய புண்ணிய காலங்களில் ஏதாவது ஒன்றில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.


தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும்.

0 Response to "கர வருடப் பிறப்பு (2011)"

Post a Comment