மன்மதன் அம்பு - விமர்சனம் (First in Net)

ரெட் ஜெயின் ட் மூவிஸ் சார்பாக வெளிவந்துள்ள மன்மதன் அம்பு திரைப்படத்தின் விமர்சனம்


கவிதை வீதி-யிருந்து முதலாவதாக...

படத்தலைப்பு

முதலில் படத்தின் தலைப்பு படத்தின் நாயகர் கமலஹாசனின் பெயர் மேஜர் R. மன்னார் என்பதின் சுருக்கமாக மன் என்பதையும், தொழிலதியராக நடித்த மாதவனின் பெயர் மதனகோபால் என்பதில் மதன் என்பதையும், நடிகை நிஷா-வாக வரும் திரிஷா வின் சொந்தபெயரான அம்புஜா என்பதின் சுருக்கமாக அம்பு என்பதை எடுத்து படத்திற்கு மன்மதன்அம்பு என்று பெயர் சூட்டியிருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார். படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் கதையும் இந்த மூவரைச்சுற்றியே நகர்ந்திருக்கிறது...

கதைச்சுருக்ககம் :

படத்தில் நடிகையாக வரும் திரிஷாவுக்கும் தொழிலதிபர் மாதவனுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது நடிகை என்பதால் மாதவனின் தாயார் திரிஷாவை சந்தேகப்பட அந்‌த சந்தேகம் மாதவனிடமும் தொற்றிக் கொள்கிறது. கொடைக்கானலில் காரில் ஏற்படும் வாக்குவாதம் இவர்களை பிரியும் அளவுக்கு எற்படுகிறது. அப்போது திரிஷா ஒரு காரை இடித்து தள்ளி தடுமாறி நிற்கிறார். அந்த நிகழ்வுக்கு பின் 3 ஆண்டுகள் கழித்து கதை ஆரம்பிக்கிறது.

திரிஷா விடுமுறையை கழிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சு்றறுலா செல்கிறார். அங்கு அவருடைய தோழியான சங்கீதா படம் முழுக்க தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வருகிறார்.

அங்கு தான் கமலின் என்ட்ரி சுற்றுலா வந்த திரிஷாவை கண்காணிக்க மாதவன், ஓய்வு ‌பெற்ற ‌ராணுவ மேஜரான கமலை நியமிக்கிறார். கமல் தன்னுடைய நண்பரான ரமேஷ் அரவிந்-க்கு நடக்க இருக்கும் ஒரு ஆபரேஷனுக்காக இந்த வேலையை ஒப்புக் கொள்கிறார். ஆரம்பத்தில் திரிஷாவை பற்றி நல்ல சர்டிபிகேட் தரும் கமலுக்கு மாதவன் பணம் கொடுக்க தயக்கம் காட்ட நண்பரின் ஆபரேஷனுக்காக திரிஷாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உண்டு என்று பொய் சொல்லி தன்னையே அந்த கதாபாத்திரத்தில் இணைத்து கொள்கிறார்.

அதன் பிறகு திரிஷா, சங்கீதாவுடன் பாரீலிருந்து வெனிஸ் செல்லும் ஒரு ஆடம்பரக்கப்பலில் (MSC) சுற்றிவர கதை விருவிருப்படைகிறது.

இதற்கிடையில் கமலின் மனைவி எப்படி இறந்தாள் என திரிஷ் கேட்க கோடைக்கானலில் நடந்த கார்விபத்தை சொல்ல அந்த விபத்தை தான் தான் செய்ததது என குற்றஉணர்வில் தவிக்க.. பிறகு மாதவனிடம் திரிஷா இணைக்க அனைவரும் பாடுபட என பயணப்படுகிறது கதை...

கடைசியில் மாதவன்-திரிஷா இணைந்தார்களா கமல் என்னஆனார் என கடைசி அரைமணிநேர படம் விளக்குகிறது...

படத்தைப்பற்றி...
கமல் தன்னுடைய கதை, திரைக்கதை வசனப் பணியோடு நடிப்பு என அனைத்து இடங்களிலும் ஜொலிக்கிறார்..

திரிஷாரவை பின் தொடரும் போதும்... பிறகு திரிஷா வுடன் இணைந்து கப்பலில் பயணனிக்கும் போதும் தனியாக தெரிகிறார். தன் மனைவி விபத்தில் இறந்ததை சொல்லும் போதும்.. நண்பரின் ஆபரேஷனுக்கு பணம் கொடுக்க முடியாமல் தவிக்கும் போதும் பளிச் கண்கலங்க வைக்கிறார்.
மாதவனுக்கு அதிக வேலை இல்லை திரிஷாவை சந்தேகப்படும் ஒரு காதலனாக எப்போதும் தண்ணில் இருந்துக் கொண்டு கமல் திரிஷா இவர்களோடு ‌செல்போனில் பேசுவதோடு அவர் வேலை முடிகிறது.. பின்னர் இறுதி காட்சியில் வெனிஸ் நகரில் இவர்களுடன் இணைந்து இவர் செய்யும் காமடி செம இழுவை...

உயிர் சங்கீதா திரிஷா வின் தோழியாக இரண்டு குழந்தையுடன் வந்து கதையோடு ஒன்றி போயிருக்கிறார் (ஆண்களை செம கமண்ட் அடிக்கிறார்)

ஊர்வசி-ரமேஷ் அரவிந்த் ஜோடி மருத்துவமனையோடு இவர்கள் பணி முடிந்து விடுகிறது... ரமேஷ் அரவிந்த் மொட்டை தலையுடன் படுக்கையோடு இருந்துவிடுகிறார்...

தேவி ஸ்ரீபிரசாத் பிண்ணனி இசை நன்றாக வந்துள்ளது.. தகிடதத்தோம் பாடல் முனுமுனுக்க ‌வைக்கிறது..

கமல் தன்னுடைய மனைவியுன் காட்டும் போது... விபத்தில் இறந்திலிருந்து தலைகீழாய் காட்சி பயணப்பட்டு சந்தித்த இடத்தில் முடிகிறது..(ரீ-வைண்ட் செய்தது போல்) அந் காட்சியோடு வரும் பாடலும் இசையும் பிரமாதம்... தமிழ் சினிமாவுக்கு இது புது முயற்சி..

மற்றபடி ஐரோப்பிய நாடுகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் கே.எஸ். ரவிக்குமார்.

ஆரம்ப காட்சியில் ந‌டிகை திரிஷாவுடக்-சூர்யா ஆடும் டான்ஸ் பிரமாதம்..
அதுக்கு டைரக்டர் ‌கே.எஸ் தான்..

ஆனால் படம் பார்ப்பவர்களை அதிர்ச்சி ஊட்டும் வகையில் க்ளைமாக்ஸ் அமைந்துள்ளது அதை வெண்திரையில் பாருங்கள்..
(தயவுசெய்து DVD பார்க்க வேண்டாம்)
கதை, திரைக்கதை, வசனம் கமல் என்பதால் அதிகவசனம், காமெடி கொஞ்சம் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் கடினமாயிருக்கிறது.

0 Response to "மன்மதன் அம்பு - விமர்சனம் (First in Net)"

Post a Comment